வியாழன், 24 செப்டம்பர், 2015

Kuttrram Kadithal - குற்றம் கடிதல்



குற்றம் கடிதல் .....

இந்த படத்தை பற்றி பாக்கறதுக்கு முன்னாடி சில செய்திகள் .. இதோ அவை ..
SPI சத்யம் சினிமாஸ் ஒரு பகுதியான வேளச்சேரியில் இருக்கும் லுக்ஸ் சினிமாஸ்  JAZZ சினிமாஸ்க்கு வித்துடாங்கோ ...!!!.....

சரி வாங்க இந்த படத்தை பற்றி பார்ப்போம் ,,    அட இந்த படம் ஏற்கனேவே தேசிய விருது , சென்னை பிலிம் festival ல சிறந்த திரைபடம்ன்னு விருதுகள் எல்லாம் வாங்கியது....அப்படிபட்ட சிறந்த படத்தை விமர்சிக்க நம்ம என்ன அவ்ளோ பெரியாள்ளா ?.. எப்பொழுதும்  நம்ம படத்தை பார்த்த அனுபவத்தை தான்  இங்க பகிர்வோம் ....

இந்த படத்தில நிறைய சின்ன சின்ன விஷயங்கள் திரைகதையில் சேர்த்து இருப்பது செம்ம..

முதல ஒரு ஒரு கேரக்டர் பற்றி introduce பண்ணறது அருமை ...

அந்த சின்ன பையன் .. அவனோட அம்மா என்ன பண்ணறாங்க .. அவனோட மாமா,ஆனால் முதல அவர் அவனோட மாமான்னு சொல்லாம.. அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டறது, பின்னாடி கதையோட அவர் இந்த கதைக்கு எப்படி சம்பந்தபட்டவருன்னு காட்டறது சூப்பர்.

ஒரு கணவன் மனைவி அவங்க எந்த மாதிரி சூழ்நிலையில் கல்யாண பண்ணி இருக்காங்கன்னு..அங்க அந்த அறையில் சுற்றி இருக்கும் பொருட்களை வச்சு காட்டறது ..பிறகு அவள் அந்த தாலியை தான் வளர்ந்த  மதத்திற்காக மறைப்பதும், பின்னாடி தாலியை வெளியே விட்டு குங்குமம் வைச்சு அதோட அந்த BGM அப்படியே மாறுவது சூப்பர்...தான் அவளோட மதத்தை விட்டதல தான் இந்த பிரச்சனையோ வந்ததோ நினைக்கறது expressionல herion அள்ளிட்டாங்க ..

அந்த principal அவர் மனைவியா வரவங்க அந்த பையனோட மாமாகிட்ட பேசுற வசனம், அப்புறம் herione வீட்டுல அவங்க அம்மாவும் அந்த ஆட்டோகாரரும் பேசுறது சூப்பர்..நாங்க ஒன்னும் அப்படியே ஓடி போற ஆளு இல்லங்க அப்படி அந்த அம்மா சொல்ல ..நாங்களும் ஒரு கன்னதுள்ள வாங்கிட்டு இன்னொரு கன்னம் காட்டற  ஆளு இல்லைங்க அப்படி பதில் சொல்லறது செம்ம ..அதுவும்  அந்த situationல சொல்லறது தியேட்டர்ல கை தட்டு அள்ளுது.

சின்ன சிறு கிளியே கண்ணமா அப்படிங்கற பாரதியார் பாட்டுல ஒரு ஒரு கதாபாதிரதோட  flash backai அப்பறம் சரியா அந்த அந்த பாடல் வரி வர வர visual ல காட்டறது செம்ம.

அந்த பையன் அவன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி காட்டிட்டு அப்படியே கட் பண்ணி அந்த herionekku முத்தம் கொடுக்கிறா மாதிரி காட்டி தானும் அந்த இடத்துல ஒரு அம்மா போல நடந்து இருக்கலாமேன்னு அவள் செய்த தப்பை உணர்வது போல காட்டறது சூப்பர்.

உயிருக்காக போராடற நிலைமயில இந்த மீடியாக்கள் எல்லாம் எப்படி அவங்க தொழில் உயிரை காப்பாத்திக்க நினைக்கறாங்கன்னு காட்டறது நல்லா  இருக்கு..அதுல ஒரு உச்சகட்ட சீன் ஒரு  பெண் ரிப்போர்ட்ர் அந்த அம்மாவை பேட்டி எடுக்க ஆட்டோ உள்ள போயிட்டு வசனமே இல்லாம ..அந்த ரிப்போர்ட்ர் மொக்க வாங்கிட்டு வரது அல்டிமேட் ...


நான் எப்பொழுதும்   மத்தவங்க மாதிரி படம் fullah சொல்லமாட்டேன் ஆனால் இன்னிக்கு நிறைய சொல்லிட்டேன் இருந்தாலும் முழு கதை என்னன்னு நான் சொல்லல, அதனால நிச்சயமா குடும்பத்தோடு போயிட்டு பாருங்க.

award எல்லாம் வாங்கின படம் அதனால இவன் எல்லாம் பாசிடிவா எழுதிட்டான் நினைக்காதிங்க உண்மையில மனசுல இருந்து எழுதுன எழுத்துகள் இது...


Overall: பிரம்மாண்டமா படம் எடுக்றவங்க மத்தியில் இயக்குனர் பிரம்மன் படைத்த எளிமையான இந்த சமுதாயதிற்கு தேவையான ஒரு படைப்பு ..


இப்படிக்கு
கிறுக்கன்


வியாழன், 17 செப்டம்பர், 2015

Maya - மாயா

மாயா
 இந்த படத்தை பற்றி பார்கறதுக்கு முன்னாடி ..என்னோட இந்த ப்ளாக் தமிழ் சங்கமம் என்ற android appஇல்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... என்னடா இவன் தீடிர்ன்னு இப்படி  ரொம்ப formala எழுதுறானே  பாக்குறிங்களா??? .... வேற என்னங்க பண்ண ? நம்ம ப்ளாக் app ல addஆகி  இருக்கு ... நிறைய பேரு படிக்குறாங்க ..இது வரைக்கும் 3000+ என்னோட ப்ளாக் படிச்சு இருக்காங்க....... யாரு எப்படி என்னோட ப்ளாக் appஇல் add ஆச்சுன்னு தெரியல ..எது எப்படியோ என்னோட ப்ளாக்கை appஇல் add பண்ணவங்களுக்கும் ..இது வரைக்கும் என்னோட ப்ளாக்கை  படிச்சு ஆதரவு அளித்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி .. இது போல் உங்கள் ஆதரவு தொடரணும்ன்னு கேட்டுகிறேன் ..

சரி இப்போ இந்த படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.. .

சமிபத்தில் வரும் படங்கள heroein  guest  role ல  தான் வராங்க ....அப்பாடா  ரொம்ப நாள் கழிச்சி heroeinக்கு முக்கயத்துவம் கொடுத்து வந்து இருக்கும் படம் .. படம் titleல நயன்தார பேரு தான் முதல்ல வருது அதுக்கே இயக்குனருக்கு நன்றி...

இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்த நயன்தாராவுக்கு நன்றி...நயன்தார நல்லா perform பண்ணி இருக்காங்க

எல்லா பேய் படங்கள வர மாதிரி மசாலா பாட்டுயெல்லாம்  வைக்காம ...தேவையில்லாத பிளாஷ் பேக் ... காதல் .. கத்திரிக்காய் எல்லாம் வைக்காம எடுத்த டைரக்டர்க்கு நிச்சயமா ஒரு    ஓ    போடலாம் ..

முதல் பாதியில்  ரெண்டு சம்பந்தமே இல்லாம கதை போகும் போது இரண்டாவுது பாதியில் சரியாக சேர்ந்தது  நல்லா  இருந்தது .....முதல் பாதியில் வரும் அந்த கருப்பு வெள்ளை பகுதி நான் நினைச்ச மாதிரி தான் சரியாக கதை பிரிஞ்சுச்சு ..நான் எப்படி எதிர்பர்தேனோ அப்படி தான் இருந்துச்சு

திகில் பகுதியெல்லாம் சரியா சவுண்ட் effect உடன் இருக்கு....Rohan ethan Yohaan.perfect பேய் படம் effect கொடுத்து இருக்காரு

குழந்தை தொட்டில்ல கண்ணாடியில் நயன்தார முகம் காட்டறது சூப்பர்...கதை exact ஆ காட்டறது சூப்பர்

இரண்டாவுது பாதியில்சில இடங்கள் இப்படித்தான் வரும்ன்னு நாம் எப்படி எதிர்பார்கிரோமோ அப்படி தான் கதை போகுது..

கிளைமாக்ஸ் ல ஒரு இடம் பார்க்கும் போது அட இது பிசாசு படம் மாதிரி இருக்கேன்னு தொன்னுச்சு ஆனா அது மாதிரி முழுசா காப்பி அடிச்சா மாதிரி இல்ல..லைட்ஆ அந்த பிசாசு படம் ஞாபகம் வந்துச்சு அவ்ளோதான்..

நிச்சயமா எப்போவும் போல இருக்க பேய் படம் மாதிரி எடுக்காம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ண டைரக்டர் அஷிவின் சரவணன்க்கு  ஒரு சலாம்

Overall : மாயா வாயா நம்ம பேய் பார்த்துட்டு வரலாம்.. சாரி ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம்





சனி, 5 செப்டம்பர், 2015

Payum Puli - பாயும்புலி



மதுரைன்னா அருவா  ரௌடி ..மீனாட்சி அம்மன் கோயில் ..காட்டறது  தான் நம்ம தமிழ் சினிமாவோட பழக்கம் ..அதே தான் இங்கயும் .அதேமாதிரி இப்போ புதுசா கூடவே ஒண்ணு  சேர்ந்து இருக்குறது கிரானைட் குவாரி
..
சுசீந்திரன்  தெளிவா ஸ்கெட்ச் பண்ணி படம் எடுத்து இருக்காரு ...first சீன் ரௌடி introduction .. ஹீரோ introduction..அப்படியே heroein ,காமெடியன் அடுத்து ஒரு பாட்டு ..
அப்புறம்  படம் என்கௌன்டர் ல intresting ah ஸ்டார்ட் ஆகுதே பார்த்தா உடனே திரும்பவும் சூரி காமெடி.காஜல் கூட ஒரு பாட்டு .ஒரு என்கௌன்டர்....அப்படியே இந்த ஆர்டர் மற்றாம முதல் பாதி போகுது ...நம்ம தமிழ் சினிமா திருந்தவே திருந்தாது போல..

interval ப்ளாக் செம்ம ட்விஸ்ட் ஆனா பல விமர்சனகள்  யார் வில்லன் சொல்லி இருப்பாங்க ஆனா நான் யார் அந்த முக்கிய கேரக்டர் சொல்ல மாட்டேன் ..சொல்லிட்டா அந்த சுவாரசியம் இருக்காது....அதனால இந்த interval ப்ளாக் பெருசா பாதிக்காது..

காஜல் எல்லா படத்துல வரா மாதிரி சும்மா வந்து guest role பண்ணிட்டு போய் இருக்காங்க .. பாதி படத்துக்கு மேல காஜல் காஜல் காஜல் தேடனும் அப்படியே காணாம போய்ட்டாங்க.

சூரி  கஷ்ட பட்டு சரிக்க வைக்க ட்ரை பண்ணறா மாதிரி இருக்கு...அவரு ஒரு ஒரு தடவையும் குடிச்சிட்டு வீட்டுல  பொண்டாட்டி கிட்ட மாற்றது பெருசா சிரிப்பு வரல ..ஒரே ஒரு தடவ மட்டும் சிரிப்பு வருது  அது அவர் ஹெல்மெட்டோட குளிக்க போற சீன் ...அதுகூட நம்ம வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது.. அதாங்க இவள்ளவு வேஷம் போட்டியே மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துடேயே டா வெண்ணை ..அது தான் ஞாபகம் வந்துச்சு.

.விஷால் படம்னா ஒரு பிளாஷ் பேக் பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கும் அப்படா ..அப்படியல்லாம் விஷால்  பண்ணல ..நன்றி சுசீந்திரன்

சமுத்ரகனி நல்லா பண்ணி  இருக்காரு ...பக்காவா செட் ஆகி இருக்கு...

நான் நினைக்கிறன் சுசீந்திரன்.. வால்ட்டர் வெற்றிவேல்  போல சில படங்கள் பார்த்து  inspire ஆகி எடுத்து இருபாரு போல .. ஏன்னா படத்த பார்த்தா தெரியும் ..அது என்னன்னு சொல்ல மாட்டேன் .

இமான் மியூசிக்ல முதல் பாட்டு அப்படியே ... ஜில்லா படத்துல  வர வெரசா போகயலே பாட்டு  மாதிரி இருக்கு..அப்புறம் மற்ற பாட்டும் அவரோட பழய பாட்டு கேட்டா மாதிரி இருக்கு.. பாயும் புலி பாயும் புலி பாட்டு தவிர ... அந்த தீம் BGM படத்துல அங்க அங்க வருவது விஷாலுக்கு நல்லா மாஸ் feel கொடுத்து இருக்கு ..

கடைசியா விஷால் சண்டை .. குடும்பம் செண்டிமெண்ட் .எல்லாம் கொஞ்சம் அரைச்ச மாவு தான்

மீண்டும் ஒரு முறை விஷால் சுசீந்திரன்  கூட்டனி எப்படியோ நல்லா வந்துட்ச்சு ,,2.30 மணி நேரம் waste ah போகலை ..

சுசீந்திரன் இன்னும் இந்த தேவை இல்லாத குத்து பாட்டு காதல் கத்ரீக்கா எல்லாம் வெட்டி இருந்தா புலி இன்னும் எட்டு அடி extra va பாய்ந்து இருக்கும்.

இப்படிக்கு
கிறுக்கன்