வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

Dharmadurai - தர்மதுரை

இது நமக்கு பழக்கப்பட்ட சாதாரண கதையுள்ள படம் தான் ,ஆனால் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனசுல பதிவது போல, இயக்குனர் வடிவமைச்சிருக்காரு ,காட்சி அமைப்புகளும் எளிமையா ரசிக்கிறா மாதிரி இருக்கு,  அதே போல அந்த கதாபாத்திரங்களும் நல்லாவே நடிச்சிருக்காங்க, இது தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ், சோறு தான் பிரதானமாக நினைக்கும் மாப்பிளை அவர் முழிக்கிற முழியாகட்டும் சரி , எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவே  தனக்கு டிரஸ் இல்லைன்னு கவலைப்படுற தம்பி ,ஓ உங்க பேரு எவிடென்ஸ் இல்லையா என்று கேட்க்கும் டிரைவர் , அப்படின்னு சின்ன சின்ன கேரக்டர் கூட மனசுல பதிவது மிகப்பெரிய பிளஸ் .

விஜய்சேதுபதி நடிப்புல மனுஷன் பிண்ணி எடுக்குறாரு , அவரு ஆரம்பத்தில் தண்ணிய போட்டுக்கிட்டு,அம்மாகிட்ட , அண்ணன்கிட்ட , underwearஓட, அலப்பரை  பண்ணுவது, கஞ்சா கருப்பு கூட கலாட்டா பண்ணுவது , நக்கலா இங்கிலீஷ் பேசுவது , சாவு வீட்டுல ஆட்டம் போடுவது,ஐஸ்வர்யா கூட காதல் பண்ணுவது , பின்பு சோகக்காட்சியில் அழுவதை  விட , அம்மா சொல்லுக்காக கோபத்தை  கட்டுப்படுத்துவதுன்னு சகலமும் அள்ளிட்டாரு ,

தமன்னா, ஸ்ருஷ்டி , ஐஸ்வர்யா ராஜேஷ்ன்னு மூன்று ஹீரோயின் இருந்தாலும் ,  ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணாக வந்து வாழ்ந்துட்டாங்க , கொஞ்சநேரம் வந்தாலும் , செம்மயா பண்ணிட்டாங்க , சாரி அண்ணா கூப்பிட்டதுக்கு, மாமான்னு கூப்பிடுறேன்னு சொல்லும் போது அவ்வளவ்வு அழகா இருக்காங்க , அப்படியே அம்மாவாக வரும் ராதிகாவும் தான் , அவங்களும் அமைதியான அம்மாவாக , தன்னோட பையனுக்கு எதுவும் செய்யமுடியலையே ன்னு வருத்தப்படுவதும் சூப்பர்.

படம் முதல் பாதி கொஞ்சம் பொறுமையா போகுது , இரண்டாவது பாதி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையால் தப்பியது , படத்தில் எந்த ஒரு காதாபாத்திரமும் வில்லனாக சித்தரிக்கவில்லை , சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை காட்டி இருக்காரு டைரக்டர் சீனுராமசாமி ,பாடல்களை விட bgm ல் நல்லா பண்ணியிருக்காரு யுவன்  ,

எனக்கு படம் பார்க்கும் போது , வாரணம் ஆயிரம் , ஆட்டோகிராப் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த கிராமத்து கதை போல எனக்கு தோணுச்சி .காதல் தோல்வியால் தன்னை சீரழித்து கொள்ளும் விஜய்சேதுபதி பார்க்கும் போது வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்திச்சி , ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட் , இதில் அம்மா செண்டிமெண்ட் , மூணு ஹீரோயின் வந்தாலே நம்மக்கு ஆட்டோகிராப் தான் தோணுது , ஆட்டோகிராப் சினேகா மாதிரி தமன்னா வருவாங்க நினைத்தேன் , ஆனால் அவங்க,  நான் ஹீரோயின் தான் அதனாலா ஹீரோ கூட தான் சேர்வேன்ன்னு சேர்ந்துக்கிறாங்க .நல்லவேளை படத்தை சோகமா முடிச்சிடுவாங்க பதறும் போது , அமைதியா நல்லபடியா முடிச்சிட்டாரு சீனுராமசாமி .

மொத்தத்தில் தர்மதுரை ஒரு அளவிற்கு தர்மம் தலைகாக்கும் துரையாக வந்துஇருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments