வெள்ளி, 22 ஜூன், 2018

Tik Tik Tik - டிக் டிக் டிக்

நண்பர்கள் எல்லோருக்கும் சினிகருகனின் மனமார்ந்த வணக்கமும் நன்றியும் , ஏன் நன்றி சொல்லுறேன் கடைசியா சொல்லுறேன்.

டிக் டிக் டிக் இந்த படம் ட்ரைலர் பார்க்கும் பொழுதே இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாமல் பார்த்தே ஆகணும் பல பேருக்கு தோன்றியது, இந்த மாதிரி படங்கள்  படங்கள் ட்ரைலர் மட்டும் காட்சிகள் நல்லா இருக்கும் , படத்தில் பெருசா இருக்காது , ஆனால் இந்த படம் ட்ரைலர் மட்டும் இல்ல படமும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு , 

படத்தின் கதை என்னவென்று ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும், மேலும் இந்த கதை போல ஒரு இங்கிலிஷ் படம் ஒன்று பெயர் மறந்துட்டேன் ,  ஆனால் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு மைல் கல் படம்,படத்தில் லாஜிக் தவிர வேற எதற்கும் குறை சொல்ல முடியாது 

படத்தின் ப்ளஸ்களை முதலில் சொல்லிடறேன் 

படத்தின் பெரிய ப்ளஸ் visual & sound effects  கிராபிக்ஸ் , நம்ம தமிழ் சினிமா பட்ஜெட்க்கு ரொம்ப தரமா செய்து இருக்காங்க, கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாது,  பல  பெரிய பட்ஜெட் படங்களில் கூட சில பல இடங்களில் அந்த காட்சி  கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சிடும் , இந்த  படம் முக்கால்வாசி க்ராபிக்ஸ் தான், ஆனால் கொஞ்சம் கூட அது கிராபிக்ஸ் என்று எங்கேயும்  சொல்ல முடியாது , நாமே அந்த விண்வெளியில் பயணிப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , அதுவும் இல்லாத ஒன்று இருப்பது போல உணர்ந்து நடிப்பது கொஞ்சம் கஷ்டம் அதை ஜெயம்ரவி நல்லா செஞ்சி இருக்கார் , குறிப்பாக அந்த விண்வெளியில் உயிருக்கு பயந்து வெளியே பறப்பது, மேலும் படத்தின் ப்ளஸ் என்னவென்று பார்த்தா படம் bore அடிக்காமல் போகுது , தேவையில்லாமல் காதல் பாட்டு அது இதுன்னு எதுவும் தேவையில்லாமல் வைக்காமல், படம் தெளிவா ஆரம்பிக்கும் பொழுதே கதைக்குள்ள சென்று வேற எங்கேயும் வெளியே போகாமல் படம் போகுது .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் இம்மான் bgm  மற்றும் பாடல்கள் , ரெண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட் தான் , அதில் சித்ஸ்ரீராம் குரலில் குறும்பா பாடல் செம்ம , ஜெயம்ரவியின் உண்மையான பையன் இந்த படத்தில் நடிப்பதால் அந்த பாடலில் வரும் குழந்தைப்பருவ காட்சிகள் எல்லாம் உண்மையான படங்களை வைத்து இருக்காங்க 

ஜெயம்ரவிக்கு மீண்டும் ஒரு வித்தியாசமான படம் இது , நிச்சயமா இந்த படம் மொக்க பிளாப் ஆகாது , நல்ல பெயர் தரும், 
நிவேதா பெத்துராஜ் முதல் காட்சி காட்டும் பொழுதே தியேட்டரில் கை தட்டு பறக்குது , அது ஏன்னா trailerல்  ஒரு காட்சி அப்படி இருக்கும் ஆனால் அந்த காட்சி படத்தில் இல்ல .மேலும் அவங்க ரொம்ப விறைப்பாங்க பேசுவது ரொம்ப செயற்கையாக இருக்கு .

சரி இப்போ இந்த படத்தின் மைனஸ் பற்றி பார்க்கலாம் 
இந்த மாதிரி படத்தில் லாஜிக் என்பது கொஞ்சம் எதிர்பார்க்க கூடாது , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா வாவ் படம் சூப்பர் சொல்லுவோம், ஆனால் நம்ம ஊரில் வந்தா கலாய்ப்பாங்க , அப்படி தான் மிருதன் படத்தை சொன்னாங்க , ஆனால் இந்த படத்தில் லாஜிக் அநியாயத்துக்கு அடிவாங்கி இருக்கு,என்ன எல்லாம்  லிஸ்ட் போட்டு சொல்லுறேன் 
1, ஒரு சாதாரணமான ஆட்கள் விண்வெளிக்கு போறதுக்கு வெறும் ஆறு நாட்களில் training கொடுத்து விண்வெளிக்கு அனுப்புவது நம்ப முடியல , ஏதோ 6 மாசம் , atleast 60 நாட்களாவது காட்டி இருக்க வேண்டாமா ? ஒரு மனசாட்சி வேண்டமா டா ?
2.ஜெயம்ரவி கூட ரமேஷ் திலக் , அர்ஜுனனின் ரெண்டு போறாங்க , ரமேஷ் திலக் கூட accept பண்ணிக்கலாம்  ஆனால் அர்ஜுனன் விண்வெளிக்கு போவது அவர்க்கு  training எடுப்பது எல்லாம் கொஞ்சம் over, 
3.மேல சொன்ன ரெண்டு லாஜிக் காமெடி எல்லாம் விட ஒரு ஸ்பெஷல் item டைரக்டர் படத்துல வச்சி இருக்கார் , ராக்கெட் கிளம்பி 3 மணி நேரத்தில நிலாவில் அது லேண்ட் ஆகுது அடேய்ஜெயம்ரவி தூக்கிகிட்டு  ஏதோ flight ல டெல்லி , மும்பை போனா மாதிரி சொல்லுறீங்களேடா 
4. என்ன தான் விண்வெளியில் எடை குறைவாக இருந்தாலும் ,200 டன் nuclear  weapon அசால்ட்டாக  தூக்கிகிட்டு போகிறார்
5. ராக்கெட் கிளம்பும் போதே யாரு முக்கிய வில்லன் என்று தெரிந்து விடுகிறது 6. அப்புறம் பல ட்விஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் பெருசா தெரில , கண்ணாடி வச்சி மறைப்பது , boxக்குள் திலக் போவது என்பது எல்லாம் இது எல்லாம் இபப்டி தான் நடக்கும் என்று clear ஆகா தெரிகிறது .இப்படி சில பல லாஜிக் மிஸ்ஸிங் நிறைய இருக்கு 

இப்படி லாஜிக் மிஸ்ஸிங் பல இருந்தாலும் , ஒரு வித்தியாசமான முயற்சிக்காக இந்த படத்தை நிச்சயமா தியேட்டர் சென்று பார்க்கலாம்.

மொத்தத்தில் டிக் டிக் டிக் லாஜிக் தவிர எல்லாத்துக்கும் டிக் அடிக்கலாம் .

இப்படிக்கு 
கிறுக்கன் 


சிறிது நாட்களாக சில பல வேலை காரணமாக பல படங்கள் முதல் அல்லது ரெண்டாவது நாட்களில்   பார்க்க முடியவில்லை , மேலும் பார்த்த படங்கள் விமர்சனம் எழுத நேரம் அமையவில்லை, மேலும் எழுத content கிடைக்கமாட்டேங்குது , காலா படம்  ரெண்டு முறை விமர்சனம்  எழுதியும் பெருசா views போகவும் இல்லை , ஆகவே  இனிவரும் காலங்களில் கிறுக்கனின் கிறுக்கல்  குறையலாம் அல்லது முடியலாம்.
இதுவரை ஆதரவு அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , இப்போ புரியுதா மேலே முதல் வரியில் ஏன்  நன்றி சொன்னேன் என்று.

கிறுக்கனின் கிறுக்கல்கள் முற்றும் .


சனி, 9 ஜூன், 2018

Kaala-2 - காலா 2 - விமர்சனம்


மீண்டும் ஒரு முறை சினிகிறுக்கனின் வணக்கம் , என்னடா இது காலா-2 விமர்சனமா? என்று கேட்பது தெரியும் , இது காலா-2 வின் விமர்சனம் இல்ல , இது காலா படத்திற்கு நான் தரும் ரெண்டாவது விமர்சனம் .வாரத்துக்கு ரெண்டு மூணு படம் விமர்சனம் பண்ணி இவன் சாவடிப்பான் , இப்போ என்னடா ஒரே படத்தை ரெண்டு தடவை விமர்சனம் பண்ணுறானே கேட்பதும் தெரியது .சரி ஏன் இந்த படத்தை ரெண்டு தடவை விமர்சனம் செய்ய வேண்டும் ? இருங்க சொல்லுறேன்

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ரஜினி , கமல் ,விஜய், அஜித் மற்றும் பல பெரிய அளவு படங்கள்  எல்லாம் எனக்கு சத்யம் main screenல் பார்த்தல்  தான் எனக்கு ஒரு திருப்தி , முதல் நாள் எனக்கு palazzoவில் தான் கிடைச்சது , அதனால இரண்டவாது தடவை பார்த்தேன் , அந்த சவுண்ட் effect , screen picture clarity வேற  எங்கேயும் கிடைக்காது ,சரி முதல் தடவை நான் பார்க்கும் பொழுது ஒரு சாதாரணமான ரசிகனாக பார்த்தது , இந்த முறை பார்க்கும் பொழுது பல விஷயங்களை என்னால் சற்று உற்று பார்க்கக் வைத்தது .அப்படி நான் பார்த்த விஷயங்களை உங்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் தான் இந்த post  போடுகிறேன் . இங்கே பதிவு செய்யும் எல்லாம் என்னோட தனிப்பட்ட கருத்துகளும் , மற்றும் என்னோட யூகங்கள்.

முதல் கேள்வி ஏன் ரஜினியை ராவணனாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டது ?
நம்மை பொறுத்தவரை இராவணன் ஒரு வில்லன் , ராமன் தான் ஹீரோ, இங்க ஏன் ரஞ்சித் ரஜினியை ராவணனாக காட்டினார் ? என்ற கேள்வி இருக்கு .

முதலில் ராவணன் ஒரு தமிழன் , ராமன்  ஒரு ஆரியன் , ஒருவேளை அதனால் தான் ரஜினியை ராவணனாக காட்டினாரா  ரஞ்சித் ? ஏன்னா இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் , போலி போராட்டக்காரர்களுக்கும்  ஆரியர்களை தான் பிடிக்காதே , ஏற்கனவே ரஜினியை தமிழர் இல்லை சொல்லுபவர்களுக்கு இப்படி ஒரு கேரக்டர் ரெடி செய்தார்களோ ?மேலும் ராமாயணத்துக்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்  என்று தோணுது , ராமாயணத்தில் ராவணனின் முக்கியமான மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன் என்பவன் ராமனுக்கு  எதிராக போர் புரிந்து இறந்து போவான் , அதுபோல இங்கே ரஜினியின் மகனாக வரும் திலீபன்(செல்வா)  இறந்து விடுகிறான்.

ராவணனுக்கு இரண்டு மனைவி , அதுபோல இங்கு ரஜினிக்கு இரண்டு மனைவியாக காட்டாமல் இரண்டு காதல் உறவாக காட்டி இருக்கார் , மேலும் ராவணன் சீதையை  தொட்டதில்லை , பிறர் மனைவி தீண்டாதவன் என்று கேள்விப்பட்டு இருக்கோம் , அந்த நல்ல குணத்தையும் காலா மற்றும் சரினா உறவின்  மூலமாக இங்கு காட்டியிருக்கிறார் .

மேலும் ராமாயணம் சூர்ப்பனகை அடிபட்டதால் தான் ஆரம்பிக்கும்,   அது போல முதல் காட்சியே, ஒரு பெண் அடிபடுவாங்க அந்த பெண்ணோட பையன் வந்து காலவை வந்து கூப்பிடுவான், இரண்டத்திலும் பெண்ணால் தான் கதை ஆரம்பிக்குது .

வாலி என்கிற ஒரு கேரக்டர் இராமாயணத்தில் வருவார் , அவர் சுக்ரீவனின் தம்பி , ஆனால் ராவணனின் பழய நண்பன்(இதற்க்கு முன்னாடி நான் வாலி ராமனின் நண்பன் போட்டு இருந்தேன் என்னோட நண்பர் ஒருவர் இந்த கருத்தை சொல்லியதால் இப்பொழுது மாற்றுவிட்டேன் நன்றி நண்பரே ) அது போல இங்கே சமுத்திரக்கனி கேரக்டர் வாலியப்பன் என்ற பெயரில் வருகிறார் ,  வாலியப்பன் இங்கு இராவணன் என்கிற  காலா பக்கம் இருக்கிறார் .அங்கு அனுமனால் இலங்கை தீயிட்டு கொளுத்தப்பட்டு எரிகிறது , அதுபோல தாராவி  தீயிட்டு கொளுத்தப்படுகிற காட்சி இங்கு இருக்கு .

இந்த படம் இதிகாசமான ராமாயணத்தை மற்றும் இலங்கையையும் மட்டும் தொடர்புபடுத்தியது போல இல்லாமல் இலங்கை இந்தியா அரசியலையும் தொடர்பு  இருக்குமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு .ஆமாங்க ரஜினியை இறுதி காட்சியில் விடுதலை புலிகள் பிரபாகரனோடு தொடர்பு படுத்தியது போல ஒரு உணர்வு , படத்தின் இறுதி காட்சியில் காலா  இறந்தது போல காட்டினாலும் மக்கள் காலா இன்னும் இறக்கவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கார் சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கும் , அது போல தான் இலங்கை தமிழர்கள் இன்னும் பிரபரகன் இறக்கவில்லை மீண்டும் வாருவார் என்ற நம்பிக்கையில் இருப்பது போல இந்த காட்சி அமைந்து உள்ளது என்பது போல இருக்கு , மேலும் ரஜினி சொல்லுவார் இந்த காலா இறந்தாலும் இங்கே இருக்குறவங்க எல்லாம் காலா தான் சொல்லுவார் , என்னக்கு என்னவோ இறுதி காட்சிகள் எல்லாம் பிரபாகரனையும் , ஒரு காங்கிரஸ் தலைவரையும்  குறிப்பது போல இருந்திச்சி .

மேலும் சில youtube விமர்சனத்தில் இந்த படத்தில் அம்பேத்கார் பற்றியும் அவரோட reference இருக்கு சொன்னாங்க ஆனால் அவங்க எது எல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியல , ஆனால் நான் கவனித்த விஷயம் ஒன்று படத்தின் இறுதி கட்டத்தில் , ரஜினி போராட்டம் என்று அறிவிக்கும்  இடம், அங்கே தான் புரட்சி ஆரம்பிக்கும் ,  பின்னாடி பார்த்தால் ஒரு எரிஞ்சு போன ஒரு கட்டடம் இருக்கும் அந்த கட்டடத்தில் பார்த்தால் ஹிந்தியில்  கௌதம புதர் விஹார் ன்னு(எனக்கு  ஹிந்தி படிக்க தெரியும் ) போட்டு இருக்கும்,அம்பேத்கார் 1956ல் மாபெரும் ஒரு மதம் மாற்றம் புரட்சி  நடந்த ஆண்டு அதுவும் ஹிந்துவில் இருந்து புத்த மதத்திற்கு , அதை குறிக்க தான் அங்க வச்சி இருக்காங்க, ரஜினி பயன்படுத்தும் ஜீப்பின் நம்பர் கூட MH  01 BR(அம்பேத்கர் initial )  1956,  காலா போஸ்டர் வந்த பொழுதே அந்த நம்பர் ப்ளட் பற்றி போட்டாங்க, அதனால் அந்த building பெயர்க்கும் இதற்கும்  சம்மந்தம் இருக்கும் என்று எனக்கு  தோன்றியது 

மேலே குறிப்பிட்ட கருத்துகள் எல்லாமே என்னோட யூகங்கள்  மட்டுமே , உண்மையா என்று இந்த பதிவை டைரக்டர் ரஞ்சித் படித்து சொன்னால் தான் உண்டு . ஏதோ நம்மால் முடிச்சது சும்மா கொளுத்தி போடுவோம் .

ஏண்டா டேய் இது எல்லாம் முதல் தடவை பார்க்கும் பொழுது தெரியலன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும் , அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே , முதல் தடவை பார்க்கும் பொழுது ஒரு ரஜினி படமாக தான் பார்க்க தோணிச்சி , ஆனால் இரண்டாவது  தடவை நான் பார்க்கும் பொழுது ரஜினியின் tabelல் ராவண காவியம் புத்தகம் இருந்தது என் கண்ணில்பட்டது , அப்போ தான் எனக்கு இந்த படத்தை ராமாயணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் தோணுச்சு



குறிப்பு : ராவணன் தமிழனா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு , அதை பற்றி தேடி தேடி போகும் பொழுது பல புதிய பரிமாண செய்திகள் எனக்கு கிடைச்சுது , அது எல்லாம் உண்மையா பொய்யா தெரியாது , இருந்தாலும் உங்க referenceக்கு இங்கே பதிவு செய்கிறேன் .மேலும் நான் எந்த வீடியோ பார்த்து இந்த பதிவு போடவில்லை நான் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துகள் அவ்ளோதான் .

இராவணன் தமிழனா இல்லையா ?கீழே உள்ள லிங்க் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=XhW5UX2IEmU


இராவணன் குடும்பம் பற்றி
Visit https://www.quora.com/How-many-sons-did-Ravan-have

ராமாயணத்திற்கு இன்னொரு முகம் காட்டும் கதை
Visit https://www.youtube.com/watch?v=vXhxULdUd0I

மேலும் நான் சொன்ன கருத்துகளிலோ , அரசியல் பற்றியோ  அல்லது இதிகாசத்தை பற்றியோ ஏதேனும் தவறு  இருந்தால் சொல்லுங்கள் அதை மாற்றிவிடலாம் .

இரண்டாவது பதிவு போட்டதால் இந்த படம் சூப்பர் என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன் , இந்த பதிவு வெறும் நான் கவனித்த விஷயங்கள் மட்டுமே. .

மொத்தத்தில்  நான் ஏற்கனவே சொன்னது போல கதையிலும் , திரைக்கதையிலும் காலா காலமானது தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 







வியாழன், 7 ஜூன், 2018

Kaala - காலா

ரஜினி ரசிகர்களுக்கும் , சினிமா ரசிகர்களுக்கும் சினிகிறுக்கனின் வணக்கம் ,கபாலி பார்த்து கலகலத்து போனவர்களுக்கு , நிம்ர்ந்து உக்கார்ந்து வைக்கும்  படமாக  காலா அமையுமா ?

இந்த படத்தின் கதை , திரைக்கதை பற்றி பார்ப்பதற்கு முன்னாடி , இந்த படத்தை ஒரு ஒரு காட்சியாக எப்படி பண்ணிருக்காங்க , அதோட ப்ளஸ் மைனஸ் எப்படி இருக்கன்னு பார்க்கணும் 

சூப்பர் ஸ்டார்  படம் என்றால் நிச்சயமா மாஸ் இருக்கணும் , அந்த மாஸ் கபாலியில் சற்று கம்மி , அதனால் அந்த மாஸ் இதில் ரஞ்சித் சரி செய்து இருக்கார் , ஆனால் பக்கா மாஸ் இருக்கான்னு  பார்த்த அது மிஸ்ஸிங் தான் , சூப்பர் ஸ்டார்  படத்தில் சொல்லுவது போல முழு ரவுடி தனத்தை பார்த்தது இலையே சொல்லுவார் அது போல  இந்த படத்தில் அதை முழுசா பார்க்க முடியல.

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படத்தை சில பல காட்சிகளை விமர்சனம் பண்ணனும் , முதல் மாஸ் காட்சி  , அப்பறம் ஒரு ஒருத்தர் establish பண்ணற காட்சி , அவரோட குடும்பம் அதன் பின்னணி அது எல்லாம் ஓகே ,

சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாய் வரும் ஹுமா குர்ரேஷி காட்சி நல்லா இருக்கு , அதுவும் அவர் வீட்டில் முதல் முதலாக ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கும் காட்சி சூப்பர், அதில் ரஜினியின் நடிப்பு செம்ம , அவர் காதில் கம்மல் ஆடுவது , கை விரல்கள் மடக்குவதை பார்த்து ரசிப்பது , அவர்க்கு பிடிச்சது , அவர் மனைவியிடம் காப்பி சொல்லுவது , ரொம்ப ரசிக்க வைச்சது, மேலும் ஹோட்டல் போயிட்டு பார்ப்பது , அதுக்கு அப்பறம் மனைவி ஈஸ்வரி ராவ் கிட்ட பேசுவது , ஈஸ்வரி ராவ் அவங்க பங்குக்கு அவங்க காதலை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுவதுன்னு அந்த காட்சிகள் எல்லாம் அழகா வடிவமைச்சிருக்காங்க .matured love நல்லா இருக்கு .

சரி மாஸ் சீன்ஸ் எப்படி வந்து இருக்கு ?முதல் காட்சியில் சும்மா ஒரு கண்பார்வை பார்த்ததும்  அவரோட பையன் வந்து  அடிப்பது ,டெண்டர் காட்சியில் சும்மா பேசாமல் இருந்துட்டு இருக்கும் பொழுது அந்த கண்பார்வையில் ஒரு நெருப்பு தெரிவது , அந்த மாஸ் நிச்சயமாக அது ரஜினியால் மட்டும் தான் பண்ண முடியும் ,குறிப்பாக இன்டெர்வல் சீன் அல்டிமேட் அந்த இடத்தில நிக்கல் பாட்டு வைச்சது கொஞ்ச கூட எதிர்பார்க்கல , அப்பறம் நானெப்பட்டேக்கர் வீட்டில் சந்திக்கும் காட்சி ,முக்கியமா ரொம்ப எதிர்பார்த்த கியா ரே செட்டிங் ah கேட்க்கும் வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கற  , முதல் சண்டை காட்சி அனல் பறக்கும்ன்னு பார்த்தா வேங்கையன் மவன் அப்படியே சும்மா ஒத்தையில  நின்னிட்டு போய்ட்டார், அப்பறம் சம்பத்தை கொலை செய்யும் காட்சி மாஸ் தெறிக்க விட்டு இருக்காங்க .ஸ்டேஷனில் பேசும் காட்சி செம்ம கலாய் .முக்கியமான ஒன்று இந்த மாஸ் சீன்க்கு எல்லாம் தூக்கி நிறுத்தியது சந்தோஷ் நாராயணன் இசை சொல்லணும் 

சரி மாஸ் சீன் பார்த்தாச்சு , காதல் சீன பார்த்தாச்சு , செண்டிமெண்ட் சீன் பற்றி பார்த்தாச்சு , கதை திரைக்கதை எப்படி இருக்கு ? இந்த படத்தை ரொம்ப எல்லாம் எதிர்பார்த்து போல, டீஸர் பார்க்கும் போதே தெரிஞ்சி போச்சி மும்பை base பண்ணி தாராவி , நில தகராறு கதை தான் என்று, கதை இது தான் என்று எதிர்பார்த்தது போல தான் படம் இருக்கு , அறுந்து பாழாய் போன பழைய மும்பை கதை தான் இது , பாட்ஷா, நாயகன் , வியட்நாம்  காலனி இப்படி பல தடவை பார்த்த கதை தான் , இதுல புதுசா ஒன்னும் பண்ணவில்லை.
 மேலும் காட்சியமைப்பு பார்த்தா ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொஞ்சம் மாற்றி நிலம் அது இதுன்னு மாற்றிட்டாங்க அவ்ளோதான் , மக்கள் போராட்டம் , அங்கேயே சமைத்து சாப்பிடவது , ஒரு போலீஸ் அவர்களுக்கு support பண்ணி பேசுவதுன்னு மெரினாவில் நடந்ததை மாற்றிட்டாங்க, அதில் போலீசாக வரும் அரவிந்த் மீசை செம்ம காமெடி ,எதுக்கு அப்படி செயற்கையாய் ஒரு மீசை ? ,பிறகு இந்த படத்தை பார்த்த அப்பறம் தான் புரியுது தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் தான் காரணம்ன்னு எப்படி ரஜினி அந்தளவுக்கு சரியாக சொன்னார்னு ,

சமுத்திரக்கனி ஓவர் acting , சில இடங்களில் நன்றாக இருந்தாலும் , பல இடங்களில் ரொம்ப ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு ,நானெப்பட்டேக்கர் அவ்வளவு பவர் full ஆகா தெரியல, அது என்னவோ மும்பை அரசியல் என்றாலே பால்தாக்கரே தான் நம்ம தமிழ் சினிமாவுக்கு reference போல , நானெப்பட்டேக்கர் உருவம் உடை எல்லாம் அது போல தான் சித்தரிச்சி இருக்காங்க , மராட்டி அரசியல்வாதி என்பதால் தமிழ் உடைந்து உடைந்து பேசுவது accept பண்ணிக்கலாம் , ஆனால் டப்பிங் லிப் sync பல இடங்களில் அது செட் ஆகவில்லை 

முதல் பாதி ஒரு அளவுக்கு bore அடிக்காம ஒப்பேற்றி போனாலும் , ரெண்டாவது பாதி எதுக்கு , எங்க எப்படி போக போது தெரியாம போகுது , ரெண்டாவது பாதி சுத்தமா சுவரசியமோ , ஒரு பரபரப்போ , ஒரு ட்விஸ்ட்டோ எதுவும் இல்ல , ஒரு வாவ் சொல்லும் படியோ எந்த காட்சியும் இல்ல, ரஞ்சித் இந்த மெட்ராஸ் படத்தில் இருந்து வெளியே வர வேண்டும் , ஒரே மாதிரி கதை கரு , ஒரே மாதிரி காட்சியமைப்பு , எடுத்துக்காட்டு மெட்ராஸில் எல்லோரும் கருப்பு பெயிண்ட் ஊற்றுவாங்க , அது போல இந்த படத்திலும் இறுதி காட்சி இருக்கு , அந்த சிவப்பு கலர் அடிச்சி ரஜினி வரும் பொழுது , நிச்சயமா மெர்சல் பாடல் ஞாபகம் படுத்தியது .

இந்த டிக்கெட்டை பற்றி சொல்லியே ஆகணும் , சிலர் சொல்லுறாங்க ரஜினிக்கு opening இல்ல , டிக்கெட் எல்லாம் விற்று போகல ,ஒரு உண்மையை சொல்லணும்ன்னா  இதுக்கு முன்னாடி fake demand create செய்து , டிக்கெட் அவங்களே block பண்ணி , டிக்கெட் ரேட் 1500 ருபாய் வரை விற்றாங்க, online open பண்ணும் போதே டிக்கெட் இருக்காது ,  அதுக்கு கரணம் கலைப்புலி தாணு , இவர் மட்டும் இல்ல பல producer , மற்றும் தியேட்டர்காரங்க செய்யும் வேலை , ஆனால் இந்த படம் தயாரிப்பாளர் தனுஷ் அப்படி பன்னவில்லை நினைக்கறேன், அதனால தான் எனக்கு எல்லாம் online ல் ஈசியாக  முதல் நாள் டிக்கெட் கிடைச்சது , ஆனாலும் சில இடங்களில் டிக்கெட் விலை அதிகம் என்றாலும் முன்னாடி போல ரொம்ப அதிகம் இல்ல , இது போல அஜித் , விஜய் படங்களும் இப்படி fake demand create பண்ணாமல் இருந்தா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும், எல்லோரும் படம் பார்ப்பாங்க அப்பறம் எவனும் 500 கோடி collection , 1000 கோடி collection என்று மார்பு தட்டிக்க மாட்டாங்க .இந்த 4-5 வருஷங்களாக தான் இவர்கள் படங்களுக்கு இப்படி hype , demand create பண்ணி லாபம் சம்பாதிக்கிறாங்க.

அஜித்துக்கு எப்படி ஒரு சிறுத்தை சிவாவோ அதுபோல ரஜினிக்கு ஒரு ரஞ்சித் , சாத்தியமா தல எழுத்தை மாற்ற முடியாது.

மொத்தத்தில் கதை திரைக்கதையில் காலமான  காலா 


இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

சனி, 12 மே, 2018

Irumburumbuththirai - இரும்புத்திரை

இந்த படத்தின் விமர்சினத்தை அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் அதன் காரணம் அப்பறம் சொல்லுறேன் 

முதலில் படத்தின் ப்ளஸ் பார்ப்போம் 

விஷால் படம்ன்னு  கொஞ்சம் பயந்து தான் போனேன் , ஆனால் முன்னாடி மாதிரி கத்தி தேவையில்லாமல் பஞ்ச் வசனம் பேசாம ஒரு நல்ல படம் பண்ணிருக்கார் 

படம் முதல் காட்சி இது எதை பற்றி சொல்ல போறாங்கன்னு தெரிந்துவிட்டது 

இது நிச்சயமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் படம் , இப்போ நாம் use பண்ணற டிஜிட்டல் உலகத்தை பற்றியது 

படம் பார்த்து வரும் பொழுது நம் மொபைல் பயன்படுத்த கொஞ்சம் யோசிக்க வைக்குது .

யுவன்  bgm  நல்லா இருக்கு .

படம் அர்ஜுன் வந்த பிறகு சூடு பிடிக்குது , அதுவும் அர்ஜுன் vs விஷால் வரும் ஒரு lift சீன சூப்பர் 

நிறைய விஷயங்கள் பார்க்கும் பொழுது ஆச்சரியப்படவைக்குது , அதாவுது நம் மொபைல் நம்பர் பயன்படுத்துறாங்க , அதுக்கு எந்தளவுக்கு காசு கிடைக்கும் , அட flight boarding passல் இருந்து எப்படி information எடுக்கப்படும்ன்னு சொல்லும் பொழுது ரொம்ப ஆச்சர்யப்படவைக்குது 

ரோபோ ஷங்கர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் 

பாய்ஸ் படத்தில் நம்ம செந்தில் சொல்லுவாரே information is wealth அது தான் இந்த படத்தின் முக்கியமான அம்சம் .

படத்தின் மைனஸ் பார்ப்போம் 

படம் கதைக்குள்ள போக ரொம்ப நேரம் எடுக்குது 

அது போலவே விஷால் வில்லனை தேடி போவது , ரிச்சி தெருவில தேடுவது எல்லாம் ரொம்ப length ஆகா தெரிஞ்சது 

விஷால் , சமந்தா காதல் bore அடிக்குது 

விஷால் establish ஆகி , பிரச்சனைகளை எல்லாம் சேர்த்துக்கிட்டு படம் கதைக்குள்ள போக இன்டெர்வல் வருது அதுவே 1.30 மணி நேரம் ஆகிடுச்சு 

விஷால்  மிலிட்டரி uniformல் வரும் முதல் காட்சி  செட் ஆகவில்லை , அது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவருக்கு uniform உடம்பில ஒட்டவில்லை 

அர்ஜுன் படம் ஆரம்பிச்சி 2 மணி நேரம் கழிச்சி தான் படத்தில் வருகிறார் , 

அர்ஜுன் பார்க்கும் பொழுது நிச்சயமா தனிஒருவன் அரவிந்த் சாமி தான் ஞாபத்துக்கு வருது 

ஒரு நாலு மிலிட்டரி ஆளுங்க காட்டும் பொழுதும் அதே தனி ஒருவனில் வரும் நாலு பேரு தான் ஞாபத்துக்கு வருது , ஆனால் படத்தில் ரொம்ப use பண்ணலையோ தோணுது , அவர்களுக்கும் விஷாலுக்கும் உருவாகும் உறவு strong ஆகா இல்லை 

அர்ஜுன் விஷால் மோதும் காட்சி ரொம்ப கம்மி , 

நல்ல கதை உள்ள படம் ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை இல்ல 

படத்தோட பெரிய மைனஸ் படத்தின் நீளம் அதனால தான்  விமர்சனம் அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் மேலே சொன்னேன், படம் தான் பெருசா இருந்திச்சி at least விமர்சனம் ஆவது சின்ன தாக இருக்கட்டும் தான் .

நிச்சயமா இந்த படம் எல்லோருக்கும் ஒரு கண் திறப்பு அதனால இந்த மைனஸ் எல்லாம் தாண்டி இந்த படத்தை பார்க்கலாம் 

படம் பார்த்தபின்பு நிச்சயமா நம் மொபைலுக்கு தேவை ஒரு இரும்புத்திரைன்னு தோணும் 

மொத்தத்தில் இரும்புத்திரை  ரொம்ப lengthy திரை 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 மே, 2018

Iravukku Aayiram Kangal - இரவுக்கு ஆயிரம் கண்கள்

உதயநிதி படத்தை பார்ப்பதை விட அருள்நிதி படத்தை நிச்சயமா நம்பி போலாம் என்ற ஒரு எண்ணம் எப்பவும் உண்டு , அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல்   இந்த படத்தையும் கொடுத்து இருக்கார் அவர்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கண் அசராமல் நம்மை பார்க்க வச்சி இருக்காங்க , முதல் காட்சியே ரொம்ப அழகா,  அதை ஒரு கோர்வையாக கொடுத்து, அப்படியே பிளாஷ் பேக் போவது சூப்பர், அட முதல் ஸ்டேஷன் காட்சியிலே ஒரு நம்பிக்கை கொடுத்துட்டார் டைரக்டர் , அப்பறம் வழக்கம் போல ஹீரோ , ஹீரோயின் establishment காட்சி வச்சி வழக்கமான படம் போல கொஞ்சம் போனாலும் , ஒரு ஒரு  காட்சியும் , ஒரு ஒரு ஷாட்களும் படத்தோட கதையை தொடர்ப்பு படுத்தியே படம் நகர்கிறது , எந்த காட்சியும் தேவை இல்லாத காட்சி என்று கொஞ்சம் கூட தள்ளி வைக்க முடியாது, அந்த அளவுக்கு எல்லாமே கதையை ஒட்டியே படம் போகுது .

படத்தின் பெரிய ப்ளஸ் காட்சியமைப்பு தான், படத்தின் ஓட்டத்தை ஒரு ஒரு கேரக்டர்களுடன் லிங்க் பண்ணி லிங்க் பண்ணி படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லுகிறார் டைரக்டர், ஒரு படம் வெற்றி பெறுவது படம் ஆரம்பித்தவுடன் படத்தின் கதைக்குள் போவது மேலும் கதை ஒரே இடத்தில் நிற்காமல் அடுத்து அடுத்து வரும் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்துக்கு சென்று போவது, இதை இந்த படத்தில் சரியாக செஞ்சியிருக்காங்க , மேலும் ஒரே காட்சியை வேறு வேறு கேரக்டர்களின் பார்வைலயிருந்து அதை அழகாக கொண்டு போறாங்க , சில சமயம் ஒரு காட்சி வேற வேற point of viewல் இருந்து கொண்டு போகும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்படுத்தும் , அது போல சலிப்பு ஏற்படுத்தாமல் ரொம்ப  கவனமா கையாண்டு இருக்காங்க, படத்தில் ஏகபட்ட முடுச்சிகள்  இருக்கு அதை டைரக்டரும்   குழம்பாமல் , பார்ப்பவர்களையும் குழப்பாமல் ரொம்ப தெளிவா அந்த முடிச்சிகளை அவிழ்த்து படத்தை முடிச்சிவைக்கிறர் டைரக்டர்.

படத்தின் இன்னொரு ப்ளஸ், படம் பார்ப்பவர்களை கொஞ்சம் அங்கே இங்கே கூட சிந்திக்கவிடாமல், படத்திலே நம் முழு கவனத்தையும் முழுக வச்சிட்டார்,  ஏன்னா முதலில் யார் அங்க கொலையானாகன்னு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தவச்சிட்டார் , பிறகு யார் அந்த கொலையை  பண்ணாக என்று கடைசி வரை யோசிக்க வைச்சிட்டார், எல்லாம் முடிச்சிடுச்சி முடிச்சிடுச்சின்னு நினைக்கும் போது இன்னொரு ட்விஸ்ட் வச்சி , அது முடிச்சது என்று நினைக்கும் பொழுது கடைசியில கூட இன்னொரு ட்விஸ்ட் வச்சி படத்தை முடிக்கிறார் டைரக்டர் , நம்மையும் wow சொல்லவச்சிட்டார் , படம் முழுவதும் நம்மை guess பண்ண வச்சிக்கிட்டே இருக்காங்க , நான் ஒரு ஒரு தடவையும் ஓ படம் இபப்டி போகுமோ , அட அபப்டி போகுமோ நினைக்கும் போது எல்லாம் வேற வேற மாதிரி படம் போய்கிட்டு இருக்கு .

படத்தின் ப்ளஸ் கேமராமேன் அரவிந்த் மற்றும் எடிட்டர் சான் லோகேஷ் , ஏன்னா மேல சொன்னேன் படம் பார்ப்பவர்களை குழப்பமால்  போகுதுன்னு அதுக்கு முக்கிய காரணம் எடிட்டர் தான் சொல்லணும் , ஏன்னா படத்தின் காட்சி முன்னாடி பின்னாடி மாறி மாறி போய்கிட்டே இருக்கு அதை ரசிகர்களுக்கு தெளிவா புரியவைத்தது எடிட்டர் தான் . மேலும் சாம்.சி இசைய கூடுதல் பலம் சொல்லணும் .

அருள்நிதி படத்தில் இருளாதநிதியாய் இருக்கார் , அவர் படத்திற்கு நம்பி போனவர்களுக்கு கைவிடமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிட்டார் , அஜ்மல் கோ படத்தில் எப்படி இருந்தாரோ அபப்டியே இருக்கிறார் , ஹீரோயின் மஹிமா நம்பியார் தேவையான அளவுக்கு படத்தில் use பண்ணியிருக்காங்க , மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் , ஆடுகளம் நரேன் , ஜான் விஜய் , சாய சிங், இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் சரியாக கதைக்கு பயன்படுத்தி இருக்காங்க , இதில் ஆனந்தராஜ் சீரியஸ் ஆனா நேரத்திலும் கொஞ்சம்  காமெடி பண்ணுகிறார் 


இந்த படத்தில் வரும் மழை , கொலை , இரவு , அந்த வீடு இப்படி பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் துருவங்கள்16 படத்தை ஞாபகம் படுத்தியது .நிச்சயமா டைரக்டர் மு.மாறன் ஒரு நல்ல தரமான படத்தை தந்து இருக்கிறார் .முக்கியமான விஷயம் படம் ஆரம்பம் முதல் பாருங்க , இன்டெர்வல் அப்பறம் லேட்டாக வாராதீங்க , ஒரு ஒரு காட்சியும் மிஸ் பண்ணாம பாருங்க அப்போ தான் படம் புரியும் , ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி படத்தில் எல்லா காட்சியும் லிங்க் ஆகி இருக்கு .

மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள், வைத்த கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கிறது.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 





வெள்ளி, 4 மே, 2018

Iruttu Araiyil Murattu Kuththu - இருட்டு அறையில் முரட்டு குத்து


இந்த படம் மற்ற பெரிய படங்களை விட ரொம்ப எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் , ஏன்னா, இந்த படத்தோட போஸ்டர் , டீஸர் , ட்ரைலர் எல்லாம்  அப்படி ஏற்படுத்தியது,  மேலும்  டைரக்டர் அப்படி பட்டவர் , ஹர ஹர மஹாதேவி என்ற ஒரு காவிய படத்தை தந்தவர் இவரே .


சரி இந்த படம் எப்படி இருக்கு ? இந்த படத்தை கொஞ்சம்  கூட பார்க்கறதுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாத படம் இது , என்ன தான் இரட்டை அர்த்தம் வசனங்கள் , ச்சே ச்செ டபிள் மீனிங் இல்ல , எல்லாம் ஸ்ட்ராயிட் மீனிங் உள்ள படம்னாலும் , படத்தில் கதை அதை ஒட்டிய காமெடிகளும்  கொஞ்சம் கூட இந்த படத்தில் கிடையாது , என்னதான் "ஹர ஹர மஹாதேவி " படத்தில் adults only காமெடி இருந்தாலும், அந்த காமெடி படத்தின் கதையை ஒட்டியே இருந்துச்சி  மேலும் அந்த கதைக்கு பொருத்தமாக timing , situation காமெடி கடைசி வரை இருந்தது , ஆனால் இந்த படம் கொஞ்சம் கூட கதை என்பது கிடையவே கிடையாது .

ஒரு மட்டமான கேவலமான செம்ம boring ஆகா தான் இருக்கு இந்த படம் , ஆரம்பம் ஏதோ தானோ சம்மந்தமே இல்லாமே படம் போகுது , சரி போக போக நல்ல காமெடியாக போகும் நினைச்சேன், ஆனால் அதுவும் இல்ல அங்க அங்க பச்சையாக வசனங்களும் காட்சிகளும் இருந்தாலும், படத்தில் அனைத்தும் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது , 

எல்லா கேரக்டர்களும் ரொம்ப செயற்கையாக காட்டப்படுகிறது , ஒரு கேரக்டர் கூட மனசில் நிற்கவில்லை , அது போல ஒரு காமெடி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இல்ல அந்தளவுக்கு ரொம்ப மோசமாக தான் இருக்கு , இப்போ கூட ஹர ஹர மஹாதேவி படத்தில் வரும்  காமெடிகள் ஞாபகத்தில் இருக்கு ,  ஆனால் இது இந்த படம் ? ஒரு காட்சி , ஒரு காமெடி கூட இந்த படம் பார்த்து வந்து  கொஞ்ச நேரத்தில கொஞ்சம் கூட ஞாபகத்திற்கு வரவே இல்ல.

 ஒரு தடவை ஹர ஹர மஹாதேவி  மாதிரி படம் வரலாம் , ஆனால் அது மாதிரியே படம் வருமா என்றால் அது சந்தேகம் தான் , இது கொஞ்சம் hype create ஆனதால் இந்த படம் முதல் மூன்று நாள் போகும் , ஆனால் அநேகமா டைரக்டர் சந்தோஷ் இது மாதிரியே அடுத்த படமும் எடுத்தா நிச்சயமா அட்டு பிளாப் ஆகும் 

ஹீரோயின் யாஷிகா கேரக்டர் , மேலும் அந்த பேயாக வரும் கேரக்டர் ரொம்ப மட்டமா சித்தரிக்கபட்டது , இந்த படம் adult comedy movie not porn movie சொன்னாங்க , ஆனால் நிறைய காட்சிகள் B grade porn movie போல தான் இருக்கு , ஆடைகள் , மற்றும் பல பல பல காட்சிகள் ரொம்ப மட்டமாக இருக்கு, இது போக மதுமிதா , மொட்டை ராஜேந்திரன் , பாலசரவணன் எல்லோருடைய கேரக்டர் கொஞ்சம் கூட ரசிக்கும்படி இல்ல .கருணாகரன் கடைசியில் வந்தாலும் இவர்களை compare பண்ணும் போது இவர் ஒரு அளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார் சொல்லலாம் அவ்ளோதான் , மற்றபடி சொல்லிக்கும்படி இல்ல 

பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சுட்ட பாடல்கள் , porn anthem party song கேட்டால் நடு நடுவே kalachasma பாடல் வருது , அப்பறம் அழுக்கு ஜட்டி அமுதவல்லி பாட்டு கேட்டால் , ஹிந்தி கஜினி படத்தில் வரும் Aye Bachchu பாடல்  கொஞ்சம் கேட்க்குது 

இந்த படம் 18+, இப்படி தான் இருக்கும் மேலும் சமூகத்தின் மேல அக்கறை உள்ளவங்க இந்த படத்தை பார்க்காதீங்க இபப்டி எல்லாம் ஏற்கனவே சொல்லி தான் இருக்காங்க , அதனால் ரொம்ப உத்தமன் வேஷம் போட்டு இந்த படத்தை பார்க்க போகல , ஆனால் ஹர ஹர மஹாதேவி போல  எந்த லாஜிக் பார்க்காமல் நல்லா சிரிச்சிட்டு வரலாம் என்று நினைத்து  போனால்  அது கொஞ்சம் ஏமாற்றம் தான் .

மொத்தத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, இருட்டு கதையில் சுருண்டு போனது 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 28 ஏப்ரல், 2018

Diya - தியா


ஏ.ல் விஜய் படம்ன்னா ஏதோ ஒரு படத்தின் தழுவலாக தான் இருக்கும் , இது எந்த படத்தோட தழுவலாக இருக்கும்ன்னு ஒரு சந்தேகத்தோடு தான் போனேன் , சில விமர்சனர்கள் சொல்லும் போது தெரியுது இது ஏதோ ஒரு தாய்லாந்து படம் மற்றும் வேற ஒரு இங்கிலிஷ் படம்ன்னு சொல்லுறாங்க , அப்போ கடைசி வரை விஜய் ஒரு ஒரிஜினல் கதை வச்சி படம் எடுக்க மாட்டார் போல , 

நம்ம தமிழ் சினிமாவில பேய் படம் ட்ரெண்ட்ல இதுவும் ஒன்னு , 
ஆனா இது நம்ம வழக்கமான தமிழ் பேய் படம் போல இல்ல , இந்த பேய் + காமெடி+பழிவாங்கல் + பங்களா + டூயட் பாட்டு + சாமி + மந்திரவாதி இப்படிப்பட்ட வழக்கமான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கு இந்த படம் , அது ப்ளஸ் பாயிண்ட் தான் , அதாவது கருவில் கலைந்த ஒரு குழந்தை பழி வாங்க வருது இது தான் படத்தின் ஒரு வரி கதை .என்னடா படத்தின் கதை பொதுவா இவன் சொல்லமாட்டானே , ஏன் இப்படி சொன்னான்னு யோசிக்கிறீங்களா ? நான் சொல்லாட்டியும் படம் ஆரம்பித்து கொஞ்சம் போக இந்த படம் இப்படி தான் போகும்ன்னு சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் , அதனால படத்தின் கதை சுவாரசியம் சீக்கிரமா குறைஞ்சிடுச்சி இது ஒரு பெரிய மைனஸ் , மேலும் அடுத்து அடுத்து யார் யார் இரக்க போறாங்கன்னு சுலபமாக கணிக்க முடியுது . ஆர்.ஜெ.பாலாஜி ரொம்பா மொக்க காமெடி படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றவே இல்ல , மேலும் அவர் கூட வரும் ரெண்டு கான்ஸ்டேபிள் மேக்கப் ரொம்ப செயற்கையா இருக்கு, அவங்க தான் முக்கியமா கதைக்கு  ஏதாவது பண்ணுவாங்க பார்த்தா அது இல்ல,
படத்தின் ஹீரோ கொஞ்சம் அந்நியமாக தெரிகிறார் , அவருக்கு  சில இடங்களில் டப்பிங் செட் ஆகல 

படத்தில எனக்கு பிடிச்ச விஷயங்கள் என்னன்னு பார்த்தா, படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப தேவையில்லாம மிரட்டமா , ஒரு அமைதியான பேய் படம் தந்து இருக்கார் விஜய் , ஆனால் பலருக்கு அது பிடிக்காது , அது போல சாய்பல்லவி மற்றும் அந்த குழந்தை நல்லா நடிச்சி இருக்காங்க  , அந்த குட்டி பொண்ணு வசனம் இல்லாம அமைதியா வெறும் கண்பார்வை மட்டுமே வச்சி படம் முழுக்க நடிக்கவச்சி இருக்கார் , அதே போல சாய்பல்லவி அவங்க நடிப்பால் சில இடங்களில் அவங்களோட உணர்வை நம்மக்கு உணரவச்சி இருக்காங்க,மேலும் சாம்.சி   இசை நல்லா செய்து இருக்கார் , அதே போல படம் முடியும் போது சாய்பல்லவி , அந்த குழந்தையை சந்திக்கவைக்க அது ஒரு சோகமுடிவு போல கொண்டுபோய்ட்டு ஒரு நல்ல சந்தோஷ முடிவு கொடுத்த டைரக்டர் விஜயை பாராட்டலாம் .

இது பேய் + எமோஷனல் படம் போல   கொஞ்சம் பிசாசு படம் மாதிரி ட்ரை பண்ணிஇருக்காங்க ஆனா அந்த எமோஷனல் படத்தில முழுமையாக வரல ,அது படத்தின் ஒரு மைனஸ்  

மொத்தத்தில் தியா படம் தீயா இல்ல 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

Mercury - மெர்குரி


சினிகிறுக்கனின் மனமார்ந்த வணக்கங்கள் , ரொம்ப நாள் கழிச்சி இல்ல , சுமார் ஒரு ஒன்றரை மாசம் கழிச்சி விமர்சனத்தோட வருகிறேன் , சினிமா ஸ்ட்ரைக்,காவேரி பிரச்சன்னை , ஐ.பி.ல் எதிர்ப்பு ,  இப்படி ஏகப்பட்ட தமிழ்நாட்டு  பிரச்சனைகள், இந்த ஸ்ட்ரைக் காரணத்தினால் படம் எதுவும்  வரவில்லை, அதனால சுமார் ஒரு மாசமா விமர்சனம் பண்ணுவதுக்கு லீவு விட்டாச்சு .
சரி போயிட்டு போகுதுன்னு சில இங்கிலிஷ் படம் பார்த்தாலும் , லேட்டா தான் பார்த்தேன் அதனால எந்த விமர்சனமும் பண்ணவில்லை.

போன வாரம் தான் A Quiet Place பார்த்தேன் , இந்த வாரம் பார்த்தா கிட்ட தட்ட அதுபோல வந்து இருக்கு நம்ம தமிழ் படம் மெர்குரி, இது silent படம் என்பதால கொஞ்சம் எதிர்பார்போடுதான் இந்த படத்துக்கு போனேன் , ஆனால் ஆரம்பமே அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் தவிடுபொடி ஆக்கிடுச்சி , ஏதோ வசனம் இல்லாம இந்த படத்தை எடுக்கணும்ன்னு நினைச்சி திணிச்சா மாதிரி ஒரு feel, கொஞ்சம் செயற்கையாக வடிவமைச்சா மாதிரி இருந்துச்சி,

படத்தின் ப்ளஸ் என்றால் படத்தோட visuals தான் சொல்லணும் , ரொம்ப அருமையாக காட்டியிருக்காங்க , ரொம்ப அழகா இருக்கு , ஈரம் , மழை, பனி இருட்டு பாதை , அந்த கார் பயணம் , மலையின் மாலை பொழுது , ஒரு உச்சி ஷாட் , சில இடங்கள் இயற்கையாக காட்டுவது , சில இடங்கள் CGல் காட்டுவது கொஞ்சம் கூட வித்தியாசமா தெரியாம காட்டியிருக்காங்க ,அந்த கம்பெனிகுள்ள காட்டும் விதம் , அங்க அங்கே கொஞ்சம் மிரட்டும் இசை , இது எல்லாம் படத்தோட மிக பெரிய ப்ளஸ் , ஆனால் படத்தின் கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்கு ?

படம் ஆரமபம் கொஞ்சம் செயற்கையாக ஆரம்பிக்குது ,போக போக கொஞ்சம் விறுவிறுப்பு வருவது போல இருக்கு , ஆனால் ஒரு கட்டத்துல இது எல்லாம் ஏன் நடக்குது , எப்படி நடக்குது , ஏன் பண்ணுறாங்கன்னு ஒரு curiosity இருந்தாலும்,அதுவே மனசில் அதிகமா தோணுவதால் படம் பார்க்கும் ஆர்வம் படத்திலிருந்து கொஞ்சம் விலகிவிடுகிறது, , மேலும் போக போக ஒரே மாதிரி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு  ஓரு எண்ணம்  ஒரு சாதாரண ரசிகனுக்கு எளிமையா கணிக்க முடிவதால், ஒரு சுவாரசியம் குறைஞ்சிடுச்சி .

எனக்கு என்னவோ கார்த்திக் சுப்புராஜ் mind ல ஒரு வித்தியாசமான வசனம் இல்லாம ஒரு படம் எடுக்கணும் முடிவு பண்ணிட்டு , காட்சி எல்லாம் இப்படி வரணும் முடிவு பண்ணிட்டு அப்பறம் இதுக்கு ஒரு கதை வைக்கணுமே யோசிச்சி பிறகு படத்தோட கதையை எழுதிருப்பாரோ ஒரு எண்ணம், ஏன்னா படத்தோட கதை கொஞ்சம் கூட strong ah இல்லையோ ஒரு feel , மேலும் மெர்குரி கம்பெனியால் பாதிக்கப்பட்டு , மெர்குரி கம்பெனியில் கதை நடப்பதால், மெர்குரின்னு படம் பெயர் வச்சியிருக்காங்கன்னு சொல்லணும் ,
இந்த படத்தில எந்த ஒரு சமுதாய எண்ணம் கொண்ட காட்சியோ அல்லது corporate கம்பெனி எதிர்த்து நடக்கும் கதையோ , அல்லது வேறு எந்த  சம்பந்தமான கதையோ இல்ல , இது திரில்லர் படம் போல, பேய் படம் போல படம் எடுத்துட்டு ,ஆனால் படம் முடியும் போது  corporate கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் எதுக்கு போட்டாங்கன்னு  தெரியல ,  சம்மந்தமே இல்லாம , படம் முடியும் போது இது போல வேற வேற நாட்டுல பாதிக்கப்பட்டவங்க வரலாறு ஏன் போட்டாங்க தெரியல ? ஒருவேளை இப்போ ஸ்டர்லைட் கம்பெனி ட்ரெண்ட் என்பதால் கடைசியா சேர்த்துட்டாங்களா ?

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றல் ஒரு ட்விஸ்ட் இருக்கும் , அது இந்த படத்துலயும் இருக்கு ஆனால் , அது wow என்று சொல்லும் அளவுக்கு இல்ல , இந்த படம் முதலில் இருந்து  கடைசி வரைக்கும் , பார்க்கும் பொழுது இது பேய் படமா ?திரில்லர் படமா ? எந்த மாதிரி படம்னு  ஒரு குழப்பம் நம் மனசில் யோசிக்க வச்சி கடைசியா oh இது அது தான அப்படின்னு முடியும் பொழுது தான் தெரியுது , ஆனால் அதற்க்கு சொல்லும் காரணமும் , பின் கதையும் அட சூப்பர்ப்பா சொல்லும் அளவுக்கு இல்ல , அட ஒரு சாதாரண கதை தான் அட போங்கடான்னு மக்கள் தியேட்டர்ல் சொல்லுவது கேட்க செய்யுது .அப்பறம் படத்தில் பல கேள்விகள் கேட்க தோணுது , அந்த பொண்ணு எப்படி காரில் இருந்து வெளியே வந்தா ? அஙக என்ன நடந்தது ? அவள் அங்கே எப்படி போனா ? அந்த நாலு பேரு வருவதற்கு முன்னால ?அவளை பிரபு தேவா ஒன்னும் பண்ணவில்லையா, இப்படி சில பல கேள்விகள் கேட்க தோணுது 

முக்கியமான விஷயம் பிரபுதேவா நல்ல நடிச்சிருக்கார் , அவர் மேக்கப் , அவர் நடை , பார்வை , பிரபுதேவா ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு படம் பார்த்தது ரொம்ப அரியது .அந்த காட்சிகளில் பிரபுதேவாவாக தெரியல ஒரு வெறிகொண்ட ஒரு வித்தியாசமான ஒரு உயிரினம் போல தான் தெரியுது .அதுபோல சந்தோஷ் நாராயணன் இசை  ஒரு ப்ளஸ்.

கார்த்திக்சுப்புராஜ் தன்னோட வழக்கமான நடிகர்களான கருணாகரன் , ஆடுகளம் நரேன் , விஜய்சேதுபதி இப்படி அவர்களை தவிர்த்து  முதல் முறையாக  எடுத்து இருக்கும் ஒரு வித்தியசமான ஒரு படம், அவர்களை மட்டும் அவர் தவிர்க்கவில்லை , கதையும் தான் இந்த படத்தில் தவிர்த்துவிட்டார் .

மெர்குரி  ஒரு  புதுமையான படைப்பு , ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி , வித்தியாசமா ஒரு அனுபவம் ட்ரை பண்ணலாம் நினைச்சா இந்த படம் பார்க்கலாம் , ஆனால் படம் முழுமையாக த்திருப்தி அளிக்குமா என்று கேட்டல் அது கொஞ்சம் டவுட் தான் .

மொத்தத்தில் மெர்குரி பார்ப்பவர்களுக்கு  கேள்விக்குறி 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 


சனி, 24 பிப்ரவரி, 2018

Yenda Thalaiyila Yenna Vekkala - ஏண்டா தலையில எண்ண வெக்கல


இப்படி ஒரு படம் வந்துச்சான்னு  நீங்க கேட்பீங்க ,  அப்படி தான்  நானும் நேற்று கேட்டேன் , இந்த மாசம் பிறந்து சில பல வேலைகளால் படம் எதுக்கும் போக முடியல , சரி கலகலப்பு போலாமேன்னு  நினைச்சேன், அப்போ நம்மளுக்கு தெரிஞ்ச தம்பி ஒருத்தன் அண்ணே, இப்படி ஒரு படம் வந்து இருக்கு நான் பார்க்கல ஆனா எனக்கு தெரிஞ்ச friend சொன்னான் நல்லா இருக்கு, சின்ன படம் எதிர்பாரம நல்ல காமெடி படமா இருக்கு , அதுக்கு போலாமேன்னு சொல்லி உசுப்பேத்திவிட்டான்  , அதை நமபி போனேன் , இப்போ அந்த தம்பி மற்றும் அவனோட friend ரெண்டு பேரையும் தேடிகிட்டு இருக்கேன்.

படத்தோட கதை என்னவோ கொஞ்சம் வித்தியாசமான ஒன்னு தான் , ஆனா படத்தில திரைக்கதை கொஞ்சம் கூட வித்தியாசம் இல்ல , கதைக்குள்ள போகும் போது படம் இன்டெர்வல்க்கு வந்துடுச்சி , அப்படி இழுத்து இழுத்து ட்விஸ்ட் போல கொண்டு வந்து நிறுத்திட்டாங்க , சரி ரெண்டாவது பாதியில ஏதோ கொஞ்சம் நல்லா போகும் நினைச்சா , பாட்டி கிட்ட அடிவாங்கு , ஒரு பொண்ணு இறந்து போகாம காப்பாற்று சொல்லுறாங்க , சரி காமெடி வரும் வரும்ன்னு கடைசி வரைக்கு காத்துகிட்டு இருந்தது தான் மிச்சம், அப்படி ஒரு மொக்கை படம் கொஞ்சம் கூட சிரிப்பு வரல .யோகி பாபு வரும் போது ரொம்ப கம்மியா சிரிக்க தோணுது அவ்ளோதான் .


அசார் , அர்ச்சனா , சிங்கப்பூர் தீபன் , ராமர்ன்னு விஜய் டிவி , ஜீ டிவி பார்த்தா மாதிரி இருந்துச்சி , அட டைரக்டர் கூட விக்னேஷ் கார்த்திக் இவர் விஜய் டிவில கலக்க போவது யாரு , ஜோடி நம்பர் -1 ல  வந்தவர் தான், ஹீரோயின் தவிர எல்லோரும் டிவி ஆளுங்க , அநேகமா இந்த படத்துக்கு அப்புறம் ஹீரோயின் சஞ்சித ஷெட்டி டிவிக்கு வந்துடுவாங்க போல ,  இப்படி ஒரு டிவி பட்டாளம் சேர்ந்து இந்த படத்தை தந்து இருக்காங்க , பேசாம ஒரு web series , மாதிரி பண்ணி இருந்தா கூட views நல்லா வந்து இருக்கும் , இந்த படம் ஓடும் தியேட்டர்களும் கம்மி , அந்த தியேட்டர்ல வரும் மக்களும் கம்மி தான் .முக்கியமான ஒன்னு படத்தின் டைட்டில் இவர்களுடன் மன்சூரலிகான்ன்னு போட்டாங்க , படத்தில எங்க வந்தார்ன்னு தெரியல , ஒருவேளை நான் கவனிக்காம விட்டுட்டேனோ இல்ல தூங்கிட்டேனோ ? மன்சூரலிகான் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்போ ஏதோ சர்ச்சையா பேசிட்டார் சொல்லுறாங்க அதனால அவரை படத்தைவிட்டு இப்படி வெட்டிட்டாங்களோ ?

ஆனா ஒன்னு படத்தில சில இடங்களில்  டேய் இப்போ டூயட் போடாதடான்னு அவங்களே அவங்க கலாச்சிக்கிட்டாங்க, நல்லவேளை படத்தில் ஒரே ஒரு டூயட் மட்டும் தான்

இந்த துக்கத்திலும் ஒரு நல்லவிஷயம், நான் இந்த படத்திற்கு 200 ரூபா செலவு பண்ணவில்லை , சென்னையில இருக்க  பிரபலமான பழமையான ஏவிம்ல தியேட்டர் ல எந்த ஒரு இன்டர்நெட் சார்ஜ் எல்லாம் இல்லமா வெறும் 70ரூபாய்க்கு பார்த்த ஒரு மனம் ஆறுதல் அவ்ளோதான் . என்ன ஒன்னு தியேட்டர்ல ஒரு பக்கம் எலி ஓடுது , கொசு கடிக்குது , படத்தோட கடிக்கு அந்த கொசுவோட கடி பரவாயில்லை தோணுச்சு .


மொத்தத்தில் ஏண்டா இந்த படத்திற்கு போனோம் தோணுச்சு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

cinekirukkan

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ONPS - ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன்

ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன் இந்த படத்தை பற்றி என்ன சொல்லணும் ?

......

...

..................

...........

..........



................


............


..........

என்னடா ஒன்னும் சொல்லாம காலியா இருக்கே பாக்கறீங்களா ? படமும் அப்படி தான் இருக்கு , ஒன்னும் சொல்ல முடியலை, சொல்லறத்துக்கும் ஒன்னும் இல்ல, விஜய்சேதுபதி இப்படி ஒரு படம் பண்ணுவார்ன்னு சத்தியமா நினைக்கல, இந்த வருஷத்திலே அவருக்கு வந்து இருக்கும் முதல் படம் , அது இப்படி மொக்கையா இருக்கும்ன்னு கொஞ்சம் கூட நினைக்கல .

கதை திரைக்கதை எல்லாம் மீறி காமெடின்னு சொல்லி படத்தில வச்சி செஞ்சிட்டாங்க , ஒரு ஒரு காட்சியும் காமெடியா இருக்கணும் , எல்லோரும் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க சிரிக்கணும் நினைச்சி செஞ்சி இருக்காங்க,ஆனால் முடியல பார்த்து பார்த்து கடுப்பு ஆகுது , இந்த black  காமெடி அது போல ஏதோ try பண்ணி இருப்பாங்க போல, ஆனால் அது  நம்மளை வச்சி  dry பண்ணிட்டாங்க, ஏதோ பழய காமெடி சீரியல் பார்க்கிறா மாதிரி ஒரு feel , இன்னும் சொல்லணும்ன்னா கலக்க போவது யாருல stand  up காமெடி சொல்லிட்டு அவங்களே சிரிச்சிக்கிறா மாதிரி இருக்கு .,

படத்தின் ப்ளஸ்ன்னு சொல்லணும்ன்னா கதை நடக்கும் களம், மற்றும் அந்த கிராமம் பெயர் , அந்த செட்டிங் , அந்த costume , மற்றும் விஜய்சேதுபதி சில இடங்களில் காட்டும் மாஸ், சின்ன சின்ன body language செம்மையை மனுஷன் காட்டுறாரு .

கௌதம் கார்த்திக் நடிப்பு இந்த காமெடிகளில் slapstick அது போல try பண்ணி இருக்கார், ஆனால் சிரிப்பு வரல , படத்தில் வெகு சில இடங்களில் கொஞ்சம் timing ஆகா காமெடி பன்னிருப்பது டேனியல் தான் அவர் சில இடங்களில் light aah ரசிக்கிறா மாதிரி செய்து இருக்கார் அவளோதான் .ஹீரோயின் நிகாரிக்கா அழகா இருக்காங்க குறிப்பு  நடிகர் சிரஞ்சீவி இவங்களுக்கு பெரியப்பா .

எனக்கு ஒரு சந்தேகம் விஜய்சேதுபதி எப்படி இந்த படத்தை எடுத்தார் ? ஒருவேளை டைரக்டர் இது சூதுகவும் படம் போல ஒரு புது trend செட் ஆகும் சொல்லிருப்பாரோ ? இதுக்கு முன்னாடி அவரோட றெக்கை , கருப்பன் படம் பார்த்தப்போ கூட இப்படி வெறுத்து போயிட்டு வெளியே வரலை, ஆனால் இந்த படம் பார்த்துட்டு வெளியே வரும் போது அப்படி ஒரு வெறுப்பு, இதுக்கு மேல என்னால இந்த படத்தை பற்றி எதுவும் எழுத முடியல.படம் பார்த்து வெளியே வரும் போது இதுக்கு விஜயகாந்த் பையன் நடிச்ச மதுரவீரன் பார்த்து இருக்கலாம் தோணுச்சு .

அட அந்த லம்பா லம்பா பாட்டு நல்லா இருந்துச்சே அதையாவுது போடுவாங்களேன்னு wait பண்ணா , படம் முடிச்சி end title ல போடுறாங்க , எப்பா டேய் இந்த ஒரு பாட்டுக்கு ஒரு முழு படத்தை பார்க்கவச்சிட்டாங்களேன்னு தோணுது , இந்த வருஷத்திலே பார்த்த முதல் மரண மொக்கை படம், இதுல second part வேற வர போகுதாம், நல்லவேளை தொடரலாம் தான் போட்டாங்க தொடரும் போடல, அதனால வராதுன்னு நினைக்கறேன் .

நீங்க  இளகின மனசு எந்த காமெடி சொன்னாலும் சிரிப்பேன் சொல்லுகிற ஆளு என்றால் போயிட்டு சிரிங்க 

மொத்தத்தில் ஒரு நல்லநாள் பாத்து (சொல்லுறேன் ) எதுவும் சொல்லமுடியாது 

குறிப்பு : பொதுவா என்னோட விமர்சனம் போட்ட பிறகு தான் மற்ற youtube  review எல்லாம் நான் பார்ப்பேன் , அப்படி பார்க்கும் போது ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், பல youtube reviewers இந்த படத்தை positive ஆகா review பண்ணிருக்காங்க, ஒருவேளை எனக்கு தான் பிடிக்கலையோ(குறிப்பாங்க Jackie cinemas review) ?   இந்த வரிகள் என்னோட review publish பண்ண பிறகு இதை update பண்ணிருக்கேன் .


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Padmavat - பத்மாவதி

பத்மாவதி இந்த படம் ரிலீஸ் ஆனதே லேட் , நான் படம் பார்த்தது கொஞ்சம் லேட் , இதுக்கு ரொம்ப லேட்டாக  review போடலாமா வேண்டமா எனக்கு ஒரு கேள்வி ? ஏன்டா இந்த படத்துக்கு எல்லாம் review போடுவியான்னு கேட்டகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது , இருந்தாலும் போடுவோம் படிக்கறவங்க படிங்க.பொதுவா சர்ச்சைகள் உள்ள படம் ,  இல்லனா நல்ல மற்ற மொழி படங்கள் மிஸ்பண்ணாம பார்த்துடுவோம் , அப்படி பார்த்தது தான் இந்த படம் , தமிழில் பார்க்கல ஹிந்தில தான் பார்த்தேன் , நமக்கு தெரிஞ்சது கொஞ்ச ஹிந்தி தான் நல்லவேளை subtitle இருந்துச்சி 

கதை :
பொதுவா கதை என்னோட reviewல் இருக்காது, ஆனால் இந்த படம் சொல்லியே ஆகணும் , வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணும் வெறித்தனமான Aladdin(ரன்வீர்), சித்தூர் ராணி அழகை கேள்விப்பட்டு அவளை அடைய ஆசைபடுறான், அவனுக்கு சற்றும் சளைக்காத  நேர்மையாக போர் புரியும் ராஜபுத்திரர்கள் ராஜா ரத்தன் சிங் (ஷாஹித் கப்பூர் )கடைசியில் இறந்து போக,  ராணி பத்மாவதி(தீபிகா) உட்பட பல பெண்கள் தங்களை தாங்கள் நெருப்புக்கு தியாகம் செய்யறாங்க , கடைசி வரைக்கும் சுல்தான்(ரன்வீர்) ராணி பத்மாவதியை(தீபிகா) பார்க்க முடியவில்லை, இது பலருக்கும் தெரிஞ்ச கதை இதில் கற்பனை கலந்து வந்து இருக்கு இந்த படம் 

திரைக்கதை:
மூன்று மணி நேரம் படம் நிச்சயமா கொஞ்சம் பொறுமையாக தான் இந்த படத்தை  பார்க்கனும், படம் ரொம்ப வேக வேகமா போகவில்லை, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நிமிர வைக்கிறது, படத்தின் கதை என்னவென்று தெரிஞ்சு பார்ப்பதால், பார்க்கும் பொழுது நமக்கு  பெருசாக சுவாரசியம் இல்லாத மாதிரி தான் ஒரு உணர்வு, மேலும் ஷாஹித் கப்பூர் & தீபிகா காதல் காட்சிகள் காதல் ரொம்ப சொட்ட சொட்ட கொடுத்து இருக்காங்க ஆனால் அந்த காதல் கூட ரொம்ப நிதானமா slow ஆகா சொட்டுகிறது, பேசுறது கூட இவ்வளவு  பொறுமையாகவா  பேசுவீங்கன்னு கேட்க தோணுது , ரெண்டாவது பாதியில் வரும் காதல் காட்சிகள் பார்க்கும் போது எப்பா டேய் காதல் பண்ணது போதும்டா வெளியே போயிட்டு சண்டை போடுங்கடா ன்னு கேட்க தோணுது, காதல் காட்சிகளை குறைத்து போர் காட்சிகளை கொஞ்சம் அதிகம் படுத்தியிருக்கலாம் 

ரன்வீர் சிங் :
படத்தின் ஹீரோன்னு சொல்லணும்ன்னா இவரைத்தான் சொல்லணும் , மனுஷனா இல்ல மிருகமா இவன்?  என்று சொல்லவைக்குது அந்த கேரக்டர்க்கு அப்படி ஒரு justification கொடுத்து இருக்கார்,எங்கேயும் ரன்வீர் ஆகா தெரியல , அந்த கண்பார்வை கூட அப்படி ஒரு வில்லத்தனம் படம் full ஆகா வருது, அந்த நடை body language எல்லாம் தாறுமாறு, அவங்க டென்டில் தீ விழும் பொழுது பார்த்துட்டு அசால்ட்டாக அப்படியே இருந்து ஒரு expression தருவார் செம்ம, கலி பலின்னு ஒரு பாட்டு வரும் அந்த வெறித்தனம் அந்த பாட்டுல அவர் ஆடும் பொழுதும் கூட தெரியும், , இந்த படம் தூக்கி நிறுத்துவது ரன்வீர் தான் , ஒரு சில படங்ளில் தான் வில்லன் கேரக்டர் strong ஆகா இருக்கும் , அதை ரொம்ப சூப்பராக செய்து இருக்கார் , மேலும் நமக்கு ச்சே என்ன வில்லன்யா இவன் , ஒரு வில்லன் ஜெயிக்கணும்  ஒரு சில  படங்களில் தான் தோணும் , அப்படி இந்த படத்தில் தோணுவச்சிருக்காங்க, நிச்சயமா சிறந்த வில்லனக்குரிய விருதுகள் வாங்குவார் 

தீபிகா :
அழகான ராணி , அவளால் , அந்த அழகால் தான் கதை என்பதால் தீபிகாவை எந்தளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு அழகா காட்டிருக்காங்க, முகத்தில் நிறைய பட்டி டிங்கரிங் பார்த்து இருக்காங்க , எந்த அளவுக்கு பார்த்து இருக்காங்க என்றால் , டிஜிட்டல் கலரிங் வேற நிறைய செய்து இருக்காங்க போல  தெரியுது , பல இடங்களில் கிராபிக்ஸ் கார்ட்டூன் படத்தில பார்த்தது போல இருக்கு அவங்க முகம் , மாசு மருவற்ற முகம் என்பது இது தானோ கேட்கத்தோணுது 

ஷாஹித் கப்பூர் :
படத்திற்கு இவர் முக்கியமான கேரக்டர் ஆகா இருந்தாலும் படத்தின் முக்கியம் தீபிகாவும் ரன்வீரும் தான் , அதனால் இவர் கேரக்டர் பெருசா எடுபடவில்லை, மேலும் எனக்கு படத்தில் பார்க்கும் பொழுது ராஜாக்குரிய ஒரு கம்பீரம் வரவில்லை , ரன்வீரை பெருசா காட்ட வேண்டும் என்பதால் இவரை டம்மி ஆக்கிட்டாங்க போல, ரன்வீருக்கு முன்னாடி வீர வசனம் பேசினாலும் ஒரு ராஜபுத்திரர்கள் என்று கம்பீரமாக சொல்லும் அளவுக்கு இல்ல , ரன்வீர் முன்னாடி இவர் சின்ன பையன் போல தான் இருக்கார் .


சஞ்சய் லீலா பன்சாலின்ன இன்னொரு பெயர் பிரம்மாண்டம், அந்த 
பிரம்மாண்டம் படம் முழுக்க இருக்கு , எனக்கு மீண்டும் பாஜிரோ  மஸ்தானி பார்த்த உணர்வு , அந்த செட்டிங் பிரம்மாண்டம் அரண்மனை எல்லாம் செம்ம , எது செட்டிங் எது ஒரிஜினல் எது கிராபிக் என்று கொஞ்சம் கூட பிரிச்சி பார்க்க முடியல அப்படி ஒரு அருமையான மேக்கிங் .படத்திற்கு இசையும் இவரே, ஆனால் சஞ்சித் தான் படத்தின் Bgm,  படத்தின் ப்ளஸ் இவரோட Bgm தான்,  .ஆனால் படத்தின் நீளம் மைனஸ் , மேலும் போர் காட்சிகள் இல்லாதது படத்தின் ராஜபுத்திரர்கள் வீரம் இல்லாதது போல ஒரு உணர்வு.

இந்த படம் எதுக்கு இந்தளவுக்கு சர்ச்சை பண்ணாங்க தெரியல 

மொத்தத்தில் பத்மாவதி பல சர்ச்சைகளை பதம்பார்த்து மிதித்தவள்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 27 ஜனவரி, 2018

Nimir - நிமிர்

உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்தா ரெண்டு நாளைக்கு நிமிர முடியாது , ஏன்னா அவரோட முந்தைய படங்கள் அப்படி , இருந்தாலும் ப்ரியதர்ஷன் படம் என்பதால் ஒரு அளவுக்கு நிமிர்ந்து பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் போனேன் , அதுவும்   Maheshinte Prathikaaram  என்ற மலையாளப்படத்தின் ரீமேக் என்பதால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி , அந்த ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை

படம் ஆரம்பமே இந்த படம் visual ஆகா நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் வந்தது, அதே போல படம் full ஆகா ரொம்ப அழகா காட்டிருக்காங்க, மலை , மழை , இயற்க்கை , உதயநிதி ஸ்டாலின் வீடு , அதுவும் இரவில்  காட்டும் lighting மனசில் பதியவச்சது,

படம் போக போக என்னமோ ஏதோ சம்மந்தம் இல்லமே , எங்க எங்கயோ போகுது , ஒரு ஒரு கேரக்டர் புரியவச்சி படம் கதைக்குள்ள போகுது , ஆனால் அது  எல்லாம் தேவையா என்று  தோணுது, படம் முக்கியமா கதைக்குள்ள போக  ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மான் அண்ணாச்சியில் ஆரம்பித்து கஞ்சா கருப்பு வழியாக எம்.ஸ் .பாஸ்கர் வழியாக உதயநிதி ஸ்டாலின் கிட்ட போயிட்டு சேரும் chain link ஒரு நல்ல ஐடியா , ஆனால் அப்படி பட்ட லிங்க் தேவையா என்ற எண்ணம் தோணுது , அதுவும் அதை செயல் படுத்திய விதம் ரொம்ப சாதாரணமா  இருக்கு  , காமெடி என்ற இடத்தில வைத்த காட்சிகள் எதுவும் காமெடியாக  இல்லை.

அழகான எதார்த்தமான படமாக வரவேண்டியது, சொல்லப்போனா ரொம்ப commercial பொருட்களும் படத்தில் பெருசா இல்ல , இருந்தாலும் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை , பல இடங்களில் கொட்டாவி தான் வருது , இது ஒரு நல்ல emotion feeling படமாக வரவேண்டியது அந்த எமோஷனும் வரவில்லை , அநேகமா உதயநிதி ஸ்டாலின் தவிர வேற யாராவது செய்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் போல , சொல்லப்போனா உதயநிதிக்கு இது ஒரு நல்ல படம் தான், இருந்தாலும் அதை முழுமையாக  வெற்றி படம் , அருமையான படம் என்று சொல்லவைக்கவில்லை  அவர் .

ஹீரோயின் நமீதா ப்ரமோத் ரெண்டாவது பாதியில் தான் வராங்க , பார்க்க நல்லா இருக்காங்க , நல்லா நடிச்சி இருக்காங்க , ஆனால் அவங்களை எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு இருக்கு .

குறிப்பா ஒருத்தரை பற்றி சொல்லனும்னா அப்பாவாக நடித்த இயக்குனர் மகேந்திரன் , அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி, ரெண்டு இடத்தில் அந்த கேரக்டர் எப்படி பட்டது என்றது தெளிவா தெரிஞ்சது , உதயநிதி அடிவாங்கிய பிறகு பதறாம , கத்தாமல்  சாதாரணமா செருப்பு எடுத்து தருவது , பார்வதி நாயர் அப்பா அவங்க வீட்டுக்கு வந்து உதயநிதியை சந்திக்கும்  பொழுது அழகா அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ரொம்ப  இயற்கையா இருந்தது .இன்னும் கூட அவருக்கு படத்தில் காட்சிகளோ அல்லது அவர் கேரக்டர் இன்னும் பெருசாக காட்டி இருக்கலாமே என்ற எண்ணம் தோணுச்சு .

இன்னும் இந்த படத்தை பற்றி என்ன பெருசா சொல்லுவது என்று தெரியல, ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதை இன்னும் ரசிக்கும்படி இருந்திருந்தால்  நல்லா இருந்து இருக்கும்.


மொத்தத்தில் நிமிர் பெருசா நிமிரவில்லை .



இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

வெள்ளி, 26 ஜனவரி, 2018

Bhaagamathie - பாகமதி

பாகுபலி , பாகமதின்னு படம் பெயர் கேக்கறதுக்கு ஒரே மாதிரி இருக்கு, ரெண்டு படத்திலும் அனுஷ்கா தான், அதுவும் தெலுங்குகாரங்க எடுத்த படம் , தமிழ் தெலுங்குன்னு ரெண்டு மொழிலையும் வந்து இருக்கு, வழக்கமான பேய் படம் ட்ரெண்ட் தான் இதுவும் ,

பேய் படம்ன்னா என்னவெல்லாம் இருக்கும் ? ஒரு பழைய பங்களா அதுல ஒரு பேய் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் , அப்பறம் இங்க எவனையாவது பழி வாங்க வந்து இருக்கும் , இப்படி தான் எல்லாம் பேய் படஙளும் இருக்கும் , இந்த படத்தில் நான் சொன்னது போல சில விஷயங்கள் இருந்தாலும்  , ஆனால் பழி வாங்க வருவது , பூசாரி சாமியார் ன்னு யாரும் இல்ல , குறிப்பா பேய் படத்தில் வரும் பேய் காமெடி இப்படி என்று வழக்கமான காட்சிகள் இதில் இல்ல

முதல் பாதி படத்தின் கதையே இல்லாமல் சும்மா பங்களாவை சுத்தி சுத்தி காண்பிச்சி எப்பொழுதும் போல பேய் படம் formula வை  வைச்சி, அங்க அங்க தீடிர் தீடிர்ன்னு பயமுறுத்தும் ஷாட்கள் வைச்சி   ,இப்படி  படத்தை ஓட்டி முதல் பாதியை முடியுது, தலைவாசல் விஜய் வரும் போதே எனக்கு இந்த படம் எப்படிபட்ட கதையுள்ள படம் , அனுஷ்காவுக்கு என்ன மாதிரி ரோல் இருக்கும்ன்னு எனக்கு யூகிக்க முடிச்சது, ஆனால் எதுக்காக, ஏன் ,  எப்படி என்பது கடைசியில் காட்டுறாங்க 

இந்த படத்தில் இன்னும் பெருசா குறிப்பிட்டு சொல்லிக்கும்படியா எந்த ஒரு புதுமையான விஷயமும் இல்ல , ஆனால் ஒரு ரெண்டு மணி நேரம் படம் எங்கேயும் bore அடிக்காமல் நம் கவனம் படத்தை விட்டு வெளியே போகாமல் படம் போகுது, படம் பார்க்கும் போதே easy ஆகா கணித்து விடலாம் என்ற அளவுக்கு தான் திரைக்கதை இருக்கு, எனக்கு இந்த படத்தின்  திரைக்கதை கதை பார்த்த கொஞ்ச நேரத்தில், 2012ல் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டிங் பேய் மற்றும் த்ரில்லிங்  படம் தான் ஞாபகம் வருது , அது எந்த படம்ன்னு சொல்லிட்டா இந்த படம் பார்க்கும் சுவாரசியம்  போயிடும் , ஒரு clue சொல்லணும்ன்னா அப்போ அந்த ஹீரோ அந்த படத்தின் மூலமாக தான் வெளியுலகத்துக்கு தெரிஞ்சார் , அந்த டைரக்டர்க்கு முதல் படமே பெரிய பெயர் வாங்கி தந்தது , ஒருவேளை இந்த படத்தின் டைரக்டர் அந்த படத்தை ஒரு reference ஆகா வச்சி தான் இதை எடுத்து இருப்பர் போல(அது எந்த படம்ன்னு உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எனக்கு தனியா msg பண்ணுங்க, நான் சொல்லுறேன் ) , climax ஒரு காட்சி ஷங்கர் படத்தின் ஒரு காட்சி ஞாபகம் வந்தது 

படத்தின் ப்ளஸ் அனுஷ்கா , மிரட்டும் தமனின் bgm, அளவான vfx ,படத்தின் வேகத்தை குறைக்கும்படியான பாடல்கள் இல்லாதது . அந்த அரண்மனை செட் 

படத்தின் மைனஸ் predictable திரைக்கதை , கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங் , படத்தின் கடைசி காட்சியில் எப்பொழுதும் போல வரும் பேய் பட டச்  

மொத்தத்தில் பாகமதி ஒருஅளவுக்கு பாகவே உந்தி.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

Gulaebaghavali - குலேபகாவலி





புகழ் பெற்ற பழய படத்தோட பெயர்ல வந்து இருக்கு இந்த படம், ஆனா படம் ஆரம்பிக்கும் போது எம்.ஜி.ஆர் photo போட்டு இருக்காங்க , அதுக்கே பல கைத்தட்டு வருது ,இதை பார்க்கும் போது  இன்னும் எம்.ஜி.ஆர்க்கு ரசிகர்கள் இருக்காங்க .

 சரி இந்த படம் எப்படி பட்ட படம் ? படம் முதல் காட்சியே எப்படிபட்ட படம் இது , இதை நோக்கி போகும்ன்னு clear ஆக தெரியுது , ஒரு புதையலை தேடி இந்த படம் போகுது , ஆமாங்க இந்த மரகதநாணயம் போல கதை தான் , ஆனால் பேய் எல்லாம் இல்ல , வெறும் காமெடிதாங்க , அப்போ காமெடி செம்மயா இருக்கும் படம் full ஆகா விழுந்து விழுந்து சிரிப்பு இருக்குமான்னு பார்த்தா , அப்படி fullah பயங்கர சிரிப்பு இல்லாட்டியும் , ஒருஅளவுக்கு சில இடங்களில் நம்மை நல்லாவே சிரிக்க வச்சிருக்காங்கன்னு சொல்லலாம் .

படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் ஒரு ஒரு கேரக்டர் எப்படிபட்டவங்கன்னு பதியவச்சி கதைக்குள்ள போக கொஞ்சம் time எடுக்குது , அப்போ அங்க அங்கே கொஞ்சம் தான் காமெடி பெருசா ஒண்ணுமில்ல , அப்போ எல்லாம் யோகிபாபு நல்ல timingல கலாய்த்து கொஞ்சம் காப்பாற்றுகிறார், ஒரு கட்டத்துல ரேவதி , முனீஸ்காந்த் , பிரபுதேவா , ஹன்சிகா நால்வரும் சேர்ந்த பிறகு நல்ல வேகம் எடுக்குது கதையிலும் , காமெடியிலும் , அதுல இருந்து ஒரு 20 நிமிஷத்துக்கு சத்தியமா நல்லா வயிறு குலுங்க சிரிக்கலாம் , அப்படி சிரிச்சி முடிக்கும் போது இன்டெர்வல் வருது , அதுவும் அந்த இன்டெர்வல் காட்சி ultimate, யோகிபாபு என்னமோ செய்ய போகிறார் என்று நினைக்கும் போது, அங்கே இன்டெர்வல் வரும் போது, சாத்தியமா   வேற லெவல் இன்டெர்வல் அது .சரி அதே வேகத்தில காமெடி இருக்கும் நினைச்சா படம் எங்க எங்கயோ போகுது திரும்பவும் கடைசி 15 நிமிஷம் காமெடி நல்லா கொடுத்து படம் முடிச்சி வெளியே வரும் போது பரவாயில்லை நல்ல entertained படத்துக்கு தான் வந்தோம் என்ற ஒரு திருப்தியோட வெளியே வரலாம், ஆனால் இந்த மாதிரி படத்தில எல்லாம் நாம் லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. 


பிரபுதேவா 44 வயசு சத்தியமா நம்ப முடியல , என்ன fit உடம்பு , என்ன டான்ஸ் , அவர்  பழய படங்களில் பார்த்தா மாதிரியே இருக்காரு, அந்த காமெடி body language எல்லாம் பார்க்கும் போது மின்சாரக்கனவு படம் ஞாபகம் படுத்தியது ,அந்த முதல் குலேபகாவலி பாடல் அடேங்கப்பா என்ன டான்ஸ் , வச்ச கண்ணை வாங்க முடியாமல் பார்க்கவச்சிட்டாரு, அந்த பாட்டும் அருமை திரும்ப திரும்ப கேட்கவைக்குது , நம்மையும் ஆடவைக்குது , அந்த பாட்டின் விஷுவல் சூப்பர் , 

ரொம்ப முக்கியமான கேரக்டர்ல ரேவதி நடிச்சிருக்காங்க , பவர் பாண்டில எப்படி அவங்களுக்கு நல்ல பெயர் வந்துச்சோ , அதுபோல இதுலையும் அவங்களுக்கு நல்ல பெயர் வரும் , வித்யாசமான கேரக்டர் , செம்ம மாஸ் பண்ணிருக்காங்க முதல் காட்சியிலே , ஒரு ஹீரோவிற்கு சமமான மாஸ் கொடுத்து இருக்காங்க, அதுக்கு அந்த இடத்தில மாஸ் bgm நல்லா எடுத்து கொடுத்து இருக்கு 

படத்தின் ப்ளஸ் யோகிபாபு , மன்சூரலிகான் காம்பினேஷன் , யோகிபாபு மன்சூரலிகானை ultimate கலாய் கலாய்ச்சி தள்ளுறார் , கடைசியில இவங்க ரெண்டு பேரு போதா குறைக்கு , மொட்டை ராஜேந்திரன் வந்து அவர் பங்குக்கு காமெடி பண்ணிட்டு போகிறார் , அவர் வருகிற கடைசி நிமிடங்கள் எப்பா நல்ல வயிறு குலுங்க சிரிக்கவச்சிட்டு போகிறார் மனுஷன்,முனிஸ்காந்த்தும் அவர் பங்குக்கு ஸ்கோர் பண்ணுகிறார் , நடு நடுவே light ah சத்யனும் ஏதோ ஒருஅளவுக்கு சமாளிக்கிறார் சொல்லணும் 

ஹன்சிகா படம் fullah வராங்க , ஆனால் ஆரம்பத்தில் அவங்க கேரக்டர்க்கு பெருசா clue இல்லாமல் இருக்கு ,யார் எதுக்கு என்ன மாதிரி கேரக்டர்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இல்ல, அவங்களை வச்சி கதை நகர்கிறது சொல்லலாம் ஆனால் அது ஒன்னும் பெருசா தேவைப்பட்டா மாதிரி தெரியல , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா பாதிப்பு ஒன்னும் இருந்து இருக்காது , ஹீரோன்னு இருந்தா ஹீரோயின் இருக்கணும்ல , அதனால அவங்களை படத்தில வச்சிக்கலாம் .

இசை விவேக் - மெர்வின் நல்லா பண்ணிருக்காங்க , அந்த முதல் குலேபகாவலி பாடல் ஆட்டம் போடவைக்குது , heartகுள்ள பச்சை குத்தியே பாடல் கொஞ்சம் ஹிந்தி பாட்டு dhating naach பாடல் போல இருக்கு, மேலும் ரேவதி மாஸ் bgm , காமெடி தேவையான காமெடி  bgm நல்லா கொடுத்து இருக்கார் ,நிச்சயமா bore அடிக்காம ஒரு தடவை போயிட்டு பார்க்கலாம்

மொத்தத்தில் குலேபகாவலி குழப்பவாதியாக இருந்தாலும் சிரிப்பொலியாக இருக்கிறது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 13 ஜனவரி, 2018

Sketch - ஸ்கெட்ச்


இந்த படத்தை நான் பெருசா எதுவும்  எதிர்பார்த்து போகலை , ஏன்னா வாலு படத்தோட டைரக்டர் தான் இந்த படத்தோட டைரக்டர் , அதனால இந்த படம் ரொம்ப சுமாராக தான் இருக்கும் நினைத்து போனேன், ஆனால் வாலு மாதிரி மொக்கையா இல்லாமல் அதை விட ஒரு படி மேலே சுமாராக தான் இருந்துச்சி இந்த படம் , அதற்க்கு ஒரு காரணம் விக்ரம் என்றாலும் , திரைக்கதை கொஞ்சம் சில இடங்களில் கை தட்ட வைத்தது .

வடசென்னை கதை என்றாலே gang war  , போட்டா போட்டி , ரவுடி , அடிதடி ,வெட்டு குத்து , ராயபுரம் என்ற வழக்கமான கதைக்களத்தில் தான் படம் போகுது , இதுல நடுவில் காதல் வேற , சத்தியமா சுத்தமா கொஞ்சம் கூட படத்தில ஒட்டவே இல்லை, அப்பறம் எப்பொழுதும் எதிர்பார்த்த மாதிரி ஹீரோவின் நண்பர்கள் செத்து போய்டுவாங்க அதுவும் இந்த படத்தில இருக்கு 

படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரத்தில அடேய் எத்தனை தடவை டா இந்த மாதிரி படம் பாக்கிறதுன்னு கேள்வி மனசில வருது , அதுவும் தமன்னா படத்தின் கதைக்குள்ள வந்த உடனே , எப்பா டேய் முடியலடான்னு மேலும் சொல்லவைக்குது , இதுக்கு நடுவே சம்மந்தமே இல்லாமே சூரி வேற ஒரே ஒரு காட்சி , முதல் பாதியில் ஒரு காட்சி,இரண்டாவது பாதியில் ஒரு காட்சி அவ்ளோதான், 

இதுமட்டுமா opening மாஸ் பாடல் , சுத்தமா விக்ரமுக்கு செட் ஆகல , டூயட் பாட்டு , தேவையில்லாமல் ரெண்டாவுது பாதியில் பாடல்கள் , அய்யோ ஆளைவிடுங்கடா சாமி திணற திணற இருக்குது , அதுவும் பாட்டு சுத்தமா நல்லாவே இல்ல , தம்மன் எப்பொழுதும் போல டனுக்கு டனுக்குன்னு காது கிழிய இரைச்சலாக பாட்டு போட்டு கொடுத்து இருக்கார் 

முக்கியமா படத்தில ஒன்னு சொல்லணும் அதாவது காதல் காட்சியில் நம்ம டைரக்டர் எப்படி காதல் கலைநயமாக சொல்லிருக்காருன்னா , ஒரு பாடல் காட்சியில் தமன்னா அவங்க கையில ஸ்கெட்ச்ன்னு எழுதுவாங்க , அதுவும் எப்படி எழுதுவங்கன்னு தெரியுமா ? வேற வேற கலர்ல ஸ்கெட்ச் use பண்ணி கையில எழுதுவாங்க , அதாவது symbolic ஆகா ஸ்கெட்ச் என்ற விக்ரமை அவங்க காதலிக்கறாங்களாம் , அந்த ஒரு சீன்  போதும் டைரக்டர் டச் அங்க நிக்குது ஷப்பா முடியல டா சாமி .

படத்தில இன்னும் குறைகள் சொல்லிகிட்டே போகலாம், ஒரு சண்டை காட்சியில்  backgroundக்கும் விக்ரம் சண்டை போடும் இடத்திற்கும் அப்பட்டமாக செம்ம light difference , அது blue matல எடுத்தாங்களா ? இல்ல lighting அவ்வளவு மோசமா பண்ணிட்டாங்களா ? ஒரு இடத்தில் விக்ரம் கண்ணாடியில் தர்மாகோல் தெரியுது , ஒரு நைட் சீனில் பின்னாடி லைட் வைச்சது frameல் வருது , ஏன் இவ்வளவு மோசமான மேக்கிங் ? ஏன் எடிட்டர் இதை பார்க்கவில்லையா ? 

என்னடா விமர்சனம் முதலிருந்து ஒரே negative ஆகவே சொல்லுறியே , positive ஒன்னும் இல்லையே என்ற கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது , ஆமாங்க படத்தில ப்ளஸ்ன்னா அது விக்ரம் மட்டும் தான், அவர் ஒருத்தருக்காக தான் இந்த படம் பார்க்கணும் தோணுச்சு , அவர் மட்டும் இல்ல இந்த படம் இன்னும் ஒரு மோசமான படமாக அமைந்து இருக்கும், அவரோட ஹீரோயிசம் , மாஸ் சீன் சூப்பர் .

அப்பறம் படத்தில வேற என்ன ப்ளஸ் ? ஆமாங்க படம் ஆரம்பித்து bore ஆக போனாலும் , ஒரு இடத்தில கொஞ்சம் விறுவிறுப்பு படத்தில் எடுத்தது , அட படம் இனிமேல செம்மயா போக போகுது நினைக்கும் போது இன்டெர்வல் , அட ரெண்டாவது பாதி படம் சூப்பர் ஆக இருக்கும் நினைக்கும் போது நம்ம நினைப்புல மண்ணை அள்ளி போட்டுருவாங்க, திரும்பவும் படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் போது படம் முடிஞ்சுடும் . intervalக்கு முன்னாடி ஒரு 15 நிமிஷம் , படத்தின் கடைசி 15 நிமிஷம் தான் நல்லா இருக்கு, அதாவது படத்தில ஸ்கெட்ச்ன்னு பேரு வைச்சதால என்னவோ , அவங்க ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காட்சி ரொம்ப நல்லாவே இருக்கு, குறிப்பா கடைசியில் அந்த வில்லனை போட்டு தள்ளும் காட்சி wow சொல்லி கைதட்ட வைக்குது .அப்புறம் climax நான் எதிர்பார்த்தா மாதிரி தான் இருந்துச்சி அது ஒன்னும் பெருசா ட்விஸ்ட் போல தெரியல , ஆனால் அவங்க அதை எப்படி பண்ணாங்க என்பதை காட்டுவது ஓகே சொல்லலாம்.

மொத்தத்தில் ஸ்கெட்ச்  நமக்கு ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிட்டாங்க 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Thaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்


சினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் 

 இது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்தி படத்தோட ரீமேக், நான் அந்த ஒரிஜினல் படம் ஸ்பெஷல் 26 படத்தை  பார்க்கவில்லை , அதனால ஒரிஜினல் எப்படி இருக்கும் என்பது எனக்கு  ஐடியா இல்ல .

கதை :
முதல இந்த படத்தோட கதையை பற்றி பார்த்தால் ஸ்பெஷல் 26 படமே தமிழ் படத்தோட படங்களில் தழுவல்ன்னு நான் சொல்லுவேன், படத்தோட கதை கொஞ்சம் உற்று  பார்த்தா கொஞ்சம் சிவாஜி , கொஞ்சம் ரமணா கலந்தது தான் இந்த படத்தோட கதைன்னு சொல்லணும், ஆனால் அதை சுவாரசியமாக எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி கொடுத்து இருக்காங்க 

திரைக்கதை :
படத்தோட ப்ளஸ் கதை + காமெடி கலந்த திரைக்கதை , படம் சீரியஸ் ஆகா செல்லும் போது எல்லாம் யாரும் எதிர்பார்க்காத சின்ன சின்ன விஷயங்களை காமெடியாக கொடுத்து இருக்காங்க, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஹைதராபாத்தில் ரெய்டு நடக்கும் போது , சத்யன் முன்னாடி வந்து நிக்கும் போது, அட என்னமோ சொல்லவறாருன்னு நினைக்கும் போது , அட சும்மா தாய வந்தேன் சொல்லுவது செம்ம ,அது போல சின்ன சின்ன விஷயங்கள் படத்தில் அங்க அங்கே இருக்கு, அப்பறம் சில விஷயங்கள் நம்பும்படியாக இல்ல , எதிர்பார்த்த திருப்பங்கள் தான் , அட செம்ம ட்விஸ்ட்பா அப்படி சொல்லும்படி படத்தில சூப்பர் ட்விஸ்ட்கள் என்று எதுவும் இல்ல, அதே நேரத்தில் படம் சில பல இடங்களில் கொஞ்சம் இழுவையாக இருக்கும் feel , இன்டெர்வல் பிளாக் நல்லா இருந்துச்சி , அப்பறம் இரண்டாவது பாதி கொஞ்சம் தத்தலடிச்சி படம் கரை ஏறுகிறது , போதா குறைக்கு பாடல்கள் வேற தேவையில்லாத இடத்தில வச்சியிருக்காங்க 

சூர்யா :
எனக்கு தெரிஞ்சு சூர்யாவிற்கு ரொம்ப நாள் கழிச்சி இது  சொல்லிக்கும்படி  ஒரு கதை உள்ள படம் , அவர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும் படி படம் வந்து இருக்கு .சூர்யா நல்லா பண்ணியிருக்கார் , சிங்கம் படம் போல சத்தம் போட்டு கத்தி ஆர்ப்பாட்டம் போடாம அடக்கமா நடிச்சி இருக்கார்  தேவையில்லாத பன்ச் , பறந்து பறந்து சண்டை எதுவும் போடல , என்னதான் ரீமேக் படம் என்றாலும் நம்ம தமிழ் ஹீரோவிற்கு ஏற்றா மாதிரி நிறைய மாற்றங்கள் எல்லாம் பண்ணுவாங்க , அப்படி மாற்றாமல் அடக்கமா நடிச்சி இருக்கார் 

ரம்யாகிருஷ்ணன் :
சூர்யாவிற்கு அடுத்து படத்தில் வில்லன்களையும் மீறி ரம்யாகிருஷ்ணன் மனசில் நிக்குது , அவங்க ராஜமாதவாக  வந்தாலும் சரி இப்படி  கொஞ்சம் innocent ஆகா வந்தாலும் சரி அதை சரியாக செய்து இருக்காங்க 

சுரேஷ் மேனன் 
ரொம்ப நாள் கழிச்சி படத்தில வரார் அவருக்கு கௌதம் மேனன் டப்பிங் வேற கொடுத்து இருக்கார் 

கார்திக் :
அவர் கேரக்டர் நல்ல design பண்ணி இருக்காங்க , ஆனால் ரொம்ப வயசானவர் போல தெரிகிறார் , மேலும் ஓவர் மேக்கப் but  பல இடங்களில் அவர் படத்தில் ஒற்றவில்லை 

படத்தில் இன்னும் பல கேரக்டர் இருக்காங்க , தம்பி ராமையா ,செந்தில் ,கலையரசன், r j பாலாஜி  இப்படி படத்தில ஏகப்பட்டபேர் இருக்காங்க .

ஐயோ கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்ல மறந்துட்டேன் , அது ஏன்னா படம் பார்க்கும் போதே அவரை மறந்துடுவோம் , படத்தில் கொஞ்சம் தான் வருவாங்க , ஏன் எதற்கு இந்த படத்தில் நடிச்சாங்கன்னு தெரியல 

படத்தின் பெரிய மைனஸ் :
எதற்கு இந்த படத்தை 1980களில் நடப்பது போல வச்சி இருக்காங்க ? ஸ்பெஷல் 26 கதை அப்படி போல அதனால தமிழிலும் அப்படியே வச்சிட்டாங்க போல , 1980களின் கதை என்பதால் goldspot , லாட்டரி சீட் கடையில் இருப்பது , பழைய phone இப்படி இருந்தாலும் , சூர்யாவிற்கு ஆடைகள் என்னமோ 1980 போல இல்ல , பாட்டில் பின்னாடி dance ஆடுபவர்கள் ரெட்ரோ டிரஸ் போட்டாலும் , சூர்யா latest டிரஸ் போட்டு இருக்கார் ,கொஞ்சம் கூட செட் ஆகவில்லை , கீர்த்தி சுரேஷ் hair ஸ்டைல் பழய hair ஸ்டைல் போல இருந்தாலும் அவங்க டிரஸ் செட் ஆகவில்லை , யார்டா அந்த costume designer கேட்கணும் போல தோணுச்சு , படத்தில் பலர்க்கு கார்த்திக் , செந்தில் ஏன் சூர்யாவிற்கு கூட ஓவர் make up ,அப்பறம் பல இடங்களில் பின்னாடி lighting வச்சி இருப்பது தெரியுது , பல லாஜிக் மிஸிங் வேற  , கடைசியில்   r j பாலாஜிக்கு என்ன ஆச்சி ? கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? சூர்யாவிற்கு எப்படி கடைசியில் தெரிகிறது என்ற பல கேள்விகள் வேற வருது ,

மொத்தத்தில் : தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கல் லீவுக்கு மட்டும் கொஞ்சம் சேரும் கூட்டம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்