ஞாயிறு, 27 டிசம்பர், 2015

Pasanga - பசங்க -2

நான் ரொம்ப நாளா சமூகத்தை கவனிச்சு நினைச்சிருந்த ஒரு சில விஷயம் படமா வந்து இருக்கு, நான் சமிபகாலமா பார்த்த சில பேரு BE முடிச்சிட்டு , MBA பண்ணுறாங்க இல்லாட்டி BE முடிச்சிட்டு MBA படிச்சிகிட்டு bank exam எழுதுறான், ஏன்டான்னு கேட்டா அம்மா சொன்னங்க BE படிச்சேன், அப்பாவுக்காக பேங்க் exam try பண்ணுறேன் சொல்லுறாங்க, ஒரு தடவ முகபேர்ல ராத்திரி 8 மணிக்கு பெரிய வரிசை ஒரு பள்ளிக்கு முன்னாடி  எதுக்குனா அடுத்த நாள் அந்த பள்ளியில application form தராங்களாம், அட ஆட்டு மந்தைகளா ஏண்டா நிக்குராங்கன்னு தொன்னுச்சு.ஏன் அந்த பெரிய கொம்பு பள்ளியில படிச்சா தான் சமுதயாத்தில நீங்க ஒரு பெரிய கொம்புன்னு  காட்டிக்க தோனும் அதுக்கு தான் அங்க நிக்குறாங்க?, பசங்களுக்கு வரையறதோ, பாடுறதோ, ஆடுறதோ இயற்கையா வரணும், அப்படி இயற்கையா வருவத ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அந்த அந்த கிளாஸ்ல சேர்த்துவிட்டு அதன் நுணுக்கங்களை சொல்லி தரலாம் ,  அதை செய்யாம  5-10 வயசுலேயே பாட்டு கிளாஸ், drawing கிளாஸ் சேர்த்து விடனும்ன்னு யாருடா  சொன்னது?இது எல்லாம் செய்றது எதுக்கு தெரியுமா ? உங்க status காட்டுவதற்கு  சேர்த்து விடுவது, அப்படியே சேர்த்து விட்டாலும் 10std -12std   படிக்கும் போது படிப்பு தான் முக்கியம் மார்க் வாங்குன்னு அந்த கிளாஸ் எல்லாம் கட் பண்ணி அப்புறம் காலேஜ், மார்க்,  சம்பளம் ன்னு மறக்க அடிக்கிறது, அப்புறம் என்னதுக்கு அந்த கன்றாவி கிளாஸ்க்கு எல்லாம் சேர்த்து விடுறாங்க ? மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் இப்போ இருக்குற middle கிளாஸ் upper middle கிளாஸ் பெற்றோரை பார்க்கும் போது தோனும் ஆனா இன்னைக்கு எனக்கு இந்த படம் பார்க்கும் போது நிறைய தோணிச்சு அதனால இங்கே பதிவு செய்தேன், சரி படத்தை பற்றி சொல்லுடான்னு சொல்லுறிங்களா, சரி வாங்க பார்க்கலாம்   

இந்த படத்துக்கு பசங்க - 2 ன்னு பேரு வச்சதுக்கு பதிலா பெற்றோர்-2 ன்னு பேரு வச்சி இருக்கணும், பெற்றோர் மேல இருக்குற தப்பு எல்லாத்தையும் நம்ம சமூகம் பசங்க மேல தின்னிச்சிட்டு இருக்குன்னு நெற்றி பொட்டுல அடிச்சா மாதிரி எடுத்த படம்.
கொஞ்சம் 3 idiots , கொஞ்சம்  தரே ஜமீன் பர்  தாக்கத்துல இந்த படம் எடுத்து இருப்பாரு போல, நிச்சயமா அதே மாதிரி வந்த படம் இதுன்னு  நான் சொல்ல வரல.
பசங்களோட சுட்டிதனத்த முதல் பாதியில் நல்ல காமெடியா காட்டி இருக்காங்க இரண்டாவுது பாதி பசங்களோட மனநிலைய புறஞ்சிகிற பெற்றோரை காட்டுறாரு 

வாசனங்கள் ரொம்ப நல்லா இருக்கு, இதோ  சில 
1.பொண்ணு : அப்பா அந்த ஸ்கூல்க்கும்(private ) என் ஸ்கூல்க்கும்(Govt ) என்னபா வித்தியாசம் 
அப்பா : அவன் இங்கிலிஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான் , இவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான் அவ்ளோ தான் வித்தியாசம்  -( இந்த வசனம் இதுக்கு முன்னாடி facebook or வேற படத்திலா வந்ததுன்னு தெரில ஆனா இந்த படத்தில் பதிவு செய்தது சூப்பர் )
2. பசங்க கெட்ட வார்த்தை பேசல கேட்ட வார்த்தை தான் பேசுறாங்க 
3.பசங்க மனசுல மதிப்பெண்ணை விதைக்காதிங்க , நல்ல மதிப்பான எண்ணங்களை விதைங்க 
இது மாதிரி பல வசனங்கள் நல்லா இருக்கு 

அந்த ரெண்டு பசங்களும் அழுவது, சிரிப்பது, வாலுதனம் செய்வதுன்னு ரொம்ப இயற்கையா இருக்கு ஏன்னா படங்கள இந்த மாதிரி கேரக்டர் பண்ணும் போது ஓவர் acting இல்லாட்டி செயற்கை தனமா தெரியும் அது மாதிரி இல்லாம இந்த ரெண்டு பசங்களும் ரொம்ப இயல்பா பண்ண வச்சி இருக்காரு டைரக்டர்.

முனிஷ்காந்த் திருட்டுதனம் பண்ணறது எல்லாம் நல்ல காமெடி , கார்த்திக், பிந்து மாதவி பள்ளியில் அட்மிசன் வாங்குற சீன சூப்பர், சூர்யா, அமலபால் குடும்பம் நல்ல positiveah காட்டினது அருமை.

எந்த ஒரு நெகடிவ் விஷயங்களோ, எந்த ஒரு நெகடிவ் கேரக்டர்களோ கட்டாமல் இருந்ததுக்கு டைரக்டர்க்கு நன்றி.நிச்சயமா குடும்பத்தோடு குறிப்பாக பெற்றோர்கள் நிச்சயமா பார்க்க வேண்டிய படம் 

 பூலோகம், பசங்க-2 இந்த இரண்டு  படங்களும் இந்த சமுதாயத்தை  பிரதிபலிக்கிற கண்ணாடியாய் இந்த வருஷ இறுதில வந்தது சூப்பர்.

இப்படிக்கு 
சினி & சமூக கிறுக்கன்

வியாழன், 24 டிசம்பர், 2015

Bhoologam - பூலோகம்

சினி கிறுக்கனின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், நான் இந்த ப்ளாக்   ஆரம்பிச்சி இந்த ஒரு வருஷத்தில  இது என்னோடைய  ஐம்பதாவுது பதிவு..இதுவரைக்கும் 4800+ பார்வையாளர்கள் என்னோட  பதிவை பார்த்து இருக்காங்க .இன்னைக்கு வரைக்கும் என்னோட பதிவுகளை படிச்சி என்னை  பாராட்டினவங்க,கலாய்ச்சவங்க , அப்புறம்  கொஞ்சம் பேரு feedback சொல்லி என்னை ஊக்கம் கொடுத்தவங்க மேலும் watsapp friends , fb friends எல்லாருக்கும் நன்றிகள் 
 சரிடா ரொம்ப நெஞ்ச நக்காதடா படத்தை பற்றி சொல்லுன்னு சொல்லுற உங்க mind வாய்ஸ் கேக்குது, சரி வாங்க பார்க்கலாம் 

படம் எடுத்து முடிச்சி ரொம்ப நாள் வெளியே வராத வாலு , ரஜினிமுருகன் , பட வரிசையில் பூலோகமம் ஒன்று,  இதுக்காகவே  இந்த படத்தை memesல  நிறைய கலாய்ச்சிருக்காங்க , ஒரு வழியா இந்த படம் சுமார் 2-3 வருஷம் காத்திருந்து வந்து இருக்குது, அப்படி காத்திருந்து வந்தாலும் இந்த சமுகத்தை கத்தி எடுத்து குத்த வந்தா மாதிரி வந்து இருக்கு.

Boxing படம் சொன்னவுடனே என்ன தோனும்? ,ஏதோ loveகாக சண்டை போடுறது, இல்லாட்டி குடும்ப பகைகாக சண்டை போடறது அதுவும் இல்லனா சண்டை போட்டா தான் பொண்ணு கிடைக்கும் அதுபோல தான் தோனும்,ஆனா boxing என்பதை ஒரு கதை களத்திற்காக பயன்படுத்தி, இந்த மீடியா பண்ணற அட்டகாசத்தை அட்டகாசமாக காட்டிருக்கும்  படம் தான் பூலோகம்.

டைரக்டர் படம் ஆரம்பிக்கும் போதே audienceக்கு இது தான் கதை,இப்படி தான் போகும்ன்னு,  ரொம்ப தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாரு, அதுவே ரொம்ப பெரிய பிளஸ்,படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி கோஷ்டி சண்டை அடி தடி கொஞ்சம் திரிஷா கூட கசமுசா ன்னு  படம் போகும் போது அட இது usual  படம் மாதிரி போகும் நினைச்சேன், ஆனா அப்புறம் விறுவிறுன்னு top gear ல தூக்கி அடிச்சிகிட்டு  போய்கிட்டே இருக்காரு டைரக்டர் 

நான் எப்பவும் படத்தோட கதை சொல்ல மாட்டேன், ஆனால் இந்த படத்தோட one liner மட்டும் சொல்லுறேன், இப்போ இருக்குற டிவி channels ரியாலிட்டி ஷோ,IPL , ISL , PBL  எல்லாம் நடத்தி எப்படி காசு பார்க்குறாங்க, இது தான் ஒரு வரி கதை.இது வரைக்கும் யாரும் தொடாத கதை களம் இது . அதனால எல்லோருக்கும்  பிடிக்கும்,   இந்த டிவிகாரங்களோட உண்மையான முகத்தை பிரி பிரின்னு பிரிச்சி எடுத்துட்டாங்க .

இயற்கை, ஈ, பேராண்மை, படங்கள் எடுத்த டைரக்டர் s.p.Jananathan உடைய assistant தான் இந்த படத்தை இயக்கி  இருகாரு, Jananathan தான் இந்த படத்துக்கு வசனம் எழுதிருக்காரு, படத்தோட மிகபெரிய பிளஸ் வசனம் தான் சும்மா நெத்தி அடி.

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும்  போல அவரோட வில்லத்தனத்தை காட்டிடாரு, அதுவும் ஒரு பெரிய டிவி  சேனல் ownerah  இதோ அவர் பேசிய சில நச்சு வசனங்கள் 
1. இங்க 100 கார் விற்பதை விட லட்சம் ஷாம்பூ விற்பது லாபம், 
2. இந்திய ஏழை நாடு தான் ஆனா மார்கெட் பெருசு.
3.காற்றுல வியாபாரம் பண்ணறவன் டா , நான் காற்றுலையே நடப்பவன்டா( பெரிய டிவி  சேனல் ownerஅதனால இந்த வசனம் )
3. தமிழர்களை தமிழன் தான் காப்பாத்தனும் அப்படி சொல்லி ஒருத்தரை ஏமாற்றும் போது எனக்கு அட அரசியல்வாதிகள் நம்மளை இப்படி தானே ஏமாற்று பண்ணுரங்கன்னு  உறைக்குது.

ஜெயம்ரவிக்கு இந்த வருஷத்தில இது மூனாவுது படம், தனிஒருவன் படத்தோட மாபெரும் வெற்றிக்கு பிறகு நிச்சயமா இதுவும் ஒரு வெற்றி படமா தான் இது இருக்கும், ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் வருத்தி நடிச்சி இருக்காரு, ஆனால் அந்த வெள்ளைக்காரன் வில்லன் Nathan Jones கூட சண்டை போடும் போது கொஞ்சம் காமெடியா இருந்துச்சி ஏன்னா அந்த வில்லனுக்கு முன்னாடி ஜெயம்ரவி கொசு போல தான் தெரியறாரு. ரவி vs பிரகாஷ்ராஜ் agreement போடுற சீன் செம்ம அப்போ பேசுற ஒரு ஒரு வசனமும் தியேட்டர்ல கைதட்டு அள்ளுது .எல்லை தாண்டி நம்ம வீட்டுக்குள்ள வந்து business பண்ணா நாம்ம சும்மா இருக்கோம் ஆனா எல்லை தாண்டி போய் மீன் பிடிச்சா கைது செய்வாங்க , இங்க நீயும் நானும் sports man இல்ல இந்த brandகளை விற்க்கவந்த salesmanன்னு   இப்படி வசனங்கள் தெறிக்க விட்டு இருக்காங்க 

Fight சீன் எல்லாம் எடிட்டர் and கேமரா நல்லா fastah கொடுத்து இருக்காங்க, இசை : ஸ்ரீகாந்த் தேவா , படம் வடசென்னைல நடப்பதால, லோக்கல் , மற்றும் சாவு பாட்டு போட்டு இருக்காரு ஆனா எதுவும் மனசுல பதியவில்லை.

த்ரிஷா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இல்ல சும்மா ஓரளவு சப்போர்ட் பண்ணிட்டு போயிட்டாங்க, அதே மாதிரி த்ரிஷாவோட அண்ணன் சும்மா டம்மியா தான் வந்துட்டு போகிறாரு 

அதே நேரத்தில படத்தில சில விஷயங்கள் கவனிக்காம விட்டுட்டாங்க, அதாவுது , கதை நடப்பது  A .R.C .college பொத்தேரி ன்னு சொல்லுறாங்க ஆனா காலேஜ் campus காட்டும் போது frameல S .A ..Engineering College பஸ் தெரியுது பாவம் S A .Engineering காலேஜ்ல ஷூட் பண்ணதுக்கு விளம்பரம் பண்ணிட்டாங்க போல, அப்புறம் collegeக்கு சாப்பாடு த்ரிஷாவோட மெஸ்ல    இருந்து செய்து போகிறா மாதிரி முதல காட்டுறாங்க ஆனா பின்னாடி காலேஜ் உள்ளவே செய்கிறா மாதிரி காட்டுறாங்க ,எப்படி assistant directors இந்த மாதிரி continuity எல்லாம் மிஸ் பண்ணறாங்க தெரியல,  அப்புறம் முக்கியமான விஷயம் நம்ம தமிழ் சினிமால boxingனா  அடிச்சி முகத்துல ரத்தம் எல்லாம் வந்து கொஞ்சம் காட்டுதனமா எல்லாம் அடிக்கிறாங்க, நிஜமாகவே அப்படி ஒரு boxing type எதாவுது இருக்கா? அப்படி இருந்த சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன், அதே போல boxingல points pointsன்னு ஒன்னு இருக்கு அதை ஏன் காட்டமாட்டேங்குறாங்க ? இப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் கோட்டை விட்டாலும், கதையும் வசனமும் படத்தை தூக்கி நிறுத்திடிச்சி.

சதுரங்க வேட்டைக்கு அப்புறம் வசனதிற்காவே ஒரு படம் பார்க்கன்னும்ன்னா  நிச்சயமா இதை பார்க்கலாம் 

எனக்கு ஒரு doubt  டிவி சேனல் பண்ணுகிற தப்பு எல்லாம் காட்டின இந்த படத்தை எந்த டிவி சேனல் வாங்கிருக்கும் ?

மொத்தத்தில் பூலோகம் டிவி மீடியாவிற்க்கு  பூகம்பம் ஏற்படுத்திய ஒரு படம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 18 டிசம்பர், 2015

Thangamagan - தங்கமகன்

தங்கமகன் அப்படின்னு சொன்னவுடனே நம்மக்கு சூப்பர் ஸ்டார் படம் ஞாபகம் தான் வருது, சரி எப்படியோ அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமமும் இல்ல, சரி இது எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

தனுஷ்  அவரோட முந்தய  படம் மாரில பக்கா மசாலா, மாஸ் , சும்மா கத்தி கத்தி சவுண்ட் விட்டு நடிச்சதக்கு, அப்படியே எதிரா ரொம்ப அமைதியா நல்லா நடிசிருக்காரு, அவர் மேலும் மேலும் நல்ல performerன்னு நிருபிச்சிட்டு வராரு, சின்ன சின்ன இடங்கள், சின்ன சின்ன reactions மற்றும் கோவப்படும் போதும் சரி, பாசமா லவ் பண்ணும் போதும் சரி, emotionah feel பண்ணும் போதும் சரி அப்படியே பக்காவா நடிப்புல பிண்ணி எடுக்குறாரு,

எமிஜாக்சன் அழகா சுடிதார்ல வராங்க,கோயில் போறாங்க, என்னடா இது,  இந்த எமிக்கும் அவங்க கலர்க்கும் லோக்கல் தமிழ் பொண்ணு கேரக்டர் செட் ஆகுமான்னு தோனுச்சி?, அதுக்கு நம்ம டைரக்டர் அங்க அந்த கேரக்டர்க்கு ஒரு justification வைச்சிட்டாரு,  அட அதாவுது அவங்க அப்பா ஒரு ப்ரிடிஷ்கறாரு  அவங்க அம்மா ப்ராமின்ன்னு சொல்லி அங்க logickku ஒரு லாக் வச்சிட்டாரு, அட ஆமா எமி கலர்க்கு அவங்கள லோக்கல் பொண்ணு சொன்னா நம்ப முடியுமா ?அதனால டைரக்டர் அப்படி ஒரு லாஜிக் வச்சி முடிச்சிட்டாரு.அதுவும் இல்லாம நடிப்புல நல்ல improvement, அதுக்கும் மேல அவங்க பேசும் போதும் dubbing correctah lip sync ஆகி இருக்கு, தமிழ் உச்சரிப்பு பக்காவா பொருந்தி இருக்கு, ரொம்ப சில இடங்கள மட்டும் தான் dubbing செட்ஆகல, நிறைய படம் பண்ண ஹன்சிகா கூட இந்த அளவுக்கு பண்ணதில்லை, பேசாம ஹன்சிக்கா எமிகிட்ட எப்படி நடிப்பது, எப்படி தமிழ் உச்சரிப்பு சரியாய் பண்ணறதுன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

சமந்தா ஒரு நடுத்தர குடும்ப மற்றும் கொஞ்சம் கஷ்ட படுற குடும்பத்து பெண்ணு அதனால படம் fullah காட்டன் புடைவைல வராங்க, ஆனா முகம் கொஞ்சம் அதிகமா மேக்கப்  மற்றும் அவங்க முக்குகுத்தி படத்துல பார்க்க கொஞ்சம் அந்நியமா தெரியுது,

கே.ஸ் .ரவிக்குமார் & ராதிகா ஒரு parentsah  சரியா பொருந்திருக்காங்க, ஆனா இன்னும் கொஞ்சம் அவங்க நடிப்புக்கு தீனி போடுறா மாதிரி இன்னும் கொஞ்சம் சீன்  வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

தனுஷ் firendah வரும் சதீஷ் முதல் பாதயில காமெடி பண்ணிருக்காரு ஆனா எதுவும் மனசுல நிக்கிறா மாதிரி இல்ல, அதே மாதிரி வில்லனா வருபவரும் பெருசா impact ஆகல

இசை அனிருத், பாவம் பயபுள்ள இப்போ நிறைய  பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்காப்ல, சரி இந்த படத்துல என்ன பண்ணாருன்னு கேக்குறிங்களா? அட அவர் எப்பவும் சத்தம்மா இரைச்சலா டமால் டும்மீல் ன்னு  bgm, பாட்டுன்னு போடுவாரு ஆனா இதுல ரொம்ப அமைதியா போட்டு இருக்காரு, அதனால ரொம்ப நல்லா இருக்கு நினைக்காதிங்க, பாட்டு எதுவும் மனசுல பதியில. இருந்தாலும் கடைசி சண்டைல கொஞ்சம் சத்தம் தாஸ்தி தான்  

money is  ultimateன்னு சொல்லி வந்த படம் பார்த்தோம் ஆனா இந்த படம் money மட்டும் ultimate இல்ல மனிதர்களும் ultimate சொல்லி இருக்காரு, படத்துல சில பல லாஜிக் இடிக்கிறா மாதிரி ஒரு feel, அதாவுது அம்மா தனுஷ் கிட்ட கேட்கிறாங்க 
அம்மா : டேய் நீ வேலைக்கு போடா, நீ வேலைக்கு போறேன் சொன்னா அப்பா ஆபீஸ்ல அப்பா வேலை வாங்கி தருவாரு 
தனுஷ் : சரி வேலைக்கு போறேன் 
அடுத்த ஷாட் தனுஷ் அவரோட அப்பா கூட வேலைக்கு போறாரு,
எங்க வேலைக்கு போறாங்க தெரியுமா ? income tax ஆபீஸ்ல ரெண்டு பேரும் போறாங்க , அது எப்படிங்க ஒரு income tax ஆபீஸ்ல அப்பா சொன்னவுடனே பையனுக்கு வேலை கிடைக்குது? என்ன லாஜிக்யா இது ?
அதே மாதிரி அப்பா தப்பு பண்ணிட்டு செத்துட்டாரு, அப்பா தப்பு பண்ணிட்டாரு அதனால பையனையும் வேலையவிட்டு தூக்கிட்டாங்க.ஏம்பா assistant directors இந்த லாஜிக்  எல்லாம் நோட் பண்ண மாட்டிங்களா?
அதே மாதிரி தனுஷ் மற்றும் எமி கூட காதல் ரொம்ப நெருக்கமா காட்டுறாங்க நிறைய லிப் லாக் கட்சிகள் இருக்கு,ஆனா இந்த காட்சிகள் எல்லாம் கட் பண்ணாம U certificate எப்படி கொடுத்தாங்க தெரில,கலாச்சாரத்துக்கு எதிர் ஆனதுன்னு  Spectre படத்துக்கு மட்டும் லிப் லக் சீனை கட் பண்ணிடாங்க., இதை எப்படி விட்டாங்க? spectre படத்துக்கு மட்டும் கட் பண்ணிட்டாங்களேன்னு ஆதங்கத்தில் கேட்கல, ஒரு நியாயத்தை தான் கேட்கிறேன்(Specter படம் இன்னும் நான் பார்கல)

தங்கமகன் மக்கள் மனதில் தங்கபதக்கம் வாங்குவாரு நினைச்சேன் ஆனா தங்கமகன் வெண்கலபதக்கம் தான் வாங்குவாரு போல 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்




ஞாயிறு, 13 டிசம்பர், 2015

EETI - ஈட்டி

ஈட்டி இந்த படம் டைட்டில் மற்றும் அந்த logo பார்க்கும் போது, ஹீரோ ஈட்டி எறிதல் வீரர்ன்னு நினைச்சேன், ஆனா அவர் hurdle runner ah வரார்.

படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோக்கு எந்த மாதிரி உடம்பில் பிரச்சன்னை இருக்குன்னு தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாங்க, அதாவுது சின்னதா ரத்த காயம் ஏற்பட்டால் ரத்தம் நிக்காது, மேலும் அதிகமா ஏற்பட்டால் உயிர் போகும் வாய்ப்பு இருக்கும் ஒரு அரியவகை வியாதி உள்ளவரா காட்டுறாங்க , அதுக்கு ஏற்ற மாதிரி படமும் சண்டை கட்சிகளும் வச்சி இருக்காங்க, நிஜமாகவே இந்த மாதிரி பிரச்சன்னை இருக்க ஒருத்தர் ஒரு ரியாலிட்டி ஷோல வந்து இருக்கார் ஒருவேல டைரக்டர் அவரை inspirationah  வச்சி இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிருப்பார்  போல,

படம் முதல் பாதியில் தஞ்சாவூரிலும், இரண்டாவுது  பாதி சென்னையிலும் நடக்குது, கதை தஞ்சாவூர்ல நடக்குதுன்னு காட்றதுக்கு தஞ்சை பெரிய கோயில் சுற்றி நிறைய shots வச்சி இருக்காரு டைரக்டர்,   எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் நம்ம தமிழ் படங்கள பெரிய கோயில் காட்டியது இல்ல.

அதே போல சென்னை சொல்லும் போது பல படங்கள அடையார், திருவல்லிக்கேணி அல்லது north சென்னை தான் காட்டுவாங்க, ஆனா இதுல அரும்பாக்கம், அமஞ்சிகரை, சூளைமேடுன்னு கதை நடக்குற மாதிரி காட்டிருக்காங்க, உண்மையான இடங்கள் சொல்லிருக்காங்க, அரும்பாக்கதுல  SBI காலனி ஒன்னு நிஜமாகவே இருக்கு,ஏன் இதை சொல்லுறேன அரும்பாக்கம் எங்க ஏரிய..... கதைப்படி heroine அப்பா SBIல வேலை செய்றாரு அதனால இந்த காலனி காட்டி இருக்காரு,

அதர்வ நிச்சயமா ரொம்ப மெனக்கெட்டு, உடலை வருத்தி உழைச்சு இருக்காரு, ஒரு தடகள வீரரா பக்காவா பொருந்தி இருக்காரு, நல்லா நடிச்சி இருக்காரு, ஆனா அதை கதைக்கு எந்த அளவுக்கு பயன்படுதிருக்காங்க பார்தீங்கனா , கொஞ்சம் கம்மி தான், ஒரு சில காட்சிகள அவர் practice பண்றது, சண்டைல சிக்ஸ் பேக் காட்டுவதோட  சரி, 

ஸ்ரீதிவ்யா ஏதோ சும்மா guest ரோல் heroine போல இல்லாம நிறைய காட்சிகள் வந்து, படத்தோட கதைக்கு கொஞ்சம் supportah  இருந்துட்டு போறாங்க,அதர்வாக்கு மொபைல் reecharge பண்ணற சீன்ல எல்லாம் நல்லா அழகா நடிச்சிருக்காங்க.

ஜி.வி.பிரகாஷ் இசையில் முயல் குட்டி பாட்டு மட்டும் கேட்கிறா மாதிரி இருக்கு 

படம் தடகள வீரர் பற்றி போகும் பார்த்தா, அப்படியும் போகல, அட அந்த ஒரு வியாதி இருக்கு அதை வச்சி கதை போகும் பார்த்த அப்படியும் போகல, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கதைக்கு பயன்படுதிருக்காங்க அவ்ளோதான், முதல் பாதியில் காதல் பண்ணுகிற சீன் நல்லா  இருக்கு, ஆனா கதைக்குள்ள போகாம இரண்டாவுது பாதியிலும் காதல்ல  கதை போறது கொஞ்சம் போர் தான் அடிக்குது, இடைவேளைல வரும் சண்டையும், கிளைமாக்ஸ்ல வரும் சண்டையும் நல்லா இருக்கு, பார்க்கும் போது அதர்வாக்கு ரத்தம் வராம சண்டை இருக்கணுமே ஒரு feel நம்மக்கும்  வர வச்சி இருக்காரு.கதைல  திருப்பம்ன்னு நினைச்சு வச்ச சீன எல்லாம் திருப்பம்மா  தெரியல, அதே போல கடைசியா நிச்சியமா ஹீரோ தான் ஜெயிப்பாரு தெரியும் அதனால கடைசி காட்சி எல்லாம் பெருசா impact  ஆகல 

நிச்சயமா அதர்வ மனசுல நிற்கிறா மாதிரி ஒரு படம்  பண்ணி இருக்காரு, ஆனா இன்னும் strong ஆனா கதை உள்ள படம் பண்ணா நல்லா இருக்கும் .

மொத்தத்தில் ஈட்டி இன்னும் கொஞ்சம் கூர்மையா இருந்தா நல்ல இருந்திருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன்