வெள்ளி, 18 நவம்பர், 2016

Kadavul Irukaan Kumaru - கடவுள் இருக்கான் குமாரு

கடவுள்  இருக்கான் குமாரு படத்தில கதை இருக்கா ,  எப்போ டா  ராஜேஷ் படத்தில் கதை இருந்து இருக்கு ? சரக்கு தான் டா இருக்கும் , இந்த படத்திலும் அப்படி தான் ,
காமெடி எப்படி டா இருக்கு ? இருக்கு ஆனா இல்ல ,அதாவது sms , ஓகே ஓகே போல சூப்பரா இல்ல ஆனா ஓரளவுக்கு சிரிக்க காமெடி இருக்கு , அப்போ ஆல் இன் ஆல் அழகுராஜா  பார்ட் -2 வான்னு கேட்காதீங்க, அங்க அங்க அப்படி தான் ஆரம்பத்தில்  படம் போகுது,

ஓகே ஓகே படத்தில் இருக்கும் சில காட்சிகளை திருப்பி போட்டா இந்த கடவுள் இருக்கான் குமாரு , ஓகே ஓகே படத்தில் ஹீரோ கல்யாணத்தை நிறுத்த சென்னை to பாண்டிச்சேரி போவாரு , இதில் ஹீரோ கல்யாணத்தை நடத்த பாண்டிச்சேரி to சென்னை போகிறார் , வழக்கமாக சந்தானம் வருவாரு ஆனா அவர்  இல்ல , அதுக்கு சபஸ்ட்டியூட் , R.J .பாலாஜி வராரு, ராஜேஷ்க்கு பாண்டிச்சேரி ராசியான இடம் போல , ஷங்கர் அவரோட படத்தில் எப்படி சுவருக்கு , trainக்கு பெயிண்ட் அடிச்சி வைப்பாரோ , அதுபோல இவரோட எல்லாப்படத்திலும் கல்யாணாச்சத்திரம் வந்துரும் அது smsல் ஆரம்பிச்சி இப்போ கடவுள் இருக்கான் குமாரு வரைக்கும்

ராஜேஷுக்கு கலாய்க்கிறது  கை வந்த கலை , அதை இந்த படத்தில  செம்மையா பண்ணி இருக்கார் , but  அவரோட முந்தைய  படங்களில் இருக்கும் கதாபாத்திரத்தை கலாய்ப்பாரு , ஆனா இதில் நம்மை  சுற்றி நடக்கிற விஷயத்தை கலாய்ச்சியிருக்கார், உண்மையா சொல்லணும்ன்னா லொள்ளு சபா போல இருக்கு , குறிப்பா அந்த சொல்லுவது எல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து பண்ணும் சீன் செம்ம , அதில் பாலாஜி பண்ணும் அட்டகாசம் அல்டிமேட் , சரவணா ஸ்டோர் ad , BSNL ad , ப்ரேமம் சாய்பல்லவி vs சுருதிஹாசன் பற்றி சொல்லுவது  சினிமா fieldல  இருக்கும் ஆட்களையே நீங்க கலாய்ப்பது செம்ம தில் தான் பாஸ் உங்களுக்கு, எம்.எஸ். பாஸ்கர் , ஜி வி பிரகாஷ் மீட் பண்ணும் காட்சி சூப்பர் , அந்த காட்சிகளில் மதம் மாறுவது பற்றி பேசுவது சமூகத்தில் உண்மை என்றாலும் , அந்த மதத்தை சார்ந்தவங்க எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் படம் வந்தது , உங்களுக்கு கடவுள் இருக்கான் ராஜேஷ்ன்னு தான் சொல்லணும் .எல்லோரும்  பேய் படம் எடுக்குறாங்க அதனால ராஜேஷுக்கும் பேய் படம் ஆசை வந்துடுச்சி போல , ஒரு பேய் காட்சி வச்சி , அதுக்கு ஒரு பாட்டு வேற வெச்சி இருக்காரு, அது  மரணமொக்கையாக இருந்துச்சி .அது கொஞ்சம் கூட தேவை இல்லாத காட்சி , படத்தை இரண்டு மணி நேரம் வரணும்ன்னு அதுக்காக நடுவுல சொருகிட்டாரு போல.

சரி படத்தை பற்றி நிறைய சொல்லியாச்சி  , படத்தின் கேரக்டர் பற்றி பார்க்கலாம் ,  ஜி.வி.பிரகாஷ் படத்தில எப்படி இருக்காருன்னு பார்த்தா , ரொம்ப குட்டியா இருக்காருன்னு சொல்லணும் , பாட்டில் குரூப் டான்ஸ் ஆடும் போது , இருக்கற எல்லா டான்ஸர்ஸ் விட ரொம்ப குள்ளமாக தெரிகிறார் , பாவம் அவரை ரோபோ ஷங்கர் அந்த height  வச்சி கலாய்ச்சி இருக்கார் .நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு

பிரகாஷ்ராஜ் , ரோபோ ஷங்கர் , சிங்கம்புலி காம்போ செம்ம , ஆனந்தி , நிகிகல்ராணி   compare பண்ணா  கல்ராணிக்கு ஸ்கோப் கம்மி தான் , ஆனந்திக்கு ஏன் நிறைய மேக்கப் போட்டு இருக்காங்க ? இல்ல அவங்க நிஜமான நிறமே அது தான ? கொஞ்சம் செயற்க்கையாக தெரிஞ்சாக. மொட்டை ராஜேந்திரன் படத்தில் வச்சா நல்லா காமெடி ரீச் ஆகும் நினைச்சி வச்சி இருப்பாரு போல , ஆனா அவர் காமெடி பெருசா எடுபடவில்லை

key பிளேயர் of the movieன்னு சொல்லனும்னா அது பாலாஜி தான் , மனுஷன் பட்டைய கிளப்பிட்டாரு , படம் ஆரம்பத்தில் அவரோட காமெடி கொஞ்சம் மொக்கயா இருக்கு போல தெரிஞ்சிது, ஆனா அந்த சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சியில் , ஐயோ அம்மான்னு கத்துவது எல்லாம் சூப்பர் , பல இடங்களில் timing counter செம்மயா கொடுத்தாரு , ஆனால் இந்த காமெடி இப்போ இருக்கும் trendக்கு கொஞ்சம் நாளைக்கு  செட் ஆகும் ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்தா பெருசா சிரிப்பு வராது, பாலாஜி ஒரு t-shirt ல laugh on trouble போட்டு இருக்காரு , அந்த வார்த்தைகள் தனியா பிரிண்ட் எடுத்து cello tape  போட்டு ஒட்டி இருப்பார் போல , cello tape தெரியுது , assistant directors கவனிக்கவில்லையா ? ஏன் சார் budget problem மா ? printed  t-shirt கடையில் print பண்ணி போட்டு இருக்கலாமே .


மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு  - கடவுள் தான் காப்பாத்தணும் குமாரு

இப்படிக்கு
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 நவம்பர், 2016

Acham Yenbadhu Madamaiyada - அச்சம் என்பது மடமையடா

 கௌதம்மேனன் + ரஹமான் + சிம்பு  ஒரு ஹிட் காம்போ கொடுத்து பல வருஷம் கழிச்சி மீண்டும் அதே காம்போ ஹிட் கொடுக்குமா ? சிம்புவிற்கு ஒரு பிரேக் பாயிண்ட் கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்த ஒரு படம் , நிச்சயமா அந்த எதிர்ப்பார்புக்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் கொடுக்கல இந்த படம் .

கௌதம்மேனன் ஒரு classy டைரக்டர், அவரோட படங்களில்   அது crime படம்னாலும் சரி , காதல் படம்னாலும் சரி , காதல் அப்படியே fresh காற்று சுவாசிப்பது போல இருக்கும் , அதுவும் இந்த படத்தில் இருவரும் மாற்றி மாற்றி காதல் propose பண்ணும் situation செம்ம , அதிலும் தள்ளி போகாதே பாடல் வரும் இடம் , இதுவரைக்கும் யாரும் இப்படி வச்சது இல்ல , ரொம்ப ஹிட்ஆனா அந்த பாட்டு அப்படி ஒரு இடத்தில வைப்பாருன்னு சத்தியமா நினைக்கவில்லை, மனசுல அப்படியே நிக்குது,  choreographer பேருல ஏன் கௌதம்மேனன் பேரு போட்டாங்கன்னு அந்த பாட்டு பார்க்கும் போது தான் எனக்கு புரிஞ்சிது , இது வரைக்கும் எந்த படத்திலும் choreographer name போடும் போது directors பேரு போட்டது கிடையாது 

படம் ரெண்டு different extremeல பயணிக்குது , முதல் பாதி வேற ஒரு கதைக்களம் போல இருக்கு , இரண்டாவுது பாதி அப்படியே முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் போல இருக்கு , முதல் பாதி அட வெறும் காதல் படமாக தான் போகபோது நினைச்சேன் , ஆனா தள்ளி போகாதே பாட்டு வந்த பிறகு படத்தோட கதைக்கு வேற ஒரு நிறம் மாறுது , இரண்டாவுது பாதி த்ரில்லிங்காக மாறிடுச்சு , ஆனா base line காதல் மட்டும் தான் , படம் ரொம்ப நிதானமாக ஆரம்பிக்குது , ஆனா போக போக அப்படியே அந்த audience pulse அப்படியே ஏற்றிவிட்டார் , முதல் பாதியில் ரெண்டு வசனத்துக்கு ஒரு பாட்டுன்னு வருது , அப்படியே அவங்க இரண்டு பேரும் travel பண்ண ஆரம்பிக்கும் போது , அடேங்கப்பா எத்தனை பாட்டுபா  வரும் ? கொஞ்சம் bore அடிக்குதேன்னு கேட்கத்தோணுது , ஏன்னா எல்லா பட்டும் முதல் பாதியிலே வந்துடுச்சி , இரண்டாவுது பாதியில் பாட்டே கிடையாது , இது மிகவும் புதிய முயற்சி  யாரும் அப்படி பண்ணது கிடையாது , ஏன்னா நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி நிச்சயமா ஒரு பாட்டு வைப்பாங்க அதுவே படத்தோட கதைக்கு வேகத்தடையா இருக்கும்  , ஆனா அதை கௌதம் மேனன் செய்யவில்லை , இரண்டாவுது பாதி ஏன் எதுக்கு இது எல்லாம் நடக்குதுன்னு கடைசி காட்சி வரை சொல்லாமல் கொண்டு போயிருக்கார் அது அருமை , அப்பறம் படம் fullஆக சிம்பு பேரு என்னன்னு சொல்லாமல் கொண்டு போயிருப்பது செம்ம , அதுவே ஒரு curiosity படம் பார்க்கும் போது கிளப்பிவிடுது , படம் பார்த்தவங்க ப்ளீஸ் அந்த பேரு என்னன்னு வெளியே சொல்லாதீங்க , அப்புறம் அந்த சுவாரிஸ்யம் போய்டும் , 

படத்தின் negativeன்னு சொல்லனும்னா , சிம்பு ஒரே படத்தில் வேற வேற கெட்டப்பில் வருகிறார் , ஓ தசாவதாரமான்னு கேட்க்காதீங்க , படம் லேட் ஆனதால் , ஒரு ஷாட்ல ஒல்லியாக இருக்கார் , ஒரு ஷாட்ல கொஞ்சம் குண்டாக தெரிகிறார் படத்தில் , சிம்புவிற்கு ஒரு request ப்ளீஸ் உடம்பை கொஞ்சம் maintain பண்ணி பழய சிம்புபோல வாங்க ,சில பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் இருக்கு , இருந்தாலும் அவை ஒரு பெரிய தப்பு போல தெரியவில்லை , ஏன்னா படத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் அதை மறக்க செய்துவிட்டது 

ஹீரோயின்க்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் ,மஞ்சிமா மோகன் நல்லா  பண்ணி இருக்காங்க , கௌதமின் favorite dancer சதிஷ் இந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்கார்.

முக்கியமான விஷயம் என்னோட favorite மியூசிக் டைரக்டர்  ரஹமான், மனுஷன் பிண்ணி  பெடல் எடுத்துட்டார் , முதலில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு கவிதைநயமாக இருக்கு , அந்த பாடல்கள் எல்லாம் கொஞ்சம் lateஆகா தான் மனசில் பதியும் , தள்ளி போகாதே பாட்டை பற்றி நான் சொல்லவே  தேவையில்லை , ஏன்னா எந்த அளவுக்கு அந்த பாட்டு ஹிட்ன்னு தெரியும் , repeat modeல் ஓடிக்கிட்டு இருக்கும் பாட்டு அது , bgm செம்ம இரண்டாவுது பாதியில் நிறைய இடங்களில் தள்ளி போகாதே அப்படியே mild ஆகா வந்து போவது செம்ம , ரஹமான் ரஹமான் தான், தலைவா ur great .

படம் பேருக்குயெட்டாற்போல சிம்பு தன் தோல்விக்கு பின் அச்சம் என்பது மடமையடா என்று அச்சத்தை உடைச்சிகிட்டு  இந்த படத்தின்  மூலமாக வந்து இருக்கார் என்று சொல்லணும்.

மொத்தத்தில் அச்சம் என்பது மடமையடா அச்சம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்