சனி, 18 நவம்பர், 2017

Theeran - தீரன் அதிகாரம் ஒன்று


மீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா  விமர்சனம் எழுதுறேன்,
அறம் தொடர்ந்து இந்த வாரம் தீரன்னு தமிழில் தொடர்ச்சியா நல்ல படங்கள் வருஷ கடைசியில வருது, அதுவும் சதுரங்க  வேட்டை இயக்கியவரின் , இரண்டாவது பதிவு இந்த படம் 

ஒரு படம் அதுவும் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணும் , அதுவும் உண்மை கதை எடுத்து எந்தளவுக்கு விறுவிறுப்பாக தரணுமோ அதையெல்லாம் சரியாக கொடுத்து சீட்டு நுனிக்கு வரவச்சி நம்மை பெருமூச்சு  விடவைச்சுட்டார் டைரக்டர் வினோத் .

படம் என்னமோ சாதாரணமா ஒரு commercial படம் போல தான் ஆரம்பிச்சது , அட இது வழக்கமான ஒரு போலீஸ் கதை , சும்மா காதல் , ஒரு டூயட் , அப்பறம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் தராத கதை போல தான் இருக்கும்ன்னு முதல் 20 நிமிஷம் தோணுச்சு , அந்த காதல் காட்சிக்கு நடு நடுவே கார்த்தி போலீஸ் training காட்டுவது எல்லாம் நல்லா இருந்தாலும், காதல் டியூஷன் எடுப்பது எல்லாம்  கொஞ்சம் bore ஆகா தான் feel ஆச்சு  , ஆனால் கதைக்குள்ள  ஒருபடி எடுத்து வச்ச உடனே சும்மா பிச்சிகிட்டு போகுது படம் , அபப்டி ஒரு வேகம், அதுவும் அந்த வில்லன்கள் முகங்கள் தெரிஞ்சதுக்கு பிறகு அவங்க வேட்டை ஆரம்பிக்கும் போது , அடேய் யாருடா நீங்க? அந்த வில்லன்களை  நாமே அடிச்சி நொறுக்கணும் என்ற ஒரு எண்ணம் நமக்கு தோன்றாமல் இருக்காது , அப்படி ஒரு கொடூரத்தை காட்டுவாங்க 

ஒரு படம் பார்த்தா அதோட நாம் ஒன்றிவிடவேண்டும் , ஒரு காட்சி ஆரம்பித்து  முடியும் போது ஒரு surprise இருக்கணும் , அது இந்த படத்தில இருக்கு, உதாரணத்துக்கு சில காட்சிகள் சொல்லணும்ன்னா , போலீஸ் நுழைய முடியாத கிராமத்தில் கார்த்தி போவது அங்கே நடக்கும் சண்டைகள் , ஒரு சந்தையில் ஒருவனை கைது பண்ணுவது , முக்கியமா பஸ் சண்டை நிச்சயமா அந்த பஸ்ல இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும் , அதை விறுவிறுப்பாக படம்பிடித்த கேமராமேன் சத்யன்  , ஸ்டண்ட்மென் திலிப் சுப்ராயன் , எடிட்டர் சிவன் நந்தீஸவரன்  இவங்க எல்லோருக்கும் பெரிய  சலுயூட்டே போடணும் , கிளைமாக்ஸ்ல் நடக்கும் இரவு சண்டை அதில் இருக்கும் brilliance காட்டி இருப்பது சூப்பர் .

படத்தோட கதையில டைரக்டர் நல்ல ஆராய்ச்சி பண்ணிதான் எழுதி முடிச்சி இருப்பர் , ஏன்னா ஒரு போலீஸ் எப்படி விசாரிப்பாங்க , எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க , ஒரு கை ரேகை நிபுணர் எப்படி பார்ப்பாங்க , முக்கியமா இந்த கொள்ளை கும்பல் எப்படிபட்டவங்க , அவங்க பின்னணி என்ன , அதுவும் வரலாற்றில் குற்ற பரம்பரை பற்றி எல்லாம்  எடுத்து கூறுவது  நல்ல detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு காட்டுது, ஆனால் நிறைய விஷயங்கள் டக்கு டக்குன்னு கூறும் போது ஒரு சாதாரண ரசிகனுக்கு என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்க தோணும், ஏன்னா அந்த பரம்பரை பெயர்கள் , வில்லன்களின் பெயர்கள் , எந்த ஊருல இருந்து போறாங்க அது எல்லாம் நமக்கு மனசில் பதிய கொஞ்சம் time ஆகும் , அதனால் அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும் போது நாம் உற்று கவனிக்கணும் .detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு சொல்லியத்துக்கு உதாரணம் படத்தின் கதை 90களில் இருந்து 2000 வரை நடப்பதால் , அந்த மொபைல் எல்லாம் அந்த periodல் வந்த நோக்கியா basic phone காட்டுறாங்க , அது காட்டுவது பெரிய விஷயம் இல்ல , ஆனால் ஒரு காட்சியில் ஒருவர் அதை கழுத்தில் தொங்கவிட்டு இருப்பர் , அது போல தான் வயதில் பெரியவங்க அந்த மொபைல் அந்த periodல் யூஸ் பண்ணியிருப்பாங்க .

டைரக்டர் வினோத் படத்தின் கதையை layer layer ஆகா பிரிச்சி ,ஒரு ஒரு காட்சியின் முடிவிலும் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போவது தான் ப்ளஸ் , இதே தான் அவர் சதுரங்க வேட்டையிலும்,இதிலும்  செய்து இருக்கிறார், ஹீரோ கார்த்தி நிச்சயமாக இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கிங் பாயிண்ட் படம் தான் இது , அவரை கார்த்தியாக பார்க்க முடியவில்லை , அந்த தீரனாக தான் தெரிகிறார் , ராஜஸ்தானில் நடக்கும் சம்பவம் எல்லாம் அவர் வாழ்ந்தாகவே தெரிகிறது , போஸ் வெங்கட் நல்ல supporting கேரக்டர் நல்லா செய்து இருக்கிறார் , படத்தின் இன்னொரு மிக பெரிய ப்ளஸ் ஜிப்ரான் இசை , மனுஷன் பிச்சி உதறிட்டார் , இந்த வருஷ கடைசியில் அவருக்கு தொடர்ந்து வெற்றியாக வரும் போல , போனவாரம் அறம் , இந்த வாரம் தீரன் , அடுத்த வாரம் சென்னை டு சிங்கப்பூர் (எப்படி இருக்குன்னு பார்ப்போம்).

படம் முடியும் போது அந்த case உண்மை நிலவரம் என்ன? அதில் வேலை பார்த்தவங்க நிலைமை என்ன என்று எல்லாம் சொல்லி முடிக்கும் போது , அட பாவம்யா அந்த போலீஸ்காரங்க , எல்லா போலீஸ்காரர்களை தப்பு சொல்ல கூடாது என்று தோன்றாமல் வெளியே வர முடியாது .

மொத்தத்தில்  தீரன் ரொம்ப தீர்க்கமானவன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 11 நவம்பர், 2017

Aram - அறம்

இது என்னோட 150வது விமர்சனம் ,  ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில்  எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .

முதல் வரியிலே நான் இந்த படத்தை பற்றி சொல்லிடுறேன் , நானே இந்த படம் ஒரு நாள் தள்ளி பார்த்து விமர்சனம் போடுறேனே ஒரு வருத்தம் , எத்தனையோ மொக்கை படத்தை முதல் நாள் பார்த்து இருக்கேன் , இந்த படத்தை முதல் நாள் பார்க்க முடியல , அதனால சொல்லுறேன்  நீங்க இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாம பாருங்க , ஒரு நெத்தி அடி படம் , எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாம , மனதார  உருகி பாராட்டப்படவேண்டிய படம் ,இந்த வருஷத்தில் வந்த அருமையான படங்கள் வரிசையில் இந்த படம் ஒரு முக்கியமான படம் , எனக்கு இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில்  குரங்கு பொம்மை , ஒரு கிடாயின் கருணை மனு , லென்ஸ் , மாநகரம் இந்த வரிசையில் இதுவும் ஒன்று ஆனால் மற்ற படங்கள் எல்லாம் பெரிய நட்சித்திரம் இல்லாத படம் , ஆனால் இது நயந்தாரா என்ற ஒரு பெரிய ஹீரோ வச்சி எடுத்துஇருக்காங்க , இந்த வருஷம் வந்த பெரிய ஹீரோ படங்களில் இது தான் பெஸ்ட் , என்னடா நயன்தாராவை ஹீரோன்னு சொல்லுறிய பார்க்கறீங்களா ? ஆமாங்க நிச்சயமா அவங்களை ஹீரோ என்று சொல்லலாம் .

நம்ம மனசில் இருப்பதை கிழி கிழி கிழிச்சிருக்காங்க , படத்தின் கதை நடக்கும் இடமே அருமையான தேர்வு , ஒரு பக்கம் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இடம் , அதன் அருகே குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு இடத்தில் இந்த கதை நடக்குது, நிறைய சின்ன சின்ன விஷயங்கள் படத்தில சொல்லி இருக்காங்க , விளம்பரத்துக்காக போட்டோ எடுத்து போடப்படும் போலியோ சொட்டு மருந்து, தங்கள் வாழ்க்கை தரம் உயராத மக்கள், நம் நாடு ராக்கெட் விட்டா நமக்கு பெருமைன்னு அது நல்லா நடக்கணும் சாமிகிட்ட வேண்டுவது , எது எதுக்கோ 1000 கோடி செலவு பண்ணாலும், குழில வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறு தான் நமக்கு மிச்சம் என்ற  நிலைமை காட்டுவது , ஆரஅமர விபத்து நடந்த இடத்துக்கு செல்லும் அதிகாரிகள் , ரிப்பேர் ஆகும் தீயணைப்பு வாகனம் இப்படி சின்ன சின்ன விஷயங்கள் காட்டி இருக்காங்க.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நாமே அந்த இடத்தில இருப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நம் பிள்ளையே அதில் மாட்டிகொள்ளுவது போல ஒரு உணர்வு இருக்கு , அந்த உணர்வு நமக்கு ஜிப்ரான் bgmல்  நமக்குள்ள இறக்கிட்டார். தோரணம் ஆயிரம் பாடல் விஜயலக்ஷ்மி குரலில் ultimate ஆகா இருக்கு ,இன்னும் இந்த படத்தை பற்றி சொல்லலாம் ஆனால் அதை எல்லாம்  போயிட்டு படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க .

அந்த குழந்தையின் அம்மா அப்பாவாக நடிச்சவங்களுக்கு  ஒரு  பெரிய கைத்தட்டு , அப்புறம் நயன்தாரா அருமையாக நடிச்சி இருக்காங்க , அந்த கடைசி சில உணர்வுபூர்வமான காட்சிகளில் சூப்பர், நயன்தாரா கேரக்டர் வடிவமைச்ச டைரக்டர் கோபி நயினார்  பாராட்டி ஆகணும் , ஏன்னா நயன்தாரா என்பதால் மாஸ் காட்டுவது , build up பண்ணுவது எதுவும் இல்லாமல் , கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து இருக்காங்க .

இந்த படத்தில மைனஸ்ன்னு எனக்கு சொல்ல தோன்றவில்லை , நடுவுல நடுவுல வரும் அந்த டிவி விவாத மேடை ஷோ கொஞ்சம் வந்து இருந்த நல்லா இருந்து இருக்கும் , ஆனால் அடிக்கடி வருவது கொஞ்சம் bore அடிச்சது போல  தோணுச்சு .

ஒரு படம் பார்த்தா  அதன் பாதிப்பு படம் பார்த்து வெளியே வந்து ரொம்ப நேரம் இருக்கும் , அப்படி ஒரு பாதிப்பு இந்த படம் நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும் , ஆளும்கட்சி , எதிர்க்கட்சி , மத்திய கட்சிகள் , மாநில கட்சிகள், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் , கட்சி ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும்   இந்த படத்தை பார்த்துட்டு கண்ணாடி முன்னாடி நின்று நீங்களே காரித்துப்பிக்கோங்க , மசாலா கலந்து கொஞ்சம் கருத்து கொடுத்த மெர்சல் படத்துக்கு இந்திய அளவில் நியூஸ் சேனல் எல்லாம் ட்ரெண்ட் பண்ணிவிட்டாங்க , ஆனால் இந்த படத்தை நிச்சயமா அபப்டி ட்ரெண்ட் பண்ணிவிடனும் .

இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட வேண்டும் , எந்த மொழியிலும்  டப்பிங் செய்து வெளியிட்டால் செம்ம ஹிட் அடிக்கும் , நிச்சயமா இந்த படத்திற்கு விருதுகள் குவிய வேண்டும் , நிச்சயமா இந்த வருஷம் தேசிய விருது ஹிந்தி ல வந்த toilet படத்துக்கு கொடுப்பாங்க , அதே போல இந்த படத்துக்கும் விருது தந்தே ஆகவேண்டும் , அப்படி எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு சதியாக தான் இருக்க வேண்டும் .

குறிப்பு : கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கூறியவர் தான் இந்த படத்தின் டைரக்டர்  கோபி நயினார். கத்தி வந்துவிட்டதால் அதை மாற்றி அமைத்து வந்தது தான் இந்த அறம் .


மொத்தத்தில் அறம் ஒரு தரமான படம்.

இப்படிக்கு

சினி கிறுக்கன் 

வெள்ளி, 10 நவம்பர், 2017

Nenjil Thunivirunthal - நெஞ்சில் துணிவிருந்தால்



இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா இந்த  படம் ட்ரைலர் போலவே சொல்லணும்
சுசீந்திரன் படம்ன்னா நிச்சயமா இம்மான் இசை இருக்கும்,  அப்புறம்? சூரி இருப்பார், அப்புறம்? அம்மாவாக துளசி இருப்பாங்க, இவர் சின்ன ஹரி போல ஏன்னா படத்தில ஸ்கெட்ச் போடுவாங்க , அப்புறம் ?  குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் ,  அப்புறம்?  நட்புக்கு மரியாதை  இருக்கும் ,அப்புறம்? நைட் சேசிங் இருக்கும் ,   கொஞ்சம் காதல் இருக்கும் , கொஞ்சம் மசாலா தூவி சமாளிச்சி இறக்கிவச்சிடுவார் 

படம் ஆரம்பிச்சி இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம் கூட  திரைக்கதை கதைக்குள்ள போகல , ஆனால் கதைக்கு தேவையானதை படத்துக்குள்ள கொண்டுவருவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டு , முதல் பாதி எப்படியோ போகுது , வில்லனோட முதல் காட்சி அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டுவது நல்லா இருந்துச்சி , பிறகு ஹீரோ சந்தீப் , விக்ராந்த் பற்றி , சந்தீப் தங்கச்சி மற்றும் விக்ராந்த் காதல் , அவங்க அம்மா, முக்கியமான வில்லன் மட்டும் இல்லாமல் , சின்ன சின்ன வில்லன்கள் பற்றி  இப்படி ஒரு ஒருத்தர் பற்றி சொல்லி சொல்லி படம் இன்டெர்வல் வந்துடுச்சி , அட இதுக்கு நடுவுல ஹீரோயின் வேற ,

அப்படி , இப்படின்னு எப்படியோ முதல் பாதி போனாலும், ரெண்டாவது பாதி ஒரு வேகம் கொடுத்து படத்தை கரை சேர்த்துட்டார் டைரக்டர் சுசீந்திரன் ,சில இடங்கள் ஒரு சாதாரண ரசிகன் கூட கணிக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கு , ஆனாலும் இது எல்லாம் எதுக்காக நடக்குது என்பதை நமக்கு தெரிஞ்சிக்க விடாமல் , நம்மை கடைசி வரைக்கும் யோசிக்கவச்சியிருக்கார் , இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றார் போல கந்துவட்டி , ரியல் எஸ்டேட் பிரச்சனை, இப்படி சில விஷயங்கள் அப்படியே நூல் இழையாய் ஓட வச்சி ,கொஞ்சம் கடைசியாய் கதையின் கருவை உடைத்து ,விறுவிறுப்பாய் முடிச்சிட்டார் .ஆனால் படம் பார்க்கும் போது கொஞ்சம் பாண்டியநாடு , பாயும் புலி பார்த்தது போல இருந்துச்சி 


படத்தின்  ப்ளஸ் வில்லன் ஹரிஷ் உத்தமன் தான்  ரொம்ப நல்லா பண்ணிருக்கார் ,அதுக்கு சரியாய் bgm மியூசிக் அவருக்கு இம்மான் பக்காவாக கொடுத்துட்டார் , ஆனால் அந்த இசை கொஞ்சம் முன்னாடி ஏதோ இம்மான் படத்தில பயன்படுத்தியது போலவே தான் இருந்துச்சி .

படத்தின் மைனஸ் ஏற்கனவே சொன்னது போல அழுத்தம் இல்லாத முதல் பாதி , மொக்க சூரி காமெடி ,ஹீரோயின் எதுக்காக அவங்களை படத்தில் போட்டாங்க என்று தெரியவில்லை கொஞ்சம் அழகாக இருக்காங்க ஆனால் சுத்தமா பேசவே தெரியல டப்பிங் ரொம்ப கேவலமா இருந்திச்சி, சும்மா கெஸ்ட் ரோல் அவளோதான் , அவங்க ஹீரோ சந்தீப் கூட வரும் காட்சிகள் கூட ரொம்ப கம்மி தான் .

என்னடா படத்தை பற்றி ரொம்ப கம்மியா சொல்லி இருக்கன்னு கேட்பீங்க நினைக்கிறன் , இந்த படத்துக்கு இந்த அளவுக்கு தான் எனக்கு எழுத தோணுச்சு, ரொம்ப ஓஹோன்னு புகழுவதற்கும் , இல்ல ஓஹோன்னு கலாய்ப்பதற்கும்  இல்ல .

மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் இன்னும் கொஞ்சம் துணிவிருந்துயிருந்தால் மக்கள் நெஞ்சில் விருந்துபடைதிருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


வெள்ளி, 3 நவம்பர், 2017

Aval - அவள்

இந்த படத்தை பற்றி டக்கு டக்கு டக்குன்னு சொல்லிடனும் நினைக்கிறேன் , ஏன்னா படம் அப்படி தான் டக்கு டக்குன்னு போகுது 

படத்தின் கதை என்ன சொல்லணும் ? 
நம்ம எப்பொழுதும் எதிர்பாக்கிற ஒரு பேய் கதை தான் , ஒரு பேய் இருக்கும் , அது வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கும் , ஒரு பிளாஷ் பேக் இருக்கும் , பிறகு அது பழிவாங்கும் , இல்லாட்டி ஒரு நல்ல பேய் , கெட்ட  பேய் இருக்கும், இந்த படத்தில கதை ஒரு வழக்கமான ஒரு formulaவில் தான் இருக்கு, ஆனால் அதை கொடுத்த விதம் ரொம்ப அருமையா இருக்கு .

 கொஞ்சநாளாக  பேய் படத்தில் வரும்   லூசு தனமான ஹீரோயின் , ஒரு மொக்க பாட்டு , மொக்க காமெடி , எலுமிச்சை பழம் வச்சி வரும் ஒரு சாமியார் , சுடுகாடு அது இதுன்னு , லொட்டு லொசுக்குன்னு வரும் பேய் படம் போல இல்லமால் , படத்தின் கதையில் இருந்து கொஞ்சம் கூட விலகி போகாமல் , பேய் படம்ன்னா பேய் பேய் படம்  போல, பார்க்கிற நம்மை அந்த உணர்வு தந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி ஒரு அருமையான , உண்மையான பேய் படம் தமிழில் வந்து இருக்கு,

படத்தின் ப்ளஸ் நடிகர்கள்  சித்தார்த் , ஆண்ட்ரியா , ஜெனியாக நடிக்கும் அனிஷா , அந்த குட்டி பொண்ணு , அதுல்குல்கர்னி , பாதிரியார் , இப்படி எல்லோரும் சரியாக அளவாக நடிச்சி இருக்காங்க , எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அதிகமாகவோ , குறைத்தோ தராமல் , எல்லோருக்கும் சமமாக  கொடுத்து இருக்காங்க , அதை அவர்களும் சரியாக நடிச்சிருக்காங்க . அதே போல படம் நடக்கும் களம் நல்ல வித்தியாசமான இடம் கொடுத்து இருக்காங்க , இமயமலை ஒட்டி நடக்கும் இடம் , அதை பனிமலை பின்னணியில் நல்லா கொடுத்து இருக்காங்க 

படத்தை மனசில் நிறுத்திவைத்தது  கேமரா , சவுண்ட் தான் , பேய் படத்துக்கு தேவையான அனைத்தயையும்,  பக்காவாக இவங்க ரெண்டு பேரும் பண்ணி இருக்காங்க .  அந்த வீடு அருமையாக இருக்கு , நல்லா செட் பண்ணிருக்காங்க , அந்த லொகேஷன் , வீடு , அளவாக பேசும் நடிகர்கள் பார்க்கும் போது , அட நம்ம ஆளுங்க கொஞ்சம் இங்கிலிஷ் படம் சாயலில் ஒரு பேய் படம் எடுத்து இருக்காங்கன்னு நல்லாவே சொல்லலாம் , அதுக்கு  இவங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம் .

படத்தில இன்டெர்வல் சீன சூப்பர் , படத்தின் கிளைமாக்ஸ் வந்தது போல ஒரு feel இண்டெர்வெளில் கொடுத்து இருக்காங்க , படத்தின் கடைசியில் ஒரு நல்ல ட்விஸ்ட் வரும் அது தான் செம்ம , நல்ல யோசிச்சி , யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே screenplay அமைச்சதுக்கு ஒரு நல்ல கைத்தட்டு . படத்தில எனக்கு பிடிச்ச காட்சின்னா , ஒரு இடத்தில கேமரா கதவு லாக்க்குள்ள எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு போகும் , அப்படியே தலைகீழாக வரும் காட்சிகள்  , அதை தொடர்ந்து வரும் காட்சிகள் சூப்பர்.

நீங்க உண்மையாக நல்ல பேய் படம் பார்க்கணுமான்ன நிச்சயமா தியேட்டர்ல போயிட்டு நல்ல சவுண்ட் effect  உள்ள தியேட்டர்ல போயிட்டு பாருங்க . அது நிச்சயமா ஏமாற்றம் தராது . இங்கிலிஷ் பேய் படம் பார்த்த ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நிச்சயமா மற்ற மொழிகளும் இந்த படம் போகும் .

மொத்தத்தில் அவள் பார்ப்பவர்களை நல்ல மிரட்டுபவள் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்