வியாழன், 24 டிசம்பர், 2015

Bhoologam - பூலோகம்

சினி கிறுக்கனின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், நான் இந்த ப்ளாக்   ஆரம்பிச்சி இந்த ஒரு வருஷத்தில  இது என்னோடைய  ஐம்பதாவுது பதிவு..இதுவரைக்கும் 4800+ பார்வையாளர்கள் என்னோட  பதிவை பார்த்து இருக்காங்க .இன்னைக்கு வரைக்கும் என்னோட பதிவுகளை படிச்சி என்னை  பாராட்டினவங்க,கலாய்ச்சவங்க , அப்புறம்  கொஞ்சம் பேரு feedback சொல்லி என்னை ஊக்கம் கொடுத்தவங்க மேலும் watsapp friends , fb friends எல்லாருக்கும் நன்றிகள் 
 சரிடா ரொம்ப நெஞ்ச நக்காதடா படத்தை பற்றி சொல்லுன்னு சொல்லுற உங்க mind வாய்ஸ் கேக்குது, சரி வாங்க பார்க்கலாம் 

படம் எடுத்து முடிச்சி ரொம்ப நாள் வெளியே வராத வாலு , ரஜினிமுருகன் , பட வரிசையில் பூலோகமம் ஒன்று,  இதுக்காகவே  இந்த படத்தை memesல  நிறைய கலாய்ச்சிருக்காங்க , ஒரு வழியா இந்த படம் சுமார் 2-3 வருஷம் காத்திருந்து வந்து இருக்குது, அப்படி காத்திருந்து வந்தாலும் இந்த சமுகத்தை கத்தி எடுத்து குத்த வந்தா மாதிரி வந்து இருக்கு.

Boxing படம் சொன்னவுடனே என்ன தோனும்? ,ஏதோ loveகாக சண்டை போடுறது, இல்லாட்டி குடும்ப பகைகாக சண்டை போடறது அதுவும் இல்லனா சண்டை போட்டா தான் பொண்ணு கிடைக்கும் அதுபோல தான் தோனும்,ஆனா boxing என்பதை ஒரு கதை களத்திற்காக பயன்படுத்தி, இந்த மீடியா பண்ணற அட்டகாசத்தை அட்டகாசமாக காட்டிருக்கும்  படம் தான் பூலோகம்.

டைரக்டர் படம் ஆரம்பிக்கும் போதே audienceக்கு இது தான் கதை,இப்படி தான் போகும்ன்னு,  ரொம்ப தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாரு, அதுவே ரொம்ப பெரிய பிளஸ்,படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி கோஷ்டி சண்டை அடி தடி கொஞ்சம் திரிஷா கூட கசமுசா ன்னு  படம் போகும் போது அட இது usual  படம் மாதிரி போகும் நினைச்சேன், ஆனா அப்புறம் விறுவிறுன்னு top gear ல தூக்கி அடிச்சிகிட்டு  போய்கிட்டே இருக்காரு டைரக்டர் 

நான் எப்பவும் படத்தோட கதை சொல்ல மாட்டேன், ஆனால் இந்த படத்தோட one liner மட்டும் சொல்லுறேன், இப்போ இருக்குற டிவி channels ரியாலிட்டி ஷோ,IPL , ISL , PBL  எல்லாம் நடத்தி எப்படி காசு பார்க்குறாங்க, இது தான் ஒரு வரி கதை.இது வரைக்கும் யாரும் தொடாத கதை களம் இது . அதனால எல்லோருக்கும்  பிடிக்கும்,   இந்த டிவிகாரங்களோட உண்மையான முகத்தை பிரி பிரின்னு பிரிச்சி எடுத்துட்டாங்க .

இயற்கை, ஈ, பேராண்மை, படங்கள் எடுத்த டைரக்டர் s.p.Jananathan உடைய assistant தான் இந்த படத்தை இயக்கி  இருகாரு, Jananathan தான் இந்த படத்துக்கு வசனம் எழுதிருக்காரு, படத்தோட மிகபெரிய பிளஸ் வசனம் தான் சும்மா நெத்தி அடி.

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும்  போல அவரோட வில்லத்தனத்தை காட்டிடாரு, அதுவும் ஒரு பெரிய டிவி  சேனல் ownerah  இதோ அவர் பேசிய சில நச்சு வசனங்கள் 
1. இங்க 100 கார் விற்பதை விட லட்சம் ஷாம்பூ விற்பது லாபம், 
2. இந்திய ஏழை நாடு தான் ஆனா மார்கெட் பெருசு.
3.காற்றுல வியாபாரம் பண்ணறவன் டா , நான் காற்றுலையே நடப்பவன்டா( பெரிய டிவி  சேனல் ownerஅதனால இந்த வசனம் )
3. தமிழர்களை தமிழன் தான் காப்பாத்தனும் அப்படி சொல்லி ஒருத்தரை ஏமாற்றும் போது எனக்கு அட அரசியல்வாதிகள் நம்மளை இப்படி தானே ஏமாற்று பண்ணுரங்கன்னு  உறைக்குது.

ஜெயம்ரவிக்கு இந்த வருஷத்தில இது மூனாவுது படம், தனிஒருவன் படத்தோட மாபெரும் வெற்றிக்கு பிறகு நிச்சயமா இதுவும் ஒரு வெற்றி படமா தான் இது இருக்கும், ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் வருத்தி நடிச்சி இருக்காரு, ஆனால் அந்த வெள்ளைக்காரன் வில்லன் Nathan Jones கூட சண்டை போடும் போது கொஞ்சம் காமெடியா இருந்துச்சி ஏன்னா அந்த வில்லனுக்கு முன்னாடி ஜெயம்ரவி கொசு போல தான் தெரியறாரு. ரவி vs பிரகாஷ்ராஜ் agreement போடுற சீன் செம்ம அப்போ பேசுற ஒரு ஒரு வசனமும் தியேட்டர்ல கைதட்டு அள்ளுது .எல்லை தாண்டி நம்ம வீட்டுக்குள்ள வந்து business பண்ணா நாம்ம சும்மா இருக்கோம் ஆனா எல்லை தாண்டி போய் மீன் பிடிச்சா கைது செய்வாங்க , இங்க நீயும் நானும் sports man இல்ல இந்த brandகளை விற்க்கவந்த salesmanன்னு   இப்படி வசனங்கள் தெறிக்க விட்டு இருக்காங்க 

Fight சீன் எல்லாம் எடிட்டர் and கேமரா நல்லா fastah கொடுத்து இருக்காங்க, இசை : ஸ்ரீகாந்த் தேவா , படம் வடசென்னைல நடப்பதால, லோக்கல் , மற்றும் சாவு பாட்டு போட்டு இருக்காரு ஆனா எதுவும் மனசுல பதியவில்லை.

த்ரிஷா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இல்ல சும்மா ஓரளவு சப்போர்ட் பண்ணிட்டு போயிட்டாங்க, அதே மாதிரி த்ரிஷாவோட அண்ணன் சும்மா டம்மியா தான் வந்துட்டு போகிறாரு 

அதே நேரத்தில படத்தில சில விஷயங்கள் கவனிக்காம விட்டுட்டாங்க, அதாவுது , கதை நடப்பது  A .R.C .college பொத்தேரி ன்னு சொல்லுறாங்க ஆனா காலேஜ் campus காட்டும் போது frameல S .A ..Engineering College பஸ் தெரியுது பாவம் S A .Engineering காலேஜ்ல ஷூட் பண்ணதுக்கு விளம்பரம் பண்ணிட்டாங்க போல, அப்புறம் collegeக்கு சாப்பாடு த்ரிஷாவோட மெஸ்ல    இருந்து செய்து போகிறா மாதிரி முதல காட்டுறாங்க ஆனா பின்னாடி காலேஜ் உள்ளவே செய்கிறா மாதிரி காட்டுறாங்க ,எப்படி assistant directors இந்த மாதிரி continuity எல்லாம் மிஸ் பண்ணறாங்க தெரியல,  அப்புறம் முக்கியமான விஷயம் நம்ம தமிழ் சினிமால boxingனா  அடிச்சி முகத்துல ரத்தம் எல்லாம் வந்து கொஞ்சம் காட்டுதனமா எல்லாம் அடிக்கிறாங்க, நிஜமாகவே அப்படி ஒரு boxing type எதாவுது இருக்கா? அப்படி இருந்த சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன், அதே போல boxingல points pointsன்னு ஒன்னு இருக்கு அதை ஏன் காட்டமாட்டேங்குறாங்க ? இப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் கோட்டை விட்டாலும், கதையும் வசனமும் படத்தை தூக்கி நிறுத்திடிச்சி.

சதுரங்க வேட்டைக்கு அப்புறம் வசனதிற்காவே ஒரு படம் பார்க்கன்னும்ன்னா  நிச்சயமா இதை பார்க்கலாம் 

எனக்கு ஒரு doubt  டிவி சேனல் பண்ணுகிற தப்பு எல்லாம் காட்டின இந்த படத்தை எந்த டிவி சேனல் வாங்கிருக்கும் ?

மொத்தத்தில் பூலோகம் டிவி மீடியாவிற்க்கு  பூகம்பம் ஏற்படுத்திய ஒரு படம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

2 கருத்துகள்:

  1. Shyam....your movie reviews are good and cannot be missed! Congrats on your 50th movie review!!!!! We want to celebrate it as "Shyam50" :)

    Wishing you more success ahead!

    With thanks and regards,
    Krishna Prabhakar

    பதிலளிநீக்கு
  2. Nalla ezhuthureenga.... keep writing...
    My suggestion is highlight something in bold or in different color.. It would help audience to understand quickly whether the film is good or average or bad.

    பதிலளிநீக்கு

Comments