வெள்ளி, 11 நவம்பர், 2016

Acham Yenbadhu Madamaiyada - அச்சம் என்பது மடமையடா

 கௌதம்மேனன் + ரஹமான் + சிம்பு  ஒரு ஹிட் காம்போ கொடுத்து பல வருஷம் கழிச்சி மீண்டும் அதே காம்போ ஹிட் கொடுக்குமா ? சிம்புவிற்கு ஒரு பிரேக் பாயிண்ட் கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்த ஒரு படம் , நிச்சயமா அந்த எதிர்ப்பார்புக்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் கொடுக்கல இந்த படம் .

கௌதம்மேனன் ஒரு classy டைரக்டர், அவரோட படங்களில்   அது crime படம்னாலும் சரி , காதல் படம்னாலும் சரி , காதல் அப்படியே fresh காற்று சுவாசிப்பது போல இருக்கும் , அதுவும் இந்த படத்தில் இருவரும் மாற்றி மாற்றி காதல் propose பண்ணும் situation செம்ம , அதிலும் தள்ளி போகாதே பாடல் வரும் இடம் , இதுவரைக்கும் யாரும் இப்படி வச்சது இல்ல , ரொம்ப ஹிட்ஆனா அந்த பாட்டு அப்படி ஒரு இடத்தில வைப்பாருன்னு சத்தியமா நினைக்கவில்லை, மனசுல அப்படியே நிக்குது,  choreographer பேருல ஏன் கௌதம்மேனன் பேரு போட்டாங்கன்னு அந்த பாட்டு பார்க்கும் போது தான் எனக்கு புரிஞ்சிது , இது வரைக்கும் எந்த படத்திலும் choreographer name போடும் போது directors பேரு போட்டது கிடையாது 

படம் ரெண்டு different extremeல பயணிக்குது , முதல் பாதி வேற ஒரு கதைக்களம் போல இருக்கு , இரண்டாவுது பாதி அப்படியே முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் போல இருக்கு , முதல் பாதி அட வெறும் காதல் படமாக தான் போகபோது நினைச்சேன் , ஆனா தள்ளி போகாதே பாட்டு வந்த பிறகு படத்தோட கதைக்கு வேற ஒரு நிறம் மாறுது , இரண்டாவுது பாதி த்ரில்லிங்காக மாறிடுச்சு , ஆனா base line காதல் மட்டும் தான் , படம் ரொம்ப நிதானமாக ஆரம்பிக்குது , ஆனா போக போக அப்படியே அந்த audience pulse அப்படியே ஏற்றிவிட்டார் , முதல் பாதியில் ரெண்டு வசனத்துக்கு ஒரு பாட்டுன்னு வருது , அப்படியே அவங்க இரண்டு பேரும் travel பண்ண ஆரம்பிக்கும் போது , அடேங்கப்பா எத்தனை பாட்டுபா  வரும் ? கொஞ்சம் bore அடிக்குதேன்னு கேட்கத்தோணுது , ஏன்னா எல்லா பட்டும் முதல் பாதியிலே வந்துடுச்சி , இரண்டாவுது பாதியில் பாட்டே கிடையாது , இது மிகவும் புதிய முயற்சி  யாரும் அப்படி பண்ணது கிடையாது , ஏன்னா நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி நிச்சயமா ஒரு பாட்டு வைப்பாங்க அதுவே படத்தோட கதைக்கு வேகத்தடையா இருக்கும்  , ஆனா அதை கௌதம் மேனன் செய்யவில்லை , இரண்டாவுது பாதி ஏன் எதுக்கு இது எல்லாம் நடக்குதுன்னு கடைசி காட்சி வரை சொல்லாமல் கொண்டு போயிருக்கார் அது அருமை , அப்பறம் படம் fullஆக சிம்பு பேரு என்னன்னு சொல்லாமல் கொண்டு போயிருப்பது செம்ம , அதுவே ஒரு curiosity படம் பார்க்கும் போது கிளப்பிவிடுது , படம் பார்த்தவங்க ப்ளீஸ் அந்த பேரு என்னன்னு வெளியே சொல்லாதீங்க , அப்புறம் அந்த சுவாரிஸ்யம் போய்டும் , 

படத்தின் negativeன்னு சொல்லனும்னா , சிம்பு ஒரே படத்தில் வேற வேற கெட்டப்பில் வருகிறார் , ஓ தசாவதாரமான்னு கேட்க்காதீங்க , படம் லேட் ஆனதால் , ஒரு ஷாட்ல ஒல்லியாக இருக்கார் , ஒரு ஷாட்ல கொஞ்சம் குண்டாக தெரிகிறார் படத்தில் , சிம்புவிற்கு ஒரு request ப்ளீஸ் உடம்பை கொஞ்சம் maintain பண்ணி பழய சிம்புபோல வாங்க ,சில பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் இருக்கு , இருந்தாலும் அவை ஒரு பெரிய தப்பு போல தெரியவில்லை , ஏன்னா படத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் அதை மறக்க செய்துவிட்டது 

ஹீரோயின்க்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் ,மஞ்சிமா மோகன் நல்லா  பண்ணி இருக்காங்க , கௌதமின் favorite dancer சதிஷ் இந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்கார்.

முக்கியமான விஷயம் என்னோட favorite மியூசிக் டைரக்டர்  ரஹமான், மனுஷன் பிண்ணி  பெடல் எடுத்துட்டார் , முதலில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு கவிதைநயமாக இருக்கு , அந்த பாடல்கள் எல்லாம் கொஞ்சம் lateஆகா தான் மனசில் பதியும் , தள்ளி போகாதே பாட்டை பற்றி நான் சொல்லவே  தேவையில்லை , ஏன்னா எந்த அளவுக்கு அந்த பாட்டு ஹிட்ன்னு தெரியும் , repeat modeல் ஓடிக்கிட்டு இருக்கும் பாட்டு அது , bgm செம்ம இரண்டாவுது பாதியில் நிறைய இடங்களில் தள்ளி போகாதே அப்படியே mild ஆகா வந்து போவது செம்ம , ரஹமான் ரஹமான் தான், தலைவா ur great .

படம் பேருக்குயெட்டாற்போல சிம்பு தன் தோல்விக்கு பின் அச்சம் என்பது மடமையடா என்று அச்சத்தை உடைச்சிகிட்டு  இந்த படத்தின்  மூலமாக வந்து இருக்கார் என்று சொல்லணும்.

மொத்தத்தில் அச்சம் என்பது மடமையடா அச்சம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

2 கருத்துகள்:

  1. Shyam I feel you are lot biased to the director GVM:) vera ya rum panala panala nu solli gethu tharrenga:)Choreography la director peru pottadilla yeppadi sollam..how one can tell that...just think once you will get a specfc name!! I think when you see a movie and like it so much you get overboard.when actually you need to give yourself time to cool down and then write review!!anyway this review has some of your style of writing:) --KP

    பதிலளிநீக்கு

Comments