வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

Ghazi - காஸி

பிரமாண்டமா செட் போட்டு அதுல கிராபிக்ஸ் கலந்து தேவை இல்லாத பாட்டை எல்லாம் போட்டு ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்து இருக்கேன் சொல்லுறவங்க  தயவு செய்து இந்த படத்தை பாருங்க

பரபரப்பா படம் எடுக்கிறேன், சீட் நுணிக்கு audience  வர வைக்கிறேன்  சொல்லி காமெராவை சும்மா ஆட்டி ஆட்டி எடுக்கறவங்க இந்த படத்தை பாருங்க

எப்படி ஒரு உண்மை சம்பவத்தை எந்த ஒரு தேவையில்லாத சினிமாத்தனத்தை புகுத்தாமல் , அதே நேரத்தில் audienceகளை படத்தோடு மூழ்க வைத்து , சீட் நுணிக்கு வரவைத்து ,ஆடியன்ஸை அந்த போரிலே இருப்பது போல ஒரு உணர்வை வர வைத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு ஒரு பெரிய சலூட் .

படத்தின் கதை என்ன ? 1971 மேற்கு பாகிஸ்தான் , கிழக்கு பாகிஸ்தான்( தற்போது பங்களாதேஷ்) சண்டை போது இந்தியா வழியே ஆயுதங்கள் அனுப்ப , இந்தியாவை திசை திருப்ப பாகிஸ்தான் காஸி என்ற நீர் மூழ்கி கப்பலை அனுப்பி விஷாக்கப்பட்டினத்தை அழிக்க வரும் போது , நம் இந்திய கப்பல் படை எப்படி நம்மை காப்பாற்றியது என்பது தான் கதை , பொதுவா என்னோட விமர்சங்களில் கதையை சொல்ல மாட்டேன் ஆனால் இந்த படம் அப்படி இல்ல .

படத்தின் ப்ளஸ் என்ன என்ன ?
முதலில் இது ஒரு தெலுங்கு படம் , ஆனால் தமிழில் டப்பிங்கில் வந்து இருக்கு, என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னா நம்ம ஊரில் டப்பிங் படங்களில் டப்பிங் நல்லா இருக்காது , ஆனால் இது அபப்டி இல்லை , மேலும் படம் பார்க்கும் போது அது டப்பிங் படம் போல இல்லை
இன்னொரு ஆச்சரிய விஷயம் என்னா தெலுங்கில் இப்படி எல்லாம் படம் எடுப்பங்களான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சி ஆனால் படம் சரியா எடுத்து இருக்கார் டைரக்டர் .
மேலும் முக்கியமான ஓன்று விஷுவல் effects நம்ம ஊரு பட்ஜெட்க்கு அந்த அளவுக்கு பண்ண முடியுமா ?  ரொம்ப சின்ன புள்ளை தனமா இருக்குமோ தோணுச்சு, ஆனா அதுவும் நல்லா பண்ணி இருந்தாங்க நிஜமாகவே நாமும் அந்த நீர் மூழ்கி கப்பலில் கடலுக்குலே போன ஒரு உணர்வு .

படத்தின் கேரக்டர் பற்றி சொல்லனும்னா படத்தில் கேப்டனாக வரும் கே.கே.மேனன் ரொம்ப உறுதியான கேரக்டர் முதல் பாதியில் அவர் படத்தை தூக்கி நிறுத்துகிறார் என்றால் இரண்டாவது பாதியில் ராணா படத்தை தூக்கி நிறுத்திகிறார்  , இவர்களுக்கு நடுவே அதுல் குல்கர்னியும் படும் பாடு நல்லா பண்ணி இருக்கார் .

நீர் மூழ்கி எப்படி இருக்கும்ன்னு நமக்கு தெரியாது ஆனா படத்தில் வரும் அந்த நீர் மூழ்கி செட் சூப்பர் , அது செட்டு தானா ? இல்ல அதுவும் vfx or graphicsaah தெரியல , but அதை யார் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாழ்த்துகள் .

கடற்படை, நீர் மூழ்கி பற்றி ஒரு உண்மை சம்பவம் படம் என்பதால் டைரக்டர் நிறைய  field work  பண்ணி இருப்பது படத்தில் தெரியுது , ஏன் என்றால் நீர் மூழ்கி கப்பலை பற்றி பல  விஷயங்கள்  technical ஆகா பல வார்த்தைகள் சொல்லுவது குறிப்பா அந்த terms  நமக்கு ஆரம்பத்தில் புரியல , பிறகு படத்தோட கதையோட்டத்தோட சில வார்த்தைகளை நமக்கும் புரியவச்சிட்டாரு அதனால நாமும் அந்த கப்பலை இயக்கனும் அந்த எதிரி கப்பலை தகர்க்கணும் தோணவச்சிட்டாரு டைரக்டர்

பொதுவா நாட்டு பற்று உள்ள படம்ன்னா ராணுவம் , குண்டு வெடித்தல் , தீவிரவாதம் அப்படின்னு கற்பனை படம் எடுப்பாங்க , அப்படி இல்லாட்டி யாருடையவாது சுயசரிதை படம் எடுப்பாங்க , ஆனால் முதல் முறையாக கடற்படை சார்ந்த ஒரு உண்மை சம்பவத்தை ஒரு புது முயற்சியாய் இந்த இந்தியா சினிமாவுக்கு புதுமையாய்  கொடுத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு  ஒரு பெரிய hatsoff .

நிச்சயமா இந்த படத்துக்கு எதாவுது ஒரு categoryல் award கொடுப்பாங்க.

மொத்தத்தில் இந்த படத்தில் மூழ்கி மேலே எழுவது  கப்பல் மட்டும் இல்லை நம் மனசும் தான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வியாழன், 9 பிப்ரவரி, 2017

Singam3 - சிங்கம் 3

ஹரி : டேய் assistants எங்க இருக்கீங்க? சிங்கம் 3  discussion க்கு வாங்க 

Assistants : சார் S3ல  என்ன புதுசா பண்ணலாம் சார் ?

ஹரி: டேய் என்னைக்கு டா நாம புதுசா பண்ணி இருக்கோம் ? பரபரப்பா சீன வைப்போம் , நாலு பாட்டு வைப்போம் , பறக்கிற fight வைப்போம் , வில்லனை பிடிக்கிற sketch போடுற சீன வைப்போம் , ஹீரோயின் டம்மி ஆக்கிடுவோம் , ஹீரோவுக்கு punch  வசனம் வைப்போம் , கிளைமாக்ஸ்ல் ஓபன் ஏரியாவில் சண்டை வைப்போம் படத்தை முடிப்போம் , அவளோதான் , என்னன்னா லொகேஷன் மட்டும் படத்துக்கு படம் ஒரு ஒரு ஊர் வைப்போம் அவளோதான் .

Assistants1 : சார் அப்போ இந்த படத்துக்கு எந்த ஊர் fix பண்றோம் ?

ஹரி : டேய் அதுவும் நானே சொல்லனுமா ? அதுக்கு தான் நீங்க இருக்கீங்க சொல்லுங்கடா 

Assistants2: சார் திருநெல்வேலி போலாமா 

ஹரி: அது சாமி படத்துல வைச்சாச்சி 

Assistants3:  திருச்சி ,  தூத்துகுடி சென்னை ?

ஹரி: வேங்கை படம் திருச்சி, தூத்துக்குடி  சிங்கம்2 , சென்னை ஆறு , சிங்கம்1 எடுத்தாச்சி 
Assistants1: சார் சிங்கம்-1 சென்னைல ஆரம்பிச்சி ஆந்திரா நெல்லூர் ல முடிஞ்சிடுச்சி , அதனால நெல்லூர்ல இருந்து அப்படியே விசாகப்பட்டினம் போய்டலாம் சார் 
ஹரி : சூப்பர்,, சிங்கம்3 விசாகப்பட்டினம் வச்சிகோ , அப்படியே flight பிடிச்சி ஆஸ்திரேலியாவுக்கு போயிடலாம் வாணி ராணி சீரியல் போல ஓகே வா , முடிஞ்சா அங்க இருந்து திரும்பவும் தூத்துகுடி போகலாம் 

Unknown character : சார் சார் .. ஒரு நிமிஷம் பேசணும் சார் 
ஹரி: யோவ் யாரு யா நீ ? போயா ... கேமராமேன் கூப்பிடுங்க 

கேமராமேன்  : சார் நான் என்ன பண்ணணும் ?

ஹரி : நீங்க கேமராவை எடுத்துக்கிட்டு வானத்துல போயிட்டு நில்லுங்க ..

கேமராமேன் : சார் என்ன சொல்லுறீங்க ?

ஹரி: மிஸ்கின் படம்ன்னா கேமரா தரையில் இருக்கணும் , என் படம்னா கேமரா மேல இருக்கணும் , ஒரு helicam வச்சிகோங்க இல்லாட்டி முடிச்சா producer கிட்ட கேட்டு helicopter ல கேமரா fix பண்ணிக்கிட்டு ஊரு fullaah சுத்துவோம் சரியா? அப்புறம் காமெராவை ஆட்டி கிட்டே இருக்கணும் அப்போ தான் படம்  விறுவிறுப்பா போகிறா மாதிரி இருக்கும் 

கேமராமென்: ஓகே சார் 

தேவி ஸ்ரீ பிரசாத் : சார் நான் என்ன பண்ணும் ?

ஹரி : ஏம்ப்பா உன்ன யார் உள்ள விட்டது ?

தேவி ஸ்ரீ பிரசாத்: சார் நான் தான் சிங்கம் 1,2 மியூசிக் போட்டேன் 

ஹரி: யப்பா நீ சிங்கம் பாட்டை தூக்கி வீரம் படத்துல போடுவ , வீரம் பாட்டை தூக்கி சிங்கம்2 ல போடுவ அதுவும் இல்லாட்டி தெலுங்கு படத்துல இருந்து இரண்டு டப்பாங்குத்து போடுவ  போதும் டா சாமி , உன்ன வச்சி நான் பட்ட அவஸ்தை போதும் , நான் ஹாரிஸ் ஜெயராஜ் வச்சிக்கிறேன் , அவர் கூட சாமி படம் செம்ம ஹிட் நல்ல காம்போ , நீ கிளம்பு 

ஹாரிஸ் ஜெயராஜ் : சார் கவலை படாதீங்க நான் இருக்கேன் , இருமுகன் படத்தில ஹெல்லன நல்ல ஹிட் அதுல இருந்து கொஞ்சம் அப்புறம் இருமுகன் face off தீம்  இருக்கு அதுல கொஞ்சம் , முடிஞ்சா என்னை அறிந்தால் , ஏழாம் அறிவு எல்லாம் mix பண்ணிக்கலாம் , தீம் bgm என்ன போடணும் ?

ஹரி : எனக்குன்னு வரவங்க எல்லாம் இப்படி தான் வருவீங்களா ? bgm தானே படம் full ah  சிங்கம் சிங்கம் வரணும் அதுக்கு எதையாவுது போடுங்க போங்க 

அனுஷ்கா : சார் நான் என்ன பண்ணனனும் ?எனக்கு பாகுபலி ஷூட்டிங் வேற இருக்கு,  இந்த partல கல்யாணம் புள்ளை குட்டி அது மாதிரி எதாவுது இருக்குமா ?

ஹரி: இல்ல இந்த படத்துல உனக்கு divorce கிளம்பு 

ஸ்ருதி : சார் எனக்கு ? உங்க பூஜை படத்தில நடிச்சி இருக்கேன் 

ஹரி : நீயுமா சரி வா , இது வரைக்கும் என்ன சாதித்து இருக்கீங்க ?

ஸ்ருதி: ஏழாம் அறிவு , 3 படத்தை தவிர எல்லா படத்திலும் guest ரோல் தான் பண்ணி இருக்கேன் 

ஹரி: அப்போ இதுலயும் அப்படியே வந்துடுங்க , but இந்த படத்துல உங்களுக்கு ஒரு பெரிய ட்விஸ்ட் கேரக்டர் இருக்கு சிங்கம்2 ஹன்சிகா மாதிரி 

ஸ்ருதி : சார் அப்போ நான் செத்துடுவேனா ?

ஹரி: படத்துல நீங்க சாவமாடீங்க but உங்க நடிப்பை பார்த்து வேண்டும்னா audience சாவதற்கு வாய்ப்பு இருக்கு  , கொடுத்த காசுக்கு மேல நடிக்காதீங்க போங்க 

சூரி : சார் என்னை மறந்துடீங்களே 

ஹரி : வாங்க உங்களுக்கு என்ன பண்ண தெரியும் ?

சூரி : சார் நான் நல்லா english பேசுவேன் , அதுவே நல்ல காமெடியா இருக்குன்னு  சொல்லுவாங்க, மேலும் ஜில்லா படத்தில் போலீஸ் ஆகா நடிச்சி இருக்கேன் , உங்க பூஜை படத்திலும் நடிச்சி இருக்கேன் 

ஹரி: சரி அது போலவே மொக்கையா  english  பேசி காமெடி பேருல எல்லாரையும் சாவடிச்சிடுங்க போங்க 

வில்லன் : சார் நான் ?

ஹரி : போயிட்டு நல்ல முட்டை கறி தின்னுட்டு உடம்பை ஏத்தி ஆஸ்திரேலியா போயிட்டு நில்லு , கடைசியா சூர்யா  கூட வந்து உடம்பை காட்டி சண்டை போடுங்க 

Unknown character : சார் சார் .. 
ஹரி: யோவ் யாரு யா நீ நடுவுல நடுவுல வந்து disturb பண்ணுற போயா ஹீரோ வர நேரமாச்சி  

சூர்யா : சிங்கத்தை போட்டோல பார்த்து இருப்ப , டிவில பார்த்து இருப்ப 

ஹரி : சார் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கல கொஞ்சம் wait பண்ணுங்க , 

சூர்யா: சார் நான் என்ன பண்ணணும் ?

ஹரி : உங்ககிட்ட போலீஸ் uniform இருக்கு ல அதை போட்டுக்கிட்டு வாங்க , அந்த மீசை maintain பண்ணுங்க , நல்லா வந்து விறைப்பா நில்லுங்க இந்த படத்துல நல்ல fight சீன இருக்கு , பறந்து பறந்து அடிக்க போறீங்க , அடிக்கற அடியில அடிஆளுங்க எல்லாம் football , volleyball , rubber ball மாதிரி bounce ஆகி bounce ஆகி pitch ஆகி பறக்க போறாங்க 

சூர்யா: சார் இது எல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு ? ஏதோ ரஜினி , விஜய் பண்ணா பரவாயில்லை , நான் பண்ணா audience ஏத்துக்க மாட்டாங்க சார் 

ஹரி : இப்படி பண்ணாதா producer காசு தருவேன் சொன்னாரு , வசதி எப்படி ?

சூர்யா: அப்போ சரி சார் 

ஹரி : சூர்யா சார் அந்த போலீஸ் uniform தூக்கி போட்டுறாதீங்க இன்னும் சிங்கம் -4, 5, 6 இருக்கு , அந்த ஹாரிபாட்டர் படம் போல இன்னும் பல சீரியல் போவோம் .

Unknown character : சார் சார் .. 
ஹரி: யோவ் இப்போ சொல்லுயா யாருயா நீ ?
Unknown character : நான் தான் சார் tamil rockers admin 
Producer : டேய் நீ எங்க டா இங்க வந்த ? 
Tamil rockers admin : சார் படம் fb live போட்டா மாதிரி discussion கூட fb  live போடலாமா தோணுச்சு அதான் வந்தேன் 
Producer: அடங்க  கொய்யால 

மொத்தத்தில் : மசாலா விரும்பிகளுக்கு நல்ல ஆந்திரா மசாலா கலந்து கொடுத்து இருக்கிறார் ஹரி 

குறிப்பு : படம் பார்த்து ஒரு கற்பனையாய் இந்த விமர்சனம்,  யார் மனதையும் புண்படுத்த அல்ல(அப்பாடி கொஞ்சம் அடி வாங்குவதில் இருந்து எஸ்கேப் ஆகலாம் ) ,

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 2 பிப்ரவரி, 2017

Bogan - போகன்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு  அரவிந்தசாமி ஜெயம்ரவி காம்போ எதிர்பார்த்த  படம் இந்த போகன் , ஆனா நான் அந்த எதிர்பார்ப்பு நினைச்சுகிட்டு போல , ஏன்னா அப்படி எதிர்பார்த்து போன பல படங்கள் மொக்கையாக்கி இருக்கு , அதுவும் ரோமியோ ஜூலியட் படம் எடுத்த டைரக்டர் , அதனால நான் எந்த ஒரு எதிர்பார்ப்போடு போகல , இருந்தாலும் இந்த படம் அதை ஏமாற்றவில்லை, ரொம்ப குழப்பவது போல இருக்கா ? சரி விடுங்க படத்தை பற்றி மேலும் படிங்க .

பழைய கதை  + புதிய திரைக்கதை = தான் இந்த போகன் , அப்படி என்னடா அந்த பழைய கதை கேட்க்கிறீங்களா ? அதை சொல்லமாட்டேன்  சொல்லிட்டா பார்க்கும் ஆர்வம் போயிடும் ,  ஆனால் பல விமர்சனங்களில் கதையை சொல்லி இருப்பாங்க , but  நம்ம பாலிசி கதை சொல்லுவது இல்லை , அதனால அதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க அட ஆமாங்க மாயா பஜார் காலத்து கதை தான்(அது என்னன்னு பார்த்துக்கோங்க) .

படத்தோட முதல் பாதி எங்கேயும் தட்டு தடங்கள் இல்லாமல் போகுது , சரியான அளவு காமெடி , சரியான அளவு கதை வேகத்தோட சுவாரசியமா நம்ம மனசை படத்தை விட்டு எங்கேயும் வெளியே போகாமல் கொண்டு போயிட்டு விட்டுட்டாங்க , அதே நேரத்தில் இரண்டாவுது பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் திசை மாறி அப்படி இப்படி கொஞ்சம் போனா மாதிரி இருந்தாலும் , அப்புறம் ஒரு வழியா வேகத்தை கொடுத்து நல்லபடியா முடிச்சிட்டாரு , படம் கொஞ்சம் கொஞ்சம் ஏழாம் அறிவு படத்தி ஞாபகப்படுத்தியது 

அரவிந்சாமி  , ஜெயம் ரவி , இரண்டு பேரும் நான் தான் ஹீரோ , நான்தான் வில்லன் என்று போட்டி போடாமல் , மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருக்காங்க , அரவிந்தசாமி ஜெயம் ரவியா நடிக்கும் போது அவரோட body language எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு , அதுவும் அவரை விசாரணை பண்ணும் காட்சியில் அவர் பண்ணும் அலப்பறை  செம்ம , அவங்க ரெண்டு பேரும் காருக்குள்ள பாடி ஆடும் போது ஒரே மாதிரி expression பண்ணுவது சூப்பர் , ஜெயம் ரவி அவர் பங்குக்கு அரவிந்தசாமியா நடிக்கும் போது சில இடங்களில் அரவிந்த்சாமி  மாதிரி பண்ணாலும் பல இடங்களில் அவரை போலவே பண்ணுகிறார் , அவர் ஹன்சிகாவோடு dinner  சாப்பிடும் காட்சியில் அருமை .அரவிந்தசாமி சார் நீங்க ஒரு ஒரு expression பல இடங்களில் பின்னிபெடல் எடுக்குறீங்க , முதல் பாதியில் ஒரு மாதிரி தூக்கி சாப்பிடுறீங்க என்றால் இரண்டாவது பாதியில் வேற மாதிரி இருக்கீங்க .

ஹன்சிகா ஆஹா ஒல்லியாகி அழகா இருக்காங்க , குறிப்பா ஒழுங்கா டப்பிங்ல்  உதடு அசைவு கொடுத்து தமிழ் உச்சரிப்பு ஒழுங்கா கொடுத்து நடிச்சி இருக்காங்க அது ஒரு பெரிய achievement அவங்களுக்கு , மேலும் பொண்ணு பார்க்கும் வரும் காட்சி சூப்பர், நல்ல சிரிப்பு வருது , கழுதை  மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா கவுண்டமணி கேட்பாரு அதுபோல , இந்த ஹன்சிகாவுக்கு உள்ள இம்புட்டு நடிப்பா அப்படின்னு கேட்கிற அளவுக்கு கிளைமஸ்ல நடிச்சி இருக்காங்க,ஹன்சிகா நடித்த பல படங்களில் இது கொஞ்சம் உருப்படியான  படம் என்று சொல்லணும் , நடிப்பிலும் improvement ,

அரவிந்தசாமி body language போல அந்த போலீஸ்கார் , ஜெயம்ரவியோட அப்பா , அபப்டின்னு நிறைய பேரு அவரை போல நடிச்சி இருக்காங்க அது எல்லாம் நல்ல இருந்துச்சி ,ஏன் அந்த லேடி போலீஸ் அப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க , அவங்களுக்கு uniform கிடையாதா ? கடைசியா தான் uniform போட்டு வராங்க .

படத்தோட பெரிய ப்ளஸ் இமான், இசை மனுஷன் பக்காவா பண்ணிட்டாரு , இமான் எப்பவும் ஒரே மாதிரி பாட்டு தான் போடுவாரு , ஆனா தீடிர்ன்னு  ஒரு வித்தியாசமா பண்ணிடுவாரு அப்படி பண்ணது தான் இந்த படம் .ஏற்கனேவே டமால் டாமால் டுமீல் டுமீல் குத்து பாட்டு ஹிட்டு ,   இன்னைக்கு தான் என் நண்பர் இந்த படத்தில் செந்தூரா பாட்டு கேளுங்க நல்லா இருக்குன்னு சொன்னாரு ,அதை  கேட்டேன்,  கேட்ட உடனே பிடிச்சிடுச்சி , அதுவும் பாட்டோட காட்சி அமைப்பு  நல்லா இருந்துச்சி , படம் முடிச்ச பிறகும் அந்த செந்தூரா பாட்டு மனசுல கேட்டுகிட்டே இருக்கு , bgm இது வரைக்கும் வந்த இமான் இசையில் இருந்து வித்தியாசமா இருந்திச்சி , இமான் சார் கலக்கிடீங்க 

டைரக்டர் தப்பா ? producer தப்பா தெரியல தேவி படத்தில் வரும் வீடு இதுலயும் வந்து இருக்கு , அது ஏன் ?அப்பட்டமாக அப்படி பண்ணாங்கன்னு  தெரியல, இது கொஞ்சம் fantasy படம் என்பதால் அங்க அங்க லாஜிக் ஓட்டைகள் இருக்க தான் செய்யுது , அரவிந்தசாமி பார்க்காமலே எப்படி ஜெயம்ரவியோட அப்பா, ஹன்சிகா அபப்டி மாறினாங்கன்னு தெரியல , இப்படி சில ஓட்டைகள் இருந்தாலும்  அதை மறக்கும்படி படம் bore அடிக்கமா ரெண்டுமணி நேரம் போகுது . மேலும் இந்த படம் face off என்கிற இங்கிலீஷ் படத்தோட தழுவல் , காப்பி சொல்லுறாங்க , அது எந்த அளவுக்கு உண்மை தெரியல 

மொத்தத்தில் போகன் நல்ல போகமாக நம்பி போகலாம் .

இப்படி 
சினி கிறுக்கன் 

வியாழன், 26 ஜனவரி, 2017

Athey Kangal - அதே கண்கள்


C.V.குமார் தயாரிப்பு படம்ன்னா ஒரு அளவு நம்பி போகலாம் , அந்த நம்பிக்கையில் தான் இந்த படத்துக்கு போனேன், அந்த நம்பிக்கை வீண் போகலை

அதே கண்கள் இந்த படம் வெறும் 120 நிமிஷங்கள் தான் , அழகா அளவா எடுத்த படம் , அதனால விமர்சனமும் அளவா கொடுக்கலாம் நினைக்கிறேன் ,

படத்தின் கதைக்கு  ஏற்ற படத்தின் பெயர் , படத்தில்  தேவை இல்லாத காட்சிகள்  எதுவும் இல்லை , பெருசா லாஜிக் ஓட்டைகள் இல்லை , படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரத்தில் படத்தின் கதைக்குள் திரைக்கதை போகுது , படத்தின் ப்ளஸ் பாயிண்ட் சொல்லணும்ன்னா , கலையரசன் நல்லா நடிச்சி இருக்கார் , முட்டை கண்ணு  ஜனனி படத்தின் தேவையான அளவுக்கு இருக்காங்க , ஷிவதா அருமையாக கடைசி காட்சிகளில் பண்ணி இருக்காங்க , முக்கியமா பாலசரவணன் படத்தை நகர்த்துவதற்கு உதவுகிறார் , அதுவும் அவர் ஒரு சேசிங் சீன்ல்  படிக்கட்டில் ஓடும் காட்சி செம்ம சிரிப்பு , அங்க அங்கே timingல் வசனங்கள் நல்லா எடுத்து கொடுக்கிறார் , போலீஸ் கெட்டப்பில் பார்த்த உடனே திருடன் போலீஸ் படம் தான் ஞாபகத்துக்கு வருது ,   ஜிப்ரான் இசை நல்லா இருக்கு , location எல்லாம் நல்லா இருக்கு , படம் எங்கேயும் bore  அடிக்கல , ஆனால் சில இடங்கள் short film போல ஒரு feel .

படத்தின் பெரிய மைனஸ் கதை ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்திலே இது இப்படி தான் போகும்ன்னு தெளிவா தெரியுது , அதனாலா பின்னாடி வரும் சில விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பெரிய impact ஆகல, ட்விஸ்ட் என்று நினைத்த இடங்கள் ட்விஸ்ட் ஆகா தெரியல .

மொத்தத்தில் அதே கண்கள் இன்னும் கொஞ்சம் தெளிவான பார்வை கொண்டதாக இருந்து இருக்கலாம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 14 ஜனவரி, 2017

Koditta Idangalai Nirappuga - கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபன் படம்ன்னா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ,அதுவும்  அவரோடைய முந்தைய படம்  கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது , அந்த படத்தை போல எதிர்பார்த்து போக வேண்டாம் , அதே நேரத்தில் வழக்கமாக வரும் மசாலா படத்திலிருந்து மாறுபட்டது தான் இந்த படம் ,

படத்தின் ஆரம்பத்திலிருந்து அவர் கோடிட்ட கதையை நாமே நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று நினைச்சிட்டாரு போல,  சாந்தனு வந்ததிலிருந்து என்ன கதை? இது பேய் படமா ? காமெடி படமா ? திரில்லர் படமா ? இல்லை பெண்ணியம் பற்றிய படமா ? அல்ல சமூகத்தின் ஆண்கள் மனநிலை பற்றிய படமா ? என்று நம்மை  கொஞ்சம் நேரம் யோசிக்க வச்சாரு , பார்த்திபன் அவருக்கு என்று இருக்கும் குசும்பு வசனங்கள் இதுலயும் இருக்கு , ஆனால் சில  இடங்களில் இரட்டை அர்த்தம் வசனங்களும்  இருக்கு , ரஜினியை  பற்றிய வசனமும் , ஒரு குடை  கம்பி பற்றிய வரும் வசனமும் சூப்பர்,  மனுஷன் படம் ரொம்ப ட்விஸ்ட்ன்னு நினைச்சு கடைசியா ஒன்னு வைச்சார் , எனக்கு என்னமோ அது ஒரு பெரிய ட்விஸ்ட் போல தெரியல ஏன்னா படம் ஆரம்பிச்சு கொஞ்சம் நேரம் குழப்பமாக இருக்குன்னு சொன்னேன்ல , அதுக்கு அப்புறம் அங்கேயே தெரிஞ்சிடுச்சி இந்த படம் என்ன கதை என்று , அதை வேற பாவம் படம் முடியும் போது அவரே நேரில்  தியேட்டர்க்கு வந்து படத்தோட கிளைமாக்ஸ் வெளியே சொல்லிடாதீங்க என்று சொல்லிட்டு போகிறார், சார் இப்போ இருக்க ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க .சார் ஏன் பார்வதி நாயருக்கு தாலியை வெளியேவே தொங்க விட்டு சுத்தவிட்டீங்க ?

சாந்தனு ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார் , அவர் இந்த படமாவது நல்லா பேரு வாங்கி ஹிட் ஆகும் நினைச்சி இருப்பர் , ஆனால் பேரு வேணும்ன்னா வாங்கி தரும் ஆனால் ஹிட் ஆகுறது கஷ்டம், நல்லா டான்ஸ் ஆடிஇருக்கீங்க , ஆனா அந்த பாட்டு படத்துக்கு தேவையில்லை அதையும் நீங்களே Fb ல சொன்னீங்க.

பார்வதி நாயர் , நீங்க மலையாளி என்பதால் மலையாள கேரக்டர் சரியாக இருக்கு , ஆனா நீங்க சிரிக்கும் போது ரொம்ப வயசான மாதிரி இருக்கு , சாந்தனுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க ,

தம்பி ராமையா அங்க அங்க வராரு அவளோதான் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு காட்டினார் ஆனால் சிரிப்பு வரலை 

மொத்ததில்  கோடிட்ட இடங்களை நிரப்புக,  படத்தை   பற்றி --------------------------- நீங்களே நிரப்புக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 12 ஜனவரி, 2017

Bairavaa - பைரவா - 100th

வணக்கம் சினி கிறுக்கனின் பொங்கல் நல் வாழ்த்துகள் , போன வருஷம் சில படங்கள் பார்த்தும் எழுத முடியல , அதனால் இந்த  வருஷத்தின் முதல் பதிவே நூறாவது பதிவாக இந்த பைரவா அமைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியாக சொல்லிக்கொள்கிறேன் , ஐயோ !!.. மகிழ்ச்சி கபாலி சொல்லுவாருங்க  , பைரவா சிறப்புன்னு தான் சொல்லுவாரு , மறந்துட்டேன் பைரவான சிறப்புன்னு சொல்லவேண்டும் . சரியா ? அதனால எல்லா விஜய் ரசிகர்கள் இன்று முதல் சிறப்பு என்று சொல்லுங்கப்பா .

குறிப்பு : நான் விஜய் ரசிகனும் இல்லை , அஜித் ரசிகனும் இல்லை, நான்  ஒரு சினிமா ரசிகன் , இதை சொல்லலைன்னா நமக்கு ஆபத்து , அட இதை சொன்னாலும் சில பேரு திட்டுறானுக(குறிப்பு : திட்டுவது என் நண்பன் தான் ) .

இந்த படத்தை நான் எப்படி எதிர்பார்த்து போனேனோ அப்படியே தான் இருந்தது , அட ஆமாங்க அழகிய தமிழ் மகன் எப்படி இருந்திச்சின்னு நமக்கு  தெரியும் , அதனால நான் அந்த அளவுக்கு தான் எதிர்பார்த்து போனேன், அது அப்படியே இருந்திச்சி , பைரவா படத்தில் விஜயயை தவிர எல்லாமே ஏற்கனவே வறுத்த ரவா தான் இந்த பைரவா   

படத்தில் பாஸிட்டிவ் சொல்லுவதற்கு முன்னாடி , நெகடிவ் சொல்லியே ஆகணும், விஜய்யும் , கீர்த்தியும் bikeல்  போற சீன பார்த்தா அந்த காலத்துல எம் ஜி ஆர்  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டுல பின்னாடி screenல் ஓடவிடுவாங்க அதுபோல எடுத்து இருக்கார் , சார் இப்போ ஷார்ட் பிலிம் எடுப்பவன் கூட அந்த சீன்களை நல்லா எடுக்குறாங்க, opening கிரிக்கெட் சண்டை சின்ன பசங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் , கிருஷ்ணஜெயந்தி காண்பித்து வீட்டுல கொழுக்கட்டை செஞ்சி வைக்கிறீங்க, சார் அந்த basic லாஜிக் கூட தெரியாதா ? கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு தான் பண்ணுவாங்க ,  அந்த laughing gas சீன் வச்சீங்க , ஊரே பார்த்து சிரிக்குது அந்த காட்சிக்கு ,  கிளைமாக்ஸ்க்கு முன்னாடி கண்டிப்பா ஒரு பாட்டு வைக்கணும் யார் சார் சொன்னது ? திருநெல்வேலி என்பதால் சில கேரக்டர் அப்போ அப்போ நெல்லை தமிழ் பேசுறாங்க அப்புறம் சாதாரண தமிழ் பேசுறாங்க, சார் இந்த continuity பார்க்க மாட்டிங்களா ? பெட்ரோல் அடிச்சி விஜய் ஓடும் காட்சி பார்த்த அட முதல்வன் போல ஓடி திருப்பி அடிப்பாரு பார்த்தா அவரை மொக்கை ஆக்கிட்டாங்க ,வாட்ஸ் ஆப்ல் முதல் பாதி சூப்பர் சொன்னாங்க , ஆனா முதல் 45 நிமிஷம் அறுந்த பழைய காதல் காட்சிகள் , சண்டை காட்சிகள் , அதுவும் காமெடி மரண மொக்கை , அந்த பிளாஷ் பேக் ஆரம்பிச்சி அந்த இன்டெர்வல் ப்ளாக் சண்டை நல்லா மாஸாக செய்து இருக்காங்க . அடப்போங்கப்பா இதுக்கு மேல என்னால நெகடிவ் சொல்ல முடியாது .
பரதன் சார் உங்களைவிட சின்ன வயசு பசங்க டைரக்ட் பண்ணறவங்க நல்லா matured ஆகா திரைக்கதை பண்ணறாங்க , ஆனா நீங்க நல்ல மெசேஜ் வச்சிக்கிட்டு இப்படி ஒரு முதிர்வு இல்லாமல் எடுத்து இருக்கீங்க அதுவும் மாஸ் ஹீரோவை வச்சி நாசம் பண்ணிடீங்க , பெரிய கதை இல்லாமல் அட்லீ தெறி படத்தை நல்ல சுவாரசியமா , மாஸாக பண்ணார் , ஆனா நீங்க விஜயயை வச்சி எங்களுக்கு நல்லா செஞ்சிட்டிங்க .

விஜய் பற்றி சொல்லணும்ன்னா மனுஷன் 40 வயசுக்கு மேலே  , ஆனா மனுஷன் பக்காவா smart ஆகா இருக்கார் , சார் படத்தில பல இடங்களில் ஒரு ராகம் போட்டு பேசுறீங்க அது நல்ல இல்லை சார் இனிமேல் அதுபோல பண்ணாதீங்க ,அப்புறம் அந்த காசு கையில் சுற்றுவது, gunல் bullet  வச்சி பாலாஜி கிட்ட விளையாடுவது 80s , 90s ல் பண்ணிட்டாங்க  , குறிப்பா இனிமேல் இந்த டைரக்டர் கூட சேரவே சேராதிங்க , இவர் ஒரு modern பேரரசு போல மனுஷன் உங்களை வச்சி செஞ்சிட்டாரு ,  முடிச்சா மீண்டும் முருகதாஸ் , அட்லீ கூட பண்ணுங்க , உங்களை இந்த படத்தில் காப்பாற்றியது அந்த பைரவா Bgm தான், வரலாம் வரலாவா பைரவா, மற்ற பாட்டெல்லாம் உங்களுக்கு கை கொடுக்கவில்லை .

கீர்த்தி சேச்சி  நமக்கு சாதாரண தமிழே மலையாளம் கலந்து தான் வரும் இதில் எதுக்கு நெல்லை தமிழ் ட்ரை பண்ணீய்ங்க ? நீங்க இன்னும் தொடரி படத்தில் இருந்து வெளியே வரவில்லையா ? அங்க அங்க கொஞ்சம் லூசு மாதிரி ,அந்த படத்தில் வருவது  போலவே இந்த படத்திலும் பண்ணா எப்படி ?
 றெக்க படம் மாலா அக்கா இந்த படத்திலும் கீர்த்திக்கு அக்காவாக வராங்க ,i think இனிமேல் இவங்க நிறைய அக்கா ரோல் பண்ணுவாங்க போல .

மொட்டை ராஜேந்திரன் காமெடில நம்மை மொட்டை அடிச்சி விட்டார் , இந்த படத்தில் அவர் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை . தம்பி ராமையா கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார் போல , 

சந்தோஷ் நாராயணன் வரலாம் வரலாம் பைரவா Bgm தவிர மற்றவை எல்லாம் டப்பாங்குத்து கடுப்பு நாராயணா .

வில்லனை பற்றி சொல்லவேண்டுமா ? கஜபதி பாபு கேரக்டர் strong பண்ணவில்லை ,டம்மி ஆகிட்டாரு டைரக்டர், அதனால அவர் கேரக்டர் பெருசா எடுபடலை, அட போங்கபா எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல 

இந்த படத்தில்  நல்ல கருத்தை வச்சி கொண்டு புரட்சிகரமாகவோ அல்லது நல்ல commercial ஆகவோ கொடுக்காமல்  குழப்பிவிட்டாரு ,  இந்த படத்தில்  விஜயயை சீரழித்தது டைரக்டர் பரதன் தான் , 

மொத்தத்தில் பைரவா ஒரு சாதாரண ரசிகனின் கையிலும் வாயிலும் வெறும் ரவா தான் .

குறிப்பு : நிச்சியமாக நான் எழுதின இந்த நூறாவுது review நிறைய விஜய் ரசிகர்கள் திட்டி கமெண்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறேன் .மேலும் நூறு போஸ்ட்க்கும் என்னை ஆதரித்த என் நண்பர்களுக்கும்  , ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 30 டிசம்பர், 2016

Dhuruvangal - 16 துருவங்கள் பதினாறு


இந்த வருஷத்தில்  மெட்ரோ , உறியடி போன்ற வித்தியாசமான  படங்கள் வரிசையில் இந்த துருவங்கள் பதினாறு படமும் ஒன்று  , என் நண்பன் இந்த படத்தை நேற்று பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னான் ,  உறியடி  வந்தது தெரியாமல், படம் நல்லா இருக்குன்னு கேள்விபட்ட பிறகு படம் போயிட்டு பார்க்கலாம் நினைச்சா படம் தியேட்டர் விட்டு போயிடுச்சி , அதனால இந்த படத்தை மிஸ் பண்ணாம பார்க்கணும் ஒரு வழியா பார்த்தாச்சி .
ஒரு படம் இப்படி எல்லாம் இருந்தாதான் ஓடும் என்று நினைச்சி எடுக்கிற காலகட்டத்துல, இப்படியும் எடுக்கலாம்ன்னு எடுத்து எல்லா முன்னணி மசாலா டைரக்டர் மற்றும்  producer முகத்தில்  நல்லா சாயத்தை பூசிட்டார் இந்த 22 வயசு டைரக்டர் கார்த்திக் நரேன் , 

படம் வெறும் 105 நிமிஷம் தான் , படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து இருக்காங்க , படத்தோட 105ஆம் நிமிஷத்தில் கூட படத்தோட மர்ம முடிச்சை அவிழ்ப்பது சூப்பர் , படத்தோட கதாபாத்திரங்களும் , திரைக்கதையும்  ஒன்றோடு  ஒன்னு   link பண்ணி இருப்பது செம்ம 

த்ரில்லர் படம் என்பதால் படம்  ஒரே பரபரப்பா , அடிதடியா போகுமான்னு பார்த்தா அப்படி இல்ல , படம் நிறுத்தி நிதானமா அதே நேரத்தில ஆனி  தரமா எடுத்து இருக்காரு டைரக்டர் ,

படத்தில் நடிகர்கள்ன்னு பார்த்தா ரகுமான் மற்றும்  டெல்லி கணேஷ்  தவிர எல்லாமே புது முகம் தான் , பல கதாபாத்திரங்கள் மனசுல  பதியுது , அந்த பணக்கார மூன்று பசங்க , புது constable கௌதம் , பேப்பர் போடும் பையன் , அந்த கதாபாத்திரத்தோட வடிவமைப்பும் , அவங்க நடிப்பும் செம்ம .குறிப்பா அந்த கௌதம் கதாபாத்திரம் investigate பண்ணும் காட்சிகள் .சூப்பர் .,ரகுமான் நிதானமா , maturedஆக  அந்த கதாபாத்திரத்துக்கு அருமையா பொருந்தி இருக்காரு ,

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நல்லா யோசிச்சி பண்ணிருக்காரு , அதாவது investigate பண்ணுகிற வீட்டுல இருக்கும் பொண்ணுகிட்ட ரகுமான் , நீங்க refresh பண்ணிக்க பக்கத்துக்கு வீடு யூஸ் பண்ணிகோங்க சொல்லுவது , mobileல் கேஸ் complaint எடுக்காமல் இருந்த,  புது constableக்கு ரகுமான் அட்வைஸ் பண்ணும் காட்சி , ரகுமான் வீடு address சொல்லுவதுக்கு முன்பு mobile cut செய்த constableகிட்ட ரகுமான் மீண்டும் பேசும் காட்சி சூப்பர் .

 கேமராமேன் சுஜித் கோவை , ஊட்டி , இரவு மழை , அழகா நம்மை உணரவச்சி இருக்காரு .அதுக்கு பக்கபலமா ஜேக்ஸ் பிஜாய் இசையமைச்சிருக்காரு , ஆனால் மியூசிக் டைரக்டர் பாவம் , படத்தில் வெறும் BGM மாட்டும் தான் இருக்கு பாட்டு எதுவும் இல்லா, படத்துக்கு அது ஒரு பெரிய ப்ளஸ் .

இந்த வருஷத்தோட கடைசி சினிகிறுக்கன் பதிவு  இப்படி ஒரு நல்ல படத்தை பற்றி எழுதினது ரொம்ப சந்தோஷம். இந்த படத்துக்கு ஒரு நெகடிவ் என்றால் அது இந்த  படம் குறைந்த தியேட்டரில் குறைந்த காட்சி ஓடுவது தான் 

மொத்தத்தில் துருவங்கள் பதினாறு இந்த இரண்டாயிரத்து பதினாறில் கோலிவுட்டில் வந்த நல்ல பதிவு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 23 டிசம்பர், 2016

Dangal - தங்கல்

நீரஜா ,Rustom , தோனி என்று உண்மை சம்பவங்களை கொண்டு இந்த வருஷம் வந்த பாலிவுட் படம் வரிசையில் இந்த தங்கல் ,  நமக்கு தெரிஞ்சது என்னமோ கொஞ்சம் அரைகுறை ஹிந்தி தான் , நல்லவேளை subtitle போட்டு காப்பாத்திட்டாரு நம்ம அமீர்கான் ,

மஹாவீர் மல்லுயுத  வீரர் , பதக்கம் வாங்கி நம்மோட தேசிய கொடி பறக்கவிடனும் நினைச்ச ஒருவர் குடும்ப சூழ்நிலையால் முடியாமல் போக , ஆண்கள் மட்டுமே விளையாட முடியும் நினைச்ச சமூகத்தில் , தன்னோட பெண்களை விளையாட்டில்  வெற்றிபெற செய்து நம் தேசிய கொடியை பறக்க விட செய்த  உண்மை கதை தான் இந்த படம் ,

எப்பொழுதும் ஒரு  புது முயற்சி பண்ணும் அமீர் , இந்த படத்திலும் அதை செய்து  இருக்கார், ஒரு படத்தில் எத்தனை மாற்றங்கள் , சின்ன வயசு , நடுத்தர வயசு , முதியவர் வயசுன்னு அத்தனை மாற்றங்கள் முகத்திலும் , உடம்பிலும் , தன் அனுபவத்திலும் நடிப்பிலும் பின்னிப்பெடல் எடுத்துட்டாரு மனுஷன் , அதிலும் முதல் காட்சி ஆஃபீஸ்ல் சண்டை போடுவது சூப்பர் .

சின்ன வயசு கீதாவாக  வரும் அந்த குட்டி பொண்ணு செம்ம , நிஜமாகவே அந்த பொண்ணு சண்டை கத்துக்கிட்டு வந்துச்சா தெரியல , பசங்களோட சண்டை போடும் காட்சிகள் எல்லாம் செம்ம , அந்த சண்டைகளை படமாக்கிய கேமராமேன் , அந்த சண்டைகளை உருவாக்கிய  ஸ்டண்ட்மேன் எல்லாருக்கும் ஒரு சபாஷ்

சின்ன வயசுல அந்த விளையாட்டு பிடிக்காமல் கஷ்டப்பட்டு பயிற்சிக்கு போகும் காட்சிகள் நல்ல காமெடி அதுவும் அந்த சொந்தகார பையன் இவங்க கிட்ட மாட்டிகிட்டு படும்பாடு நல்ல காமெடி , அப்பாவியாக மாட்டிக்கிட்டு சின்னாபின்னம் ஆகிட்டான் .

ஒரு முரட்டுத்தனமான , எதை பற்றியும் கவலைப்படாத உறுதியான ஒரு புருஷனுக்கு மனைவியாக வரும் சாக்ஷி  தன்னோட பெண் குழந்தைகளுக்கு முடி வெட்டும் போதும் , வீட்டுல கறி சமைக்கும் போதும் வரும் காட்சிகளில் அவங்க நடிப்பு சூப்பர் .

 என்னதான் உண்மையான கதையாக இருந்தாலும் படத்தோட ப்ளஸ்அ தை திரைக்கதையாய் சரியாக எந்த ஒரு தேவையில்லாத மசாலாக்கள் இல்லாமல், அந்த சண்டைகளை வெறும் 2 நிமிஷத்தில் விறுவிறுப்பாக , சுவாரசியமாக , சீட் நுணிக்கு கொண்டு வந்துவிட்டார் டைரக்டர் , குறிப்பாங்க  காமென் வெல்த் விளையாட்டு அரையிறுதி போட்டி செம்ம , கேமராமேன் சேது ஸ்ரீராம்  , எடிட்டர் பாலு சலுஜா ,  டைரக்டர் நிதிஷ்  , இந்த மூன்று பேருக்கும் ஒரு பெரிய கைத்தட்டு அந்த ஒரு காட்சிக்கே கொடுத்துவிடலாம்  அந்த அளவுக்கு அந்த காட்சியை படம் பண்ணி இருக்காங்க

இசையமைப்பாளர் பிரிட்டம் தங்கல்  டைட்டில் பாட்டு படத்தில் சண்டை போடும் போது எல்லாம் வரும் போது நமக்கு அந்த உணர்வு நமக்கும் கொண்டுவந்துவிட்டார் .

மொத்தத்தில் தங்கல் படத்தில் மட்டும் பல பதக்கங்களை வாங்குவதோடு நிற்காது , இந்த படமும் பல பதக்கங்களை வெல்லும் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 9 டிசம்பர், 2016

chennai28-II - சென்னை 28 -II

சரோஜா சாமானிக்காலோன்னு சொல்லி ஆட்டம் பாட்டம் போட்டு என்ஜாய் பண்ண ஒரு படம் , ஒரு ட்ரெண்ட் செட்டிங் படமாக வந்த ஒரு படம் , இப்போதான் வந்தா மாதிரி இருந்த படம் சுமார் 10 வருஷம் ஆகி மீண்டும் இரண்டவாது பகுதியா வந்து இருக்கு படம் , நாம் எப்பொழுதும் ஒரு இயக்குனரோட படத்தை அவரோட முந்தைய படத்தை கம்பேர் பண்ணுவோம் , அதுவும் இரண்டாவது பகுதி என்றால்  நிச்சயமா எதிர்பார்ப்பு அதிகம் ஆகிடும் , ஆனா நான் இந்த படத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போனேன் .

வெங்கட்பிரபு ஒரு ஒரு படத்துல ஒரு tag  லைன் இருக்கும் A diet  பிரியாணி , , A game மங்காத்தா , இந்த படத்துக்கு reunion , ஆமாங்க வெங்கட்பிரபோட செட் அதே சேர்ந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி நண்பர்கள் சேர்ந்தா என்ன பண்ணுவாங்க ? படம் full ஆக  ஜாலியாக அரட்டை , ஒருத்தரை ஒருத்தர் கலாய்ப்பு , நிறைய சரக்கு அடிக்கிறாங்க , படம் ஆரம்பிக்கும் போதே நிறைய கிரிக்கெட்ன்னு சொன்னாங்க ஆனா கொஞ்சொடு தான் கிரிக்கெட் விளையாடுறாங்க , 

முதல் சில நிமிஷங்கள் பழைய ஆட்கள் இப்போ என்ன செய்கிறாங்க சொல்லும் வரை ஓகே தான், அப்பறம் வரும்  30 நிமிஷம் அப்படியே எங்க போகுது எதுக்கு போகுது தெரியல , வெங்கட் பிரபுவோட அந்த குதூகலமான நகைச்சுவைகள் இல்ல , ஜெய்யோட காதல் , கல்யாணபாடல் எல்லாம் படத்தில் ஓட்டும்படி  இல்லை ,  படத்தில் குறிப்பிடும் படி சில காட்சிகளே ரசிக்கும்படி இருக்குது , மற்றவை தேவையில்லாத இலவச இணைப்பு போல தான் இருக்கு ,  அந்த குறிப்பிடும்படி காட்சிகள் எதுன்னா , படத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் தான் நல்லா இருக்கு , படத்தில் மொத்தமே 3 கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் தான் , முதலில் வரும் காட்சியில் ஸ்மைல் சேட்டை விக்னேஷ் மேட்ச் கம்மெண்ட்ரி சொல்லுவது சூப்பர் , நம்ம youtube review பிரஷாந்த் சும்மா அவர்கூட உட்கார்ந்து இருக்காரு ,பிரஷாந்த் சார் இந்த படத்துக்கு என்னன்னு review பண்ணுவீங்க ?சென்னை 28 ஆஸ்தான commentator படவா கோபி கடைசி semi final வந்து கமெண்ட் பண்ணுவது செம்ம.

சிவா வழக்கம் போல தன்னோட மொக்கை காமெடி வைத்து படத்தை ஓட்டுகிறார் , ஒரு சில இடங்களில் timing counter கொடுக்கும் இடம் தவிர மற்றவை மொக்கை தான் , குறிப்பா சிவா sharks டீமுக்கு ஏன் பெயர் வந்தது சொல்லும் காட்சி மனசுல பதிகிறது ,ஜெய் நல்லா முகத்தில சதை ஏற்றிவிட்டார் , ஜெய் ஸ்டேஷனில் இருந்து வரும் காட்சி வேதாளம் தல போல் பண்ணுவது சிரிப்பு , போன படத்தில ஷிவா காதலுக்கு ஜெய் உதவினார் , இதில் ஷிவா ஜெய்க்கு உதவுகிறார் , நமக்கு எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் வெங்கட் பிரபு டீம் தலையோட ரசிகர் அதனால என்னவோ பிரேம்ஜிக்கு இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொடுத்துட்டாரு , பிரேம்ஜிக்கு சொல்லிக்கும்படி காமெடியா காட்சிகளோ இல்லை , வைபவ் அந்த கெட்டப் செட் ஆகல , சுப்பு பஞ்சு அருணாச்சலம் கெட்டப் மீசை எல்லாம் பார்க்க செயற்கையா காமெடியா இருக்கு , இன்னும் பலபேரை  பற்றி சொல்லணும்ன்னா இந்த போஸ்ட் போதாது , ஏன்னா சென்னை 28 கிரிக்கெட் டீம்ல நிறையபேரு இருக்காங்க 

.யுவன் சில இடங்களில் ஆரம்பம் படத்தோட bgm  எட்டி பார்க்கிறது ,வெங்கட்பிரபு  & யுவன் இந்த படத்தில் out of syllabusல் இருப்பது போல ஒரு உணர்வு , முதல் பாதியில் வைபவ் டீம் semi finalஸ் தோற்ற பிறகு , finals மீண்டும் ஷிவா டீமுடன் ஆடுவது எப்படி ? என்ன லாஜிக் சார் ? நீங்க கில்லி கபடி டீம் போல ஆடுறீங்க !!..நீங்க இந்த படத்தோட முதல் part பார்த்தல் தான் இந்த படத்தில் அவிழும் சில முடிச்சுகள் மற்றும் சில கதாபாத்திரங்கள் புரியும் .

மொத்தத்தில் சென்னை 28 -II இரண்டாவுது இன்னிங்ஸ் follow-on ஆகிடும் போல 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

Pazhaya Vannarapettai - பழைய வண்ணாரப்பேட்டை

உன்னதான் நினைக்கையில ராத்திரி தூக்கம் இல்ல அப்படின்னு ஒரு பாட்டு வேல்முருகன் பாட ,  ஜானி டான்ஸ் மாஸ்டர் ஆட , நடுவுல ரோபோ ஷங்கர் அந்த பாட்டில் காமெடி பண்ண பல மாதங்கள் முன்பு  பல மியூசிக்  சேனல் மற்றும் fmல்  போட்ட பாடல் , என்ன படம் இதுன்னு கேட்க தோணுச்சி , அந்த படம் தான் பழைய வண்ணாரப்பேட்டை , ஒரு வருஷத்துக்கு முன்னாடி போன தீபாவளிக்கு வரவேண்டிய படம் ஏன் இந்த அளவுக்கு லேட்டாக வந்துச்சி தெரியல ,

பழைய வண்ணாரப்பேட்டைன்னு படம் பேரு வச்சி இருக்காங்களே ட்ரைலர் பார்க்கும் போது வடசென்னை பேஸ் பண்ணி இருக்கே அதனால இது கொஞ்சம் ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படம் போல இருக்குமோ நினைச்சேன் , ஆனால் அது மாதிரி படம் அல்ல , நிச்சயமாக படத்தில் பல புதிய முயற்சிகள் பண்ணி இருக்காங்க தான் சொல்லணும் ,  நம் தமிழ் சினிமாவுல அண்ணா நகர் , அடையாறு , அருவா , கத்தி எடுத்த படங்கள் என்றால் ராயபுரம் , அதை விட்டா  மதுரைக்கு போய்டுவாங்க , முதலில் கதை நடக்கும் இடம் ,இது வரை யாரும் இந்த வண்ணாரப்பேட்டை மையமாக வைத்து படம் செய்தது இல்லை , மேலும் அந்த சந்து புந்துகளை உயிரோட்டமாக காட்டி இருக்காங்க ,அதுக்கு ஒரு பெரிய பாராட்டு , குறிப்பாக அந்த opening பாடல் , நிஷாந்த் காதலி பஜ்ஜி சூடும் இடம் ,  நிஷாந்த்  மற்றும் ப்ரஜின் நைட் ஒரு தெருவில் சண்டை போடும் காட்சிகள், பர்மா பஜார் , பர்மா உணவு அத்தோ , கையேந்தி பவன் எல்லாம்   பக்கா வடசென்னையை காட்டி இருக்காங்க  , படத்தின் பெரிய பிளஸ் கேமரா, ஒரே மாதிரி  அந்த நைட் effect feel   கொடுத்தது , ப்ரஜின் , கருணாஸை சந்திப்பது , ரிச்சர்ட் ஒரு பிரிட்ஜ் மேலே சண்டை போடுவது இந்த காட்சிகளில் எல்லாம் அந்த நைட் effectக்கு ஒரு உதாரணம்.
படத்தின் கதை ? தவறாக ஒரு பிரச்சனையில் மாட்டி கொண்ட நண்பனுக்காக ஒரு கொலைகாரனை கண்டுபிடிக்கிறாங்க இது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை , ஆனால் அந்த கொலைகாரன் யார் ? எப்படி இருப்பான் , படத்தின் இறுதி காட்சி வரை ஒரு சஸ்பென்சாக வைத்து இருப்பது சூப்பர் , படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே யார் அந்த பட்டறை குமார்ன்னு  கேட்டு படத்தின் பார்க்கும் ஆர்வத்தை கூட்டி இருந்தாங்க , அது யார் என்ன எப்படின்னு சொல்லமாட்டேன் ஏன்னா படத்தோட முக்கியமே அது தான்
 ,
படத்தின் முக்கிய மூன்று பேர் நிஷாந்த் , ப்ரஜின் , ரிச்சர்ட் நல்லா பண்ணி இருக்காங்க , ரிச்சர்ட் சில இடங்களில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கொடுத்த காசுக்கு மேல கொஞ்சம் நடிச்ச பீல் எனக்கு , மேலும் ரோபோ ஷங்கர் குறைந்த காட்சியே வந்தாலும் , நிறைந்த காமெடி பண்ணியிருக்கார் , கருணாஸ் கருணையான முகத்தோட கொஞ்சமா வந்தாலும் முழுமையான கதாபாத்திரமாக வந்து இருக்கிறார் .

படத்தில் சில பல மைனஸ்களும் இருக்கிறது , குறிப்பாக ஸ்டேஷனில் ஒருத்தர் ஒருதராக கதை சொல்லுவது படத்தின் நீளத்தை கூட்டுவதர்காக வைத்த காட்சிகளே தவிர , படத்தின் கதைக்கு உதவவில்லை , மேலும் பிரஜினின் காதல் கதை இலவச இணைப்பாக இணைக்கப்பட்டதாக உணர்கிறேன் , மேலும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதாக இருக்கிறது , உன்னதான் நினைக்கையில பாடல் ஏற்கனவே ஹிட் ஆனதால் அது ஒரு தடையாக இல்லை இசையமைப்பாளர் ஜூபின்க்கு ஒரு சபாஷ்  ,ஹீரோயின்க்கு காட்சிகள் , வசனங்கள் எல்லமே குறைவு , அந்த பட்டறை குமாரை பற்றி அப்படி இப்படின்னு மற்றவர்கள் சொன்னாலும் , அந்த கதாபாத்திரத்தின் power காட்டுவதர்காக சில காட்சிகள் வைத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் , ஒரு வேளை அவரை பற்றி  part2ல் வருமோ ? படம் வண்ணாரப்பேட்டை சுற்றி நடக்குது ஆனால் ஒரு ஷாட்டில் வடபழனி சூர்யா ஹாஸ்பிடல் கிட்ட இருக்கும் சிக்னல் கண்ணில்பட்டது .

வழக்கமான படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சொல்ல முடியாது அதே நேரத்தில் அரைச்ச மாவே அரைத்து இருக்காங்க சொல்ல முடியாது , கதை களமும் , அதை கொடுத்த விதமும் ஒரு புதிய இயக்குனருக்கு ஒரு புதிய முயற்சி,  அதற்க்காவே அவரை பாராட்டலாம் , இப்படி புதிய முயற்சி ஒரு வருடம் காலதாமதமாகவும் குறைந்த தியேட்டர்கள் மட்டும் ரிலீஸ் ஆனது ஏன் தெரியல .

மொத்தத்தில் பழைய வண்ணாரப்பேட்டை பழைய முயற்சி அல்ல , இது ஒரு புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 1 டிசம்பர், 2016

Saithan - சைத்தான்

உச்சநீதிமன்றம் தீர்ப்புபடி படத்திற்கு முன்பு தேசியகீதம் போட்டு அதன் பின்பு பார்த்த முதல் படம் இந்த சைத்தான் ,என்னோட சின்ன  வயசில் இருந்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் முன்பு வரை,  சென்னையில் படத்திற்கு முன்பு தேசியகீதம் போடும் ஒரே தியேட்டர் எ.வி.ம்.ராஜேஸ்வரி மட்டும் தான் , இதை நான் இங்கு பதிவு செய்கிறேன் .

சைத்தான் இது எந்த மாதிரி ஒரு படம் ? படத்தோட சில நிமிஷங்கள் யூடியூபில் ஏற்கனேவே போட்டு கொஞ்சம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தாங்க ,முதல் பாதி ஒரு அமானுஷ்யமானா  படமா ? சைக்கலாஜிக் படமா ? எந்த மாதிரி ஒரு படம்ன்னு யூகிக்க முடியாமல் ,ஒரு நிமிஷம் கூட கண் இமைக்காமல் பார்க்க வைத்து இருக்கிறார் டைரக்டர் , அதுக்கு ரொம்ப பக்கபலமாக இருந்தது விஜய் ஆண்டனியின்  bgm , ஏன்னா அந்த இசை தான் அப்படியே நம் மனசில் படத்தோட feel பதியவைக்கிறது , குறிப்பாக அந்த குரல் கேட்கும்  இடங்கள் நல்லா பண்ணி இருக்காருன்னு தான் சொல்லணும் 

படத்தோட மாபெரும் ப்ளஸ் விஜய் ஆண்டனி நடிப்பு , அவரோட இசை , ஹீரோயின் அருந்ததியின்   கண்கள் , மற்றும் விறுவிறுப்பான முதல் பாதி தான் , முதல் பாதியில்  பல இடங்கள் நல்லா மிரளவைத்து இருக்கிறார் டைரக்டர் ,  அப்போ இரண்டாவது பாதி ? , பல இடங்கள் எது நிஜம்? எது கனவு ?எங்கே நாம் இருக்கிறோம் என்று ஒரு சில தடுமாற்றம் இருக்க தான் செய்கிறது , கொஞ்சம் தட்டு தடுமாறி போர் அடிக்காமல் கொஞ்சம் குழப்பி படத்தை கொண்டு போய்ட்டாரு டைரக்டர் , இறுதியாக வரும் கதையின் உண்மையான காரணங்கள் சில பல இங்கிலிஷ் படங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கிறது , எனக்கு தெரிந்த சில காட்சிகள் உங்கள் முன்னே , அவைகளை நீங்கள் கீழே கொடுத்து உள்ள link click செய்து பார்க்கலாம் .

ஒரு சண்டை காட்சி Equalizer படத்திலிருந்து கொஞ்சம் எடுக்க பட்டது  , இது போல தான் வேதாளம் படத்திலும் இருக்கும் 
https://www.youtube.com/watch?v=y28SoWEnPHY

Lucy  படத்திலிருந்து இதே போல் காட்சி இந்த படத்தில் இருக்கு 
https://www.youtube.com/watch?v=bNw9G8u8qXg 

இந்த படத்தில் முன்ஜென்பம் வரும் காட்சிகள் அப்படியே 2.20 நிமிஷத்தில் இருந்து 2.35 வரை அப்படியே lucy படத்தில் இருக்கிறது , அவை  கீழே உள்ள லிங்கில் காணலாம் .
https://www.youtube.com/watch?v=jCwVtbYiOqc

மேலும் வில்லன் கதாபாத்திரம் மிகவும் கொடூரமாக ஆரம்பித்து , இறுதியில் காமெடியனாக முடித்தது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது,இரண்டாவுது பாதியில் ஒரு கேள்வி எனக்கு இருந்து கொண்டே தான் இருந்தது , அது படம் முடிந்து டைட்டில் போடும் போது தெளிவு ஆயிடுச்சி, ஆகவே டைட்டில் போட்டுட்டாங்கன்னு எழுந்து போகாதீங்க , கடைசி வரை இருந்து பார்த்துட்டு போங்க .

மொத்தத்தில் சைத்தான் படம் நாடா புயல் போல் வலுவாக ஆரம்பித்து இறுதியில் வலுவிழந்தாலும்,  விஜய் ஆண்டனியின் வித்யாசமான முயற்சிகளுக்காக பார்க்கலாம்

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 18 நவம்பர், 2016

Kadavul Irukaan Kumaru - கடவுள் இருக்கான் குமாரு

கடவுள்  இருக்கான் குமாரு படத்தில கதை இருக்கா ,  எப்போ டா  ராஜேஷ் படத்தில் கதை இருந்து இருக்கு ? சரக்கு தான் டா இருக்கும் , இந்த படத்திலும் அப்படி தான் ,
காமெடி எப்படி டா இருக்கு ? இருக்கு ஆனா இல்ல ,அதாவது sms , ஓகே ஓகே போல சூப்பரா இல்ல ஆனா ஓரளவுக்கு சிரிக்க காமெடி இருக்கு , அப்போ ஆல் இன் ஆல் அழகுராஜா  பார்ட் -2 வான்னு கேட்காதீங்க, அங்க அங்க அப்படி தான் ஆரம்பத்தில்  படம் போகுது,

ஓகே ஓகே படத்தில் இருக்கும் சில காட்சிகளை திருப்பி போட்டா இந்த கடவுள் இருக்கான் குமாரு , ஓகே ஓகே படத்தில் ஹீரோ கல்யாணத்தை நிறுத்த சென்னை to பாண்டிச்சேரி போவாரு , இதில் ஹீரோ கல்யாணத்தை நடத்த பாண்டிச்சேரி to சென்னை போகிறார் , வழக்கமாக சந்தானம் வருவாரு ஆனா அவர்  இல்ல , அதுக்கு சபஸ்ட்டியூட் , R.J .பாலாஜி வராரு, ராஜேஷ்க்கு பாண்டிச்சேரி ராசியான இடம் போல , ஷங்கர் அவரோட படத்தில் எப்படி சுவருக்கு , trainக்கு பெயிண்ட் அடிச்சி வைப்பாரோ , அதுபோல இவரோட எல்லாப்படத்திலும் கல்யாணாச்சத்திரம் வந்துரும் அது smsல் ஆரம்பிச்சி இப்போ கடவுள் இருக்கான் குமாரு வரைக்கும்

ராஜேஷுக்கு கலாய்க்கிறது  கை வந்த கலை , அதை இந்த படத்தில  செம்மையா பண்ணி இருக்கார் , but  அவரோட முந்தைய  படங்களில் இருக்கும் கதாபாத்திரத்தை கலாய்ப்பாரு , ஆனா இதில் நம்மை  சுற்றி நடக்கிற விஷயத்தை கலாய்ச்சியிருக்கார், உண்மையா சொல்லணும்ன்னா லொள்ளு சபா போல இருக்கு , குறிப்பா அந்த சொல்லுவது எல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து பண்ணும் சீன் செம்ம , அதில் பாலாஜி பண்ணும் அட்டகாசம் அல்டிமேட் , சரவணா ஸ்டோர் ad , BSNL ad , ப்ரேமம் சாய்பல்லவி vs சுருதிஹாசன் பற்றி சொல்லுவது  சினிமா fieldல  இருக்கும் ஆட்களையே நீங்க கலாய்ப்பது செம்ம தில் தான் பாஸ் உங்களுக்கு, எம்.எஸ். பாஸ்கர் , ஜி வி பிரகாஷ் மீட் பண்ணும் காட்சி சூப்பர் , அந்த காட்சிகளில் மதம் மாறுவது பற்றி பேசுவது சமூகத்தில் உண்மை என்றாலும் , அந்த மதத்தை சார்ந்தவங்க எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் படம் வந்தது , உங்களுக்கு கடவுள் இருக்கான் ராஜேஷ்ன்னு தான் சொல்லணும் .எல்லோரும்  பேய் படம் எடுக்குறாங்க அதனால ராஜேஷுக்கும் பேய் படம் ஆசை வந்துடுச்சி போல , ஒரு பேய் காட்சி வச்சி , அதுக்கு ஒரு பாட்டு வேற வெச்சி இருக்காரு, அது  மரணமொக்கையாக இருந்துச்சி .அது கொஞ்சம் கூட தேவை இல்லாத காட்சி , படத்தை இரண்டு மணி நேரம் வரணும்ன்னு அதுக்காக நடுவுல சொருகிட்டாரு போல.

சரி படத்தை பற்றி நிறைய சொல்லியாச்சி  , படத்தின் கேரக்டர் பற்றி பார்க்கலாம் ,  ஜி.வி.பிரகாஷ் படத்தில எப்படி இருக்காருன்னு பார்த்தா , ரொம்ப குட்டியா இருக்காருன்னு சொல்லணும் , பாட்டில் குரூப் டான்ஸ் ஆடும் போது , இருக்கற எல்லா டான்ஸர்ஸ் விட ரொம்ப குள்ளமாக தெரிகிறார் , பாவம் அவரை ரோபோ ஷங்கர் அந்த height  வச்சி கலாய்ச்சி இருக்கார் .நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு

பிரகாஷ்ராஜ் , ரோபோ ஷங்கர் , சிங்கம்புலி காம்போ செம்ம , ஆனந்தி , நிகிகல்ராணி   compare பண்ணா  கல்ராணிக்கு ஸ்கோப் கம்மி தான் , ஆனந்திக்கு ஏன் நிறைய மேக்கப் போட்டு இருக்காங்க ? இல்ல அவங்க நிஜமான நிறமே அது தான ? கொஞ்சம் செயற்க்கையாக தெரிஞ்சாக. மொட்டை ராஜேந்திரன் படத்தில் வச்சா நல்லா காமெடி ரீச் ஆகும் நினைச்சி வச்சி இருப்பாரு போல , ஆனா அவர் காமெடி பெருசா எடுபடவில்லை

key பிளேயர் of the movieன்னு சொல்லனும்னா அது பாலாஜி தான் , மனுஷன் பட்டைய கிளப்பிட்டாரு , படம் ஆரம்பத்தில் அவரோட காமெடி கொஞ்சம் மொக்கயா இருக்கு போல தெரிஞ்சிது, ஆனா அந்த சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சியில் , ஐயோ அம்மான்னு கத்துவது எல்லாம் சூப்பர் , பல இடங்களில் timing counter செம்மயா கொடுத்தாரு , ஆனால் இந்த காமெடி இப்போ இருக்கும் trendக்கு கொஞ்சம் நாளைக்கு  செட் ஆகும் ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்தா பெருசா சிரிப்பு வராது, பாலாஜி ஒரு t-shirt ல laugh on trouble போட்டு இருக்காரு , அந்த வார்த்தைகள் தனியா பிரிண்ட் எடுத்து cello tape  போட்டு ஒட்டி இருப்பார் போல , cello tape தெரியுது , assistant directors கவனிக்கவில்லையா ? ஏன் சார் budget problem மா ? printed  t-shirt கடையில் print பண்ணி போட்டு இருக்கலாமே .


மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு  - கடவுள் தான் காப்பாத்தணும் குமாரு

இப்படிக்கு
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 நவம்பர், 2016

Acham Yenbadhu Madamaiyada - அச்சம் என்பது மடமையடா

 கௌதம்மேனன் + ரஹமான் + சிம்பு  ஒரு ஹிட் காம்போ கொடுத்து பல வருஷம் கழிச்சி மீண்டும் அதே காம்போ ஹிட் கொடுக்குமா ? சிம்புவிற்கு ஒரு பிரேக் பாயிண்ட் கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்த ஒரு படம் , நிச்சயமா அந்த எதிர்ப்பார்புக்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் கொடுக்கல இந்த படம் .

கௌதம்மேனன் ஒரு classy டைரக்டர், அவரோட படங்களில்   அது crime படம்னாலும் சரி , காதல் படம்னாலும் சரி , காதல் அப்படியே fresh காற்று சுவாசிப்பது போல இருக்கும் , அதுவும் இந்த படத்தில் இருவரும் மாற்றி மாற்றி காதல் propose பண்ணும் situation செம்ம , அதிலும் தள்ளி போகாதே பாடல் வரும் இடம் , இதுவரைக்கும் யாரும் இப்படி வச்சது இல்ல , ரொம்ப ஹிட்ஆனா அந்த பாட்டு அப்படி ஒரு இடத்தில வைப்பாருன்னு சத்தியமா நினைக்கவில்லை, மனசுல அப்படியே நிக்குது,  choreographer பேருல ஏன் கௌதம்மேனன் பேரு போட்டாங்கன்னு அந்த பாட்டு பார்க்கும் போது தான் எனக்கு புரிஞ்சிது , இது வரைக்கும் எந்த படத்திலும் choreographer name போடும் போது directors பேரு போட்டது கிடையாது 

படம் ரெண்டு different extremeல பயணிக்குது , முதல் பாதி வேற ஒரு கதைக்களம் போல இருக்கு , இரண்டாவுது பாதி அப்படியே முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் போல இருக்கு , முதல் பாதி அட வெறும் காதல் படமாக தான் போகபோது நினைச்சேன் , ஆனா தள்ளி போகாதே பாட்டு வந்த பிறகு படத்தோட கதைக்கு வேற ஒரு நிறம் மாறுது , இரண்டாவுது பாதி த்ரில்லிங்காக மாறிடுச்சு , ஆனா base line காதல் மட்டும் தான் , படம் ரொம்ப நிதானமாக ஆரம்பிக்குது , ஆனா போக போக அப்படியே அந்த audience pulse அப்படியே ஏற்றிவிட்டார் , முதல் பாதியில் ரெண்டு வசனத்துக்கு ஒரு பாட்டுன்னு வருது , அப்படியே அவங்க இரண்டு பேரும் travel பண்ண ஆரம்பிக்கும் போது , அடேங்கப்பா எத்தனை பாட்டுபா  வரும் ? கொஞ்சம் bore அடிக்குதேன்னு கேட்கத்தோணுது , ஏன்னா எல்லா பட்டும் முதல் பாதியிலே வந்துடுச்சி , இரண்டாவுது பாதியில் பாட்டே கிடையாது , இது மிகவும் புதிய முயற்சி  யாரும் அப்படி பண்ணது கிடையாது , ஏன்னா நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி நிச்சயமா ஒரு பாட்டு வைப்பாங்க அதுவே படத்தோட கதைக்கு வேகத்தடையா இருக்கும்  , ஆனா அதை கௌதம் மேனன் செய்யவில்லை , இரண்டாவுது பாதி ஏன் எதுக்கு இது எல்லாம் நடக்குதுன்னு கடைசி காட்சி வரை சொல்லாமல் கொண்டு போயிருக்கார் அது அருமை , அப்பறம் படம் fullஆக சிம்பு பேரு என்னன்னு சொல்லாமல் கொண்டு போயிருப்பது செம்ம , அதுவே ஒரு curiosity படம் பார்க்கும் போது கிளப்பிவிடுது , படம் பார்த்தவங்க ப்ளீஸ் அந்த பேரு என்னன்னு வெளியே சொல்லாதீங்க , அப்புறம் அந்த சுவாரிஸ்யம் போய்டும் , 

படத்தின் negativeன்னு சொல்லனும்னா , சிம்பு ஒரே படத்தில் வேற வேற கெட்டப்பில் வருகிறார் , ஓ தசாவதாரமான்னு கேட்க்காதீங்க , படம் லேட் ஆனதால் , ஒரு ஷாட்ல ஒல்லியாக இருக்கார் , ஒரு ஷாட்ல கொஞ்சம் குண்டாக தெரிகிறார் படத்தில் , சிம்புவிற்கு ஒரு request ப்ளீஸ் உடம்பை கொஞ்சம் maintain பண்ணி பழய சிம்புபோல வாங்க ,சில பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் இருக்கு , இருந்தாலும் அவை ஒரு பெரிய தப்பு போல தெரியவில்லை , ஏன்னா படத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் அதை மறக்க செய்துவிட்டது 

ஹீரோயின்க்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் ,மஞ்சிமா மோகன் நல்லா  பண்ணி இருக்காங்க , கௌதமின் favorite dancer சதிஷ் இந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்கார்.

முக்கியமான விஷயம் என்னோட favorite மியூசிக் டைரக்டர்  ரஹமான், மனுஷன் பிண்ணி  பெடல் எடுத்துட்டார் , முதலில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு கவிதைநயமாக இருக்கு , அந்த பாடல்கள் எல்லாம் கொஞ்சம் lateஆகா தான் மனசில் பதியும் , தள்ளி போகாதே பாட்டை பற்றி நான் சொல்லவே  தேவையில்லை , ஏன்னா எந்த அளவுக்கு அந்த பாட்டு ஹிட்ன்னு தெரியும் , repeat modeல் ஓடிக்கிட்டு இருக்கும் பாட்டு அது , bgm செம்ம இரண்டாவுது பாதியில் நிறைய இடங்களில் தள்ளி போகாதே அப்படியே mild ஆகா வந்து போவது செம்ம , ரஹமான் ரஹமான் தான், தலைவா ur great .

படம் பேருக்குயெட்டாற்போல சிம்பு தன் தோல்விக்கு பின் அச்சம் என்பது மடமையடா என்று அச்சத்தை உடைச்சிகிட்டு  இந்த படத்தின்  மூலமாக வந்து இருக்கார் என்று சொல்லணும்.

மொத்தத்தில் அச்சம் என்பது மடமையடா அச்சம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 29 அக்டோபர், 2016

Kashmora - காஷ்மோரா


காஷ்மோரா கொடுத்த காசுக்கு moreah  lessah பார்ப்போம்ன்னு  படம் பார்த்தேன் , பொழுதுபோக்கு, சிரிப்புன்னு பார்த்தா more தான் ஆனா கதை அதோட பலம்ன்னு பார்த்தா கொஞ்சம் less தான் , அண்ணன் சூர்யா பேய் படம் செய்துட்டார்  , கார்த்திக்கு நாமளும்  பண்ணனும் தோணுச்சு போல, அதனால இந்த படம் எடுத்து இருப்பார் போல.

படம்  பார்த்தா கார்த்தி கதாபாத்திரம் மாஸ்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கணும் , அப்புறம் கார்த்தி கெட்டப்பில் கொஞ்சம் பாகுபலி கட்டப்பாவில் கொஞ்சம் எடுத்துக்கணும் ,கதை அமைப்புன்னு பார்த்தா மஹதீராவில் இருந்து கொஞ்சம் எடுத்துக்கணும் ,  பிறகு  மானே தேனேன்னு கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே திராட்சை , முந்திரி போல காமெடி , பாட்டு தூவிவிட்டு அடுப்புல இருந்து சுட சுட இறக்கி , இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது தான் காஷ்மோரா பலகாரம் .

கார்த்திக்கு அசால்ட்டாக காமெடி வரும்  அதை இதிலும் நிரூபித்து இருக்கார் , குறிப்பா இன்டெர்வல் பகுதி , கார்த்தி அந்த அரண்மனைக்கு உள்ளே புகுந்து இடைவேளை வரை  கலாட்டா பண்ணும் அந்த 15 நிமிஷங்கள் செம்ம , விவேக்கும் தன் பங்குக்கு அந்த நேரத்தில மரத்து மேல கார்ல தொங்கிகிட்டு பேசும் வசனங்கள் செம்ம. விவேக் இனிமேல் அவர் வயசுக்கு இதுபோல் அப்பா கதாபாத்திரம் , குணச்சித்திர கதாபாத்திரம்ன்னு வந்தா நல்லா இருக்கும்.

முதல் பாதியில் கார்த்தியும் அவர் குடும்பமும் எப்படி எல்லாம் ஏமாத்தறாங்கன்னு வெறும் சாதாரண காட்சியாக தான் படம் போகுது  அந்த விவேக் மற்றும் பலர் கோயில் வைத்து ஏமாற்றும்  காட்சி கொஞ்சம் கடி , படம் இரண்டாவுது பாதியில் தான் சூடு பிடிக்குது , அதுக்கு சந்தோஷ் நாராயணன் bgm சரியாய் கை கொடுக்குதுன்னு சொல்லணும் , அந்த பிளாஷ் பேக் காட்சி bgm அருமை.  எல்லாம் சாகப்போறாங்க நிலைமையில் கூட கார்த்தி பேய்யவே கலாய்க்கும் காட்சி செம்ம .

இரண்டு ஹீரோயின் ஸ்ரீதிவ்யா , நயன்தாரா , இதில் ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய காட்சி , ஆனால் கம்மி ஸ்கோப், நயனுக்கு  நிறைய ஸ்கோப் ஆனால் காட்சிகள் கம்மி .

டைரக்டர் கோகுல் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி ஒரு படம் பண்ணிட்டு , காஷ்மோரா மாதிரி முற்றிலும் வேற கதை களம் உள்ளம் படம் பண்ணது பெரிய விஷயம் ஆனால் காமெடி என்பது அவருக்கு கை வந்த கலை போல , அவர் அடுத்து முழுசா வெறும் காமெடி படம் பண்ணா செம்ம ஹிட் ஆகும்.

மொத்தத்தில் காஷ்மோரா இன்னும் காஷுஜோரா இருந்து இருக்கலாம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 









வெள்ளி, 28 அக்டோபர், 2016

Kodi - கொடி பறக்குதா



தனுஷின் கொடி வெற்றி கம்பத்தில் ஏறுமா ? இல்ல இறங்குமா ? வாங்க பார்ப்போம் , கொடி நிச்சயமா இது கொஞ்சம் மற்ற அரசியல் படத்தில் இருந்து மாறுபட்டது தான் , ஆனால் வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லை,  கொஞ்சம் குழப்புவது போல இருக்கா ? என்னடா சொல்ல வரேன்னு கேட்கறீங்களா ? இதை தான் நான் படம் பார்க்கும் போது கேட்டேன் ,
 பொதுவா இந்த மாதிரி அரசியல் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் எலியும் பூனையுமாக மோதுவது போல தான் இருக்கும், ஆனால் இதுல இரு வேறு கட்சிகளில்  உள்ளே நடக்கும் உட்கட்சிப்பூசல்களை காட்டி , மேலும் ஹீரோவும் ஹீரோயினும் எதிர் எதிரே மோதுகிறாங்க , அப்போ  இதுல சாதாரண ஹீரோயின் இல்ல, இவங்க ஆன்டி ஹீரோயின் ,  ஹெலோ ஒரு நிமிஷம் இருங்க திரிஷா வயசானதால ஆன்டி ஹீரோயின் சொல்லவில்லைங்க , நிஜமாகவே இந்த படத்தில் ஆன்டி ஹீரோயின் தான் அவங்க  .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் திரிஷா கதாபாத்திரம் தான் , தனுஷைவிட மேலோங்கி படத்தில் நிக்குறாங்க , அதுவும் அவங்க அரசியல் விளையாட்டு விளையாடும் காட்சிகள் எல்லாம் சூப்பர் , குறிப்பா போலீஸ்கார் ஒருத்தரை கூட்டிகிட்டு போகும் காட்சி அங்க விளையாடும் விளையாட்டு நிச்சயமா டைரக்டர்க்கு ஒரு சபாஷ் போடலாம் .தனுஷுக்கு இரு கேரக்டர் என்றாலும் , ஒரே கேரக்டர்ல் திரிஷா நல்ல பண்ணி இருக்காங்க 

இன்னொரு ஹீரோயின் அனுப்பம்மா அதாங்க ப்ரேமம் படத்தில் ஸ்கூல் பொண்ணா வரும் ஹீரோயின் , அவங்களே டப்பிங் கொடுத்து இருக்காங்க போல அப்படியே மலையாள வாசம் அடிக்குது , ஆனாலும் ரசிக்க வைக்குது , அதே நேரத்தில் காமெடி படத்தில் ரசித்து சிரிக்க முடியல 

வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லைன்னு மேல சொன்னேன்ல அது என்னனா , ஹீரோக்கு opening பாட்டு , இரண்டு ஹீரோயின் இருந்ததால் ஆளாளுக்கு ஒரு பாட்டு சரி சம்மாக பிரிச்சி கொடுத்துட்டாங்க ,அப்புறம் படம் முதல் பாதி வரை கதைக்குள்ளவே போகவே மாட்டேன் அடம்பிடிக்குது , இப்படி பல லாஜிக் தப்புகளோட படம் இருக்கு.

பாட்டு எப்படி இருக்கு ? இரு உயிராய் ஒரு உயிர் அவதரிக்க பாட்டு அப்படியே காபலி படத்தில வீர துரந்தரா பாட்டு போலவே இருக்கு,அப்புறம் ஹேய் சுழலி முட்டைன்னு ஒரு பாட்டு, இறைவி  படத்தில கண்ணை காட்டி முறைச்சான்னு எஸ்.ஜே .சூர்யா பாடுவரே அந்த பாட்டு மாதிரியே இருக்கு .சந்தோஷ் நாராயணன் சார் வித்தியாச வித்யாசமா பாட்டு தருபவர் நீங்களே உங்க பாட்டை நெல்லை பழரசம்  மாதிரி கலந்ததையே கலந்து கொடுத்தா நல்லாவா இருக்கு ?

மொத்தத்தில் கொடி கம்பத்தின் உச்சிக்கு ஏறவும் இல்லை, கீழ இறங்கவும் இல்லை , அரை கம்பத்தில் பறக்கவும் இல்லை, அரை கம்பத்தில் தொங்குது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Rekka - றெக்க

சார் உங்களுக்கு நல்ல ஹிட் கொடுக்கும் படம் , ஒரு குடும்ப எமோஷனல் , ஆக்ஷன் , செம்ம மாஸ் எல்லாம் இருக்கும் ,விஜய்க்கு கில்லி போல உங்களுக்கு இந்த றெக்க, பாவம் இப்படியெல்லாம் டைரக்டர்  விஜய் சேதுபதியை கிட்ட சொல்லி இந்த படத்தை எடுக்க வச்சி இருப்பாரு போல , out of  ground six அடிச்சா போல ஆண்டவன் கட்டளை ஹிட் படம் கொடுத்து விட்டு அடுத்த ballல் அவுட் ஆனா போல இந்த படத்தை கொடுத்து இருக்காரு சேதுபதி , கொஞ்சம் கில்லி , கொஞ்சம் ஷாஜகான் , கலந்த ரீமிக்ஸ் , ரீமேக் தான் இந்த படம் , நிச்சயமா ஒரு படம் நல்லா இருக்கும் , இன்னொரு படம் நல்லா இருக்காது தான் , இருந்தாலும் சேதுபதி போன்றவர் இந்த படத்தை எடுக்கணும் அவசியம் இல்ல , அவரோட ஸ்கோப் இல்லாத படம் தான் இது .

அடுத்து டைரக்டர் லட்சுமிமேனன் கிட்ட , மேடம் உங்களுக்கு இந்த படம் , பிதாமகன் லைலா , சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா போல ஹிட் கொடுக்கும் சொல்லி இருப்பாரு போல , முடியல இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் இந்த லூசு மாதிரி இருக்கும்  ஹீரோயின் காட்டுவீங்க ? பார்க்கிற  நாங்க தான் லூசு ஆகுறோம் யா ..ஏற்கனவே இந்த படம் ட்ரைலர் வந்த அப்போவே லக்ஷ்மிமேனன் மேக்கப்பை   கலாய்த்து நிறைய மீம்ஸ் வந்துடுச்சி , ஏம்மா  ஷூட்டிங்க்கு வரும் போது வீட்டுல இட்லி மாவு குண்டாவுல  முகத்தை முக்கிட்டு வந்தீங்களா ? அம்புட்டு மேக்கப் போட்டு வந்து இருக்கீங்க ...

பார்த்த உடனே காதல் என்பது நம்ம தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி , இதுல பாருங்க கை பிடிச்ச உடனே மேடையில் பேசவே முடியாத ஹீரோயின்க்கு காதல் வருது , பாட்டு வருது ,ஹீரோயின்  வீட்டை விட்டு ஓடி வருது , 

படம் கும்பகோணத்தில் ஆரம்பிச்சி மதுரை வழியா கோயம்பத்தூர் போயிட்டு திரும்பவும் கும்பகோணத்தில் வந்து முடியுது , ஆனா சொல்லிக்கிறா மாதிரி கதை மட்டும் ஒரு bypaas ல கூட வரல, ஆனா இம்மான் பாட்டு மாட்டும் ஹைவே ல வர டீ கடை போல அப்போ அப்போ வருது .அந்த opening பாட்டு கேட்க்கும் போது பாண்டிய நாடு படத்தில் வரும் ஒரு பாட்டு போல இருக்கு .

அப்புறம் அந்த மாலா அக்கா பிளாஷ்பேக் ரசிக்கும் படி இருக்கு , அவங்க நல்லா பண்ணி இருந்தாங்க , ஆனா சேதுபதி சின்ன வயசுல இருக்கும் போதும் அவங்க சின்னவங்களா இருக்காங்க , சேதுபதி பெரியவன் ஆகின பிறகும் அந்த மாலா அக்கா சின்னவங்களாகவே இருக்காங்க? ஆனா கிஷோர் மட்டும்  வயசானவர் போல காட்டி இருக்காங்க .

 மொத்தத்தில் றெக்க பறக்கல .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 8 அக்டோபர், 2016

Remo - ரெமோ

திருமணம்  நிச்சயமான பொண்ணை சிவா தன்னை காதல் பண்ணவைக்க ஆள் மாறாட்டம் பண்ணுவது  தான் இந்த படத்தோட கதை, இதுக்கு முன்னாடி எங்கேயோ இந்த கதை  பார்த்தா மாதிரி இருக்கா ? ஆமாங்க  தல நடித்த காதல் மன்னன் படம் கதை மாதிரி தான் , இதை பார்க்கும் போதே எனக்கு தோணுச்சி , அதே நேரத்தில கிளைமாக்ஸ்ல கூட வில்லன் சொல்லுவாரு , நிச்சயமான பொண்ணை கல்யாணம் பண்ண நீ என்ன காதல் மன்னன்னா ? என்று கேட்பார் ,

எனக்கு தெரிஞ்சு சிவா நடித்த எதிர் நீச்சல் படத்திற்கு அப்புறம் இந்த படம் தான் ஓரளவு நல்லா  இருந்துச்சி , ஹிட்ன்னு சொல்லிக்கிட்ட மான் கராத்தே , ரஜினி முருகன் , காக்கி சட்டை ,எல்லாம் ஐயோ சாமி அது எல்லாம் ஒரு படமான்னு தோணுச்சு , எப்பா அந்த  படங்களை ஒப்பிடும் போது, இந்த படம் better தான் , இந்த படத்தில்நடிப்பில் நல்ல முன்னேற்றம்  , இது பெண் வேஷம் போட்டதால சொல்லவில்லைங்க , அவர் சாதாரண கெட்டப்பில் வரும் போது நல்லா பண்ணி இருக்கார் , சார் நீங்க நிறைய தடவை சொல்லி இருக்கீங்க நீங்க சூப்பர் ஸ்டார் ரசிகர்ன்னு , அதுக்காக சில இடங்களில் அவரை மாதிரி பண்ணுவது சரியா ? சிவா  சேலையில் வரும் போதும் சரி , nightyல் வரும் போதும் சரி கீர்த்தியை விட சிவா நல்லா இருக்காரு .

கீர்த்தி சுரேஷ் screenla வந்தாலே ரொம்ப அழகா இருக்காங்க , ஆனா நிறைய இடங்களில் அஞ்சு ரூபா கொடுத்தா பத்து ரூபாய்க்கு நடிக்கிறாங்க .ப்ளீஸ் கொஞ்சம் அடக்கி நடிங்க நல்லா இருக்கும் .

சதிஷ் , ராஜேந்திரன் , யோகி பாபு , வந்து காமெடியில் கலக்குறாங்க , யோகி பாபு செம்ம கலாய் , அவர் ரெமோ கேரக்டர் லவ் பண்ணுவது, அதுவும் டானு டானு பாட்டுக்கு feel பண்ணுவது ultimate ,  பஸ்ல propose பண்ணுவது , கடைசியா  பி.கே படம் அமீர் கான் போல ரெமோ கேரக்டர் தேடுவது செம்ம .அவர் இன்னும் வந்து இருந்தா படம் கலைகட்டிருக்கும் .வழக்கம் போல அம்மாவாக சரண்யா சூப்பர் .

மாசல படம்ன்னு அதனால என்னவோ அனிருத் கொஞ்சம் எதிர்நீச்சல் , கொஞ்சம் நானும் ரவுடி தான் , கொஞ்சம் மான்கராத்தே மசாலா கலந்து பாட்டு போட்டு இருக்காரு , வாடி தமிழ் செல்வி பாட்டில் நடுவே கொஞ்சம் வேதாளம் bgm எட்டி பார்க்குது , ஆனா அவனா இவனா  ரெமோ bgm நல்லா இருந்திச்சி .


படத்தில் லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா இது commercial மாசாலா படம் , படம் full ahaa எல்லா நேரத்திலும் full make upல்  நர்ஸ் சிவா வராரு , பார்த்த உடனே காதல் வருவது இன்னும் எத்தனை படத்தில தான் வைப்பீய்ங்க ? அத விட கொடுமை கீர்த்தி சுரேஷ்க்கு காதல் வருவது , ஏம்மா பிறந்தநாளைக்கு பட்டாசு விட்டு நிறைய ஹார்ட் விட்டா  காதல் வருமா ?, டைரக்டர் சார் என்ன தான் மசாலா படம்ன்னாலும் கொஞ்சம் practical லா எடுங்க , என்னடா நம்ம சென்னை மெட்ரோ திறந்து இன்னும் எந்த படமும் ஷூட் பண்ணவில்லையே நினைச்சேன் , இந்த படத்தில் ஒரு பாட்டில் எடுத்துட்டாங்க .,   கடைசியா வரும் காதல் தோல்வி பாட்டு தேவை இல்ல , இரண்டாவுது பாதியில் கடைசி ஒரு 30 நிமிஷம் ஏன்டா இவ்வளவு நேரம் எடுக்குறாங்கன்னு தோணுது, ஜவ்வு மிட்டாய் போல இழுத்துட்டாங்க , ஆனா ஒரு வழியா கடைசியா கொஞ்சம் காமெடிஎல்லாம் கலந்து ஒரு வழியா சந்தோஷமா சுபம் போடுறாங்க .

மொத்தத்தில் ரெமோ சிவாவிற்காக ஒருதடவை demo

நன்றி : நண்பர் சுதீர்(பன்ச் லைன் )

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Devi - தேவி

அட ராமா இந்த வருஷத்துல இன்னொரு பேய் படமா , இருந்தாலும்  ,பிரபு தேவா ரொம்ப நாள் கழிச்சி screenல வராரு அதனால போய் பார்க்க வேண்டியதாச்சி , அதை  opening   ஒரு பாட்டு சல்மார் பாட்டிலே   அந்த மனுஷன் திருப்தி படுத்திட்டாரு , என்ன டான்ஸ் ஒரு ஒரு step  வச்ச கண்ணை எடுக்காமலே பார்க்க வேண்டி இருக்கு ,  நடிப்பு சரியாய் பண்ணி இருக்காரு எனக்கு அவரோட 90s ல வந்த படங்கள் பார்த்த ஞாபகம் வந்துச்சி .

படத்தோட கதை ?
மற்ற பேய் படங்களை விட கொஞ்சம் வித்தியாசம் அவளோ தான் , நடிகை ஆகணும் நினைச்சி இறந்து போன ஒருத்தி , தமன்னா மேல வந்து அவளோட ஆசையா நிறைவேற்றி போகுது அவளோதான் சிம்பிள் .

ஆனா படம் எப்படி போகுது ? ரொம்ப சுமாரா போகுது , ஏதோ படம் ஆரம்பத்தில் r ,j .பாலாஜி கொஞ்சம் கொஞ்சம் மொக்க காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார் .தமன்னா ரெண்டு கேரக்டர் நல்லா பண்ணி இருக்காங்க .

படத்தில் நிறைய மைனஸ் இது 3 மொழி படம் என்பதால் ,, நிறைய இடங்கள் அந்நியமா தெரியுது , அந்த கிராமம் , பிரபுதேவா அப்பா , அந்த பாட்டி , இப்படி நிறைய இருக்கு , அதுவும் சோனு வரும் பாடல் ஹிந்தி பாட்டு வரிகள் போலவே இருக்கு , அவரோட டப்பிங் செட் ஆகல , படம் பேய் படம் போலவும் இல்ல , காமெடியாகவும் இல்ல , உணர்ச்சி வசமாகவும் இல்ல .படம் முதல் பாதி கதைக்குள்ளவே போகவே இல்ல , நாசர் , சதிஷ் எல்லாம் வந்து போறாங்க ஆனா படத்துக்கு எதுவும் பெருசா பயன்படுவது  மாதிரி இல்ல .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நம்ம பிரபு தேவா , நடிப்பு , டான்ஸ் , மற்றும் தமன்னா நடிகையாக நடிக்கும் கேரக்டர் attitude , ஸ்டைல் தான் 


இந்த பஞ்ச சொல்ல  கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு இருந்தாலும் கொடுக்கிறேன் 

மொத்தத்தில் தேவி கொஞ்சம் slow ஆனா மூதேவி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்  

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

M.S.Dhoni - தோனி

இதுக்கு முன்னாடி சில ஹிந்தி படங்கள் பார்த்து இருந்தாலும் அதை பற்றி எழுதினது இல்ல , இந்த படம் எல்லோரும்  எதிர்பார்த்த படம் அதனால எழுதுறேன், சத்தியமா ஹிந்தில தாங்க பார்த்தேன் , தமிழ் டப்பிங் பார்க்கல, ஒரளவு நல்லாவே ஹிந்தி எனக்கு புரியும், எதுக்குடா இந்த தேவை இல்லாத முன்னுரைன்னு  கேட்பது தெரியுது , இருந்தாலும் சொல்லுவது என்னோட கடமை ..... !.

இந்த படத்தை பார்காதவங்க கூட இதோட கதை என்னன்னு தெரியும் , அட ஆமாப்பா  ராஞ்சில் பிறந்தவர் , புட்பால் கோல் கீப்பர் , அப்புறம் கிரிக்கெட் விக்கெட் கீப்பர் ,  ரயில்வேயில் வேலை செய்தவர் , அப்புறம் அவரோட கிரிக்கெட் வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் ,

அவரோட வரலாற்றை 190 நிமிஷம் சொல்லி இருக்கும் படம் தான் இது , படம் என்னடா ரொம்ப பெருசா இருக்கே பயந்து தான் போனேன் ஆனா எங்கேயும் படம் bore அடிக்கல .

சரி படத்தில பேச வேண்டிய விஷயங்கள் என்ன இருக்கு ? கதாபாத்திரங்கள் தேர்வு , யுவராஜ் சிங் போலவே ஒருத்தர் , ஜக்மோகன் டால்மியா போலவே ஒருத்தர் , கொஞ்சம் எ.கே.கங்குலி போலவே ஒருத்தர் , அப்புறம் ஹீரோ அப்படியே தோனியோட body language எல்லாம் நல்லா follow பண்ணி இருக்காரு , பிறகு சின்ன பையன் தோனி  அந்த சின்ன பையன்  போலவே அந்த சின்ன வயசு தோனியோட அக்கா, குறிப்பா அந்த மூக்கு அமைப்பு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி இருப்பது அருமை , பிறகு அவரோட நண்பர் கதாபாத்திரங்கள் , ஹெலிகாப்டர் ஷாட் சொல்லி தரும் நண்பர்கள் எல்லாரும் சூப்பர் .

படத்தில் technical வேலை ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க , அந்த மேட்ச் நடக்கும் இடங்கள் , original மேட்ச் வீடியோ footage வச்சி இந்த ஹீரோவின் முகத்தை அந்த இடங்களில் சரியாய் பொருத்தி இருக்காங்க , ஆஸ்திரேலிய மேட்ச் , 2007 T20 world கப் ,  2011 world cup finals  அது மாதிரி எல்லா இன்டர்நேஷனல் மேட்ச்களின்  footageல , மேட்ச் முடிஞ்சி players கட்டிப்பிடிக்கும் காட்சிகள் கூட ரொம்ப நல்லா வேலை செய்து இருக்காங்க எங்கேயும் அந்த அளவுக்கு பிசுறு தட்டவில்லை 

எனக்கு படத்தில் மிகவும் பிடிச்ச பகுதி , தோனி  வீட்டுக்காக ரயில்வே வேலை , தனக்காக கிரிக்கெட் , ஒரு பக்கம் profession மறுபக்கம் passion அப்படின்னு மாற்றி மாற்றி கஷ்டப்படுவது காட்சிகள் ரொம்ப அழகா ஹீரோ சுஷாந்த் சிங் நல்ல பண்ணி இருக்காரு  

படத்தில ஒரே வருத்தம் என்னன்னா நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ல ஆடின மேட்ச் போட்டு இருந்தா செம்மயா இருந்து இருக்கும், வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கையெழுத்து போடுவது போல ஒரே ஒரு காட்சி தான் வச்சி இருந்தாங்க , அதுக்கே நம்ம சென்னை பசங்க விசில் காது கிழியுது .

நாமெல்லாம்  டிவில தான் மேட்ச் பார்க்கிற  ஆளுங்க ,  நிச்சயமா இந்த படத்தை தியேட்டர்ல போயிட்டு பார்த்தா  கிரிக்கெட் மேட்ச் ஸ்டேடியத்தில் போயிட்டு பார்த்தது  போல feel தரும் ..

மொத்தத்தில் தோனி பக்கா ஹெலிகாப்டர் வின்னிங் ஷாட் தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்