சனி, 24 செப்டம்பர், 2016

Thodari - தொடரி

தனுஷின் தொடரின்னு  சொல்வதை விட  கீர்த்தி சுரேஷின் தொடரின்னு தான் சொல்லணும் , ஏன்னா தனுஷை விட கீர்த்திக்கு அதிகம் பங்கு இருக்கு , மேலும் நடிப்பிலும் தனுஷை விட நல்லா பண்ணி இருக்காங்கன்னு சொல்லுண்ணும் , தனுஷுக்கு இதுல ஸ்கோப் கம்மி தான் சொல்லணும் , அதே நேரத்தில தனுஷையும் பாராட்டியே ஆகணும் , ஏன்னா அவருக்குன்னு ஒரு இமேஜ்  மாஸ் ஹீரோயிசம் இருக்கு  , ஆனா அது போல இமேஜ் எல்லாம் பார்க்காம இந்த படத்தை எடுத்ததிற்கு .

படத்தின் மிக பெரிய பிளஸ் கீர்த்தி, எப்பா என்னமா பண்ணி இருக்காங்க , அவங்க அந்த இன்டெர்வல் ப்ளாக்கில் தனுஷ் பொய் சொன்னது தெரிஞ்ச பிறகு அழுவும் காட்சியில் பின்னிட்டாங்க , அவங்க அப்பாவியா நடிப்பதும் செம்ம , அதுவும் வாக்கி டாகியில்  போலீஸ்காரங்க கிட்ட வெள்ளந்தியா நான் பாடகி ஆகணும்ன்னு சொல்லும் போது அவங்க நடிப்பை ராசிக்காம இருக்க முடியல , கீர்த்தி இது வரைக்கும் நடிச்சதில், அவங்க நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படமா எடுத்தது இது தான் ,  மற்றும் இரண்டாவுது பாதியில் இந்த மீடியாகாரங்க பண்ணும் அட்டூழியத்தை காமெடியாக சுட்டி காட்டுவது , முதல் பாதியை விட இரண்டாவுது பாதியின் விறுவிறுப்பு, மற்றும் எந்த ஒரு ஆபாசத்தனமான காட்சியோ , இரட்டை அர்த்த வசனங்களோ , அல்லது குடிச்சி கூத்தடிக்கும் பாடலோ இல்லாமல் , ஒரு குடும்பமாக சென்று பார்க்கும்படி எடுத்தவை,  இவைகள்  தான் படத்தின் பிளஸ் என்று சொல்ல  முடியும்.

படத்தின் நெகடிவ் நிறைய இருக்கு , ஆம் எல்லாரும் சொல்வது போல லாஜிக் மிஸிங் படத்தில் இருக்கு, இந்த மாதிரி படங்களில் நிச்சயமாக ஆங்காங்கே லாஜிக் மிஸ்ஸிங் என்பது இருக்க தான் செய்யும் , ஆனால் அப்பட்டமாக சில விஷயங்கள் விட்டு இருப்பது பிரபு சாலமன் போல டைரக்டர் செய்யலாமா ? என்று தான் கேட்க தோணுது , இதோ சில continuity மிஸ்ஸிங் காட்சிகள் , முதலில் அந்த train பெயர் ,  வசனங்களில் DC எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுறாங்க , ஆனால் , நாக்பூர் , ஜான்சி  ரயில்வே ஸ்டேஷன் announcementல்  GT எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுராங்க , கீர்த்தியும் , தனுஷும் ஒரு இடத்தில ac coach படிக்கட்டில் உட்கார்ந்து பேசுவாங்க , அதே continuity next லாங் ஷாட்டில்  அந்த coach கடைசி பெட்டிக்கு முந்தின பெட்டி போல தெரியும் , ac coach எங்க சார் கடைசி coachக்கு முன்னாடி coachஆகா வரும் ? ஒரு லாங் journey trainல் மொத்த trainக்கும் ஒரே ஒரு TTE இம்மான் அண்ணாச்சி மட்டும்  தான் இருப்பாரா ? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதேன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , ஆனா நீங்க எரிகிற தீயில் ஒரு பாட்டு வச்சிடீங்களே சார் , நல்லவேளை சார் நீங்க அந்த மலையாள நடிகை ஸ்ரீஷாவுக்கு ஒரு குத்து பாட்டு வைக்கலை. அப்புறம் பேன்ட்ரி கார்ல night தம்பி ராமைய்யாவும், தனுஷும் பேசும் ஒரு காட்சியில் மாற்றி மாற்றி நிறைய ஷாட் நிறைய cut பண்ணி cut பண்ணி போட்டது கொஞ்சம் jump இருப்பது போல இருந்துச்சி., பிறகு அந்த காமென்டோ அவருக்கு என்ன உடம்பில் எதாவுது பிரச்சன்னைய்யா ? ஏதோ சைக்கோ போல காட்டினாரு ஆனா அது ஏன் எதார்க்குன்னு சொல்லவேயில்லை , முதல் பாதியில் வரும் தம்பி ராமையா  தனுஷ் காமெடி  மொக்கையா இருக்கு, முதல் பாதி எப்போ முடியும்ன்னு தோணுச்சு ,போதும்பா இதுக்கு மேல நெகட்டீவ்ஸ் சொல்ல வேண்டாம் தோணுது

படத்தின் பிளஸ்ல நிச்சயமா ராதாரவி பற்றி சொல்லியே ஆகணும் மனுஷன் அசால்டாக பண்ணுறாரு செம்மையை கலாய்க்குறாரு , டேய் அந்த bridge வெள்ளைக்காரன் கட்டுனது டா விழாது , இதுவே நாம்ம கட்டி  இருந்தா நிச்சயமா உடைஞ்சு இருக்கும்ன்னு இன்றைய அரசியல்வாதிகளை பற்றி சொல்லுவது தியேட்டர்ல் விசில் காதை கிழிக்குது.

டி. இம்மான் சார் என்ன சொல்ல ஏது சொல்ல உங்களை பற்றி , மனம் கொத்தி பறவை படத்தில் "என்ன சொல்ல ஏது சொல்ல"என்று பாட்டு வரும் அது போலவே போட்டு இருக்கீங்க, ஏற்கனவே உங்க படத்தின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கு.

மொத்தத்தில் தொடரி ரொம்ப நாளுக்கு தொடர்வது கடினம் தான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

Aandavan Kattalai - ஆண்டவன் கட்டளை

காக்க முட்டை , குற்றமே தண்டனை இப்போ ஆண்டவன் கட்டளை  போல நல்ல படங்கள் தரணும்ன்னு,  நிச்சயமா ஆண்டவன் மணிகண்டனுக்கு இட்ட கட்டளை போல,மனுஷன்  இரண்டு மணி நேரத்துக்கு கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை கொடுத்து இருக்காரு.

படம் ஆரம்பிக்கும் போதே அட ஒரு நல்ல படத்துக்கு வந்து இருக்கிறோம்  போல என்ற எண்ணம் தோணுது , குறிப்பா அந்த டைட்டில் song வரிகள் , இன்றைய சமூகத்தின் நிலையை பாடல் வரிகளில் வருவது நிச்சயமா கை தட்ட வைக்குது.

படத்தோட பிளஸ் நிறைய விஷயங்கள் இருக்கு, படத்தின் ஒரு வரி கதை , படம் எடுத்த விதம் , வழக்கமான சினிமாத்தனம் இல்லாதது , நடிச்ச நடிகர்கள் தேர்வு , சின்ன சின்ன கதாபாத்திரம் கூட மனசுல நிற்கிறா  மாதிரி நடிக்க வைச்சது, அந்த கதாபாத்திரங்களை வடிவமைச்சது , தேவை இல்லாத பாடல்கள் போடாதது , அப்படி இப்படின்னு நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு  படத்தின் ஒரு வரி கதை களம் என்னன்னு படத்தின் ஆரம்பித்தவுடனே சொல்லிட்டாரு டைரக்டர் , அதாவுது ஒரு வேலை செய்யணும்ன்னா அதை நேரடியாகவே நீங்களே பண்ணுங்க , நடுவுல வேற யாரையும் நம்பாதீங்க, இது தான் படத்தின் ஒரு வரி . அதே போல் படத்தில் காமெடி நிச்சயம் guarantee நல்லா சிரிக்கலாம்.

படத்தின் மாபெரும் பிளஸ், காட்சி நடக்கும் இடங்கள் எந்த சினிமாத்தனம் இல்லாமல், உண்மையான practical ஆக காட்டுவது , குறிப்பா விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சிகள் , அந்த வீடுகளை காட்டுவது, ஒரு சாதாரண மனிதன் வீடு தேடும் போது படும்  அவஸ்தைகளை இன்றைய சமூகத்தில் அவல நிலையை காட்டுவது, ஒரு travel ஏஜென்ட் ஆபீஸ் காட்டுவது , ரித்திகாவின் வீட்டின் நிலை அந்த வீட்டின் உள்ள பொருள்களை கொண்டு காட்டுவது என்று ஒரு நடுத்தரவர்கத்தின் கண்ணாடியாய் இந்த படத்தில் காட்டுவது செம்ம.


விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி படம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல , காந்திங்கிற கேரக்டர்ல அசால்ட்டா பண்ணிட்டு போறாரு , அதுவும் அவரு ஊமை போல கோர்ட்டில் நடிப்பது செம்ம, யோகி பாபு எப்பா !! அவர்  தலை முடியை பார்த்தாலே சிரிப்பு தான் , அவர் பாஸ்போர்ட் ஆபீஸ் போவது , விசா இன்டெர்வியூல பேசுவது அல்டிமேட் , ஹே citizen of London நான்ன்னு சொல்லுவது எல்லாம் சூப்பர், இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லைங்க, விஜய் சேதுபதியின் வீட்டு owner , அந்த ரெண்டு வக்கீல்கள் , குறிப்பா அந்த வக்கீலின் லேடி assistant வினோதினி அசால்ட்டா நடிக்கிறாங்க ,  பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து விசாரிக்க வரும் அந்த மலையாள ஆஃபீஸ்ர் , அப்பாவியா வரும் ரித்திகாவின்  அம்மா அவங்க அந்த ஜீன்ஸ்யை வச்சி பேசும் வசனம் அப்பாவித்தனம் காட்டுவது  , இலங்கை தமிழராக வரும் நேசன் கதாபாத்திரம் ,  மேலும் பல கேரக்டர்  எல்லாரும் சூப்பர் , எந்த ஒரு கதாபாத்திரமும் வில்லனாக காட்டாதது அருமை.

ரித்திகா நடிப்புல பிண்ணி எடுக்குறாங்க குறிப்பா அந்த இறுதி காட்சியில் வண்டியில் விஜய்சேதுபதியை உட்க்காரவச்சி  close up shotல் ஒரு expression கொடுத்தாங்க, தியேட்டர்ல செம்ம விசில் மற்றும் கை தட்டு 

படத்தில் பல காட்சிகள் மனசில் நிக்குது , குறிப்பா சில காட்சிகள் சொல்லியே ஆகணும், விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சி , ரெண்டு பேரும் விசா இன்டெர்வியூ போவது, அந்த கோர்ட் காட்சி எல்லாம் செம்ம, குறிப்பா ரித்திகா counsellingஇல் அவங்களை உணர்வது , அவங்களை பொண்ணு பார்க்கும் காட்சி , அந்த பாஸ்போர்ட்  ஆஃபீஸ்ர் ரிதிக்கவை விசாரிக்கும் காட்சி, எங்கே ஏதோ ஏடா கூடமா நடக்குமோ என்று நினைக்கும் போது அந்த ஆஃபீஸ்ர் gentle ஆகா அந்த சீனை handle பண்ணுவது சூப்பர்.குறிப்பா அந்த காட்சியில் ஒருத்தரை ஒருத்தர் காட்டி கொடுக்காமல் , விட்டு கொடுத்து, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் கொண்டு  அந்த காட்சியை  நகர்த்துவது சூப்பர், அப்புறம் கடைசியா யோகி பாபு ஊருக்கு போகும் போது ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் ஒரு அருமையானா காமெடி கடைசியா வைப்பது செம்ம, 

வேலைக்கு விசுவாசமா இருக்கறதா, வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா? சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட், வெள்ளைகாரன் இருந்தப்போ கூட காந்தி பாதுகாப்பாக தான் இருந்தார் ன்னு  அப்படி பல இடங்களில் வசனம் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், நம்ம படங்களில் குடி , மற்றும் புகை பிடிக்கும் காட்சி வந்தா எச்சரிக்கை டைட்டில் கீழே போடுவாங்க , அது போல இந்த படத்தில் வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போடாம போகும் போது ,"Wear Helmet to Avoid Legal Action " போடுறாங்க , இது இப்போ censor board இது போடணும் சொல்லி இருக்கா ? இல்ல டைரக்டர் அவர் சமூக நலன் கருதி போட்டறான்னு தெரியல , அப்படி டைரக்டர் போட்டு இருந்தா அவருக்கு பெரிய கை தட்டு . ஏன் என்றால் மற்ற படங்களில் இது மாதிரி போடுவது இல்லை , நான் ஒரு மலையாள சேனலில் ஓகே கண்மணி பாடல் போடும் போது அந்த தொலைக்காட்சியில் அது மாதிரி போட்டாங்க , ஏன் அது மாதிரி தமிழ்லில் போடுவது இல்லை என்று தோணுச்சி , ஆனால் இந்த படத்தில் போட்டது அருமை .

  என்ன தான் ஏஜென்ட் ஏமாற்றினாலும் விஜய்சேதுபதி  தெரிஞ்சு செய்த தப்பு
 தானே?  அவருக்கு  இந்த பிரச்சனையும் வராதா ? கடைசியா அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ்ர் வெறும் திட்டிட்டு கைஎழுத்து போட்டு தருவது , எந்த அளவுக்கு சட்டத்தில் இடம் இருக்கு ? வேற ஏதாவுது லாஜிக் மிஸ் ஆகுதான்னு எனக்கு தெரில .

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை மணிகண்டன் மக்களுக்கு கொடுத்த அருமையான கட்டளை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


வியாழன், 8 செப்டம்பர், 2016

Irumugan - இருமுகன்

 பன்முகன் கொண்ட விக்ரம் நடிச்சி இருக்கும் இந்த இருமுகன் ஆரம்பக்காட்சியே அடடே , யாருடா  இந்த தாத்தா ஏழாம் அறிவுல கண்ணை காட்டினாலே மிருகத்தனமா அடிப்பாங்களே அதே மாதிரி இதுலையும் சண்டை பறந்து பறந்து போடுறாங்க , ஏதோ  inhaler ல டைம்  எல்லாம் ஓடுது , உடனே ஆளுங்க காலி ஆயிடுறாங்க , அப்பறம் "ரா" ஏஜென்ட்ன்னு சொல்லுறாங்க ,அப்படியே படம் மலேஷியா போகுது , மலேஷியே காட்டினாலே படம் ஸ்டைலிஷ் ஆகிடுது , அதுவும் கேமராமேன் ரொம்ப அழகா ஸ்டைலிஷ்ah காட்டுறாரு , ஏன் இது எல்லாம் நடக்குது ? எப்போ இன்னொரு விக்ரம் காட்டுவாங்க ? அந்த மருந்து என்னவெல்லாம் பண்ணும் ?அப்படின்னு ஒரு சுவாரசியம் கூட்டி,  அதுக்கு சரியா bgm கொடுத்து, நடுவுல கொஞ்சம் தம்பி ராமையா காமெடி கலந்து, படம் பரபரப்பா கொண்டு போய் இடைவேளையில் ஒரு பெரிய வாவ்ன்னு சொல்லுறா மாதிரி முடிச்சாரு , 

இந்த இடைவேளையில் நடப்பதை விமர்சனம் என்கிற பெயரில் வேறுசிலர் சொல்லிட்டாங்கன்னா அது சுவாரசியம் இருக்காது ,அதே நேரத்தில் அந்த இடைவேளை சுவாரசியம், இரண்டாவது பாதியில் பெருசா எடுப்படாம போகுது , சொல்ல வேண்டிய கதையை அதன் முடிச்சிகளை முதல் பாதியிலே சொன்னதாலே , இரண்டாவது பாதியில்  கதை நகர்வதற்கு ஒன்றும் இல்லை , இரண்டாவது பாதியில் வில்லன் விக்ரம் எப்படி தப்பிப்பாரு தான் திரைக்கதை ,மேலும் படத்தில் சில பல லாஜிக் மிஸ்ஸிங் , நயன்தாரா இரண்டாவுது பாதியில் வருவதற்கு சொல்லும் கதை ரொம்ப லாஜிக் மிஸ்ஸிங், மேலும் ஒரு பெரிய network பிடிக்க போகும் போது , யாரோ பெரிய ஆளு நெகடிவ் கேரக்டர்ல வருவாங்க நினைச்சா கருணாகரனை காட்டுறாங்க , உடனே அது பொசுக்குன்னு போயிடுச்சி மக்கள் பலர் சிரிச்சிட்டாங்க .

நம்ம தமிழ் ரசிகர்களுக்கு படத்தில் நிறைய புதுமையான விஷயங்கள் காட்டி இருக்கார் , ஸ்பீட் மருந்து , medulla oblongataவில் சிப் , அப்புறம் பல கெமிக்கல் மருந்துகள் வச்சி ஜித்து வேலை பண்ணி இருக்காரு டைரக்டர் , அதே நேரத்தில் பழமையான விஷயங்கள் அதாங்க  தேவை இல்லாத பாடல்களும் இருக்கு , நம்ம தமிழ் சினிமா எப்போ திருந்தும் தெரியல , ஏன்னா ஒரு high tech கதை மாதிரி உள்ள படத்தை   எடுத்து அதன் வேகத்தை குறைப்பது போல தேவை இல்லாத பாடல்கள் வைக்கும் பழக்கம் எப்போ நிறுத்துவங்களோ?

ஹாரிஸ்ஜெயராஜ் இப்போ கொஞ்சம் தன்னோட பழைய வழிக்கு வந்து இருக்காரு , halena பாட்டு செம்ம , bgm ரொம்ப neatah பண்ணியிருக்காரு,  படத்தோட மிக பெரிய பிளஸ் கேமராமேன் r.d .rajasekar , படத்தை நல்ல ரிச் ஆகா காட்டி இருக்காரு ,

ஆத்தா நயன்தாராவே வயசு ஆகா ஆகா படத்தில் என்ன அழகா வாரீர் ?  இந்த படத்தில் நீங்க ஒரு லேடி ஜேம்ஸ்பாண்டுமா, படத்தோட கடைசியில் சண்டை போடுறா மாதிரி ஒரு காட்சி ஆரம்பிச்சீங்க ஆனா நம்மக்கு சண்டை காட்சி காட்டலை , அந்த சீன்ல சண்டை போட்டா மாதிரி நம்ம புரிஞ்சிக்கணும் , டைரக்டர் சார் நயனுக்கு அந்த காட்சியில் நிச்சயமா நீங்க ஒரு சண்டை வச்சி இருக்கனும், அந்த கடைசி சில நிமிடங்கள் இன்னும் தீயா இருந்து இருக்கும்.

கண் அழகி நித்யாமேனன் அவர்களே , படம் ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு விக்ரமுக்கு நிகரா ரொம்ப நல்ல கதாபாத்திரம் இருக்கும் நினைச்சேன் , ஆனால் ரொம்ப குறைவாக தான் உங்கள யூஸ் பண்ணி இருக்காங்க , நல்லவேளை உங்களுக்கும் ஒரு டிரீம் சாங் வைக்கலை.

படத்தின் அடித்தளம் , மேல்தளம் , தூண் , சுவர் என்று எல்லாமும் இருப்பவர் நம்ம விக்ரம் தாங்க , மனுஷன் ரெண்டு கேரக்டர்க்கும் என்னமா  வித்தியாசம் காட்டுறாரு, அந்த பெண் கெட்டப்புல அவர் முகத்தில் போட்டு இருக்கும் மாஸ்க்கை  கழட்டும் போது, அந்த கை விரல்கள் அந்த மாஸ்க்கில் வைக்கும் போது , அந்த கையில் பெண்மை காட்டுவார் , அவரோட கை விரல்கள் கூட நடிக்க வைக்குறாரு விக்ரம் , ஆனா  flash backல் நயன்தாரா கூட டூயட் பாடும் போது மட்டும் கொஞ்சம் வயசு ஆனவர் போல தெரிகிறார்

ஒரு சாதாரண ரசிகனுக்கு அவன் கொடுக்கும் 120க்கு வசூல் இந்த படம்.

மொத்தத்தில் இருமுகன்  விக்ரமின் தனிமுகன் 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

சனி, 3 செப்டம்பர், 2016

Kuttrame Thandanai - குற்றமே தண்டனை


அப்பாடா வழக்கமான தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து வந்து பார்த்த படம் இது , படத்தோட அருமையான விஷயம் என்னனா ? படத்துக்கு தேவையான அளவான கதாபாத்திரங்கள் , மனசுல நிற்கிறா மாதிரி அளவா பயன்படுத்தி இருக்காங்க , அதுவும் அந்த கதாபாத்திரங்கள் தங்களோட முந்தைய படங்களில் இருந்து ரொம்ப oppositeஆகா பண்ணிருக்காங்க , ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை , தர்மதுரை படங்களில் இருந்து அப்படியே எதிர்மறை கேரக்டர் , பூஜா தேவரியா இறைவி படத்தில இருந்து முற்றிலும் வித்தியாசமானா கேரக்டர் , குருசோமசுந்தரம் எப்பா சாமி நீங்க தானா ஜோக்கர் ல வந்தவரு ? ஜிகர்தண்டாவுல kill & laugh சொல்லி கொடுத்தவரு ? என்ன ஒரு வித்தியாசம் படத்துக்கு படம் ஆள் அடையாளம்  அப்படியே மாறி வாராரு , ரஹமான் மானத்துக்கு பயந்து வர பணக்கார கதாபாத்திரத்தை நல்லா பண்ணியிருக்காரு .

இந்த படத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னனா , ரொம்ப சினிமாதனம் இல்லமால் இயற்கையான விஷயங்கள் படத்தில் இருக்கு , அப்படியே யாரும் காட்டாத தொழில்களை காட்டியிருக்காரு , அதாவது ஒரு கிரெடிட் கார்டு கலெக்ஷன் சென்டர் காட்டுவது , குறிப்பா அந்த சுற்றுசூழல் , அவங்க phone  பேசுவது , சாப்பிடுற இடம் , பெண்கள் பழகி கொள்ளுவது , ஜொள்ளு வழியும் customer கிட்ட பேசுவது , குறிப்பா பூஜா தேவரிய அணியும் ஆடை , அதை பார்க்கும் போதே அவங்களோட சூழல் சொல்லாமல் சொல்லுவது செம்ம , பிறகு நாசர் செய்யும் கண்ணாடி தொழில் எனக்கு தெரிஞ்சு அந்த தொழில் செய்யவது மாதிரி நம்ம தமிழ் சினிமாவுல காட்டியது இல்ல , 

படத்தோட ஹீரோ விதார்த்தும் டைரக்டர் மணிகண்டனும் தான் , பொதுவா டைரக்டர் மனசுல இருப்பது படமா ப்ரதிபலிப்பதில்  கேமராமேனக்கு முக்கியமான பங்கு இருக்கு , அதுவே கேமராமேனே டைரக்டர்ஆக இருந்தா மனுஷன் பின்னியெடுத்துட்டாரு ,  விதார்த் ஒரு வித்தியாசமான கண் குறையுள்ளவராக வாராரு, விதார்த் அந்த குறை உள்ளவராக நடிப்பதும் , அதை நமக்கு அப்படியே உணர வச்ச கேமராமேனும் டைரக்டரும் ஆகிய மணிகண்டனுக்கு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்.குறிப்பா விதார்த் பைக் ஓட்டும் போது , ஐயோ எங்க அவருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று எண்ணம் வரா மாதிரி நடிச்சி இருக்காரு .

படத்தோட மைனஸ்ன்னு நான் நினைத்தது படம் கொஞ்சம் நிதானமாக போவது  , மேலும் அந்த குற்றவாளி யாருன்னு ஆரம்பித்திலேயே  யூகிக்க முடிஞ்சது எனக்கு  , மற்றவர்களுக்கு எப்படின்னு தெரியல .

மொத்தத்தில் குற்றமே தண்டனை , படத்தில் பெரிதாக கண்டுபிடிக்க எந்த குற்றமும் இல்லை பார்ப்பதால் நமக்கு எந்த தண்டனையும் இல்லை .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்