வியாழன், 8 செப்டம்பர், 2016

Irumugan - இருமுகன்

 பன்முகன் கொண்ட விக்ரம் நடிச்சி இருக்கும் இந்த இருமுகன் ஆரம்பக்காட்சியே அடடே , யாருடா  இந்த தாத்தா ஏழாம் அறிவுல கண்ணை காட்டினாலே மிருகத்தனமா அடிப்பாங்களே அதே மாதிரி இதுலையும் சண்டை பறந்து பறந்து போடுறாங்க , ஏதோ  inhaler ல டைம்  எல்லாம் ஓடுது , உடனே ஆளுங்க காலி ஆயிடுறாங்க , அப்பறம் "ரா" ஏஜென்ட்ன்னு சொல்லுறாங்க ,அப்படியே படம் மலேஷியா போகுது , மலேஷியே காட்டினாலே படம் ஸ்டைலிஷ் ஆகிடுது , அதுவும் கேமராமேன் ரொம்ப அழகா ஸ்டைலிஷ்ah காட்டுறாரு , ஏன் இது எல்லாம் நடக்குது ? எப்போ இன்னொரு விக்ரம் காட்டுவாங்க ? அந்த மருந்து என்னவெல்லாம் பண்ணும் ?அப்படின்னு ஒரு சுவாரசியம் கூட்டி,  அதுக்கு சரியா bgm கொடுத்து, நடுவுல கொஞ்சம் தம்பி ராமையா காமெடி கலந்து, படம் பரபரப்பா கொண்டு போய் இடைவேளையில் ஒரு பெரிய வாவ்ன்னு சொல்லுறா மாதிரி முடிச்சாரு , 

இந்த இடைவேளையில் நடப்பதை விமர்சனம் என்கிற பெயரில் வேறுசிலர் சொல்லிட்டாங்கன்னா அது சுவாரசியம் இருக்காது ,அதே நேரத்தில் அந்த இடைவேளை சுவாரசியம், இரண்டாவது பாதியில் பெருசா எடுப்படாம போகுது , சொல்ல வேண்டிய கதையை அதன் முடிச்சிகளை முதல் பாதியிலே சொன்னதாலே , இரண்டாவது பாதியில்  கதை நகர்வதற்கு ஒன்றும் இல்லை , இரண்டாவது பாதியில் வில்லன் விக்ரம் எப்படி தப்பிப்பாரு தான் திரைக்கதை ,மேலும் படத்தில் சில பல லாஜிக் மிஸ்ஸிங் , நயன்தாரா இரண்டாவுது பாதியில் வருவதற்கு சொல்லும் கதை ரொம்ப லாஜிக் மிஸ்ஸிங், மேலும் ஒரு பெரிய network பிடிக்க போகும் போது , யாரோ பெரிய ஆளு நெகடிவ் கேரக்டர்ல வருவாங்க நினைச்சா கருணாகரனை காட்டுறாங்க , உடனே அது பொசுக்குன்னு போயிடுச்சி மக்கள் பலர் சிரிச்சிட்டாங்க .

நம்ம தமிழ் ரசிகர்களுக்கு படத்தில் நிறைய புதுமையான விஷயங்கள் காட்டி இருக்கார் , ஸ்பீட் மருந்து , medulla oblongataவில் சிப் , அப்புறம் பல கெமிக்கல் மருந்துகள் வச்சி ஜித்து வேலை பண்ணி இருக்காரு டைரக்டர் , அதே நேரத்தில் பழமையான விஷயங்கள் அதாங்க  தேவை இல்லாத பாடல்களும் இருக்கு , நம்ம தமிழ் சினிமா எப்போ திருந்தும் தெரியல , ஏன்னா ஒரு high tech கதை மாதிரி உள்ள படத்தை   எடுத்து அதன் வேகத்தை குறைப்பது போல தேவை இல்லாத பாடல்கள் வைக்கும் பழக்கம் எப்போ நிறுத்துவங்களோ?

ஹாரிஸ்ஜெயராஜ் இப்போ கொஞ்சம் தன்னோட பழைய வழிக்கு வந்து இருக்காரு , halena பாட்டு செம்ம , bgm ரொம்ப neatah பண்ணியிருக்காரு,  படத்தோட மிக பெரிய பிளஸ் கேமராமேன் r.d .rajasekar , படத்தை நல்ல ரிச் ஆகா காட்டி இருக்காரு ,

ஆத்தா நயன்தாராவே வயசு ஆகா ஆகா படத்தில் என்ன அழகா வாரீர் ?  இந்த படத்தில் நீங்க ஒரு லேடி ஜேம்ஸ்பாண்டுமா, படத்தோட கடைசியில் சண்டை போடுறா மாதிரி ஒரு காட்சி ஆரம்பிச்சீங்க ஆனா நம்மக்கு சண்டை காட்சி காட்டலை , அந்த சீன்ல சண்டை போட்டா மாதிரி நம்ம புரிஞ்சிக்கணும் , டைரக்டர் சார் நயனுக்கு அந்த காட்சியில் நிச்சயமா நீங்க ஒரு சண்டை வச்சி இருக்கனும், அந்த கடைசி சில நிமிடங்கள் இன்னும் தீயா இருந்து இருக்கும்.

கண் அழகி நித்யாமேனன் அவர்களே , படம் ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு விக்ரமுக்கு நிகரா ரொம்ப நல்ல கதாபாத்திரம் இருக்கும் நினைச்சேன் , ஆனால் ரொம்ப குறைவாக தான் உங்கள யூஸ் பண்ணி இருக்காங்க , நல்லவேளை உங்களுக்கும் ஒரு டிரீம் சாங் வைக்கலை.

படத்தின் அடித்தளம் , மேல்தளம் , தூண் , சுவர் என்று எல்லாமும் இருப்பவர் நம்ம விக்ரம் தாங்க , மனுஷன் ரெண்டு கேரக்டர்க்கும் என்னமா  வித்தியாசம் காட்டுறாரு, அந்த பெண் கெட்டப்புல அவர் முகத்தில் போட்டு இருக்கும் மாஸ்க்கை  கழட்டும் போது, அந்த கை விரல்கள் அந்த மாஸ்க்கில் வைக்கும் போது , அந்த கையில் பெண்மை காட்டுவார் , அவரோட கை விரல்கள் கூட நடிக்க வைக்குறாரு விக்ரம் , ஆனா  flash backல் நயன்தாரா கூட டூயட் பாடும் போது மட்டும் கொஞ்சம் வயசு ஆனவர் போல தெரிகிறார்

ஒரு சாதாரண ரசிகனுக்கு அவன் கொடுக்கும் 120க்கு வசூல் இந்த படம்.

மொத்தத்தில் இருமுகன்  விக்ரமின் தனிமுகன் 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

5 கருத்துகள்:

Comments