வெள்ளி, 30 ஜூன், 2017

Ivan Thanthiran - இவன் தந்திரன்

நம்ம தமிழ் சினிமாவுல பேய் படம் ட்ரெண்ட்க்கு அப்புறம் இந்த வருஷம் ஒரு ட்ரெண்ட் ஆரம்பிச்சிஇருக்கு  அது  எதுன்ன இந்த காலேஜ் சம்பந்தப்பட்ட ஊழல்கள் அதன் பின்னாடி இருக்கும் அரசியல் விளையாட்டுகளை நம்ம ஹீரோ கண்டுபிடிச்சி வெளியே கொண்டு வருவது தான் , அது போல இந்த வருஷம் பைரவா , எய்தவன் என்று இரண்டு படங்களை தொடர்ந்து இப்போ வந்து இருக்கும் படம் தான் இந்த இவன் தந்திரன் , என்ன ஒரு வித்தியாசம்ன்னா பைரவா , எய்தவன் படத்தில் மெடிக்கல் கால்லேஜ் பற்றியது , இது engineering காலேஜ் சம்பந்தப்பட்டது ,

மற்ற ரெண்டு படங்களில் இருந்து எந்த வகையில் மாறுபட்டதுன்னா? இந்த படம் கொஞ்சம் technical விஷயங்களாக படம் நெறைஞ்சி இருக்கு , gps ,  hidden கேமரா ,bug கேமரா  அப்படி இபப்டின்னு பல விஷயங்கள் இருக்கு , அதுக்கு காரணம் ஹீரோ ஒரு engineering காலேஜ் ட்ராப் அவுட் , ஆனா அவர் ரொம்ப புத்திசாலி அதனால பல வேலைகள் செய்கிறார் ,  மேலும் இப்போ இருக்கற கரண்ட் ட்ரெண்ட் faceபுக் , மீம்ஸ் போடுறது , இன்ஜினியரிங் காலேஜ் பசங்களில் அவலங்கள் , IT ஊழியர்களின் அவலங்கள்ன்னு முதல் பாதியில் காட்டி இருக்காங்க , முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் அது மிஸ்ஸிங் 

கௌதம் கார்த்திக் முத்துராமலிங்கம் போல ஒரு பயங்கரமான படத்திற்கு அப்புறம் , ரங்கூன் ,  இவன் தந்திரன் என்று கொஞ்சம்  ஏதோ ஒரு தந்திரம் செய்து தப்பிச்சிட்டாருன்னு சொல்லலாம் , கொஞ்சம் hifi ஆனா முகம் என்பதால் அவருக்கு அந்த brilliant கேரக்டர் செட் ஆகுது , கொஞ்சம் காதல் , காமெடி என்று செஞ்சி கரையேறிட்டார் மனுஷன் 

ஹீரோயின் ஷ்ரத்தா காலேஜ் பொண்ணு மாதிரி இல்ல , professor போல இருக்காங்க அவரோட ரூம்ல இருக்கும் friend அவருக்கு அக்கா , அம்மா மாதிரி இருக்காங்க , ஷ்ரத்தாவோட கிளாஸ்மேட் ஒரு பையன் இறந்து போயிடுவான் , அவர் தான் பார்க்க கொஞ்சம் காலேஜ் பையன் போல இருக்கான் ஆனா அவர் கூட ரயில்வே ஸ்டேஷனில் அழும் காட்சி தண்ணியே வராமல் வேறும் டப்பிங்ல் மட்டும் எமோஷன் கொடுத்து இருக்கார் 

படம் ஒருஅளவு தப்பிக்குது என்றால் அது r.j .பாலாஜி, அங்க அங்க கவுண்டர் கொடுத்து சிரிக்கவைக்கிறார் , அதுவும் அந்த engineering காலேஜ் பற்றியும் , IT employee பற்றி பேசும் வசனங்கள் கைதட்ட வைக்குது , ஆனா அது யூடியூபில் ஏற்கனவே அது வெளியிடப்பட்டதால் படத்தில் பார்க்கும் போது அது சுவாரசியமாக இல்ல , ஆனால் அந்த யூடுயூப் காட்சி தான் பலரை இந்த படத்தை பார்க்க தியேட்டர்க்கு அழைத்து சென்றது .

படத்தின் மைனஸ் என்று பார்த்தா ரொம்ப technical ஆகா காட்டுவது எல்லா வகை மக்களுக்கும் போயிட்டு சேருமா என்பது கொஞ்சம் சந்தேகம் , அதே நேரத்தில் சிட்டி மக்களுக்கு இந்த படம் பார்க்கும் போது , நிச்சயமா இது எல்லாம் அந்த இங்கிலிஷ் படம் , இந்த இங்கலீஷ்  படத்தில்  வந்தது டா என்று சொல்லவைக்கிறது , மேலும் வாவ் என்று சொல்லும் எந்த ட்விஸ்ட்களோ இல்லை காட்சிகளோ இல்லதாதல் சுவாரசியம் கொஞ்சம் குறைவாக இருக்கு , மேலும் இப்படி தான் போகும் என்று ஒரு எதிர்பார்ப்பு சுலபமாக கணித்துவிடலாம் , ஒரு கோர்ட் கமிஷன் குழு அமைச்சரை விசாரிக்கும் காட்சியில் , அந்த அமைச்சருக்கு பின்னால் கோர்ட் கூண்டு போல ஒன்னு இருக்கும் அதை சரியாய் நோட் பண்ணி பார்த்தா கட்டில் கால் கழட்டி வச்சி இருக்காங்க அடப்பாவிங்களா பட்ஜெட் படம்ன்னாலும் இப்படியா பண்ணுவீங்க? ஏம்பா ஆர்ட் டைரக்டர் , அசிஸ்டன்ட் டைரக்டர் இது எல்லாம் சொல்லமாடீங்களா ?

நல்லவேளை பாடல்கள் நிறைய வைக்கல , ஒரு opening பாட்டு , அப்பறம் ஒரு இவன் தந்திரன் தீம் பாடல் , ஒரு டூயட் தேவையில்லை தான் இருந்தாலும் ஓகே தான் , இதில் இவன் தந்திரன் தீம் பாடல் நல்லா இருந்துச்சி , அதை தவிர மற்றவை சுமார் தான் .


மொத்தத்தில் இவன் தந்திரன் மனதை மயக்கும் மந்திரன் அல்ல , ஒரு அளவுக்கு செல்லும் இயந்திரன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 25 ஜூன், 2017

Vanamagan - வனமகன்


எப்போதும் போல ஒரு காட்டுவாசி கதை , அவங்க ஏரியாவில் சாதாரண மக்கள் போயிட்டு நிலத்தை அபரிக்க முயல்வதும் , அதற்க்கு அவங்க எதிர்ப்பதும் என்ற எதிர்பார்த்த கதை தான் இந்த வனமகன் , ஆனால் அதை சொல்லியவிதமும் , சொல்ல வந்த சின்ன சின்ன விஷயங்களும் நன்றாக சொல்லிருக்கார் டைரக்டர் விஜய்.

டைரக்டர் விஜய் தன்னோட வழக்கமான பாணியிலிருந்து  தள்ளி ,மேலும் அமலாபால் , நாசர் , மியூசிக் ஜி.வி.பிரகாஷ் , என்கிற வழக்கமான கூட்டணியிலிருந்து விலகியும் ,  ஜெயம்ரவி , ஹாரிஸ் என்று ஒரு புதிய கூட்டணியாக சேர்ந்து கொடுத்து இருக்கார் இந்த வனமகனை .

ஜெயம் ரவி வசனம் குறைவாக, நடிப்பு அதிகமாக இருப்பதால் கண் அசைவிலும் , உடல் அசைவிலும் நடித்து ஸ்கோர் பண்ணிட்டார்  , சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களம் , கதாபாத்திரம் எடுத்து நடிக்கும் அவருக்கு இதுவும் ப்ளஸ் ஆகத்தான் அமைந்து இருக்கு .

ஹீரோயின் சாய்சேஷா , எம்மா யாரும்மா நீ ? எங்க இருந்த ? நல்லா நடிக்கிற , செம்ம டான்ஸ் அட்டகாசமா ஆடுறீங்க அதுவும் முதல் பாட்டு அடேங்கப்பா , நீ பெண் விஜய் போல வருவீங்க போல அப்படி ஒரு டான்ஸ் ,படம் full ஆகா நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் பண்ணிருக்காங்க , முக்கியமா தமிழ் வாயசையப்பு , உச்சரிப்பது சரியாக இருக்கு , ஹன்சிகா எல்லாம் பல படங்கள் செய்தும் இப்போ தான் டப்பிங் லிப் sync வந்து இருக்கு , முதல் படத்திலே நல்லா பண்ணிருக்காங்க , அதுக்கு ஒரு பெரிய கைத்தட்டு , பாடல்கள் காட்சியில் சில இடங்களில் பூனம் பாஜ்வா போல இருக்காங்க , இது போலவே நல்ல கேரக்டர் உள்ள படங்கள் பண்ணுங்க , இந்த லூசு கேரக்டர் ரோல் எல்லாம் பண்ணி கெடுத்துகாம இருந்தா சரி .

படத்தின் வேற விஷயங்கள் சொல்லணும்ன்னா , நல்ல பாஸிட்டிவ் ஆனா பல விஷயங்கள் சொல்லி இருக்கார் ,  பணத்துக்கு முக்கியத்துவம் இல்ல என்று காட்டும் காட்சி  , இயற்க்கையைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் , உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் , இப்படி சின்ன சின்ன விஷயங்களை முதல் பாதியில் காட்சிகளாக சொல்லியவிதம் நன்று , விஜய் டிவி புகழ் vj ரம்யா கேரக்டர் சின்னது என்றாலும் அவர்களை அந்த காட்சியில் பயன்படுத்திய விதம் நன்று .அப்புறம் ஜெயம் ரவி காட்டில் குழந்தையும் , புலியையும் காப்பாற்றும் சீன நல்லா இருந்துச்சி . படத்தில் காட்டுவாசிகளை காட்டும் போது ரொம்ப lively ஆகா இருந்துச்சி செயற்கையாக , அசிங்கமா அல்லது ரொம்ப கேவலமா காட்டாமல் , இயற்கையாக காட்டி இருக்காங்க அது மிக பெரிய ப்ளஸ் அங்க எந்த மசாலாவும் சேர்க்காம இருந்தவரைக்கும் நன்றி ,அதே போல ஜெயம் ரவி சென்னை வந்து மீண்டும் காட்டுக்கு போவதற்குள் ஹீரோயின் கிட்ட பழகி தமிழ் எல்லாம் கற்றுகிட்டு பேசுவது போல எல்லாம் காட்டாமல் விட்டதற்கு பெரிய கைத்தட்டு .கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டும் , காட்டு பகுதியும் , கடல் பகுதியும் , பாடல் காட்சியும்  எடுத்த  கேமராமேன் ஒரு பெரிய ப்ளஸ் . அதே போல ஹாரிஸ் 50 கேட்டா மாதிரி பாடல்கள் இருந்தாலும் , படத்தின் bgm ஒரு  ப்ளஸ்


படத்தின் மைனஸ்ன்னு பார்த்தா இரண்டாவது பாதி திரைக்கதையும் , எதிர்பார்த்த திருப்பங்களும் கொஞ்சம் மைனஸ் தான் , , ஒரு மலை பயணம் போவது கொஞ்சம் இழுப்பதாக தெரிஞ்சது , தேவையில்லாமல் ரெண்டு  டூயட் ,அதுவும் மலையில் போகும் போது அங்க ஒரு டூயட் சுத்தமா தேவையில்லை, அது ஏதோ படத்தின் வேகத்தை சுத்தமா குறைச்சது போல இருந்துச்சி ,   சென்னையிலிருந்து அந்தமானுக்கு தனி ஹெலிகாப்டரில் போனவங்க , திரும்பி வருவதற்கு ஏர்போர்ட்ல்  டிக்கெட் கேட்பது நம்பும் படி இல்லை , அது கூட ஓகே சொல்லலாம்  ஆனால் டிக்கெட் கவுண்டர்இல் கார்டு வாங்க மாட்டாங்க காசு கொடுங்க கேட்பது நம்பும்படியாக இல்ல .அதைவிட ஒரு பெரிய மைனஸ் என்றால் , மலையில் தொங்கிகிட்டு இருக்கற ஹீரோயினை காப்பாற்றும் காட்சி தேவையில்லாமல் புகுத்தியது போல இருந்துச்சி , அவரை காப்பற்றியவிதம் ரொம்பப சினிமாத்தனமா இருந்துச்சி , அதுகூட பரவாயில்லை , அந்தளவுக்கு மலை மேல இருந்து உருண்டு புரண்டு கீழ விழுந்து உயிர் பிழைச்சி ஹீரோயின் வராங்க ஆனால் ஒரு அடி படல , அவங்க போட்ட ஜீன்ஸ் பேண்ட் கிழியல, மேக்கப் கலையவில்லை  அப்படியே பிரெஷாக இருக்காங்க , அப்பறம் ஒரு டூயட் பாடிட்டு அப்படியே மலை பயணம் தொடருக்கிறாங்க ,  டிராகன் பழம்  நம்ம ஊருல விளையுற பழம் இல்ல , அது ஏறக்குமதி பண்ணும் வெளிநாட்டு பழம் , அதுவும் நம்ம ஊரு காட்டு பகுதியில் எப்படி வரும் ? அதை போயிட்டு ஒரு பாடல் காட்சியில வச்சி இருக்கீங்க , பழம் பார்க்கா வித்தியாசம் இருந்தா எடுத்து வச்சிருவீங்களா ? ஏம்பா assistant டிரேக்டர்ஸ் இது எல்லாம் நோட் பண்ணுங்கப்பா  .

இப்படி சிலபல மைனஸ்கள் இருந்தாலும் , படத்தை எடுத்த விதம் அருமை , மேலும் படம் முடியும் போது உலகத்தில் உள்ள காட்டுவாசிகள் பற்றி தகவல்கள் போடுவது நல்லா இருக்குது , அதனால படம் டைடில் முடியும் வரை இருந்து பார்த்துட்டு வாங்க .

மொத்தத்தில் வனமகன் பார்க்கும்படியாக இருக்குமகன் .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

வெள்ளி, 23 ஜூன், 2017

AAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்





உ 
லாபம் 
அருள்மிகு முட்டு சந்து விநாயகர் துணை 
அருள்மிகு மாரியம்மன் துணை 
அருள்மிகு காளியாத்தா துணை 
அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரன் துணை 
அருள்மிகு அல்லா துணை 
அருள்மிகு யேசுவே துணை 

எங்கள் குலதெய்வம் சரவணன் இருக்க பயமேன் , ப்ருஸ்லீ  , மொட்ட சிவா கெட்ட சிவா இப்படி இந்த படங்களுக்கு எந்த அளவிலும் கொஞ்சம் கூட சளைக்காமல் , இவர்களை விட ஒருபடி மேல நாங்க எங்க படத்தை தருவோம்ன்னு  என்று சபதம் எடுத்துக்கிட்டு இந்த படத்தை எடுத்து இருக்கார் டைரக்டர்.

படத்தின் ப்ளஸ் முதல் காட்சி சிம்பு intro சீன் செம்ம மாஸ் bgm அதே நேரத்தில் செம்ம மாஸாக இருக்கார் அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சி.அப்புறம் மொட்டை ராஜேந்திரன் மற்றும் கோவை சரளா இரண்டு பேரும் அச்சம் என்பது மடமையடா தள்ளி போகாதே பாட்டுக்கு பாடுவது செம்ம சிரிப்பு , வேற என்ன ? காரில் நெருப்பு வச்சி ஒருத்தரை சிம்பு  கொலை பண்ணுறார் , அது முதல் பாதி , இரண்டாவது பாதி ரெண்டு தடவை வருது அது ரெண்டுமே நல்ல மாஸ் , வேற என்ன  படத்தில் பிளாஸ் பாயிண்ட் இருக்கு ??
......................................................................................................!.............................!.....................
......................................................................................................!.............................!.....................
......................................................................................................!.............................!.....................
தலைகீழா நின்று கூட யோசிச்சி பார்த்தாச்சு சொல்லுறதுக்கு ப்ளஸ் பாயிண்ட் ஒன்னும் இல்ல .

மைனஸ்ன்னு பார்த்தா 
1.ஸ்ரேயா டப்பிங் சரியில்ல 
2.விடிவி கணேஷ் , பாண்டு , y.g.மகேந்திரன் இவங்களுக்கு எல்லாம் செயற்க்கையாக விக்கு இருக்கு 
3.கரெண்ட் ஷாக் காமெடி பயங்கர மொக்க, y.g.மகேந்திரன் ஏன் இந்த அளவுக்கு கீழ் தனமா ஒரு காமெடி செய்தார் 
4.கோவை சரளா & குரூப் காமெடி மரணமொக்கை 
5.தமன்னா  ஏன் இப்படி ஒரு கேரக்டர் ? 
6. ஒரு கொட்டாவி காதல் காட்சி வரும் , இது வரைக்கும் எந்த படத்திலும் வரவில்லை , அந்த காட்சி மட்டுமல்ல படம் முழுக்க பார்வையளர்களுக்கு அப்படி ஒரு கொட்டாவி வருது .

இப்படி சில மைனஸ் விஷயங்கள் படம் ஆரம்பத்தில் நோட் பண்ண முடிஞ்சது , அப்புறம் நோட் பண்ண முடியல ஏன்னா படம் full ஆகா வெறும் மைனஸ் தான் ,  கதை என்னன்னு சொல்லாமேலே இது பார்ட்-1 முடியல டா சாமி .இதுல பாகுபலி போல பார்ட்-2 வேற

சிம்பு நல்ல திறமையானவர் ஆனா ஏன் இந்த மாதிரி டைரக்டர் படத்தில நடிக்கிறார் ? ஒருஅளவுக்கு நல்ல சுமாரான படம் வந்தாலே அவரை கலாய்ப்பாங்க , மீம்ஸ் போடுவாங்க , இப்போ இப்படி ஒரு படம் நடிச்சி நல்ல மீம்ஸ் போட அவரே எடுத்து கொடுத்து இருக்கார், பாவம் சிம்பு நீங்க தெய்வசெய்து கௌதம்மேனன் போல எதாவுது நல்ல டைரக்டர் கூட ஒரு படம் பண்ணுங்க , உங்க சினிமா க்ராப் மேல ஏத்துங்க 

நிறைய டைரக்டர்ஸ் நல்ல கதை வச்சிக்கிட்டு சான்ஸ் இல்லாமல் சுத்திகிட்டு இருக்காங்க , ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எப்படி இந்த கதைக்கு சான்ஸ் கிடைச்சது அதுவும் ரெண்டு பார்ட் ??

ஒரு நல்ல படம் பார்த்தா அதோட தாக்கம் சில மணி நேரத்திற்கு நம் மனதில் இருக்கும் ,  அது போல இதுவும் மனசுல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்கு.  ஆனால் அது நேர்மறையாக தாக்கம் வந்துச்சி  .நான் இந்த படத்தை சத்யம்ல தியேட்டர்ல பார்க்கும் போதே சீட் கிழிக்கலாமா ? ஸ்க்ரீனை கிழிக்கலாமா தோணுச்சு , பாவம் காசி தியேட்டர் ரொம்ப நாள் கழிச்சி புதுசா மாற்றி இன்னிக்கு தான் திறந்து இருக்காங்க , அவங்க நிலைமை ரொம்ப பரிதாபம் தான் .

மொத்தத்தில் அன்பானவன் , அசராதவன் அடங்காதவன் - அன்பாக படத்திற்கு போனால் , கொஞ்சம் கூட அசராம மொக்கைய போட்டு , அடங்காத கோவத்தோட நம்மை வெளியே வரவச்ச படம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

புதன், 21 ஜூன், 2017

Maragatha Nanayam - மரகத நாணயம்

தொட்டா நீ செத்த இப்படி ஒரு கவுண்டமணி வசனம் தான் எனக்கு ஞாபகம் வருது  இந்த படத்தை பார்த்த உடனே,  ஆமாங்க அந்த மரகத நாணயத்தை யார் தொட்டாலும் அவங்க காலி , படம் பார்த்து முடியும் போது எனக்கு யாமிருக்க பயமே படம் போல தான் தோணுச்சு , என்ன அதுல வீடு கை மாறும் , இதுல அந்த மரகத நாணயம் கை மாறுது அவளோதான் .

படத்தோட ஆரம்பத்திலே மரகத நாணயம்ன்னா என்ன, அந்த சொப்பணசுந்தரி கார் யார் யார் வச்சி இருந்தாங்க  என்று சொல்லுவதை போல , இப்போ அந்த மரகத நாணயம்  யார்கிட்ட இருக்கு எப்படி எடுக்கறது அதான் மீதி கதை , படத்தின் ஆரம்பத்தில் கதை எதை நோக்கி போகும் என்ற தெளிவு இருக்கு , அதே நேரத்தில் காதல் , டூயட் என்று படத்தில் சேர்க்காதது செம்ம .

ஆதி வெகுசில படங்கள் பண்ணாலும் நிச்சயமா அது வித்தியாசமான கதை , கதாபாத்திரம் உள்ள , படங்கள் தான் செய்து இருக்கார் , ஈரம் , யாகாவாராயினும் நாகாக்க , அரவான்  போன்ற வரிசையில் இதுவும் ஒன்று , படத்தின் முதலில் அப்பாவியாக கடத்தல் பண்ணும் போதும் சரி , பின்னாடி சீரியஸ் ஆகா சுத்தும் போதும் சரி , நிக்கிகல்ராணி கூட கொஞ்சமாக காதல் பண்ணும் போதும் சரி நல்லாவே பண்ணியிருக்கார் .

நம்ம முனிஷ் காந்த் ,  டேனியல் காமெடில பிண்ணிட்டாங்க , அவர் மட்டுமா அருண்ராஜ் காமராஜ் , இது போதாதுன்னு இவங்க கூட நிக்கிகல்ராணியும் சேர்ந்துக்கிட்டு பண்ணும் கலாட்டா ultimate , குறிப்பு( நிக்கியோட குரல்) அது தான் காமெடி சேர்க்குது , அது என்னன்னு சொல்லமாட்டேன் நிச்சயமா அது surprise , படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க .

இவங்க எல்லாருக்கும் மேல சீனியர் நடிகர் நம்ம ஆனந்த்ராஜ் , வில்லன் + காமெடி பட்டைய  கிளப்புறாரு , அவர் body language , mannerism  மனுஷன் செம்ம , மரணமாஸ் பண்ணிட்டாரு , அவர் mic ல எதிராளிக்கூட பேசுவது, அவர் பேசும் போது ஒரு ஒரு சிக்னல் கொடுக்கும் போதும் எல்லாம் அதுக்கு அவரோட அடி ஆளுங்க பண்ணுவது எல்லாம்  சூப்பர் , நிச்சயமா இப்படி ஒரு ஐடியா வந்து அவரோட கேரக்டர்  உருவாக்கிய டைரக்டர்க்கு ஒரு பெரிய கை தட்டு 

படத்தின் முக்கியமான பங்கு இசையமைப்பாளர் டிபு நின்னன், அவரோட bgm படத்தோட feel பக்காவா வந்து இருக்கு , எனக்கு அவர் போட்ட bgmல்  பேய் வரும் போது போட்டதை விட , ஆனந்த்ராஜ்க்கு போட்ட bgm தான் செம்ம , அவர் வரும் போதுயெல்லாம்  அந்த bgm தாறுமாறு, அதுவும் first அவருக்கு  opening bgm செம்ம மாஸ் feel,  அது தான் உசுரு எடுக்கும் பாட்டு யூடியூபில் இருக்கு ,  பாட்டே bgm ஆகா பயன்படுத்தியது அருமை  , முதல் பாட்டு  பார்க்குள்ளே நல்ல நாடு , அந்த பாட்டு கேட்டா பீசா படத்தில ராத்திரியில்ன்னு ஒரு பாட்டு வரும் அது போல இருந்துச்சி , அப்பறம் இந்த மியூசிக் டைரக்டர் பற்றி கூகுளை தேடினா  இவர் சந்தோஷ் நாராயணனுக்கு குருன்னு review பிரஷாந்த் சொல்லி இருக்கார் , இதை கேட்ட உடனே அடடே ஆச்சரிய குறி போடா வைக்குது. அதனால என்னவோ ஒரு டீ கடை வரும்  காட்சியில் மெட்ராஸ் படத்தோட பாட்டு  ஒலிக்குது போல , 

படத்தோட மைனஸ் சில இடங்களில் இருக்கு , லாஜிக் ஒரு சில இடங்களில் கேள்வி கேட்க தோணுது , அது என்னென்ன சொன்ன படத்தோட சுவாரசியம் போய்டும் , முனிஷ் காந்த் ஹேர் ஸ்டைல் ரொம்ப செயற்கையாக இருந்துச்சி , அதே போல அவரோட குரல் முதலில் என்னடா ரொம்ப வித்தியாசமா இருக்கே தோணுச்சு அப்பறம் அவரே வேற மாதிரி வரும் போது அவரோட உண்மையான குரல் வருது அதற்க்கு காரணமும் இருக்கு , அதை படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க ,  அதே போல படத்தில முதல் பாதியில் மரகத நாணயத்தை தேடி போகும் காட்சிகள் கொஞ்சம் slow ஆகா இருப்பது போல இருக்கு , மீண்டும் இரண்டாவது பாதி கொஞ்சம் நேரம் தடுமாறுவது போல இருக்கு , ஆனால் இது எல்லா மைனஸ்களையும் அந்த டாக்டரை கடத்தும்போதிலிருந்து படம் முடியும் வரை மறக்கவச்சிடுச்சி , செம்ம entertainment , அந்த torture பண்ணும் காட்சி செம்ம கலாய் , நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்படி இருந்துச்சி . அட படம் கடைசியில் ஒரு செண்டிமெண்ட் சீன் கூட செம்ம காமெடியாக பண்ணியிருக்காங்க , அது என்னமோ தெரியல சமீபகாலமா நம்ம தமிழ் படப்பேய்கள் டிவியில் வருது , மொபைல்ல வருது , டோரா படத்தில கார்ல கூட வந்துடுச்சி , இப்போ இந்த படத்தில லாரியில வருது .

மொத்தத்தில் இந்த மரகத நாணயம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும் நாணயமான படம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 11 ஜூன், 2017

Rangoon-ரங்கூன்

ரங்கூன் இந்த படத்திற்கு போகணும்ன்னா ஒரே  காரணம் ஏ.ஆர் .முருகதாஸ் தயாரிப்பு , டைரக்டர் முருகதாஸ் கூட ஒர்க் பண்ணியவர் , அதனால ஒரு தரமான படமா இருக்கும் ஒரு நம்பிக்கையில் போனா அந்த நம்பிக்கை வீண்போகலை

கௌதம் கார்த்திக்கு  ஒரு நல்ல ஸ்கோப் இருக்கும் படம் , இது வரைக்கும் செய்த படத்தில் இது ஒரு மைல் கல்   என்று தான்  சொல்லணும் , கதை அதுக்கு ஏற்ற நல்ல நடிப்பு , முதல் பாதியில் அவரோட வெகுளித்தனம் , அதோட அவர் வியாபாரத்தில் வளரும் போது அவர் படும் சந்தோஷங்களும் , ஒரு பெருமையும் அவர் முகத்தில் வரும் போது நாமும் சந்தோஷம் படும்படி ஒரு feel வருது, ஆனா  இரண்டாவது பாதியில் அவரை விட அவர் நண்பர்கள் இருவருக்கும் ஸ்கோப் அதிகமா தெரிஞ்சிது .

நிச்சயமா முதல் பாதி அருமையாக எடுத்து இருக்காங்க , அது ஏன்னா , படத்தில தங்கம் வியாபாரம் , கள்ளச்சந்தை அது இதுன்னு புதுசா காட்டி இருக்காங்க அதுவும் வடசென்னை சௌகார்பேட்டை , பர்மா உணவு அங்க வாழும் மக்கள் , நகைக்கடை வியாபர சங்கம் அது எல்லாம் ரொம்ப இயற்கையா இருந்துச்சி , எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சின்னா அது அஜாக்ஸ் பாலத்து கிட்ட  நடக்கும் ஒரு கொலை முயற்சி சண்டை செம்மையை அந்த காட்சி எடுத்து இருக்காங்க , அது போல பர்மாவில் அவங்க travel பண்ணுவது ரொம்ப தத்துரூபமா இருந்துச்சி .

முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டவாது பாதியில்  கொஞ்சம் எங்கயோ போனது போல இருந்துச்சி  , அதுக்கு காரணம் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு நமக்கு கொஞ்சம் சுலபமா கணிக்க முடியுது .படம் எனக்கு ஏதோ அயன் படம் பார்த்த ஒரு feel , ஏன்னா இதில் கடத்தும் பொருட்கள் வேற மாதிரி இருக்கலாம் ஆனால் , துரோகம் பண்ணும் கேரக்டர், பர்மாவில் நடக்கும் ஒரு முக்கியமான ஹோட்டல்  சம்பவம் அது  எல்லாம் எனக்கு அயன்  படத்தை தான் ஞாபகம் படுத்துகிறது .அது போல காதல் காட்சி , ஒரு முக்கியமான கேரக்டர் அதை சொல்லிட்டா படத்தோட முக்கியமான ட்விஸ்ட் தெரிஞ்சிடும் அதை பார்க்கும் போது எனக்கு ஆடுகளம் ஞாபகம் வந்துச்சி .

படத்தின் ரொம்ப முக்கியமான ப்ளஸ் கேமரா அந்த சௌகார்பேட்டை இடம் எல்லாம் எப்படி எடுத்தாங்க தெரியல , அந்த மார்க்கெட் இடம் எல்லாம் உண்மையான அங்க தான் எடுத்தாங்களா இல்ல வேற ஏதாவது இடத்தில எடுத்தாங்களா தெரியல , அந்தளவுக்கு  இயற்கையாக இருந்துச்சி , மேலும் இன்னொரு ப்ளஸ் படத்தின் bgm  , அந்த படத்தோட feel நமக்கு வர வேண்டும்ன்னா நிச்சயமா அது மிகப்பெரிய பங்கு இருக்கு , விஷால் சந்திரசேகர் அதை சரியாக செய்து இருக்கிறார் , இன்னொரு விஷயம் பாடல் இசை அமைத்தவர் விக்ரம் foreign return பாட்டு செம்ம குத்து , படத்தில் இருந்து வெளியே வரும் போது அந்த பாட்டு நம்மை அறியாம வாயில் பாட வைக்குது


எனக்கு ஒரு சந்தேகம் டைரக்டர் ராஜ்குமார் முருகதாஸ் அசிஸ்டன்டா ? இல்ல கே.வி.ஆனந்த் அசிஸ்டன்டா , என்னமோ கொஞ்சம் அனேகன் + அயன் பார்த்த feel , ஒருவேளை கதை பர்மா சம்பந்தப்பட்டது அதனால என்னவோ அப்படி தோணுது போல .



மொத்தத்தில் ரங்கூன் தியேட்டரில் நன்றாக runகூன் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்



வெள்ளி, 9 ஜூன், 2017

Sathriyan - சத்ரியன்


சத்ரியன் இது விஜயகாந்த் நடிச்ச பழய படம் ரீமேக்ன்னு நினைக்காதீங்க , இந்த படத்தோட கதை என்னா கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவு , அப்பறம் கத்திய எடுத்தவன் காதலால் தானும் திருந்தி மற்றவர்களையும் திருத்தி நல்லவனாக வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஹீரோவோட செம்ம கருத்து உள்ள படம் 

விக்ரம் பிரபுவும் அவர் நண்பனும் இந்த திருச்சியை யார் கட்டி ஆளுவது என்ற போட்டி ,ஆனால் ரெண்டு பெரும் வேற வேற gangல வேலை செய்யறாங்க , யார் யாரை போட்டு தள்ளுனாக , யார் திருச்சி கெத்து ஆகுறாக என்பது தான் கதை , இதுக்கு நடுவுல காதல் கத்திரிக்காய் எல்லாம் வேற  இருக்கு.

விக்ரம் பிரபு ரௌடிய கேரக்டர் அவருக்கு செட் ஆகுது ஏன்னா அவரோட height weight அப்படி ,ஆனா மனுஷன் பேசி சாவடிக்கிறாரு , நான் யாரு தெரியுமா என்ன பார்த்தா அவன் பயப்படுவான் , இவன் பயப்படுவான் சொல்லி சொல்லி நம்மளை பயப்படவைக்கிறார் , எப்பா சாமி எப்போடா பேசி முடிப்பீங்க கேட்க தோணுது ,அதுலயும் அவர் ஒரு bridge மேல சண்டை போடுவார் ஒரு 100 பேரை அடிச்சி போடுவார் முடியலடா சாமி , அப்படியே ராஜமௌலி மகதீரா(மாவீரன்) படம் ஞாபகம் வருது , அவரை அடிச்சி தூக்கி தண்ணியில போடுவாங்க மீண்டும் உயிரோட வந்து அப்புறம் என்ன செய்வாருன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும் இல்ல .

மஞ்சிமா மோகன் ah இல்ல அட்வைஸ் மோகன் ah தெரியல , இவங்களும் பேசி பேசி கொன்னுட்டாங்க , அதுவும் அவங்க காதல் பண்ணறதுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க பாருங்க எப்பா டேய் ஏன்டா தோணுது , காலேஜ் வரைக்கும் பாதுகாப்பா வந்தவன் வாழ்க்கை முழுக்க பாதுக்காக்க வர மாட்டானா கேட்க்கும் போது அங்க நிக்குது அந்த காதலோடு ஆழம் அப்படியே , இந்த காதல் போதாதுன்னு இன்னொரு காதல்  விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் கவின் அவருக்கும் ஐஸ்வர்யா டட்டா கூட வரும் காதல் , கதைக்கு சம்பந்தமே இல்லாம ஒரு காதல் கதை , படத்தில ரௌடிங்க தான் அடிச்சிக்கிறாங்கன்னு பார்த்தா , இந்த ரெண்டு பேரும் மாற்றி மாற்றி அடிச்சிக்கிறாங்க , இப்படி காதல் கதையை எங்கயாவது பார்த்து இருக்கறீங்களா யுவர் ஆனார் கடுப்பு ஏத்துறாங்க மை லார்ட் . கவின் தளபதி டா , சூர்யா டா , தேவா டா நட்பு டா ன்னு நட்புக்கு பாடம் எடுத்து நட்புக்கு இலக்கனமா வாழுறார் அவர் .


விக்ரம் பிரபு அவரோட பங்குக்கு படம் முடியும் போது பக்கம் பக்கமா வசனம் பேசி அவரோட தலைவரை பேசி திருத்துகிறார்   அஙக தான் படத்தின் முக்கியமான கதைக்கரு உட்காருகிறது ,

ஸ்.ஆர் .பிரபாகரனுக்கு பஸ் செண்டிமெண்ட் அதிகம் போல , சுந்தரபாண்டியன் படத்தில பஸ்ல போவது , சசிகுமார் ஓடிவந்து ஏறுவது , லட்சுமிமேனன் பார்ப்பது போல வரும் , அதே போல இதுலயும் இவர் வச்சி இருக்கார் , விக்ரம்பிரபு பஸ்ல ஏறுவது ரெண்டு பேரும் பார்ப்பது , அவரோட முந்தைய படங்கள் சுந்தரபாண்டியன் ,  இது கதிர்வேலன் காதல் போல இருக்குமான்னு கேட்ட ரொம்ப கஷ்டம் தான் , அப்போ கொடுத்த  120ரூபாய்க்கு worth ah கேட்டா அதை என் வயலா சொல்லமாட்டேன் .

மொத்தத்தில் சத்ரியன் பார்ப்பவர்களுக்கு சத்ரியவெறியர்கள் ஆவார்கள் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 4 ஜூன், 2017

Oru Kidayin Karunai Manu - ஒரு கிடாயின் கருணை மனு


மீண்டும் ஒரு முறை நம்ம தமிழ் சினிமாவுல ஒரு புது முயற்சி , துருவங்கள் 16, மாநகரம், லென்ஸ் போல ஒரு சிறிய படம் ஆனால் ஒரு கிராமத்து கதைக்களம் , ரொம்ப நாள் கழித்து உண்மையான மண்வாசனை படம் , ஏன்னா சமீபகாலமா ஒரே பேய் படம் தான் வந்துகிட்டு இருக்கு , அதை தவிர வரும் சில படங்களும் சிட்டியில் நடப்பதாக தான் வரும், அப்படியும் சில கிராமத்து படங்கள் வந்தாலும் , அதில் காதல் , கொலை , ஜாதி சண்டை அதுபோல கதைக்களம் கொண்டதாக தான் வரும் , இப்படி எதுவும் இல்லமால் ஒரு உண்மையான , இயல்பாக தரமாக ,குடும்பத்தோடு பார்க்கும்படியாக வந்து இருக்கும் இந்த படத்திற்கு ஒரு பெரிய கைத்தட்டு .

டைரக்டர் சுரேஷ் சங்கையா  காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனோட assistantன்னு  கேள்விப்படும் போதே இந்த படம் நிச்சயமா நம்பி போகலாம்ன்னு தான் தோணுச்சு , அது போல படமும் நல்லாவே இருந்துச்சி .

படம் டைட்டில் போடும் போதே ஒரு வித்தியாசம் , முதலில் ஹீரோ பெயர் போடாம , ஹீரோயின் பெயர் போட்டு இருக்காங்க , அப்படியே டைட்டில் பாட்டில் நம் ஊரு சிறு தெய்வங்கள் , மற்றும் காவல் தெய்வங்கள் காட்டி படத்தோட கதையை பாட்டிலே சொல்லியிருப்பது அருமை .

படத்தின் ஆரம்பம் காட்சி ஒரு ஆட்டின் பார்வையிலே ஆரம்பிப்பது நல்லா இருந்திச்சி, அப்படியே ஒரு ஒரு கேரக்டர் பற்றி காட்டும் போதும் சரி , அவங்க எல்லோரும் லாரியில் காலையில் எழுந்து கிளம்பும் போதும் சரி , அப்படியே நாமும் அந்த பயணத்தில் பயணிக்கிற ஒரு அனுபவம் ,  அந்த லாரி கிளம்பும் போது எல்லோரும் ஒரு காரணத்துக்காக இறங்க , அதே காரணத்துக்காக லாரியில் இருக்கும் அந்த ஆடு, அந்த செயலை லாரியிலே செய்வதும் செம்ம காமெடி , அது என்ன செயல்ன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க

படத்தில காமெடின்னு தனியா புகுத்தாம , படத்தின் கதையை ஒட்டியே ஒரு ஒரு கேரக்டர் பண்ணும் செயலே காமெடியாக வச்சி இருப்பது செம்ம .படத்தில நடிச்ச ஒரு ஒருத்தரை பற்றி சொல்லணும்ன்ன கண்டிப்பா இந்த பதிவு போதாது , ஏன்னா படத்தில அந்த அளவுக்கு நிறைய பேரு இருக்காங்க , பெயர் அளவில் படத்தின் ஹீரோ விதார்த் என்றாலும் இந்த படத்தில் நடிச்ச எல்லோரும் ஹீரோ தான் அந்த அளவுக்கு எல்லோருக்கும் சமமாக பங்கு இருக்கு, கொண்டி , சேவல் , ஊருமுழுங்கி  இன்னும் பல  இப்படி வித்தியாசமான கிராமத்து பெயர்கள் இந்த படத்தில் இருக்கு .யாருப்பா அவர் பாரதிராஜாவுக்கு xerox போட்டா மாதிரி இருக்கார் ? ஹீரோயின் ப்ரவீனா சரியான தேர்வு , அவங்க சாதாரண பெண்ணாக சரியாக பொருந்தி இருக்காங்க.

படத்தின் ஒரு மிக பெரிய ப்ளஸ், படம் அப்படியே யதார்த்தமாக போகுது , தேவை இல்லாமல் எந்த  ஒரு இடத்திலும் பாட்டோ , காதல் காட்சியோ சேர்க்காமல் , கதை ஓட்டம் எங்கேயும் சிதறவிடாமல் நம்மை படத்தோட ஒன்றவைச்சிடுச்சி ,படத்தின் கடைசி காட்சிகள் , முடிவுகள்  கொஞ்சம் அப்படியே ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் போல இருந்துச்சி ,இருந்தாலும்  இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுத்த படம் என்பதால் அதை நாம் அப்படி ஏற்க தான் வேண்டும் ,படம் முடிச்சி வரும் போது நல்ல தரமான மனசுக்கு ரொம்ப நிறைவான  ஒரு படம் பார்த்து வந்த feel .

எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் இந்த படத்திற்கு ஏன் ஒரு கிடாயின் கருணை மனுன்னு பெயர் வச்சாங்க ? ஒருவேளை அந்த கிடா பலியிடுவதில் இருந்து தப்பிச்சதால இந்த பெயரோ ? ஒருவேளை அந்த கிடா முனியாண்டி சாமி கிட்ட வேண்டி இருக்குமோ ? அதான் ஒரு கிடாயின் கருணை மனுவோ ?

அரும்பாடுபட்டு எடுத்த இந்த படத்தை ,அரும்பாடுபட்டாவது இந்த படத்தை தியேட்டரில் போயிட்டு பாருங்க , ஏன்னா shows கம்மியா இருக்கு , தியேட்டர் owners அரும்பாடுபட்டாவது இந்த படத்தின் shows அதிகபடுத்துங்க ,   ஏன் நிறைய தடவ அரும்பாடுபட்டு பயன்படுத்துறேன் தெரியனுமா ? படம் பாருங்க அது தெரியும் .


மொத்தத்தில் ஒரு கிடாயின் கருணை மனு நிச்சயமாக மக்கள் மனதில் ஏற்றுக்கொள்ளும் மனு .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

சனி, 3 ஜூன், 2017

Tubelight - டியூப்லைட்

இந்த படத்தோட ட்ரைலர் பார்த்த உடனே நடுவுல கொஞ்சம் பக்கத்த  காணோம் , விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் போல வித்தியாசமான வியாதி உள்ள ஹீரோ படமா இருக்கே , அதனால அது போல கொஞ்சம் இருக்குமோ தோணுச்சி , படம் ரிலீஸ் ஆனதே தெரியாம ரிலீஸ் ஆகி இருக்கு , பாவம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிய மற்ற சின்ன படங்களுக்கு கிடைத்த காட்சிகள் , தியேட்டர்கள்  கூட இந்த படத்துக்கு கிடைக்கல .இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை போயிட்டு பார்த்துட்டு வந்தேன் .

இந்த படம் நிறைய  காமெடிகள் இருந்து மகிழ்விக்க  வேண்டிய படம் அதுக்குரிய அம்சங்கள் இருக்கற கதை , இதுல அப்படி காமெடிகள் எல்லாம் இருந்தும் சிரிக்க வைக்க தவறியது , ஒருவேளை  இதில் நடித்த நடிகர்கள் சிரிக்கவைக்க தவறிட்டாங்களா ? நடிகர்கள் என்று எல்லோரையும் சொல்லமுடியாது  , ஏன்னா படத்துல காமெடியன்னு பார்த்தா ஒரே ஒருவர் அது ஹீரோ மட்டும் தான் , இந்த்ரா இவர் தான் படத்தின் ஹீரோ, மியூசிக் டைரக்டர் , படத்தோட டைரக்டர்ன்னு மூன்று அவதாரங்கள் எடுத்து இருக்கார் .

படத்தில பல அபத்தங்கள் , ஹீரோ ஹீரோயின் meet பண்ண வேண்டும்ன்னு என்பதிற்காகவே  hospitalல் பாம் எடுக்கும் சீன்  வச்சி இருக்காங்க அது நல்லா காமெடியா வர வேண்டியது , ஆனா அது workout  ஆகல , நடிப்புல சொதப்பிச்சா ? இல்ல அந்த காட்சி எடுத்த விதத்தில சொதப்பிச்சிடுச்சா ? காமெடி timing முக்கியம் இந்த படத்தில கதையே அந்த timing ல வச்சி தான் போகுது , அதனால அது சரிப்பட்டு வரல போல ., மேலும் பாண்டியராஜனை  தவிர யாரும் பார்க்காத முகங்கள் , ஆனால் அவரோட பகுதியும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் பார்க்க வேண்டி இருந்துச்சி, அவருக்கு வரும் பிளாஷ் பேக், அவர் ஹீரோ இந்திராவை வச்சி செய்யும் treatment முடியல , அவர் treatment செய்யும் காட்சி எப்போடா முடியும்ன்னு கேட்க தோணுச்சு .
ஹீரோவும் ஹீரோயினும் பீச்ல மீட் பண்ணும் காட்சி வரை படம் ஏதோ என்னமோ போயிட்டு இருக்கு , அதுக்கு அப்புறம் ஒரு ட்விஸ்ட் ஆகி கதைக்களம் மாறி அப்பறம் கொஞ்சம் சுமாராக சென்று ஒரு மாதிரியா படத்தை முடிச்சிட்டார் டைரக்டர் .படத்தோட கிளைமாக்ஸ் காட்சி துப்பாக்கி சூடும் போட்டி போல வச்சி இருக்கார் , அதுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய காட்சி ஆனால் எனக்கு சிரிப்பு வரலை , ஒருவேளை  எனக்கு அந்த அளவுக்கு காமெடி sense இல்லையோ ? நீங்க வேண்டும்னா படம் பார்த்து சொல்லுங்க. ஹீரோ ஹீரோயின் சைக்கிள் போகும் போது வெள்ளந்தியா நடிச்சிகிட்டே ஒரு வசனம் சொல்லுவார் , அப்புறம் ஹீரோயின் ஏணி போட்டு மேலே ஒளிஞ்சி இருக்கும் போது, ஹீரோ நடிக்கும் காட்சி மட்டும் தான் படத்தில நான் சிரிச்ச காட்சி .

டேய் படத்துல இருக்கும்  காட்சிகள் எல்லாம் சொல்லிட்டியேன்னு படத்தோட சுவாரசியத்தை குறைச்சிட்டியேன்னு திட்டாதீங்க , ஏன்னா படத்துல இருக்கற முக்கியமான காட்சிகள் அவளோதான் மற்றவை மனசுல நிக்கலை .

படத்தில ப்ளஸ் சொல்லணும்ன்னா பாட்டுக்கு கேட்க நல்லாவே இருந்துச்சி , அதுவும் சிலோன் சிலுக்கு பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சி .அதோட காட்சியமைப்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும் ஆனா பரவாயில்லை கதைக்கு தேவை தான் அந்த பாடல்.

இந்த படம் பார்த்தது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம், இந்த படத்துக்கு publicity இல்லை , பல பேருக்கு இப்படி ஒரு படம் வந்து இருக்குன்னு கூட யாருக்கும் தெரியாது , அப்படி இருந்தும் காலை ஷோவுக்கு போனேன் ரொம்ப நேரம் தியேட்டர்ல என்னை  தவிர யாருமே இல்ல , அப்புறம் நாலு காதல் ஜோடிகள் , + என்னை போல ஒரு single person , அப்புறம் ஒரு பெரிய குடும்பம் பெரியவங்க சின்னவங்கன்னு மொத்தமா 10 பேரு வந்தாங்க , எனக்கு ரொம்ப ஆச்சரியம் அடடா இது போல சின்ன படங்களை ஆதரிக்க இப்படி குடும்பமாக வந்து இருக்காங்களேன்னு , படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி ஒரு 4-5 பேரு வந்தாங்க ,  தியேட்டரில் மொத்தமா 20 பேரு கூட இல்ல , அதுல ஒரு ஜோடி முதல் பாதி முடியும் முன்னே எழுந்து போயிட்டாங்க ,படம் இன்டெர்வல் வரும் போது தான் தெரியும், 4-5 பேரு லேட்டாக வந்தவங்க அந்த படத்தில வேலை செஞ்சவங்க , அது போதாதுன்னு பார்த்தா அந்த 10 பேரு வந்த பெரிய குடும்பம் வேற யாரும் இல்ல , தயாரிப்பாளர் மற்றும் அவரோட குடும்பத்தோட வந்து இருக்கார் . அப்பறம் கூட்டி கழிச்சி பார்த்தா general audience வெறும் 7 -10 பேரு கூட இல்ல .


இந்த மாதிரி சில சின்ன படங்கள் tubelight போல லேட்டாக தான் pick up ஆகும் , ஆனால் இந்த tubelight படம் அபப்டி pick up ஆவது கொஞ்சம் கஷ்டம் தான்

மொத்தத்தில் tubelight சீக்கிரம் பியூஸ் ஆகும் tubelight

இப்படிக்கு
சினி கிறுக்கன்.