சனி, 27 ஜனவரி, 2018

Nimir - நிமிர்

உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்தா ரெண்டு நாளைக்கு நிமிர முடியாது , ஏன்னா அவரோட முந்தைய படங்கள் அப்படி , இருந்தாலும் ப்ரியதர்ஷன் படம் என்பதால் ஒரு அளவுக்கு நிமிர்ந்து பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் போனேன் , அதுவும்   Maheshinte Prathikaaram  என்ற மலையாளப்படத்தின் ரீமேக் என்பதால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி , அந்த ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை

படம் ஆரம்பமே இந்த படம் visual ஆகா நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் வந்தது, அதே போல படம் full ஆகா ரொம்ப அழகா காட்டிருக்காங்க, மலை , மழை , இயற்க்கை , உதயநிதி ஸ்டாலின் வீடு , அதுவும் இரவில்  காட்டும் lighting மனசில் பதியவச்சது,

படம் போக போக என்னமோ ஏதோ சம்மந்தம் இல்லமே , எங்க எங்கயோ போகுது , ஒரு ஒரு கேரக்டர் புரியவச்சி படம் கதைக்குள்ள போகுது , ஆனால் அது  எல்லாம் தேவையா என்று  தோணுது, படம் முக்கியமா கதைக்குள்ள போக  ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மான் அண்ணாச்சியில் ஆரம்பித்து கஞ்சா கருப்பு வழியாக எம்.ஸ் .பாஸ்கர் வழியாக உதயநிதி ஸ்டாலின் கிட்ட போயிட்டு சேரும் chain link ஒரு நல்ல ஐடியா , ஆனால் அப்படி பட்ட லிங்க் தேவையா என்ற எண்ணம் தோணுது , அதுவும் அதை செயல் படுத்திய விதம் ரொம்ப சாதாரணமா  இருக்கு  , காமெடி என்ற இடத்தில வைத்த காட்சிகள் எதுவும் காமெடியாக  இல்லை.

அழகான எதார்த்தமான படமாக வரவேண்டியது, சொல்லப்போனா ரொம்ப commercial பொருட்களும் படத்தில் பெருசா இல்ல , இருந்தாலும் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை , பல இடங்களில் கொட்டாவி தான் வருது , இது ஒரு நல்ல emotion feeling படமாக வரவேண்டியது அந்த எமோஷனும் வரவில்லை , அநேகமா உதயநிதி ஸ்டாலின் தவிர வேற யாராவது செய்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் போல , சொல்லப்போனா உதயநிதிக்கு இது ஒரு நல்ல படம் தான், இருந்தாலும் அதை முழுமையாக  வெற்றி படம் , அருமையான படம் என்று சொல்லவைக்கவில்லை  அவர் .

ஹீரோயின் நமீதா ப்ரமோத் ரெண்டாவது பாதியில் தான் வராங்க , பார்க்க நல்லா இருக்காங்க , நல்லா நடிச்சி இருக்காங்க , ஆனால் அவங்களை எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு இருக்கு .

குறிப்பா ஒருத்தரை பற்றி சொல்லனும்னா அப்பாவாக நடித்த இயக்குனர் மகேந்திரன் , அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி, ரெண்டு இடத்தில் அந்த கேரக்டர் எப்படி பட்டது என்றது தெளிவா தெரிஞ்சது , உதயநிதி அடிவாங்கிய பிறகு பதறாம , கத்தாமல்  சாதாரணமா செருப்பு எடுத்து தருவது , பார்வதி நாயர் அப்பா அவங்க வீட்டுக்கு வந்து உதயநிதியை சந்திக்கும்  பொழுது அழகா அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ரொம்ப  இயற்கையா இருந்தது .இன்னும் கூட அவருக்கு படத்தில் காட்சிகளோ அல்லது அவர் கேரக்டர் இன்னும் பெருசாக காட்டி இருக்கலாமே என்ற எண்ணம் தோணுச்சு .

இன்னும் இந்த படத்தை பற்றி என்ன பெருசா சொல்லுவது என்று தெரியல, ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதை இன்னும் ரசிக்கும்படி இருந்திருந்தால்  நல்லா இருந்து இருக்கும்.


மொத்தத்தில் நிமிர் பெருசா நிமிரவில்லை .



இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

6 கருத்துகள்:

Comments