ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

Bayam Oru Payanam - பயம் ஒரு பயணம்

அட போங்கப்பா இது மீண்டும் ஒரு காதல் கதை, சாரி அது இந்த வாரம் ரிலீஸ் ஆனா வேற படம் , இது நம்ம தமிழ் சினிமாவுல வந்து இருக்கும் மீண்டும் ஒரு பேய் கதை ,மாசத்துக்கு ஒரு பேய் படம் வருவது ஒரு வழக்கமா போச்சி ,இதுல ஒரு சந்தோஷமான ஒரு விஷயம் என்னனா ? இது காமெடி கலந்த பேய் படம் இல்ல , நிச்சயமா திரைக்கதை பயணம் கொஞ்சம் பயம் கொடுத்து தான் பயணிக்கிறது , ஆனால் கதை வழக்கமான பழிவாங்கும் பேய் கதை தான் ,  ரெண்டு மணி நேரம் படத்துல ஒன்றரை மணி நேரம் பயம் முறுத்தும் காட்சிகளாக தான் படம் போகுது கடைசி 30 நிமிஷம் தான் அது எல்லாம் ஏன் நடக்குதுன்னு கதைக்குள்ள போகுது படம் , ஆனால் அந்த காட்சியின் காரணங்கள் கதையோட தொடர்புடையதுன்னு காட்டும் போது சரின்னு சொல்ல தோணுது .

படம் முழுவதும் பயம் கொடுக்கும் காட்சிகள் டைரக்டர் யோசிச்சி யோசிச்சி வச்சி இருக்கார் , ஒரு கட்டத்துல அட போதும்பா பயமுறுத்தியது, ஏன் பேய் பழிவாங்குதுன்னு கதையை சொல்லுங்கப்பான்னு கேட்க தோணுது , பாத்ரூம் தண்ணீர் குழாயிலே தண்ணி தானா வரும் காட்சி நம்ம தமிழ் சினிமாவுல பேய் படத்துல எழுதப்படாத ஒரு விதி , அது இதுல வச்சி இருக்கார் டைரக்டர் , இதுபோல பேய் படத்துக்கு வேண்டிய அனைத்து காட்சியமைப்பும் இருக்கு ,

படத்தில ஹீரோ பரத் ரெட்டி பயணிக்கும் காட்சிகள் நல்லா எடுத்து இருக்காரு , ஆனால் அதை தவிர ஹீரோவுக்கு பிளாஷ் பேக் காதல் கதை எல்லாம் ரொம்ப நாடகத்தனமா இருக்கு  , விகாஷாவின் பிளாஷ் பேக் கதையில் வரும் IT கம்பெனி நண்பர்களாக நடிப்பவர்கள் , அதில் வரும் சரக்கு பாட்டு எல்லாம் ரொம்ப செயற்க்கையா இருக்கு ,

படத்தின் பெரிய பிளஸ் கேமரா & Bgm  ரொம்ப பிரெஷ் feel கொடுத்து இருக்காரு அந்த டீ எஸ்டேட் , மலை இடங்கள் எல்லாம் பார்க்கும் போதும் சரி  , அதே நேரத்தில அந்த பங்களாவுல வரும் காட்சிகளும் அதற்க்கு சரியாக எடிட் பண்ண தாஸ்க்கும் ஒரு கை தட்டு தரலாம், இசை y.r.prasad அளவா இரைச்சல் இல்லாமல் சரியாக தந்து இருக்காரு.

மொத்தத்தில் பயம் ஒரு பயணம் கொஞ்சம் சுமாரான பயணம் தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

Dharmadurai - தர்மதுரை

இது நமக்கு பழக்கப்பட்ட சாதாரண கதையுள்ள படம் தான் ,ஆனால் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனசுல பதிவது போல, இயக்குனர் வடிவமைச்சிருக்காரு ,காட்சி அமைப்புகளும் எளிமையா ரசிக்கிறா மாதிரி இருக்கு,  அதே போல அந்த கதாபாத்திரங்களும் நல்லாவே நடிச்சிருக்காங்க, இது தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ், சோறு தான் பிரதானமாக நினைக்கும் மாப்பிளை அவர் முழிக்கிற முழியாகட்டும் சரி , எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவே  தனக்கு டிரஸ் இல்லைன்னு கவலைப்படுற தம்பி ,ஓ உங்க பேரு எவிடென்ஸ் இல்லையா என்று கேட்க்கும் டிரைவர் , அப்படின்னு சின்ன சின்ன கேரக்டர் கூட மனசுல பதிவது மிகப்பெரிய பிளஸ் .

விஜய்சேதுபதி நடிப்புல மனுஷன் பிண்ணி எடுக்குறாரு , அவரு ஆரம்பத்தில் தண்ணிய போட்டுக்கிட்டு,அம்மாகிட்ட , அண்ணன்கிட்ட , underwearஓட, அலப்பரை  பண்ணுவது, கஞ்சா கருப்பு கூட கலாட்டா பண்ணுவது , நக்கலா இங்கிலீஷ் பேசுவது , சாவு வீட்டுல ஆட்டம் போடுவது,ஐஸ்வர்யா கூட காதல் பண்ணுவது , பின்பு சோகக்காட்சியில் அழுவதை  விட , அம்மா சொல்லுக்காக கோபத்தை  கட்டுப்படுத்துவதுன்னு சகலமும் அள்ளிட்டாரு ,

தமன்னா, ஸ்ருஷ்டி , ஐஸ்வர்யா ராஜேஷ்ன்னு மூன்று ஹீரோயின் இருந்தாலும் ,  ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணாக வந்து வாழ்ந்துட்டாங்க , கொஞ்சநேரம் வந்தாலும் , செம்மயா பண்ணிட்டாங்க , சாரி அண்ணா கூப்பிட்டதுக்கு, மாமான்னு கூப்பிடுறேன்னு சொல்லும் போது அவ்வளவ்வு அழகா இருக்காங்க , அப்படியே அம்மாவாக வரும் ராதிகாவும் தான் , அவங்களும் அமைதியான அம்மாவாக , தன்னோட பையனுக்கு எதுவும் செய்யமுடியலையே ன்னு வருத்தப்படுவதும் சூப்பர்.

படம் முதல் பாதி கொஞ்சம் பொறுமையா போகுது , இரண்டாவது பாதி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையால் தப்பியது , படத்தில் எந்த ஒரு காதாபாத்திரமும் வில்லனாக சித்தரிக்கவில்லை , சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை காட்டி இருக்காரு டைரக்டர் சீனுராமசாமி ,பாடல்களை விட bgm ல் நல்லா பண்ணியிருக்காரு யுவன்  ,

எனக்கு படம் பார்க்கும் போது , வாரணம் ஆயிரம் , ஆட்டோகிராப் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த கிராமத்து கதை போல எனக்கு தோணுச்சி .காதல் தோல்வியால் தன்னை சீரழித்து கொள்ளும் விஜய்சேதுபதி பார்க்கும் போது வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்திச்சி , ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட் , இதில் அம்மா செண்டிமெண்ட் , மூணு ஹீரோயின் வந்தாலே நம்மக்கு ஆட்டோகிராப் தான் தோணுது , ஆட்டோகிராப் சினேகா மாதிரி தமன்னா வருவாங்க நினைத்தேன் , ஆனால் அவங்க,  நான் ஹீரோயின் தான் அதனாலா ஹீரோ கூட தான் சேர்வேன்ன்னு சேர்ந்துக்கிறாங்க .நல்லவேளை படத்தை சோகமா முடிச்சிடுவாங்க பதறும் போது , அமைதியா நல்லபடியா முடிச்சிட்டாரு சீனுராமசாமி .

மொத்தத்தில் தர்மதுரை ஒரு அளவிற்கு தர்மம் தலைகாக்கும் துரையாக வந்துஇருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 




திங்கள், 15 ஆகஸ்ட், 2016

Joker - ஜோக்கர்

படம் பார்த்து கதை சொல்லு  என்பது போல , மேலே போட்டு இருக்கும் படம் பார்த்தா என்ன தோணுது ? அதை பற்றிய கதை தான் இந்த படம் ஜோக்கர் . ஒரு அரசியல் என்பது அரசியல் பண்ணுவது , ஊழல் நடப்பது எது வரைக்கும் ? என்பது மேலே போட்டு இருக்கும் படத்தை பார்த்தாலே தெரியும் .

படத்தின் மிகப்பெரிய பிளஸ் எளிமையான , உண்மையான காட்சி அமைப்பு தான் , படம் ஆரம்பிக்கும் போதே துடைப்பம் விற்க்கும் வியாபாரி ஊருக்குள்ளே நுழையும்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை காட்டும் போது , அந்த கிராமம் , இந்த படத்தின் கதை ஓட்டம் என்னவென்று சொல்லாமல் சொல்லுகிறது, ரொம்ப சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களில் கவனித்து காட்சி அமைத்து இருக்கிறார் டைரக்டர் , ஹீரோயின் படுத்தபடுக்கயில் காட்டும் போது , படுத்தப்படுக்கையால் வரும் தோல் மாற்றம், முதல் நாளுக்கும் , பின்பு காட்டும் நாட்களுக்கும் வித்தியாசம் காட்டுவதிலும் சரி , முதல் நாள் வீட்டுக்குள்ளே தூக்கி கொண்டு வரும் போது அங்கே சிறுநீர் பையை காட்டுவதும் சரி , இப்படி பல சின்ன சின்ன விஷயங்களை உன்னித்து செய்து இருக்கிறார் டைரக்டர் .

மக்களின் குடியரசு தலைவர் என்று சொல்லிக்கிட்டு ஒரு ஜோக்கராக படம் full ahaa வருகிறார் ஹீரோ குரு சோமசுந்தரம் , அவர் ஒரு ஒரு முறையும் தலை மூடியை  அம்முக்கி விட்டு வருவதும் , ஒரு கண்ணில் காந்தி , ஒரு கண்ணில் பகத் சிங் என்று தன்னோட நிலைப்பாடையும் சொல்வது, அங்கே ஹீரோ தெரியவில்லை அந்த இயக்குனர் தான் தெரிகிறார்,இன்றைய அரசியல் ,மற்றும் சமூக அவலங்களை அங்கங்கே , வசனங்களால் சொல்லுவது சூப்பர் .

ஹீரோ கூட வரும் இசை மற்றும்  பொன்னூஞ்சல் கதாபாத்திரமும் ,அவர் செய்யும் செயலுக்கு , ஒரு உண்மையான குடியரசு தலைவருக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் தருவார்களோ , அது போலவே அவருக்கு தருவது செம்ம ,

இசையமைப்பு சியான் ரோல்டன் , நடிப்பில் எப்படி ஒரு வெகுளித்தனத்தை ஹீரோ காட்டுகிறார் அது போலவே அந்த வெகுளித்தனத்தை இசையில் நம்மக்கு உணர்த்தி இருக்கிறார் அவர் , குறிப்பாக படம் ஆரம்பத்தில் அந்த கிராமம் ,ஹீரோ intro காட்டும் காட்சிகள் நிச்சயமாக அருமைன்னு சொல்லலாம் .

நிச்சயமாக இந்த படத்தை பார்ப்பதற்கு பொறுமை தேவை , முதல் பாதியில் ஜோக்கராக அவர் பண்ணும் ஆர்ப்பாட்டங்கள் ரசிக்கும்படி இருந்தாலும் , இரண்டாவுது பாதியில் கொஞ்சம் தோய்வு இருக்க தான் செய்கிறது.எவ்வளவோ மசாலா படங்களில் தோய்வு காட்சிகள் பார்த்து பொறுத்த  நமக்கு , இத்தகைய சமூக படத்தில் இருக்கும் தோய்வு ஒரு மைனஸாக தெரியாது .

மொத்தத்தில் ஜோக்கர் வசூலில் விருதுகள் வாங்காவிட்டாலும் , உண்மையான பல விருதுகள் வாங்குவது உறுதி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

Wagah-வாகா

பொதுவா நான் விமர்சனத்தில் கதை சொல்லமாட்டேன் , இருந்தாலும் இந்த படம் வெளியானது இந்த சுதந்திர தினம் சமயம் என்பதினால் சொல்லுகிறேன் , ஹீரோ பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டு கஷ்டப்பட்டு எப்படி இந்தியா வருகிறார் என்பது தான் இந்த தேசப்பற்று மிக்க திரைப்படத்தின் கதை , அவர் ஏன் ? எப்படி? பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டாரு என்பதை சொல்ல மாட்டேன் , அவர் இந்தியாவுக்கு திரும்பவும் வருவாரா மாட்டாரா ? தன் காதலியை காப்பற்றுவாரா ? என்று பரபரப்பாங்க மக்கள் மனதில் வந்தேமாத்திரம், ஜெய்ஹிந்த் என்று சொல்லிக்கொண்டே படம்  முடியும் போது தேசப்பற்று மனதில் உணர்ச்சி பொங்க வெளியே வரவேண்டும் என்றும் நினைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார் டைரக்டர் , ஆனால் அப்படி எந்த ஒரு உணர்ச்சி பொங்கலும் , புளியோதரையும் , மனசில் வரவில்லை நல்லா தயிர் சாதம் சாப்பிட்டு தூக்கம் வாரா மாதிரி தான் இருந்துச்சி இந்த படம்,  இப்படி நெகடிவ்வா படத்தை பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது , ஏன் என்றால் ஒரு படம் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று ,சமூக வலைத்தளங்களை வைத்து கொண்டு அசால்ட்டாக எழுதிவிட்டு செல்கிறோம் , நல்ல படங்களை பாராட்டி எழுதும் போது வரவேற்க்கும் படைப்பாளிகள் , இத்தகைய விமர்சனங்களையும் ஏற்று கொள்ளவேண்டும் .

முதலில் இந்த படத்தின் தலைப்பை எடுத்ததிலே தவறு , வாகா என்பது  இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் , ஆனால் இந்த படம் நடப்பதோ காஷ்மீர் எல்லையில் , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத பெயர் ? என்னதான் பாகிஸ்தான் நமக்கு பகை நாடாக இருந்தாலும் , இந்த படத்தில் பாகிஸ்தானை பற்றி மிகவும் கொடூரமாக காட்டுவதில் பயன் என்ன? இந்த மாதிரி படம் எடுக்கும் போது எந்த அளவுக்கு அங்கே நடக்கும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து எடுக்க வேண்டாமா ? அவர் காட்டி இருக்கும் பல காட்சிகள் கற்பனையா ? கற்பனை என்றால் எதற்கு பாகிஸ்தான் பெயரை அப்பட்டமாக காட்ட வேண்டும் ? சென்ஸார் போர்டு எப்படி வெளியே விட்டது ?ஒரு ஆடு பாகிஸ்தான் எல்லையில் நுழைந்தால் கூட பாகிஸ்தான் ராணுவம் கொன்று விடுவாங்க அந்த அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று காட்டுவது எந்த அளவுக்கு உண்மை ? நிஜமாகவே இது போல் அங்கு நடக்கிறதா ?அல்ல பாகிஸ்தான் ராணுவம் அந்த அளவுக்கு உண்மையான கொடூரவாதிகளா ?ஒரு தீவிரவாதியை காட்டி இருந்தால் கூட பரவாயில்லை , ஒரு நாட்டின் ராணுவத்தை இப்படி சித்திரப்பது சரியா? , அப்போ நீ பாகிஸ்தான் ஆதரவாளரா என்று கேட்காதீங்க , இந்த மாதிரி ஒரு sensitiveஆனா படங்கள் எடுக்கும் போது கற்பனையாக இருந்தாலும் கொஞ்சம் நம்பும்படியாக இருக்க வேண்டாமா ? கதையை பற்றி பார்த்தாச்சு இந்த படத்தின் நடிகர்களை பற்றியும் , கதாபாத்திரமும் பற்றி பார்ப்போம் .

விக்ரம் பிரபு BSF armyல் வேலை செய்கிறார் அவரோட உயரம் , உடல் வாகு சரியாக அமைந்து இருக்கு, ஆனால் இந்த மாதிரி கதை உள்ள படங்கள் 1990ல் விஜயகாந்த், அர்ஜுன் எல்லாம் பண்ணிட்டாங்க அப்பறம் எப்படி இந்த படத்தை தேர்ந்து எடுத்தார் என்று தான் தெரியல , ஹீரோயின் ரன்யா ராவ் காஷ்மீர் பொண்ணுக்கு சரியாய் பொருந்துறாங்க  , அவங்க நிறம் , உடை எல்லாம் காஷ்மீர் பொண்ணு மாதிரியே இருக்காங்க , ஆனால் பல இடங்களில் அவங்க தலையில் முக்காடு போட்டுக்கிட்டு , தலை மூடியை கொஞ்சம் முகத்துக்கு முன்னாடி விட்டு வரும் போது , ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வரும் ஹன்சிகாவை பார்த்தா மாதிரி இருந்துச்சி , சத்ரியன் கொஞ்சம் நேரம் வந்துட்டு போயிட்டாரு, சத்ரியன் உயரத்துக்கு அவர் ஆர்மியில் சேர முடியலன்னு சொன்ன டைரக்டர் , அப்பறம் எப்படி கருணாஸ் உயரத்துக்கு ஆர்மியில் டைரக்டர் சேர்த்தாரு ? ஒரு வேலை அவரு    MLA என்பதால் அவரை டைரக்டர் ஆர்மியில் சேர்த்துட்டாரு போல .வில்லன் நரசிம்மா படத்தில் ரகுவரன் ஒரு கோட் போட்டுக்கிட்டு வருவாரு, அது மாதிரியே வந்து இருக்காரு.

இமான் opening பாடல் ஆணியே புடுங்க வேண்டாம் டா ன்னு பாட்டில் படத்தை பற்றி மெசேஜ் சொல்லிட்டாரு , படம் இறுதி காட்சியில் வந்தே மாதரம் ,வந்தே மாதரம்ன்னு Bgm ல் இரைச்சலாக இசை போட்டுட்டாரு ,

இந்த படம் ஒரு காதல் காவியமாகவும் இல்ல , தேசப்பற்று ஓவியமாகவும் இல்ல

மொத்தத்தில் இது வாகா இல்ல  வீக்கா .

இப்படிக்கு
சினி கிறுக்கன்