ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

Wagah-வாகா

பொதுவா நான் விமர்சனத்தில் கதை சொல்லமாட்டேன் , இருந்தாலும் இந்த படம் வெளியானது இந்த சுதந்திர தினம் சமயம் என்பதினால் சொல்லுகிறேன் , ஹீரோ பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டு கஷ்டப்பட்டு எப்படி இந்தியா வருகிறார் என்பது தான் இந்த தேசப்பற்று மிக்க திரைப்படத்தின் கதை , அவர் ஏன் ? எப்படி? பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டாரு என்பதை சொல்ல மாட்டேன் , அவர் இந்தியாவுக்கு திரும்பவும் வருவாரா மாட்டாரா ? தன் காதலியை காப்பற்றுவாரா ? என்று பரபரப்பாங்க மக்கள் மனதில் வந்தேமாத்திரம், ஜெய்ஹிந்த் என்று சொல்லிக்கொண்டே படம்  முடியும் போது தேசப்பற்று மனதில் உணர்ச்சி பொங்க வெளியே வரவேண்டும் என்றும் நினைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார் டைரக்டர் , ஆனால் அப்படி எந்த ஒரு உணர்ச்சி பொங்கலும் , புளியோதரையும் , மனசில் வரவில்லை நல்லா தயிர் சாதம் சாப்பிட்டு தூக்கம் வாரா மாதிரி தான் இருந்துச்சி இந்த படம்,  இப்படி நெகடிவ்வா படத்தை பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது , ஏன் என்றால் ஒரு படம் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று ,சமூக வலைத்தளங்களை வைத்து கொண்டு அசால்ட்டாக எழுதிவிட்டு செல்கிறோம் , நல்ல படங்களை பாராட்டி எழுதும் போது வரவேற்க்கும் படைப்பாளிகள் , இத்தகைய விமர்சனங்களையும் ஏற்று கொள்ளவேண்டும் .

முதலில் இந்த படத்தின் தலைப்பை எடுத்ததிலே தவறு , வாகா என்பது  இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் , ஆனால் இந்த படம் நடப்பதோ காஷ்மீர் எல்லையில் , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத பெயர் ? என்னதான் பாகிஸ்தான் நமக்கு பகை நாடாக இருந்தாலும் , இந்த படத்தில் பாகிஸ்தானை பற்றி மிகவும் கொடூரமாக காட்டுவதில் பயன் என்ன? இந்த மாதிரி படம் எடுக்கும் போது எந்த அளவுக்கு அங்கே நடக்கும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து எடுக்க வேண்டாமா ? அவர் காட்டி இருக்கும் பல காட்சிகள் கற்பனையா ? கற்பனை என்றால் எதற்கு பாகிஸ்தான் பெயரை அப்பட்டமாக காட்ட வேண்டும் ? சென்ஸார் போர்டு எப்படி வெளியே விட்டது ?ஒரு ஆடு பாகிஸ்தான் எல்லையில் நுழைந்தால் கூட பாகிஸ்தான் ராணுவம் கொன்று விடுவாங்க அந்த அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று காட்டுவது எந்த அளவுக்கு உண்மை ? நிஜமாகவே இது போல் அங்கு நடக்கிறதா ?அல்ல பாகிஸ்தான் ராணுவம் அந்த அளவுக்கு உண்மையான கொடூரவாதிகளா ?ஒரு தீவிரவாதியை காட்டி இருந்தால் கூட பரவாயில்லை , ஒரு நாட்டின் ராணுவத்தை இப்படி சித்திரப்பது சரியா? , அப்போ நீ பாகிஸ்தான் ஆதரவாளரா என்று கேட்காதீங்க , இந்த மாதிரி ஒரு sensitiveஆனா படங்கள் எடுக்கும் போது கற்பனையாக இருந்தாலும் கொஞ்சம் நம்பும்படியாக இருக்க வேண்டாமா ? கதையை பற்றி பார்த்தாச்சு இந்த படத்தின் நடிகர்களை பற்றியும் , கதாபாத்திரமும் பற்றி பார்ப்போம் .

விக்ரம் பிரபு BSF armyல் வேலை செய்கிறார் அவரோட உயரம் , உடல் வாகு சரியாக அமைந்து இருக்கு, ஆனால் இந்த மாதிரி கதை உள்ள படங்கள் 1990ல் விஜயகாந்த், அர்ஜுன் எல்லாம் பண்ணிட்டாங்க அப்பறம் எப்படி இந்த படத்தை தேர்ந்து எடுத்தார் என்று தான் தெரியல , ஹீரோயின் ரன்யா ராவ் காஷ்மீர் பொண்ணுக்கு சரியாய் பொருந்துறாங்க  , அவங்க நிறம் , உடை எல்லாம் காஷ்மீர் பொண்ணு மாதிரியே இருக்காங்க , ஆனால் பல இடங்களில் அவங்க தலையில் முக்காடு போட்டுக்கிட்டு , தலை மூடியை கொஞ்சம் முகத்துக்கு முன்னாடி விட்டு வரும் போது , ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வரும் ஹன்சிகாவை பார்த்தா மாதிரி இருந்துச்சி , சத்ரியன் கொஞ்சம் நேரம் வந்துட்டு போயிட்டாரு, சத்ரியன் உயரத்துக்கு அவர் ஆர்மியில் சேர முடியலன்னு சொன்ன டைரக்டர் , அப்பறம் எப்படி கருணாஸ் உயரத்துக்கு ஆர்மியில் டைரக்டர் சேர்த்தாரு ? ஒரு வேலை அவரு    MLA என்பதால் அவரை டைரக்டர் ஆர்மியில் சேர்த்துட்டாரு போல .வில்லன் நரசிம்மா படத்தில் ரகுவரன் ஒரு கோட் போட்டுக்கிட்டு வருவாரு, அது மாதிரியே வந்து இருக்காரு.

இமான் opening பாடல் ஆணியே புடுங்க வேண்டாம் டா ன்னு பாட்டில் படத்தை பற்றி மெசேஜ் சொல்லிட்டாரு , படம் இறுதி காட்சியில் வந்தே மாதரம் ,வந்தே மாதரம்ன்னு Bgm ல் இரைச்சலாக இசை போட்டுட்டாரு ,

இந்த படம் ஒரு காதல் காவியமாகவும் இல்ல , தேசப்பற்று ஓவியமாகவும் இல்ல

மொத்தத்தில் இது வாகா இல்ல  வீக்கா .

இப்படிக்கு
சினி கிறுக்கன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments