வெள்ளி, 22 டிசம்பர், 2017

Velaikkaran - வேலைக்காரன்

இங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ  , இந்த போஸ்டர்   falling down என்ற  இங்கிலிஷ் படத்தோட காபின்னு  சொன்னாங்க ,  நான் அந்த இங்கிலிஷ் படத்தை பார்க்கல, அதோட கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா என்று  கூட தெரியாது  , ஆனால் இந்த போஸ்டர் இந்த படத்துக்கு ரொம்ப சரியாக பொருந்தி இருக்கு , ஒரு கையில் பை , மறுகையில் அருவா , ஆமாங்க நாம் செய்யும் தொழிலும் , ஒரு ரவுடி செய்யும் தொழிலும் பெரிய மாற்றம் இல்ல என்பதை  நமக்கு புரியவைக்கும் , ஆனால் அது தான் படத்தோட முழு கதை என்று நினைச்சுடாதீங்க .

படம் ஆரம்பித்து கருத்தவன் எல்லாம் கலீஜா பாட்டு முடிச்சு , அப்படி இப்படி படம் போகும் போது , ஹீரோ இந்த குப்பத்தில் இருப்பவர்களை  மாற்றி, நல்ல பேரு வாங்கும் பழய formula படம் போல நினைக்கும் போது,  இந்த கத்தி படம் போல கார்ப்ரேட் பற்றி சொல்லும் படம் என்று நினைக்கும் போது , அப்படியே படம் கொஞ்சம் change ஆகி intervelலில் அட ச்ச்சே,  இதை தான் நாமும் பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்று நம்மை நாமே கேள்வி கேட்கவைத்து நம்மை   நிமிர வைக்குது .அதில் fahadh ஒரு பக்கம் , சிவா மறுபக்கம் பேசும் காட்சி, சிவாவின் வீட்டில் வரும் ஒரு salesman கிட்ட பேசும் காட்சியும் , பிரகாஷ் ராஜ் இண்டெர்வெல்க்கு முன்னாடி சொல்லும் காட்சி,  நிச்சயமா நம்மை கை தட்ட வைக்குது 

முதல் பாதி விறுவிறுப்பாக முடிய , அதே வேகத்தில் இரண்டாவது பாதி ஆரம்பிக்க , படம் போக போக வளவளன்னு இழுத்துக்கிட்டு போகுது , அதுவும் கடைசி 30 நிமிடங்கள் எப்போ முடிப்பீங்கன்னு கேட்க தோணுது , கடைசியில் ரொம்ப நேரம் சிவா பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார் .சொல்ல வந்த விஷயம் நல்லது என்றாலும், ரொம்ப நேரம் திகட்ட திகட்ட சொல்லிகிட்டே போறாங்க .ஐயா நீங்க சொல்லவந்தது புரிஞ்சிது ஐயா ,போதும்யா முடிச்சிகோங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகுதுன்னு ஒரு feel வருது .

படத்தின் ப்ளஸ் வசனம் எல்லாமே நம்மை யோசிக்கவைக்குது , அட நாம்  எப்படி எல்லாம் இந்த சமூகத்தில் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் தோன்றும் , மேலும் வர்த்தகம் எப்படி எல்லாம் நடக்குது , இந்த சூப்பர் மார்க்கெட்டில் எப்படி எல்லாம் யுக்தி பயன்படுத்துறாங்க, இந்த முதலாளி உலகம் எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பதை காட்டுது .முக்கியமாக அந்த குப்பத்து செட் ரொம்ப தத்துரூபமாக இருக்கு , அதுக்கு நிறைய செலவு பண்ணிருக்காங்க .

படத்தின் மைனஸ் இரண்டாவது பாதியின் length, அதை குறைத்து இருக்கலாம், சிவாவும் , fahadhம் மோதிக்கொள்ளும் காட்சி இன்னும் strong ஆகா பதிவு பண்ணிருக்கலாம்,சிவா & நயன்தாரா மாற்றி மாற்றி help செய்து காதலில் உடனே விழுந்து டூயட் போடுவது bore தான் .இந்த குப்பத்து செட்க்கு நிறைய செலவு  பண்ணதால என்னவோ , சில இடங்களில் படம் ரொம்ப சுமாரா தெரிகிறது , அந்த மீட்டிங் போடும் இடம் , இறுதி தீப்பற்றி கொள்ளும் காட்சிகள் எல்லாம் பார்க்க சும்மா எடுக்கணும்ன்னு  எடுத்தா மாதிரி இருக்கு .

என்னை  பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிச்சதில் உருப்படியான கதையுள்ள படம் இது தான் , அதுவும் நடிப்பிலும் நல்லாவே பண்ணி இருக்கார் , இது வரை நடிச்சதில் சும்மா குழந்தைகளை கவர் பண்ணுவது போல, சில நேரங்களில் ரொம்ப சின்ன புள்ளதனமா  பண்ணுவார் , இதில் சரியாக matured ஆகா செய்து இருக்கார்,சில இடங்க்ளில் கொஞ்சம் குண்டாக சில இடங்களில் ஒல்லியாக தெரிகிறார் , அவோரட கலர் tone கூட  சாதாரண  ஆளு என்பதால் அதை கொஞ்சம் மாற்றி இருக்காங்க , ஆனால் சில இடங்களில் அது மிஸ்ஸிங் ,இவர் director's actor நிரூபித்து இருக்கார் , அதனால வரும் படங்களில் டைரக்டர் சரியாக யூஸ் பண்ணிக்கணும் , சும்மா சிவாவின் fans திருப்தி படத்தணும்ன்னு அவரை அப்படியே நடிக்க விடாதீங்க , அதே போல சிவாவும் இது போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை நடிக்கலாம் . அப்பறம்  சிவாவிற்கு ஒரு சின்ன suggestion ஏதோ weekend என்றால் அது businessகாக special ஷோ போடுவது  ஓகே தான், ஆனால்   முதல் நாள்  முதல் காட்சி ரஜினி  விஜய் , அஜித் போல காலை 5 மணி , 8 மணி ஷோ போடுவது, வெளியே பெரிய பெரிய கட் அவுட் வைச்சி பெரிய ஸ்டார் போல build up பண்ணுவது கொஞ்சம்  ஓவர், இன்னும் நீங்க வளரனும் , உங்களை விட விஜய் சேதுபதி எங்கோ  இருக்கார் , அதனாலே கொஞ்சம் அடங்கி இருப்பது நலம் .(இப்படி சொல்லுவதால் நான் குறிப்பிட்ட எந்த நடிகனின் ரசிகனோ அல்லது சிவாவின் எதிர்ப்பாளனோ அல்ல )

தீபாவெங்கட் ரொம்ப நல்லா படத்தில் பேசியிருக்காங்க , i am sorry நயன்தாரா நடிச்சிருக்காங்க , என்னமா ஆச்சி உங்களுக்கு? நல்ல ஸ்கோப் இருக்குற படம்தானே பண்ணுவீங்க ? டைரக்டர் ராஜா sentiment ஆகா உங்களை கூப்பிட்டாரா ? படத்தில் காட்சிகளே ரொம்ப கம்மி , அவரோட கேரக்டர் சிவாவுக்கு help பண்ணுவது போல இருந்தாலும் , படத்திற்கு பெரிசா அவங்க கேரக்டர் உதவவில்லை .சில இடங்களில் over make up , சில இடங்களில் சிவாவிற்கு அக்காவாக தெரிகிறார், நயன்தாரா சிவாவிற்கு சரியான ஜோடி அல்ல .

பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் , சினேகா , ரோகினி , சார்லி மன்சூர் அலிகான் , ராமதாஸ் , வினோதினி, தம்பிராமையா இப்படி k.s.ரவிக்குமார் படம் போல நட்சத்திர பட்டாளம் பெருசு , எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தான் வராங்க , இதுக்கு மேல அவங்க எல்லோருக்கும் படத்தில் ஸ்கோப் தர முடியாது , , இவர்கள் எல்லாம் சேர்ந்து மீட்டிங் போடும் காட்சி எனக்கு சிவாஜி படத்தை ஞாபகம் படுத்தியது , எனக்கு பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் கேரக்டர் புடிச்சி இருந்துச்சி , இது போக  சதிஷ் , r.j,பாலாஜி, ரோபோ ஷங்கர்ன்னு ஒரு காமெடி பட்டாளம் வேற இருக்கு , ஆனால் பெரியளவில் அவங்களுக்கு படத்தில் இடம் இல்லை , அதிலும் r.j,பாலாஜிக்கு சுத்தமாக ஒன்னும் இல்லை .

fahadh முதல் தடவை தமிழில் , பல இடங்களில் சின்ன சின்ன வில்லத்தன reaction கொடுத்து ஸ்கோர் பண்ணுகிறார் , அதிலும் ஒரு கார் காட்சி வரும் அதில் அவர் பண்ணும் reactions மற்றும் இறுதியில் சிவாவிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் 

படத்தின் பெயர் வேலைக்காரன்னு பெயர் வைச்சாங்களும் வைச்சாங்க  , படத்தில் நிறைய தடவை வேலைக்காரன் வேலைக்காரன் வார்த்தை வருது , பேசாமல் இந்த படத்தில் வேலைக்காரன் எதன்னை தடவை சொல்லிருக்காங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம் .

டைரக்டர் மோகன் ராஜாவை பாராட்டி ஆகா வேண்டும் , பல வருஷங்களாக தெலுங்கு டப்பிங் படங்களை இயக்கியவர் , தனி ஒருவனில் இருந்து வேலைக்காரன் வரை , தனி ஒருவனாக கதை , திரைக்கதை, வசனம் என்று தனித்து நிற்கிறார், தனி ஒருவன் அளவிற்கு தனித்து நிற்கவில்லை என்றாலும் , படம் சொல்லிக்கும்படி நன்றாகவே இருக்கு .

மொத்தத்தில் வேலைக்காரன் முதல் பாதி smart  work , இரண்டாவது பாதி ரசிகர்களுக்கு hard work .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

சனி, 16 டிசம்பர், 2017

Mayavan - மாயவன்

c.v.குமார் தயாரிப்பு என்றால் நிச்சயமா நம்பி அந்த படத்துக்கு போகலாம் , பிசா , சூது கவ்வும் , தெகிடி இப்படி நல்ல படங்கள் லிஸ்ட் இருக்கு , இப்படிப்பட்ட c.v.குமார் முதல் முறையாக directionல இறங்கிட்டாரு , இது அவரோட கதை மற்றும் direction மட்டும் தான் , திரைக்கதை & வசனம் நலன் குமாரசாமி செய்து இருக்கிறார் .
அநேகமா இந்த படத்துக்கு இப்படி ஒரு ஐடியா c.v.குமார் இன்று , நேற்று நாளை படம் தயாரிக்கும் பொழுது வந்து இருக்கும் போல , ஏன்னா அப்படி கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் இது , ஒன்னு சொல்லணும் என்றால் இன்று , நேற்று நாளை படத்துல  வர ஒரு செட் , இதில் ஆராய்ச்சி செய்யும் இடம் செட் அது போலவே இருக்கு .

படத்தை பற்றி சுருக்கமா சொல்லிடுறேன் 

படம் முதல் பாதி நல்ல interesting ஆகா போகுது , யார் என்ன பண்ணறாங்க , எதுக்காக பண்ணுறாங்க என்று ஒரு கேள்வி இன்டெர்வல் வரைக்கும் வச்சி இருக்காங்க 
யார் எப்படி பண்ணறாங்க என்று தெரிஞ்ச பிறகு கொஞ்சம் தோய்வு இருக்கு , அதே போல ஜாக்கி ஷெராப் வந்த பிறகு படம் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தாலும் , ரொம்ப  நீளமாக போய்கிட்டு இருக்க பீல் வருது . அட இப்போ முடிச்சிடும் போல அப்படி நினைக்கும் போது, படம் தொடர்ந்துக்கிட்டே இருக்கு .

படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் , மாநகரம் , நெஞ்சில் துணிவுஇருந்தால் என்று இரெண்டு ஹீரோ படங்கள் செய்தார் , இப்போ இந்த படத்தில தனி ஆளாக நல்லாவே நடித்து இருக்கிறார் , அவர் படம் ஆரம்பத்தில் மனநோய் பாதிக்கபட்டு நடிக்கும் பொழுது நன்றாகவே பண்ணி இருக்கிறார் , அவருக்கு பெரிய மைனஸ் அந்த ஒட்டு மீசை தான் ரொம்ப செயற்கையாக , கொஞ்சம் கூட செட் ஆகல .

படத்தின் ஹீரோயின் லாவண்யா கொஞ்சம் ப்ளஸ் , கொஞ்சம் மைனஸ் 

டேனியல் பாலாஜி, மைம் கோபி  படத்தின் ப்ளஸ் 

படத்தின் கதையின் உள்நோக்கத்தை சொல்லும் பொழுது கொஞ்சம் புரியல , நல்ல detail ஆகா சொல்லி இருக்காங்க ஆனால் அது தான் அந்த வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் குழம்பி விட்டது ,ஐயோ என்னடா ஏதோ சொன்னாங்களே நாம் தான் கவனிக்காமல் மிஸ் பண்ணிட்டோம என்று ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .அது மட்டும் இல்லமால் ஜெயப்ரகாஷ் அந்த science விளக்கம்  தரும் பொழுது டப்பிங் லிப் sync சுத்தமா ஆகவில்லை  

இசை ஜிப்ரான் படத்தின் இன்னொரு ப்ளஸ் , bgm முதல் பாதியில் நமக்கு நல்ல feel  வரவச்சியிருக்கார் 

டேய் இது எல்லாம் நம்புறா மாதிரியா இருக்குன்னு கேள்வி கேட்காதீங்க , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா , ரசித்து அட சூப்பர் டா சொல்லுவோம் , மேலும் இது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு, அப்படி என்பதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் சொன்னதை படம் முடியும் பொழுது போடுறாங்க அதை மறக்காம பார்த்துட்டு எழுந்து வாங்க.

மொத்தத்தில் மாயவன் முதல் முயற்சி , புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 15 டிசம்பர், 2017

Aruvi - அருவி

அருவி செம்ம செம்ம செம்ம செம்ம  ,  நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும் என்னவெல்லாம் ஒரு படத்தை பாராட்டவேண்டுமோ அப்படி தமிழில் இருக்கின்ற எல்லா வார்த்தையும் போடணும் இந்த படத்துக்கு, அப்படி ஒரு படம் தான் இந்த அருவி 

படத்துக்கு பெயர் அருவின்னு வைச்சாங்களும் வைச்சாங்க, படம் அருவி போல ஓடுது ,அருவி எப்படி ஓடும் ? சில இடங்களில் சல சலப்பாக சத்தமாக ஓடுது , சில இடங்களில் அமைதியாக ஓடுது , சில நேரங்களில் காட்டாறாக எல்லாத்தையும் அடிச்சிட்டு ஓடும் , அப்படி தான் இந்த படத்தின் திரைக்கதை கூட , 

இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில் மாநகரம் , 8தோட்டாக்கள் , குரங்கு பொம்மை , லென்ஸ் , ஒரு கிடாயின் கருணை மனு வரிசையில் ஒரு அருமையான படம் , மேலே சொன்ன எல்லா படத்தையும் தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு வருஷ கடைசியில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் தரமான படம், படம் அபப்டி பட்டைய கிளப்பது .அதுவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து  ஒரு மாஸ் படம் தந்து இருக்காங்க.

படம் ஆரம்பிக்கும் போது என்னமோ கொஞ்சம் டாக்குமெண்ட்ரி , இல்லனா  அப்பா மகள் உறவு சொல்லிய தங்கமீன்கள் போல வருமோ ? ஒரு சந்தேகம் வருது , ஆனால் போக போக அது அப்படியே மாறிவிடுகிறது , அருவியோட வளர்ச்சி காட்டும் இடங்கள் அருமை , கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் காட்டுவது சூப்பர் , குறிப்பா 90's  குழந்தை வளர்ச்சியாக காட்டுவது first class , cassette சுத்துவது , டிவி antenna திருப்புவது, அப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் அந்த காட்சியில் வருவது அருமை, அப்படியே பள்ளிவருவதில் அருவி வளரும் காட்சி காட்டுவது ultimate, அதில்  நிறைய சின்ன சின்ன விஷயங்கள், பருவ வயதில் பெண்ணுக்கு வரும் உடல் மாற்றங்கள் , மனமாற்றங்கள் , adolescent வயதில் வரும் உணர்வுகள் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டி இருக்காங்க, சின்ன வயதில் காட்டும் இரண்டு குழந்தைகளின் கண்கள் அப்படியே பெரிய அருவி பெண்ணை போலவே காட்டி ஒரே மாதிரி கேரக்டர் appearance maintain பண்ணிருக்காங்க .

ஒரு மாதிரி புரியாத tragedy வச்சி , படம் அடுத்தகட்டமாக ஒரு சேனல்குள்ள போகுது, படம் முக்கால்வாசி நடக்கும் இடம் அந்த சேனல் தான் , அந்த சேனல் உள்ளே போன பிறகு படம் செம்ம fast எடுத்துக்கிட்டு பிச்சிகிட்டு போகுது , அங்க நடக்கிற ஒரு ஒரு சின்ன விஷயங்களும் detail ஆகா காட்டிருக்காங்க , இன்டெர்வல் வரும் போது ஒரு ட்விஸ்ட் வச்சி  , அப்பறம் ஒரு பெரிய வசனங்கள் அதுவும் இந்த உலகத்தோட சரியான உண்மையை முகத்தை கிழித்தெறியும் வசனங்கள் வந்து , படமே முடிகிறளவுக்கு ஒரு உணர்வு  கொடுத்து, ஒரு பெரிய ஹீரோக்களுக்கு கொடுக்கும் மாஸ் போல ஒரு ஷாட் வச்சி ,  நம்மை ஒரு பெருமூச்சி விட வச்சிட்டாரு டைரக்டர் .

இன்டெர்வல்க்கு பிறகு படம் வேற levelஇல் travel பண்ணுகிறது , அங்க இருந்து ஒரு 30 நிமிஷம் செம்மையா  சிரிக்கலாம் , எஎப்படி  அப்படி ஒரு சீரியஸ் படத்தில ஒரு பகுதி அப்படி  ஒரு நகைச்சுவையாக எல்லோரையும் ரசிக்கும்படி காமெடி வச்சி மாஸ் பண்ணியிருக்கார்  டைரக்டர்? , அது முடிச்ச பிறகு திரும்பவும் படம் வேற ஒரு மூடில் படம் பயணித்து , அப்பாடா ஒரு நல்ல படம் பார்தோம்ன்னு ஒரு பெரிய திருப்தியுடன் வெளியே வர முடியும் .

படத்தில் எல்லோர் கேரக்டர்களும் சூப்பர் , எல்லோரும் மனசில் நிப்பாங்க , டிவி anchor, டைரக்டர் , செக்யூரிட்டி இப்படி ஒரு பெரிய லிஸ்ட் போகும் , ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் ஒருத்தன் மட்டும் மனசில் அப்படியே நிப்பான் அவன் யாருன்னா ? rooolling sir சொல்லும் ஒருவர் , நிச்சயமா அது ஒரு trend செட்டிங் வார்த்தையாக, மீம் போடுபவர்களுக்கு ஒரு நல்ல தீனியாக அமையும் அந்த வார்த்தை . சத்தியமா எனக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த வாரத்தை என்னோட காதுகளில் ஒலிச்சிக்கிட்டே இருக்குது (" Rooolling Sir "), படம் முடிச்ச பிறகு எல்லோருடைய பெயர் போட்டாங்க இருந்தாலும் அந்த Rooolling Sir சொன்ன நடிகர் பெயர் பார்க்க முடியல .யாருயா நீ பின்னிப்பெடல் எடுத்துடீங்க , 

அருவியக நடித்த அதிதி பாலன் நடிக்கல வாழ்ந்துட்டாங்கன்னு சொல்லணும்  , படத்தின் முதல் பாதியோ அல்லது இரண்டாவது பாதியில் சேனலுக்குள்ள ஒரு நடக்கும் விஷயங்கள் நடித்தது கூட பெரியது இல்ல , கடைசி 20 நிமிஷம் நடிப்பு தான் அவங்க எங்கேயோ போய்ட்டாங்க , மக்கள் மனசில் அழமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு,  .அவங்க கூட வரும் அந்த திருநங்கையும் நல்ல பண்ணிருக்காங்க.

இந்த படத்தை பாராட்டணும்ன்னா பாராட்டிக்கிட்டே போகலாம்.கைதட்டி கைகள் வலிக்குது , சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ,இறுதியில் எமோஷன் ஆகி கண்கள் வேர்க்கிறது 

இயக்குனர் : அருண் பிரபு 
இசை : பிந்து மாலினி & வேதந்த் பரத்வாஜ் 
கேமரா : ஷெல்லி காலிஸ்ட் .
மொத்தத்தில் அருவிக்கு தியேட்டர்களில் மக்களின் கைதட்டுகள் அருவியாக கொட்டுகிறது , அடுத்த வருடம் விருதுகள் அருவியாக கொட்டும் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 9 டிசம்பர், 2017

Riche - ரிச்சி


சம்பந்தமே  இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச்சி , இந்தவாரம் இரண்டு படம் வந்துஇருக்கு இரண்டுமே ரீமேக் தான் , சத்யா படம்  ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , ரிச்சி படம் உள்ளீடவாறு கண்டந்தி என்கிற கன்னட படத்தோட ரீமேக் , இது ஒரு cult movie ஆகணும் நினைச்சி எடுத்து இருப்பாங்க போல, நமக்கு கமல் படமே இரண்டாவது முறை பார்த்தா தான் புரியும் , இது அதுக்கும் மேல.

படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் நிவின் பாலி படத்துல வரல , அதுவரைக்கும் அவரைப்பற்றி சுற்றி இருக்கும் கேரக்டர்கள் அவருக்கு  full build up தராங்க , ஒருவழியா 25 நிமிஷம் கழிச்சி வரார்,  நிவின் பாலிக்கு இந்தளவுக்கு build up வேண்டுமா ? அப்படின்னு கேட்க தோணுது , நிறைய இடங்களில் slow motion வச்சி build up வேற , அந்தளவுக்கு கதைக்கு அவர் கேரக்டர் strong ஆகா இல்ல , அதே நேரத்தில முதல் பாதியில் ரொம்ப குறைவான காட்சிகளே அவருக்கு இருக்கு , அதுவும் வெறும் build up  மட்டும் தான் , இரண்டாவது பாதியில் தான் அவரோட கேரக்டர் கொஞ்சம் தெரிய வருது , ஆனால் நாமே பல விஷயங்களை புரிஞ்சிக்க வேண்டும்ன்னு நினைத்து இருக்காங்க , அந்தளவுக்கு நாம புத்திசாலி இல்லையிங்கோ ..

எனக்கு நிவின் பாலி கேரக்டர் விட நட்டி நட்ராஜ் கேரக்டர் நல்ல வடிவமைச்சிருக்காங்கன்னு தோணுது, ஒரு சாதாரணமா இயற்கைய நடிச்சிருக்கார், அப்பறம் ரகு கேரக்டர் முக்கியமான கேரக்டர் ஆனால் படத்தில பார்க்கும் போது எங்கயோ ஏதோ ஒன்னு புரியாத மாதிரியே இருக்கு,

முக்கியமான கேரக்டர் ஹீரோயின் ஷ்ரதா ஆனால் screenல ரொம்ப ரொம்ப ஸ்கோப் கம்மி தான் , ஹீரோ, ஹீரோயினை விட "லட்சுமி" குறும்படம் புகழ் நடிகை லட்சுமிக்கு  தியேட்டர்ல நல்ல வரவேற்பு , அவங்க பெயர் போடும் போதும் சரி , அவங்க படத்துல முதல் காட்சியில் வரும் போதும் சரி செம்ம கைத்தட்டு மக்கள் தட்டுறாங்க .ரிச்சி படம் ரீச் ஆகுதோ இல்லையையோ நீங்க நல்லா ரீச் ஆகிருக்கீங்க .

ரிச்சி மற்றும் ரவி கேரக்டர் காட்டும் பொழுதெல்லாம் ஒரே red  கலர் tone படத்துல இருக்கு , நட்டி கேரக்டர் காட்டும்பொழுது blue  மற்றும் green கலர் வருது , அதற்க்கு என்ன அர்த்தம் தெரியல , இந்த படத்தை பற்றி வேற என்ன சொல்வது என்று தெரியல , என்னமோ ஏதோ ஒரு புதிர் , ஏதோ ஒரு aptitude test எழுதுவதற்கு போனா மாதிரியே ஒரு feel , முதல் பாதி எதற்கும் சம்பந்தம் இல்லாம , என்னடா சொல்லவாறீங்க மண்டைய சொறிஞ்சிக்கிட்டு இருக்க ஒரு feel ,படம் முடியும்போது இந்த படத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு தான் அறிவு இல்லையோ ? இல்ல படம் மொக்க தானோ ? இப்படி பல கேள்விகளோட தன வெளியே வர முடியுது .


மொத்தத்தில் ரிச்சி ரொம்ப பிச்சி பிச்சி நம்மளை செஞ்சாங்க நல்லா வச்சி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 8 டிசம்பர், 2017

Sathya - சத்யா

இந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவரே rights வாங்கி நடிச்சு இருக்கும்   படம், அப்போ இந்த படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்குமான்னு கேட்டா ? பெரிய பிரேக் கொடுக்காது ஆனால் அவர் நடித்ததில் சொல்லிக்கும்படியான ஒரு நல்ல படம் .

ஒரு குழந்தையை காணவில்லை அந்த குழந்தை இருக்கா இல்லையா ? அப்படி  ஒரு குழந்தையே உண்மையிலே இருக்கா இல்லையா? அந்த குழந்தையை கண்டுபிடிச்சாங்களா இல்லையா ? யார்கிட்ட இருக்கு ? இப்படி ஒரு மர்ம கதையை , ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக ஆரம்பிச்சாலும் , போக போக  சுவாரசியமாக கடைசி ஒரு 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக கொடுத்து முடிச்சிட்டாங்க 

முதல் பாதி இப்படி தான் ரம்யா கேரக்டர் இருக்கும்ன்னு கொஞ்சம் சுலபமாக கணிக்கமுடிச்சது அதனால அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளும் , அதன் தொடர்புடைய characterகளும் இப்படி இருக்கும் என்று  easyஆகா guess பண்ணமுடிச்சது, ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் பிடிப்பாங்க , அதிலிருந்து படத்தோட நல்லாவே நம்மை ஒன்றவைச்சது .

சிபிராஜ்  - ஒரு neat performance,  

ரம்யா  - நல்லா பண்ணிருக்காங்க , சில இடங்களில் நல்ல அழகாக தெரிகிறார் , சில இடங்களில் வயசான ஆளாக தெரிகிறாங்க 

ஆனந்த்ராஜ் சமீபகாலமாக ஒரு நக்கல் கேரக்டர் செய்து பட்டைய கிளப்புறாரு , அப்படியே இதுலயும் செய்துட்டு போகிறாரு 

சதிஷ் சில இடங்களில் காமெடி try பண்ணிருக்கிறாரு அவளோதான், ஆனால் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் இவர் இந்த படத்தில் காமெடியன் இல்ல .

யோகிபாபு - ரொம்ப சின்ன ரோல் , கதைக்கு காமெடி பெருசா தேவைப்படல அதனால அவர் ஸ்கோப் கம்மி தான் , அதே நேரத்தில அவர் வரும் இடங்களும் பெருசா காமெடி எடுபடவில்லை 

இன்னும் சில கேரக்டர் பற்றி சொல்லவிரும்பவில்லை ஏன்னா , அவர்கள்  கேரக்டர் பற்றி சொன்னால் படத்தில் இருக்கும் சில மர்ம முடிச்சுகள் தெரிஞ்சிடும்.

கேமராமேன்  அருண்மணி , படம் சில வெளியிடங்களில் candid ஆகா எடுத்து இருப்பாங்க போல,  அதனால சில இடங்கள் ரொம்ப சுமாராகவும் , சில இடங்களில் மோசமாக தெரிகிறது 

இசை : சைமன் , நிச்சயமாக அந்த யவன பாடல் நல்லா இருக்கு , bgm சரியாக பொருந்தி இருக்கு , ஆனால் சில இடங்களில் வசனங்களை தாண்டி கேட்கிறது .

எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் அனைத்து தரப்பையும் ஒரு அளவுக்கு திருப்திப்படுத்தும் படம் .

மொத்தத்தில் சத்யா சத்தியமாக கொடுத்த 165க்கு சாத்தியமானது 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

வெள்ளி, 1 டிசம்பர், 2017

Thiruttu Payale 2 - திருட்டுப்பயலே-2

இந்த வருஷம் social மீடியாவால் நடக்கும் பிரச்சன்னை பற்றி லென்ஸ் படம் வந்தது , ஆனால் பலர்க்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியல , அப்பறம் ஸ்பை , phone track பண்ணுவது , ஒட்டுக்கேட்பது வச்சி ஸ்பைடர் படம் வந்துச்சி , இந்த இரண்டு படத்தையும் கொஞ்சம் கலந்து வச்சா இந்த திருட்டுப்பயலே-2, ஆனால் லென்ஸ் படம் ஒரு மாஸ்டர்  படம் சொல்லணும் , அதுக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது.

முதலில் இந்த படத்தின் தலைப்பை விளக்கிடலாம் , இந்த படத்தை திருட்டுப்பயலே-2(part 2) சொல்லுவதற்கு பதிலா , திருட்டு பசங்க 2(ரெண்டு) சொல்லணும் , ஏன்னா இந்த படத்தில பாபி சிம்ஹா , பிரசன்ன இரெண்டு பேர் characterம் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காத திருட்டு கதாபாத்திரங்கள் . ஒரு social மீடியாவால் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருக்காங்க.


படத்தில் நல்ல விஷயங்கள் என்னவென்றால் , மூணுபேரை சுற்றியே படம் நடக்குது , பாபி சிம்ஹா , அமலாபால் , பிரசன்னா , எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க , அந்த வீட்டுல மூன்று பேரும் சந்திக்கும் காட்சி நல்லா இருக்கு, டைரக்டர் சுசிகனேசன் படத்தில எப்பொழுதும் ஹீரோ வில்லன் மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனமான காட்சியமைய்ப்பு இருக்கும் , ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கும் , அது எல்லாம் இந்த படத்தில் இருக்கு . ஆனாலும் படம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல ஒரு feel இருக்கு ,படத்தில் ப்ளஸ், வசனங்கள் கொஞ்சம் குறும்புதனமாக , ரசிக்கும்படி , சில  உண்மை நிலவரங்களை சொல்லி இருக்காங்க.


மேலும் இந்த படம் எப்படி இருக்குன்னு சொல்லணும்ன்னா அந்த படத்துல வருகிற வசனம் போல தான் சொல்லணும் 


நல்ல கொடூரமான வில்லன் கேரக்டர் ஆனால் அதை பார்க்கும் போது நமக்கு அதன் மேல கொடூரமும், கோவமும் , ஆத்திரமும் வரல 


நல்ல ஹீரோ ஹீரோயின்  கேரக்டர் வடிவமைப்பு ஆனால் அந்த உறவை பார்க்கும் போது சந்தோஷமோ , ஐயோ பாவமோ எண்ணம் வரல 


மூணு பேரும் தனித்தனியா நல்லா பண்ணிருக்காங்க ஆனால் மொத்தமாக பார்க்கும் போது அந்த relationship bonding படத்தில தெரியல 


காதல் காட்சிகள் இருக்கு  ஆனால் பார்க்கும் போது  காதல் வரல 


சுவாரசியமான வேகமான திரைக்கதை, ஆனால் பார்க்கும் போது அந்த வேகமோ சுவாரசியம் வரல ( ஒருவேளை வித்யாசாகர் bgm ஒழுங்கா செட் ஆகல போல )


 எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இருக்கு ஆனால் பெரிய பாதிப்புகள் ஏற்படல 


நிறைய டெக்னாலஜிகளும் , brillianceகளும் பயன்படுத்தி இருக்காங்க , ஆனால் எதுவும் மனசுல நிக்கல .


பாராட்டவேண்டிய ஒரு விஷயம் இந்த படத்தில என்னென்ன  அது,  எப்படி இந்த இணையதள உலகத்தில பாதுகாப்பாக இருக்க வேண்டும்ன்னு ஒரு உதாரணம் இந்த படம் .

என்னடா இவன் இன்னைக்கு ஆனால் ஆனால் பயன்படுத்தி விமர்சனம் எழுதிருக்கானே தோணுதா? ஆமாங்க இந்த படத்தில ஒரு சேட்ஜி வருகிறார்  " இந்த ______  உங்களது, ஆனா _________ " இப்படி தான் அவர் படம் முழுக்க சொல்லுவார் ,இதை படம் பார்த்தா புரியும் ,எனக்கு படத்தில் மனசில் நின்ன கேரக்டர் அந்த சேட்ஜி தான் .


மொத்தத்தில் திருட்டுப்பயலே-2, கொஞ்சம் இருட்டுப்பயலே தான் .


சிலர் இந்த படம் நல்லா இருக்கு சொல்லுறாங்க , அதனால என்னோட விமர்சனத்தை திட்ட அதிக வாய்ப்பு இருக்கு , ஆனால் என்னை பொறுத்தவரை  இந்த படம் கொஞ்சம் சுமார் தான் .நெகடிவ் கமெண்ட் கொடுத்துக்காக திட்டுபவர்கள் திட்டலாம் .


இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

சனி, 18 நவம்பர், 2017

Theeran - தீரன் அதிகாரம் ஒன்று


மீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா  விமர்சனம் எழுதுறேன்,
அறம் தொடர்ந்து இந்த வாரம் தீரன்னு தமிழில் தொடர்ச்சியா நல்ல படங்கள் வருஷ கடைசியில வருது, அதுவும் சதுரங்க  வேட்டை இயக்கியவரின் , இரண்டாவது பதிவு இந்த படம் 

ஒரு படம் அதுவும் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணும் , அதுவும் உண்மை கதை எடுத்து எந்தளவுக்கு விறுவிறுப்பாக தரணுமோ அதையெல்லாம் சரியாக கொடுத்து சீட்டு நுனிக்கு வரவச்சி நம்மை பெருமூச்சு  விடவைச்சுட்டார் டைரக்டர் வினோத் .

படம் என்னமோ சாதாரணமா ஒரு commercial படம் போல தான் ஆரம்பிச்சது , அட இது வழக்கமான ஒரு போலீஸ் கதை , சும்மா காதல் , ஒரு டூயட் , அப்பறம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் தராத கதை போல தான் இருக்கும்ன்னு முதல் 20 நிமிஷம் தோணுச்சு , அந்த காதல் காட்சிக்கு நடு நடுவே கார்த்தி போலீஸ் training காட்டுவது எல்லாம் நல்லா இருந்தாலும், காதல் டியூஷன் எடுப்பது எல்லாம்  கொஞ்சம் bore ஆகா தான் feel ஆச்சு  , ஆனால் கதைக்குள்ள  ஒருபடி எடுத்து வச்ச உடனே சும்மா பிச்சிகிட்டு போகுது படம் , அபப்டி ஒரு வேகம், அதுவும் அந்த வில்லன்கள் முகங்கள் தெரிஞ்சதுக்கு பிறகு அவங்க வேட்டை ஆரம்பிக்கும் போது , அடேய் யாருடா நீங்க? அந்த வில்லன்களை  நாமே அடிச்சி நொறுக்கணும் என்ற ஒரு எண்ணம் நமக்கு தோன்றாமல் இருக்காது , அப்படி ஒரு கொடூரத்தை காட்டுவாங்க 

ஒரு படம் பார்த்தா அதோட நாம் ஒன்றிவிடவேண்டும் , ஒரு காட்சி ஆரம்பித்து  முடியும் போது ஒரு surprise இருக்கணும் , அது இந்த படத்தில இருக்கு, உதாரணத்துக்கு சில காட்சிகள் சொல்லணும்ன்னா , போலீஸ் நுழைய முடியாத கிராமத்தில் கார்த்தி போவது அங்கே நடக்கும் சண்டைகள் , ஒரு சந்தையில் ஒருவனை கைது பண்ணுவது , முக்கியமா பஸ் சண்டை நிச்சயமா அந்த பஸ்ல இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும் , அதை விறுவிறுப்பாக படம்பிடித்த கேமராமேன் சத்யன்  , ஸ்டண்ட்மென் திலிப் சுப்ராயன் , எடிட்டர் சிவன் நந்தீஸவரன்  இவங்க எல்லோருக்கும் பெரிய  சலுயூட்டே போடணும் , கிளைமாக்ஸ்ல் நடக்கும் இரவு சண்டை அதில் இருக்கும் brilliance காட்டி இருப்பது சூப்பர் .

படத்தோட கதையில டைரக்டர் நல்ல ஆராய்ச்சி பண்ணிதான் எழுதி முடிச்சி இருப்பர் , ஏன்னா ஒரு போலீஸ் எப்படி விசாரிப்பாங்க , எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க , ஒரு கை ரேகை நிபுணர் எப்படி பார்ப்பாங்க , முக்கியமா இந்த கொள்ளை கும்பல் எப்படிபட்டவங்க , அவங்க பின்னணி என்ன , அதுவும் வரலாற்றில் குற்ற பரம்பரை பற்றி எல்லாம்  எடுத்து கூறுவது  நல்ல detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு காட்டுது, ஆனால் நிறைய விஷயங்கள் டக்கு டக்குன்னு கூறும் போது ஒரு சாதாரண ரசிகனுக்கு என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்க தோணும், ஏன்னா அந்த பரம்பரை பெயர்கள் , வில்லன்களின் பெயர்கள் , எந்த ஊருல இருந்து போறாங்க அது எல்லாம் நமக்கு மனசில் பதிய கொஞ்சம் time ஆகும் , அதனால் அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும் போது நாம் உற்று கவனிக்கணும் .detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு சொல்லியத்துக்கு உதாரணம் படத்தின் கதை 90களில் இருந்து 2000 வரை நடப்பதால் , அந்த மொபைல் எல்லாம் அந்த periodல் வந்த நோக்கியா basic phone காட்டுறாங்க , அது காட்டுவது பெரிய விஷயம் இல்ல , ஆனால் ஒரு காட்சியில் ஒருவர் அதை கழுத்தில் தொங்கவிட்டு இருப்பர் , அது போல தான் வயதில் பெரியவங்க அந்த மொபைல் அந்த periodல் யூஸ் பண்ணியிருப்பாங்க .

டைரக்டர் வினோத் படத்தின் கதையை layer layer ஆகா பிரிச்சி ,ஒரு ஒரு காட்சியின் முடிவிலும் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போவது தான் ப்ளஸ் , இதே தான் அவர் சதுரங்க வேட்டையிலும்,இதிலும்  செய்து இருக்கிறார், ஹீரோ கார்த்தி நிச்சயமாக இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கிங் பாயிண்ட் படம் தான் இது , அவரை கார்த்தியாக பார்க்க முடியவில்லை , அந்த தீரனாக தான் தெரிகிறார் , ராஜஸ்தானில் நடக்கும் சம்பவம் எல்லாம் அவர் வாழ்ந்தாகவே தெரிகிறது , போஸ் வெங்கட் நல்ல supporting கேரக்டர் நல்லா செய்து இருக்கிறார் , படத்தின் இன்னொரு மிக பெரிய ப்ளஸ் ஜிப்ரான் இசை , மனுஷன் பிச்சி உதறிட்டார் , இந்த வருஷ கடைசியில் அவருக்கு தொடர்ந்து வெற்றியாக வரும் போல , போனவாரம் அறம் , இந்த வாரம் தீரன் , அடுத்த வாரம் சென்னை டு சிங்கப்பூர் (எப்படி இருக்குன்னு பார்ப்போம்).

படம் முடியும் போது அந்த case உண்மை நிலவரம் என்ன? அதில் வேலை பார்த்தவங்க நிலைமை என்ன என்று எல்லாம் சொல்லி முடிக்கும் போது , அட பாவம்யா அந்த போலீஸ்காரங்க , எல்லா போலீஸ்காரர்களை தப்பு சொல்ல கூடாது என்று தோன்றாமல் வெளியே வர முடியாது .

மொத்தத்தில்  தீரன் ரொம்ப தீர்க்கமானவன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 11 நவம்பர், 2017

Aram - அறம்

இது என்னோட 150வது விமர்சனம் ,  ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில்  எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .

முதல் வரியிலே நான் இந்த படத்தை பற்றி சொல்லிடுறேன் , நானே இந்த படம் ஒரு நாள் தள்ளி பார்த்து விமர்சனம் போடுறேனே ஒரு வருத்தம் , எத்தனையோ மொக்கை படத்தை முதல் நாள் பார்த்து இருக்கேன் , இந்த படத்தை முதல் நாள் பார்க்க முடியல , அதனால சொல்லுறேன்  நீங்க இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாம பாருங்க , ஒரு நெத்தி அடி படம் , எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாம , மனதார  உருகி பாராட்டப்படவேண்டிய படம் ,இந்த வருஷத்தில் வந்த அருமையான படங்கள் வரிசையில் இந்த படம் ஒரு முக்கியமான படம் , எனக்கு இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில்  குரங்கு பொம்மை , ஒரு கிடாயின் கருணை மனு , லென்ஸ் , மாநகரம் இந்த வரிசையில் இதுவும் ஒன்று ஆனால் மற்ற படங்கள் எல்லாம் பெரிய நட்சித்திரம் இல்லாத படம் , ஆனால் இது நயந்தாரா என்ற ஒரு பெரிய ஹீரோ வச்சி எடுத்துஇருக்காங்க , இந்த வருஷம் வந்த பெரிய ஹீரோ படங்களில் இது தான் பெஸ்ட் , என்னடா நயன்தாராவை ஹீரோன்னு சொல்லுறிய பார்க்கறீங்களா ? ஆமாங்க நிச்சயமா அவங்களை ஹீரோ என்று சொல்லலாம் .

நம்ம மனசில் இருப்பதை கிழி கிழி கிழிச்சிருக்காங்க , படத்தின் கதை நடக்கும் இடமே அருமையான தேர்வு , ஒரு பக்கம் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இடம் , அதன் அருகே குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு இடத்தில் இந்த கதை நடக்குது, நிறைய சின்ன சின்ன விஷயங்கள் படத்தில சொல்லி இருக்காங்க , விளம்பரத்துக்காக போட்டோ எடுத்து போடப்படும் போலியோ சொட்டு மருந்து, தங்கள் வாழ்க்கை தரம் உயராத மக்கள், நம் நாடு ராக்கெட் விட்டா நமக்கு பெருமைன்னு அது நல்லா நடக்கணும் சாமிகிட்ட வேண்டுவது , எது எதுக்கோ 1000 கோடி செலவு பண்ணாலும், குழில வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறு தான் நமக்கு மிச்சம் என்ற  நிலைமை காட்டுவது , ஆரஅமர விபத்து நடந்த இடத்துக்கு செல்லும் அதிகாரிகள் , ரிப்பேர் ஆகும் தீயணைப்பு வாகனம் இப்படி சின்ன சின்ன விஷயங்கள் காட்டி இருக்காங்க.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நாமே அந்த இடத்தில இருப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நம் பிள்ளையே அதில் மாட்டிகொள்ளுவது போல ஒரு உணர்வு இருக்கு , அந்த உணர்வு நமக்கு ஜிப்ரான் bgmல்  நமக்குள்ள இறக்கிட்டார். தோரணம் ஆயிரம் பாடல் விஜயலக்ஷ்மி குரலில் ultimate ஆகா இருக்கு ,இன்னும் இந்த படத்தை பற்றி சொல்லலாம் ஆனால் அதை எல்லாம்  போயிட்டு படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க .

அந்த குழந்தையின் அம்மா அப்பாவாக நடிச்சவங்களுக்கு  ஒரு  பெரிய கைத்தட்டு , அப்புறம் நயன்தாரா அருமையாக நடிச்சி இருக்காங்க , அந்த கடைசி சில உணர்வுபூர்வமான காட்சிகளில் சூப்பர், நயன்தாரா கேரக்டர் வடிவமைச்ச டைரக்டர் கோபி நயினார்  பாராட்டி ஆகணும் , ஏன்னா நயன்தாரா என்பதால் மாஸ் காட்டுவது , build up பண்ணுவது எதுவும் இல்லாமல் , கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து இருக்காங்க .

இந்த படத்தில மைனஸ்ன்னு எனக்கு சொல்ல தோன்றவில்லை , நடுவுல நடுவுல வரும் அந்த டிவி விவாத மேடை ஷோ கொஞ்சம் வந்து இருந்த நல்லா இருந்து இருக்கும் , ஆனால் அடிக்கடி வருவது கொஞ்சம் bore அடிச்சது போல  தோணுச்சு .

ஒரு படம் பார்த்தா  அதன் பாதிப்பு படம் பார்த்து வெளியே வந்து ரொம்ப நேரம் இருக்கும் , அப்படி ஒரு பாதிப்பு இந்த படம் நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும் , ஆளும்கட்சி , எதிர்க்கட்சி , மத்திய கட்சிகள் , மாநில கட்சிகள், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் , கட்சி ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும்   இந்த படத்தை பார்த்துட்டு கண்ணாடி முன்னாடி நின்று நீங்களே காரித்துப்பிக்கோங்க , மசாலா கலந்து கொஞ்சம் கருத்து கொடுத்த மெர்சல் படத்துக்கு இந்திய அளவில் நியூஸ் சேனல் எல்லாம் ட்ரெண்ட் பண்ணிவிட்டாங்க , ஆனால் இந்த படத்தை நிச்சயமா அபப்டி ட்ரெண்ட் பண்ணிவிடனும் .

இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட வேண்டும் , எந்த மொழியிலும்  டப்பிங் செய்து வெளியிட்டால் செம்ம ஹிட் அடிக்கும் , நிச்சயமா இந்த படத்திற்கு விருதுகள் குவிய வேண்டும் , நிச்சயமா இந்த வருஷம் தேசிய விருது ஹிந்தி ல வந்த toilet படத்துக்கு கொடுப்பாங்க , அதே போல இந்த படத்துக்கும் விருது தந்தே ஆகவேண்டும் , அப்படி எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு சதியாக தான் இருக்க வேண்டும் .

குறிப்பு : கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கூறியவர் தான் இந்த படத்தின் டைரக்டர்  கோபி நயினார். கத்தி வந்துவிட்டதால் அதை மாற்றி அமைத்து வந்தது தான் இந்த அறம் .


மொத்தத்தில் அறம் ஒரு தரமான படம்.

இப்படிக்கு

சினி கிறுக்கன் 

வெள்ளி, 10 நவம்பர், 2017

Nenjil Thunivirunthal - நெஞ்சில் துணிவிருந்தால்



இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா இந்த  படம் ட்ரைலர் போலவே சொல்லணும்
சுசீந்திரன் படம்ன்னா நிச்சயமா இம்மான் இசை இருக்கும்,  அப்புறம்? சூரி இருப்பார், அப்புறம்? அம்மாவாக துளசி இருப்பாங்க, இவர் சின்ன ஹரி போல ஏன்னா படத்தில ஸ்கெட்ச் போடுவாங்க , அப்புறம் ?  குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் ,  அப்புறம்?  நட்புக்கு மரியாதை  இருக்கும் ,அப்புறம்? நைட் சேசிங் இருக்கும் ,   கொஞ்சம் காதல் இருக்கும் , கொஞ்சம் மசாலா தூவி சமாளிச்சி இறக்கிவச்சிடுவார் 

படம் ஆரம்பிச்சி இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம் கூட  திரைக்கதை கதைக்குள்ள போகல , ஆனால் கதைக்கு தேவையானதை படத்துக்குள்ள கொண்டுவருவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டு , முதல் பாதி எப்படியோ போகுது , வில்லனோட முதல் காட்சி அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டுவது நல்லா இருந்துச்சி , பிறகு ஹீரோ சந்தீப் , விக்ராந்த் பற்றி , சந்தீப் தங்கச்சி மற்றும் விக்ராந்த் காதல் , அவங்க அம்மா, முக்கியமான வில்லன் மட்டும் இல்லாமல் , சின்ன சின்ன வில்லன்கள் பற்றி  இப்படி ஒரு ஒருத்தர் பற்றி சொல்லி சொல்லி படம் இன்டெர்வல் வந்துடுச்சி , அட இதுக்கு நடுவுல ஹீரோயின் வேற ,

அப்படி , இப்படின்னு எப்படியோ முதல் பாதி போனாலும், ரெண்டாவது பாதி ஒரு வேகம் கொடுத்து படத்தை கரை சேர்த்துட்டார் டைரக்டர் சுசீந்திரன் ,சில இடங்கள் ஒரு சாதாரண ரசிகன் கூட கணிக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கு , ஆனாலும் இது எல்லாம் எதுக்காக நடக்குது என்பதை நமக்கு தெரிஞ்சிக்க விடாமல் , நம்மை கடைசி வரைக்கும் யோசிக்கவச்சியிருக்கார் , இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றார் போல கந்துவட்டி , ரியல் எஸ்டேட் பிரச்சனை, இப்படி சில விஷயங்கள் அப்படியே நூல் இழையாய் ஓட வச்சி ,கொஞ்சம் கடைசியாய் கதையின் கருவை உடைத்து ,விறுவிறுப்பாய் முடிச்சிட்டார் .ஆனால் படம் பார்க்கும் போது கொஞ்சம் பாண்டியநாடு , பாயும் புலி பார்த்தது போல இருந்துச்சி 


படத்தின்  ப்ளஸ் வில்லன் ஹரிஷ் உத்தமன் தான்  ரொம்ப நல்லா பண்ணிருக்கார் ,அதுக்கு சரியாய் bgm மியூசிக் அவருக்கு இம்மான் பக்காவாக கொடுத்துட்டார் , ஆனால் அந்த இசை கொஞ்சம் முன்னாடி ஏதோ இம்மான் படத்தில பயன்படுத்தியது போலவே தான் இருந்துச்சி .

படத்தின் மைனஸ் ஏற்கனவே சொன்னது போல அழுத்தம் இல்லாத முதல் பாதி , மொக்க சூரி காமெடி ,ஹீரோயின் எதுக்காக அவங்களை படத்தில் போட்டாங்க என்று தெரியவில்லை கொஞ்சம் அழகாக இருக்காங்க ஆனால் சுத்தமா பேசவே தெரியல டப்பிங் ரொம்ப கேவலமா இருந்திச்சி, சும்மா கெஸ்ட் ரோல் அவளோதான் , அவங்க ஹீரோ சந்தீப் கூட வரும் காட்சிகள் கூட ரொம்ப கம்மி தான் .

என்னடா படத்தை பற்றி ரொம்ப கம்மியா சொல்லி இருக்கன்னு கேட்பீங்க நினைக்கிறன் , இந்த படத்துக்கு இந்த அளவுக்கு தான் எனக்கு எழுத தோணுச்சு, ரொம்ப ஓஹோன்னு புகழுவதற்கும் , இல்ல ஓஹோன்னு கலாய்ப்பதற்கும்  இல்ல .

மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் இன்னும் கொஞ்சம் துணிவிருந்துயிருந்தால் மக்கள் நெஞ்சில் விருந்துபடைதிருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


வெள்ளி, 3 நவம்பர், 2017

Aval - அவள்

இந்த படத்தை பற்றி டக்கு டக்கு டக்குன்னு சொல்லிடனும் நினைக்கிறேன் , ஏன்னா படம் அப்படி தான் டக்கு டக்குன்னு போகுது 

படத்தின் கதை என்ன சொல்லணும் ? 
நம்ம எப்பொழுதும் எதிர்பாக்கிற ஒரு பேய் கதை தான் , ஒரு பேய் இருக்கும் , அது வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கும் , ஒரு பிளாஷ் பேக் இருக்கும் , பிறகு அது பழிவாங்கும் , இல்லாட்டி ஒரு நல்ல பேய் , கெட்ட  பேய் இருக்கும், இந்த படத்தில கதை ஒரு வழக்கமான ஒரு formulaவில் தான் இருக்கு, ஆனால் அதை கொடுத்த விதம் ரொம்ப அருமையா இருக்கு .

 கொஞ்சநாளாக  பேய் படத்தில் வரும்   லூசு தனமான ஹீரோயின் , ஒரு மொக்க பாட்டு , மொக்க காமெடி , எலுமிச்சை பழம் வச்சி வரும் ஒரு சாமியார் , சுடுகாடு அது இதுன்னு , லொட்டு லொசுக்குன்னு வரும் பேய் படம் போல இல்லமால் , படத்தின் கதையில் இருந்து கொஞ்சம் கூட விலகி போகாமல் , பேய் படம்ன்னா பேய் பேய் படம்  போல, பார்க்கிற நம்மை அந்த உணர்வு தந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி ஒரு அருமையான , உண்மையான பேய் படம் தமிழில் வந்து இருக்கு,

படத்தின் ப்ளஸ் நடிகர்கள்  சித்தார்த் , ஆண்ட்ரியா , ஜெனியாக நடிக்கும் அனிஷா , அந்த குட்டி பொண்ணு , அதுல்குல்கர்னி , பாதிரியார் , இப்படி எல்லோரும் சரியாக அளவாக நடிச்சி இருக்காங்க , எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அதிகமாகவோ , குறைத்தோ தராமல் , எல்லோருக்கும் சமமாக  கொடுத்து இருக்காங்க , அதை அவர்களும் சரியாக நடிச்சிருக்காங்க . அதே போல படம் நடக்கும் களம் நல்ல வித்தியாசமான இடம் கொடுத்து இருக்காங்க , இமயமலை ஒட்டி நடக்கும் இடம் , அதை பனிமலை பின்னணியில் நல்லா கொடுத்து இருக்காங்க 

படத்தை மனசில் நிறுத்திவைத்தது  கேமரா , சவுண்ட் தான் , பேய் படத்துக்கு தேவையான அனைத்தயையும்,  பக்காவாக இவங்க ரெண்டு பேரும் பண்ணி இருக்காங்க .  அந்த வீடு அருமையாக இருக்கு , நல்லா செட் பண்ணிருக்காங்க , அந்த லொகேஷன் , வீடு , அளவாக பேசும் நடிகர்கள் பார்க்கும் போது , அட நம்ம ஆளுங்க கொஞ்சம் இங்கிலிஷ் படம் சாயலில் ஒரு பேய் படம் எடுத்து இருக்காங்கன்னு நல்லாவே சொல்லலாம் , அதுக்கு  இவங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம் .

படத்தில இன்டெர்வல் சீன சூப்பர் , படத்தின் கிளைமாக்ஸ் வந்தது போல ஒரு feel இண்டெர்வெளில் கொடுத்து இருக்காங்க , படத்தின் கடைசியில் ஒரு நல்ல ட்விஸ்ட் வரும் அது தான் செம்ம , நல்ல யோசிச்சி , யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே screenplay அமைச்சதுக்கு ஒரு நல்ல கைத்தட்டு . படத்தில எனக்கு பிடிச்ச காட்சின்னா , ஒரு இடத்தில கேமரா கதவு லாக்க்குள்ள எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு போகும் , அப்படியே தலைகீழாக வரும் காட்சிகள்  , அதை தொடர்ந்து வரும் காட்சிகள் சூப்பர்.

நீங்க உண்மையாக நல்ல பேய் படம் பார்க்கணுமான்ன நிச்சயமா தியேட்டர்ல போயிட்டு நல்ல சவுண்ட் effect  உள்ள தியேட்டர்ல போயிட்டு பாருங்க . அது நிச்சயமா ஏமாற்றம் தராது . இங்கிலிஷ் பேய் படம் பார்த்த ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நிச்சயமா மற்ற மொழிகளும் இந்த படம் போகும் .

மொத்தத்தில் அவள் பார்ப்பவர்களை நல்ல மிரட்டுபவள் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


புதன், 18 அக்டோபர், 2017

Mersal - மெர்சல்

மெர்சல்ன்னு பெயர் வைச்சாலும்  வைச்சாங்க, படம் ரிலீஸ் ஆவதில் ரொம்ப மெர்சல் பண்ணிட்டாங்கபா , டிக்கெட் ரேட் பிரச்சன்னை , சென்சார் certificate பிரச்சன்னை , ஒரு வழியா டிக்கெட் கிடைச்சி கூட்ட நெரிசலில் மெர்சல் போயிட்டு பார்த்தாச்சி .

வழக்கம் போல நான் ஒன்னு சொல்லிடுறேன் , நான் தல ரசிகனோ , தளபதி ரசிகனோ இல்ல, நான் ஒரு சினிமா ரசிகன்.அப்போ தான் யார் கிட்டேயும் அடிவாங்காம   இருக்கலாம் .

சரி இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா , ஒரு கமெர்சியல் படத்துக்கு என்னவெல்லாம் இருக்கணுமோ,  அது எல்லாம் சரியா இருக்கு இந்த படத்தில , அதுவும் அட்லீக்கு அது சரியான  அளவாக கலந்து கொடுப்பதில் கைவந்த கலை .அதை இதில் கொடுத்து இருக்கிறார் .வழக்கமான அப்பா , ரெண்டு பையன் கதை தான், இருந்தாலும், அதை ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் , அவர் கிட்ட ஒரு ப்ளஸ் பாயிண்ட், தமிழ் சினிமாவில  அரைச்ச மாவையே அரைத்தாலும் , அதை புளிக்காத மாதிரி கொடுப்பது தான் அவரின் மகிமை . அதே போல தளபதியை சரியாக கை ஆளுவதில் சரியான ஆளு அட்லீ தான் .

தளபதி பற்றி என்ன சொல்லுவது , மனுஷனுக்கு வயசு ஏறுதா இல்ல குறையுதா ? செம்ம மாஸ் , செம்ம அழகா இருக்கிறார் , பயங்கர fit ஆக இருக்கிறார் , screen presence சூப்பர் , துப்பாக்கி , கத்தி , தெறி இப்போ இதில் நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் , அந்தளவுக்கு சூப்பராக இருக்கிறார் , அவரை அப்படி காட்டிய கேமராமேன் , டைரக்டர்  எல்லோருக்கும் ஒரு கைத்தட்டு , மூன்று கேரக்டர்களும் பக்கா மாஸ் ,அதுவும் முதலில் பாரிஸ்ல் டாக்டர்  தளபதிகிட்ட டீல் பேசும் போது , அதுக்கு தளபதி பதில் தரும் காட்சி  சும்மா வச்சி செஞ்சியிருக்கிறார் , தியேட்டர்ல கைத்தட்டு அள்ளுது .இது போல நக்கல் மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும்படி வச்சி கைத்தட்டு அள்ளுது , எனக்கு பிடிச்ச விஷயம்ன்னா விஜய் இந்த படத்தில் தேவை இல்லாம பஞ்ச் வசனம் பேசாம , அவரோட முந்தைய படங்களில் காமெடி பேருல பண்ணும் ஓவர் ஆக்ட்டிங் எல்லாம் பண்ணாம , டைரக்டர் சொன்னதை செஞ்சி இருக்கிறார் , டைரக்டர் அவரை சரியா பயன்படுத்தினா நிச்சயமா அவர் படம் நல்லா போகும் , அதை அட்லீ இதுலயும் பண்ணி இருக்கிறார் .கதைக்கு ஏற்ற சரியான மாஸ் , அளவுக்கு அதிகமா build up தராமல் தந்து இருப்பது ஒரு பெரிய சபாஷ் .மேலும் இப்போ இருக்கும் சமுதாய பிரச்சன்னைகளை எல்லாம் கலாய்ப்பது சூப்பர் .

எஸ்.ஜே. சூர்யா வளரும் வில்லனாக வருகிறார், வில்லனுக்குரிய பத்து பொருத்தமும்  பக்காவாக இருக்கு, அதே நேரத்தில்  அவர் தான் முக்கியமான கேரக்டர் என்றாலும் , ஆனால் இந்த படத்தில் அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாமோ தோணுச்சு , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் கம்மியாக இருந்துச்சி ,

மீண்டும் வடிவேலு வந்து ஒரு அளவுக்கு மக்களை திருப்திபடுத்தி இருக்கிறார் 
படத்தில் மூன்று ஹீரோயின்கள் அல்ல , ஒரே ஒரு ஹீரோயின் தான் அது நித்யாமேனன் மட்டும் தான் சொல்லணும், அவங்க தான் படத்தின் கதைக்கு நல்ல அடித்தளம், மேலும் நல்லா நடிச்சி இருக்காங்க , மற்ற இருவரும் சும்மா வந்து ஆளுக்கு ஒரு பாட்டு பாடிட்டு போய்ட்டாங்க , சமந்தா வரும் காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கு அந்த ரோஸ்மில்க் காட்சிகள் எல்லாம் , ஆனால்  காஜல் நடிக்கிறது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவங்க கேரக்டர் படத்திற்கு ஒட்டவே இல்லை ,  அவங்க விவேகம் படத்திலும்  சரி இந்த படத்திலும் சரி அபப்டி தான் செய்யறாங்க.

இசைபுயல் பாட்டை பற்றி நான் சொல்லனும்னா? , ஏற்கனவே ஹிட் , சும்மா எறக்கி விட்டுஇருக்கிறார் , பாட்டின் காட்சியமைப்பும் அருமை, பாடல் காட்சியில் அவரோட குரு ஷங்கர் ஞாகபம் படுத்துகிறார், பாடல் மனசில் பதிஞ்ச அளவுக்கு bgm வாவ் சொல்ல வைக்கல , ஒரு சில இடங்களை தவிர, ஒருவேளை பாட்டு மட்டும் போட்டு கொடுத்துட்டு, bgm அவரோட assistant கிட்ட கொடுத்து போடச்சொல்லிட்டாரோ ? ஷங்கருக்கு தான் முழுசா போடுவேன் , அவரோட அசிஸ்டன்ட் தானே  என்று தோணுச்சோ ?  ஏன்னா அவரோட படத்தில ரொம்ப தனிச்சியாக இருக்கும், ஆனால் சில இடங்கள் எல்லாம் கேட்டா, இப்போ நிறைய பேரு வந்து இருக்காங்க அவர்களில் யாரோ போட்டா மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்துச்சி .

படத்தில சில பல மைனஸ்கள் இருக்கு , படத்தில முதல் பாதி ஒரு வேகம் விறுவிறுப்பு , இரண்டாவது பாதியில் இல்ல , அப்பா விஜய்க்கு மாஸ் இருந்தாலும் அந்த பிளாஷ் பேக் ரொம்ப நேரம் இழுப்பது போல இருந்துச்சி , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் பிளாஷ் பேக்கிலும் சரி , பிளாஷ் பேக் முடிஞ்ச அப்புறம் பசங்க எஸ்.ஜே சூர்யாகூட மோதும் காட்சிகளும் சரி , ரொம்ப கம்மியா இருக்கு , நிச்சயமா எல்லோரும் சொல்லுவது போல எனக்கும் இந்த படம் ரமணா படத்தில் இருந்து ஒரு பகுதியை கதையை எடுத்து பண்ணிஇருப்பார் போல , சமந்தா கேரக்டர் கஜினி அஸினை ஞாபகம் படுத்தியது, டீஸர் பார்க்கும் போதே நிச்சயமா கோவை சரளா விஜய்க்கு அம்மாவாக இருக்க மாட்டாங்கன்னு தெரியும், அதுபோலவே படத்திலும் இருக்கு , கோவை சரளாவுக்கு  விஜய் எப்படி கிடைச்சார்ன்னு தெரியல, தளபதியை டீவில பார்த்த எஸ்.ஜே. சூர்யாவால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுது, ஆனால் அவர் கூடவே இருக்கிற டாக்டர் அர்ஜுன் ஏன் பாரீஸ்ல விஜயை பார்த்து  கண்டுபிடிக்க முடியல ? பொதுவா commercial படத்தில லாஜிக் கேட்க கூடாது , ஆனால் அப்பட்டமாக லாஜிக் மிஸ்ஸிங் படத்தில இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக தான் இருந்துச்சி .சத்யராஜ் , சத்ரியன் , காஜல் , சமந்தா வந்துட்டு அபப்டியே காணாம போய்ட்டாங்க .எதிர்பார்த்த கதையமைப்பு , இறுதியில் வரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்கள் எல்லாம் வழக்கம் போல தான் .hospitalன்னு துரைப்பாக்கம் chennai one building காமிச்சிட்டாங்க .

ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் , இந்த விஜய் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல படம் ஒன்னும் அந்தளவுக்கு மொக்கை இல்ல , அதே நேரத்தில விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு சூப்பர் டூப்பரும் இல்ல , ஒரு சாதாரண ரசிகனுக்கு இந்த படம் bore அடிக்காம போகும் . என்னை பொறுத்தவரை இது பைரவா விட above average படம் .

என்ன ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்த ஒரு படத்துக்கு ஒரு குரூப் hard work டா , ஹாலிவுட் டா, ஹிட் டான்னு, 100 கோடி collection டான்னு சொல்லி மார்தட்டிக்கிட்டாக, இப்போ ஒரு குரூப் message டா , மாஸ் டா , 100 கோடி  collection டான்னு  சொல்லிப்பாக  அவளோதான் .

மொத்தத்தில் மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்  நல்ல பார்சல் ,  கதை அனைவருக்கும் தெரிஞ்ச கரிசல், திரைக்கதையில் இருக்கு விரிசல் .டிக்கெட் விலையால் எனக்கு கொஞ்சம் நெரிசல்

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

சனி, 30 செப்டம்பர், 2017

Karuppan - கருப்பன்

கருப்பன் இந்த படம் போஸ்டர் எல்லாம் பார்த்துட்டு பொங்கல் அப்போ ரிலீஸ் ஆகி இருக்கலாமேன்னு தோணுச்சு , ஆனால் இந்த படம் அந்த போஸ்டர்க்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல , அதே நேரத்தில அட ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை வந்து இருக்கே , நல்ல குடும்பத்தோட பார்க்கலாமே சொல்லணும் தோணுச்சு அப்படியும் இந்த படம் இல்ல ,  படம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை , அதை அழுத்தமாகவும் சொல்லவில்லை , புதுசாக திரைக்கதையும் அமையவில்லை , காதல் , பாசம்ன்னு நல்லா இருக்கும்னு பார்த்தா , ஒரு அளவுக்கு மேல அந்த காதல் பாசம் பார்க்க முடியவில்லை , ரொம்ப திகட்ட திகட்ட கொடுத்து இருக்காங்க .படம் சீரியல் பார்ப்பது போல இருக்கு .

படம் பார்க்கும் போது , கொஞ்சம் தர்மதுரை , கொம்பன் , மருது , பருத்திவீரன் இந்த படங்கள் எல்லாம் ஞாபத்துக்கு வருது , படம் ஆரம்பிச்ச சில நிமிடங்களில் , இந்த கதை இப்படி தான் போகும்ன்னு தெரிஞ்சிடுச்சி , ஆனால் அதை சுவாரஸ்சியமா கொடுத்து இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி , அது போக போக அட போங்கபா , இப்படியே படம் எவ்வளவு நேரம் போகும்ன்னு கேட்க தோணுது,

இந்த அளவுக்கு படம் கொஞ்சம் bore ஆகா போனாலும் சரி , படம் காட்சிக்கு காட்சிக்கு கொஞ்சம் மனசை தெம்பு ஏற்றுவது , நம்ம விஜய் சேதுபதி தாங்க , அசால்ட்டாக மனுஷன் நடிச்சி தள்ளிட்டு போய்கிட்டே இருக்கார் , கதை நல்லா  இருக்கோ இல்லையோ , படம் மக்களுக்கு பிடிக்குமோ இல்லையோ , அதை பற்றி எல்லாம் கவலைப்படமா , அவர் அவரோட வேலையை சரியாய் செஞ்சிட்டு போகிறார், ஒரு விஷயம் சொல்லணும்ன்னா அவர் இது போலவே பல படங்களில் நடித்தாலும் , என்னயா ஒரே மாதிரி நடிக்கிறார்ன்னு சொல்ல தோணல , ஏதோ ஒரு மந்திரம் போட்டு ரசிகர்களை கட்டி போட்டுவிடுகிறார், ஏன்னா இந்த படத்தில குடிச்சிட்டு நல்லா அட்டகாசம் பண்ணும் போது எல்லாம் தர்மதுரை ஞாபகம்படுத்துகிறது , எனக்கு பிடிச்ச காட்சின்னா கல்யாணம் முடிச்ச பிறகு , முதல் நாள் வேலைக்கு போனபிறகு எல்லோரும் சேதுபதி பற்றி தப்பா சொல்லுவாங்க , அன்று இரவு அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபிறகு ஹீரோயின் தன்யாவுக்கு அவருக்கும் ஒரு பேச்சு நடக்கும் அது ரொம்ப நல்லா இருந்துச்சி , ஆனால் போக போக அது போல பல காட்சிகள் வருது , அது கொஞ்சம் ஏன்டான்னு கேட்க தோணுச்சி .

பாபி சிம்ஹா டைரக்டர் நல்லா பில்டப் கொடுத்து இருக்கார் , ஆனால் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இல்லை , building strong ஆனால் basement weakன்னு சொல்லுறா மாதிரி இருக்கு , இவர் போதாதுன்னு இன்னொரு வில்லன் சரத் , ரொம்ப வழக்கமான சாதாரணமான போகுது ,

இசை இமான் அவர் ஒரு படம் ரொம்ப நல்லா பண்ணா அடுத்து சில படங்கள் சுமாரா போடுவார் , அது போல இதுவும் சுமார் ரகம் , சில படங்கள் அவரோட படங்களை ஏற்கனவே கேட்டது போல பாடல்கள் இருந்துச்சி .

எனக்கு ஒரே ஒரு வருத்தம் , ஏன் அப்போ அப்போ விஜய்சேதுபதி நடுவுல நடுவுல இப்படி ஒரு படம் தருகிறார்ன்னு தெரியல , போன வருஷம் ரெக்கை , இந்த வருஷம் கருப்பன்


மொத்தத்தில் கருப்பன்  கொஞ்சம் கருத்துவிட்டான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

Hara Hara Mahadevaki - ஹர ஹர மஹாதேவகி

என்னோட சினி கிறுக்கன் பக்தாளுக்கு  எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள் ,ஹர  ஹர  மஹாதேவகி  இந்த படம் எப்படி இருக்கும் ? , முதலில் நீங்க அந்த ஹர  ஹர  மஹாதேவகி  ஆடியோ கேட்டு இருந்தா நிச்சயமா இந்த படம் எப்படிபட்ட படம்ன்னு உங்களுக்கு தெரியும் ,  கேட்காதவங்க உடனே கூகிள் பண்ண போய்டுவீங்களே. டேய் இது எல்லாம் எவனாவது கேட்க்காம இருப்பானா  அப்படின்னு கேட்கிற பக்தாளோட  மைண்ட் வாய்ஸ் கேட்குது , அப்படியும் சிலர்  இந்த உலகத்துல  இருக்காங்க, அவங்களுக்கு தான் அந்த disclaimer 

முதல் முதலா  என்னோட reviewக்கு நானே  A  certificate  கொடுத்துக்கிறேன் , ஏன்னா படிச்சிட்டு என்ன திட்டாதீங்க , இந்த படம் only for adults  சொல்லியே தான் ட்ரைலர் போட்டாங்க , படமும் அதுக்கு எந்த விதத்திலும் கொஞ்சம் கூட குறையில்லாம  audienceயை  திருப்திபடுத்திருக்கு, அதாவது  அப்போ படத்தில கில்மா காட்சி நிறைய இருக்கானு பக்தாள் ஜொள்ளு விடுவது தெரியுது , அப்படிப்பட்ட காட்சி எல்லாம் படத்தில இல்ல, வெறும் காமெடி  மட்டும் தான், நம்ம சினிமாவுல black காமெடி படம்ன்னு சில படங்களை சொல்லுவாங்க , ஆனா இந்த படம் open காமெடி படம் அவளோதான் சொல்லுவேன் , அதனால வீட்டுல இருக்கவங்களோட படத்துக்கு போயிட்டு கீழே காசு போட்டு சமாளிக்கலாம் நினைக்காதீங்க , ஏன்னா இந்த படத்தில நீங்க காது தான் மூடனும் , அபப்டி இருக்கும் வசனங்கள் . 

படத்தில்  கதை  என்னன்னு கேட்காதீங்க , லாஜிக் எங்கன்னு கேட்காதீங்க  அபப்டின்னு அவங்களே  disclaimer போட்டுட்டாங்க , அப்பறம் என்ன ______ க்கு டா review பண்ண போறேன்னு கேட்ப்பீங்கன்னு தெரியுது , யூடியூபில  review  பண்ணறவங்களையும் படத்தோட டீம் ரொம்ப கேவலமா பச்சையா  ஒரு வீடியோ போட்டு  மரணபங்கம் பண்ணிட்டாங்க , அதனால அதை பற்றி ஒன்னும் சொல்ல முடியாது .

படத்தில சின்ன கதை என்னனா   ஒரே மாதிரி பை , ஒரு பையில bomb  இருக்கு , ஒரு பையில கள்ளநோட்  இருக்கு , இன்னொரு பையில  காதல் break up அதனால , காதலி கொடுத்த gifts வச்ச பை  (குறிப்பு : அதுல angry birds  போட்ட ஜட்டி ) ஆள் மாறாட்டம் போல பை மாறாட்டம் நடக்குது , அதனால வரும் குழப்பங்கள் அவளோதான் இந்த படத்தோட கதை , இதையும் அவங்களே யூடியூபில்  promotion போட்டுட்டாங்க .

படத்தின்  மைனஸ்  முதல் 30-40 நிமிடங்கள் , ஒரு ஒரு கேரக்டர் காட்டி , அவங்க படத்தில் செட்டில் ஆக்குவதற்கு டைம்  எடுக்குது , வழக்கம் போல கொஞ்சம் சம்மந்தம் இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் இன்னொரு மைனஸ் , முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சம் காமெடி அங்க அங்க வச்சி ஏதோ கொஞ்சம் சமாளிச்சு இன்டெர்வலலில் கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ,

 அப்பறம் இரெண்டாவது பாதியில் முதல் சில நிமிடங்கள்  தட்டு தடுமாறி ஆரம்பிச்சி , அப்படியே ஒரு ஸ்பீட் எடுத்து  காமெடியின் உச்சத்துக்கு போயிட்டு சந்தோஷமா படத்தை முடிக்கிறாங்க , நிச்சயமா படத்தின் கடைசி 30-40 நிமிடங்கள் அடங்காம சிரிப்பீங்க 

ஹீரோ கௌதம் கார்த்திக் , ஹீரோயின் நிக்கிகல்ராணிக்கு  ஸ்கோப் கம்மி தான் , படத்தின் ஹீரோன்னு பார்த்தா , சதிஷ் , மொட்டை ராஜேந்திரன் , கருணாகரன், ரவிமரியா , படத்தை தூக்கி நிறுத்துவது இவங்க நாலுபேரும் தான்(படம் பார்த்தா புரியம்)  , நடுவுல பாலசரவணனும் இருக்கார் , கதையின் குழப்பத்துக்கு அவரும் ஒரு காரணம் இருந்தாலும் , சிரிப்பு வரவைப்பது அந்த நாலு பேரும் தான் .படத்தில நிறைய highlight சீன்ஸ் இருக்கு ஆனா அது எதுவும் இங்க எழுத முடியாது , படம் பார்த்து சிரிச்சிகோங்க 

படத்தின் பெரிய ப்ளஸ் இந்த படம்  A  certificate தான் இருந்தாலும் பெண்களை எங்கேயும் கேவலமாகவோ , மட்டமான பெட் ரூம் சீன்களோ , ஹீரோயின் க்ளாமராகவோ , மட்டமான ஐட்டம் பாட்டு வச்சி அறை குறையா ஆட்டமோ இல்லை , படத்தில் இருப்பது வசனங்கள் மட்டும் தான்  , double meaning , triple meaning  வசனங்கள் எல்லாம் இல்ல , straight forward வசனங்கள் தான் , பச்சை பச்சையா இருக்கும் , இப்போ புரியுதா நான்  ஏன் review full பச்சையா எழுதியிருக்கேன்ன்னு 

இசை பாலமுரளி பாலு  ஹர  ஹர  மஹாதேவகி பாடல் தவிர மற்ற பாடல்கள் & , bgm  சுமார்  தான் 

நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும் , இதை கதையாய் எழுதி , ஒரு producer பிடிச்சி அவரை convince பண்ணி , சென்சார் வாங்கி , யூடியூபில் ப்ரோமோஷன் பண்ணி கொண்டுவந்ததுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய தைரியம் தான் .

நிச்சயமா இந்த படத்துக்கு  இந்த இங்கிலிஷ் websites , நியூஸ் papers பலர் ஒரு ஸ்டார் , ரெண்டு ஸ்டார் தான் reviewல்   கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன் , ஆனால் நீங்க ஒரு 2 மணி நேரம் எல்லா கவலைகளையும்  மறந்துட்டு நல்லா சிரிச்சிட்டு வர வேண்டும்ன்னா இந்த படத்தை பாருங்க, உங்களை திருப்திப்படுத்தும் .எனக்கு  90களில் வந்த சுந்தர்.சி படம் பார்த்த உணர்வு 

உங்களுக்கு இந்த படம் பிடிக்கலைன்னா நிச்சயமா மனதளவில் நீங்க வயசு ஆயிடுச்சின்னு சொல்லணும் ,  இல்லனா, நீங்க current ட்ரென்ட்க்கு இல்லன்னு அர்த்தம் .

இந்த படம் just for laughs,   கலாச்சார சீரழிவுன்னு யாரும் கொடி தூக்காதீங்க .

டைரக்டர் : சந்தோஷ்  பி  ஜெயக்குமார் 
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் : தங்கராஜ் 
கேமராமேன் : செல்வகுமார் 
என்னடா புதுசா கேமராமேன் , producer பேரு எல்லாம் போடுறானே தோணுதா , ஆமாங்க  இப்படி ஒரு படத்தை  யார் எடுத்தாங்கன்னு பின்னாடி வரும் சந்ததையர்கள் தெரிஞ்சக்க வேண்டாமா  அதான் .


மொத்தத்தில் ஹர  ஹர  மஹாதேவகி பஜனை நல்லாவே பண்ணி இருக்காங்க .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

புதன், 27 செப்டம்பர், 2017

Spyder - ஸ்பைடர்

ஸ்பைடர் இது வழக்கமான முருகதாஸ் படம் இல்ல , ஆனால் வழக்கமாக வரும் மற்ற தமிழ் படம் போலவும் இல்ல, கொஞ்சம் வித்தியாசனமான கதை , கதாபாத்திரம் எடுத்து ரெண்டு மணி நேரம் bore அடிக்காமல்  கொடுத்து இருக்கும் படம் ஸ்பைடர்.   துப்பாக்கி , கத்தி போல எதிர்பார்த்து போகாதீங்க ,

படத்தை பார்க்கும் முன் ஒரு rule என்னனா நிச்சயமா நீங்க லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா டெக்னாலஜி phone call ரெகார்ட் பண்ணுவது , ஒருதரை ட்ராக் பண்ணுவது , அது இதுன்னு கொஞ்சம் நம்பும்படி இல்லாத காட்சிகள் இருக்கு , இருந்தாலும் முருகதாஸோட brilliant screenplay இந்த துப்பாக்கியில் 12 பேரு சேர்ந்து பிளான் பண்ணுவாங்க அது போல intelligent காட்சிகள் இருக்கு , அதாவது பரத் தேடி கண்டுபிடிப்பது , மகேஷ்பாபுவின் அம்மா , தம்பியை காப்பாற்றும் காட்சிகள் , எஸ்.ஜே.சூர்யாவை வீட்டுக்குள்ளே பெண்களை வைத்து சுற்றிவளைப்பது என்று நல்லா யோசிச்சி காட்சிகள் வச்சி இருக்கார் , அந்த பெண்களை வைத்து பிடிக்கும் காட்சில விஜய் டிவி எல்லாம் யூஸ் பண்ணுவது ட்ராக் பண்ணுவது என்னடா இது லாஜிக் ன்னு எல்லாம் கேட்காதீங்க 

படத்தின் முதல் பாதி இங்க அங்கன்னு கொஞ்சம் கூட நம்மை திசை திருப்பாம, ஒரே வேகத்தில்  இண்டெர்வெல் கொண்டுவந்து விடுது , அதுவும் அந்த பிளாஷ் பேக் சூப்பர் , குறிப்பாக அந்த சின்னப்பையனாக வருபவன் நல்லா நடிச்சி இருக்கான், அவன் சிரிச்சிகிட்டே முகத்தை மாற்றுவது தாறுமாறு , அந்த பகுதியில் வரும் ஹாரிஸ் ஜெயராஜ் bgm மற்றும் அந்த பையனோட நடிப்பு  அந்த ஒரு திரில்லர் , சைக்கோ feel நமக்கு வர வச்சி இருக்காங்க .


படத்தில ஹீரோ மகேஷ் பாபு தான் என்றாலும் , எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ போல படத்தை தூக்கி நிறுத்துகிறார் , மகேஷ் பாபுவுக்கு டைரக்டர் கொடுத்து இருக்கும் மாஸ் சீன்ஸ் நிச்சயமா தெலுங்கு மக்கள்  நல்ல வரவேற்பு ,தருவாங்க ஆனால் தமிழ் ஆடியன்ஸ் மகேஷ் பாபுவின் opening சீன் , படத்தில் ஆங்காங்கே வரும் மாஸ் சீன்ஸ் நம்ம மக்கள் ரொம்ப சாதாரணமா பார்க்கிறாங்க , ஒரு கை தட்டு கூட இல்லை .ஆனால்  அவரை பாராட்ட வேண்டிய விஷயம்ன்னா , அது அவரே டப்பிங் பேசி இருக்கார், எங்கேயும் உதட்டு அசைப்பு தப்பாக இல்ல , ஆனால் அங்க அங்க லைட்டாக தெலுங்கு வாசம் வருது .

படத்தின் பெரிய ப்ளஸ் எஸ்.ஜே.சூர்யா தான் , மனுஷன் மிரட்டி இருக்கார் ,அந்த இன்டெர்வல் காட்சியில் அழுதுகிட்டே கண்ணீரை ஊதி விடுவது செம்ம நச் , நிச்சயமா அது டைரக்டர் ஐடியாவாக இருந்தாலும் , அதை அற்புதமாக நம்மகிட்ட சேர்த்து இருப்பது  எஸ்.ஜே.சூர்யா தான், அதே போல மகேஷ்பாபு அவரை விசாரிக்கும் போது அந்த காட்சி  முடியும் போது கடிகாரம் பார்த்து ஒரு ஏளனமா சிரிச்சிகிட்டே டைம் சொல்லும் போது மாஸ் பண்ணி கைத்தட்டு அள்ளுகிறார் மனுஷன் . பொதுவா சினிமா ஜாம்பவான்கள் என்ன சொல்லுவாங்கன்னா ஹீரோ கேரக்டர் எந்த அளவுக்கு strong ஆகா இருக்கோ அதே அளவுக்கு வில்லனுக்கும் இருக்கணும், அப்போ தான் படம் நல்லா இருக்கும் , அது முருகதாஸ் தன்னோட எல்ல படத்தில் அப்படி தான் வச்சி இருப்பர் , ஆனால் இந்த படத்தில் வில்லன் மாஸ் ஆகா இருக்கான் , ஹீரோ கொஞ்சம் டம்மியாக இருப்பது போல ஓரு உணர்வு எனக்கு .அந்தளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தூக்கி சாப்பிட்டார் , ஒருவேளை இந்த படத்தை தமிழில் விக்ரம் , சூர்யா , விஜய்சேதுபதி நடிச்சிருந்தால் , படம் சூப்பர் டூப்பர்ன்னு சொல்லிருப்பாங்க போல .


பரத் படத்தில் முக்கியமான characterல்   வரார் , நல்லா பண்ணி இருக்கார் , அவரோட sequence நல்லா இருக்கு ,  ஆர்.ஜே . பாலாஜி மற்றும் ஹீரோயின் ரகுல் ப்ரீத்தி சிங் அளவா வந்து போறாங்க, ஹீரோயின் பார்ப்பதற்கு புதிய கீதை படத்தில் வரும் அமீஷா படேல் போல இருக்காங்க , லாங் ஷாட் சைடு face பார்த்தா லைட்டாக இளைச்சி போன நிக்கிகல்ராணி போல இருக்காங்க ,   அவங்க படத்தில் இருப்பதும் இல்லாததும் ஒன்னு தான் , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா ஒரு impact இருக்க போவது இல்ல , அப்படியே தான் இருக்கும் , அதே போல தான் பாட்டும் , அது இருந்தாலும் இல்லாட்டியும் ஒன்னு தான் ,முதல்  பாட்டை தவிர மற்ற பாடல்கள் கேட்க்கும் படியாகவும் இல்ல , தேவைபடுவதாவாகும் இல்ல , படத்தில மொச்சை கொட்டை கண்ணுன்னு ஒரு பாட்டு வரும் அது அப்படியே அந்நியன் படத்தில் வரும் ரெண்டக்க பாட்டு போல இருக்கு , Bgm கூட சில எங்கேயோ கேட்ட ஞாபகம் வருது . தன்னோட பாட்டையே மீண்டும் கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டு இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ் .

படத்தின் மைனஸ்ன்னு சொல்லணும்ன்னா நிச்சயமா கதை  அதாவது அந்த வில்லன் கேரக்டர் ஏன் அப்படி இருக்கான் என்பது சொல்லுவதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியல ,மேலும் இரண்டாவது பாதியில் வரும் நீளமான சண்டை காட்சிகள் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மைனஸாக இருக்கு , அந்த பாறை உருண்டு வரும் காட்சி நிச்சயமாக ஏழாம் அறிவு படத்தை ஞாபகம்படுத்தியது 


சிலர் சொல்லுவது போல படம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்ல , ஒருதடவை தாராளமாக பார்க்கலாம் .

மொத்தத்தில் ஸ்பைடர் வழக்கமான முருகதாஸின் ஸ்பீடாராக இல்லை என்பதே ஒரு குறை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

Magalir Mattum - மகளிர் மட்டும்

குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது வாங்கிய பிரம்மா இயக்கிய  படம் தான் இந்த மகளிர் மட்டும் , முதலிலே சொல்லணும்னா எனக்கு இந்த படத்தில் பிடித்தவை விட பிடிக்காதது நிறைய இருக்கு , அதனால என்ன திட்டாதீங்க , திட்டினாலும் பரவாயில்லை அதுக்கு எல்லாம் கவலைப்பட போவதில்லை , ஏன்னா இந்த படம் பலருக்கு பிடிச்சிருக்கு , சில காரணங்களால் எனக்கு பிடிக்கல அவ்ளோதான் .

படத்தின் கதை என்னன்னு பார்த்தா , ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களின்  வாழ்க்கை , அதில் படும் அவதிகளையும் , திருமணம் ஆகிய பெண்களுக்கு நட்பு வட்டம் என்பது சுருங்கிவிடும் , அவர்களின் பழய நட்பு உடைந்துவிடும்  , அந்த நட்பை  புதுப்பிப்பதும் , நடுத்தர பெண்களின் மனசில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளும்  , அதை  நிறைவேற்றி  சந்தோசம் படுவதை தான்    சொல்லி இருக்கார் இயக்குனர் .

சரி எனக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னா ? படம் முழுவதும் ரொம்ப செயற்கை தனமாக இருந்துச்சி , நல்ல நடிக்கும் நடிகைகள் பானுப்ரியா , சரண்யா , ஊர்வசி இருந்தாலும் , எல்லோருமே ஏதோ ரொம்ப அதிகமா நடிச்சி செயற்கையாக இருக்கு , அவங்க உணவர்வுகள் படம் பார்க்கும் மனசில் பதியவில்லை  ரொம்ப நாடகத்தனமாக இருக்கு , எனக்கு படத்தோட கொஞ்சம் கூட ஒன்ற முடியவில்லை .

படத்தில் வரும் பிளாஷ் பேக் , பள்ளி பருவங்கள் , எல்லாமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்ல , ரொம்ப சினிமாத்தனமா இருந்துச்சி , கொடுத்த காசுக்கு மேல நடிச்சா மாதிரி ஒரு எண்ணம் , படம் பல இடங்களில் ரொம்ப டாக்குமெண்ட்ரி தனமாக இருக்கு , பல டாக்குமென்டரி படங்கள் பார்த்தாலும் அது மனசில் பாதிக்கும் அளவுக்கு இருக்கும், ஆனால் இது கொஞ்சம் கூட எனக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்றவில்லை . ஒரு ஒருத்தரும் அவங்க அவங்க காதல் கதை ஒரு பாட்டில் சொல்லி இருப்பாங்க , அது ரொம்ப ரொம்ப செயற்கையாக தோணுச்சு ஏன் இபப்டி வச்சாங்கன்னு டைரக்டர் பார்த்து கேட்க்கும் போல இருந்துச்சி.

படம் full ஆகா ஜோதிகா வந்தாலும் , படத்தில் scope கம்மியா இருப்பது போல தான் எனக்கு ஒரு உணர்வு , ஊர்வசி , சரண்யா , பானுப்ரியாவுக்கு இருக்கும் அழுத்தம் கூட ஜோதிகாவுக்கு இல்ல , அவங்க ஸ்டேஜ் ஷோவில் MC போல படத்தை நடத்தி செல்கிறாங்க தவிர படத்தில் ரொம்ப முக்கியத்துவமா எனக்கு தோன்றவில்லை . ஆனால் அவங்க கண்ணாடி போட்டுக்கிட்டு bullet , கார் ஓட்டுவது பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்காங்க.

பெண்களை பற்றிய படம் என்றால் நிச்சயமாக ஆண்களுக்கு இடமில்லை , இருக்கும் ஆண்கள் நெகடிவ் ஆகா இருப்பாங்க , அது போல இங்க , லிவிங்ஸ்டன் , நாசர் வராங்க , இவங்க ரெண்டுபேருல நாசர் கேரக்டர் தான் பார்க்கும் போது கொஞ்சம் கோவம் வாரா மாதிரி நடிச்சி இருக்கார் .

எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் பார்த்தா , பானுப்ரியா மகன் மனசு மாறும் காட்சிகள் , அப்புறம் அந்த முவரும் ஒரு ராத்திரி அவங்க அவங்க மனசில் இருப்பத்தை ஒரு மூட்டையில் அடிப்பாங்க , அது நம் அனைத்து பெண்கள் மனசில் இருக்கும் குமாறல்களாக தெரிஞ்சது

என்னை பொறுத்தவரை இன்னும் அழுத்தமாக , இன்னும் இயற்கையாக இந்த படத்தை எடுத்து இருந்தா மகளிர்க்கு  மட்டுமில்லாமல்  அனைவருக்குமான படமாக அமைந்து இருக்கும் .

மொத்தத்தில் மகளிர் மட்டும் ரொம்ப நாடகமாக மட்டும்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 14 செப்டம்பர், 2017

Thupparivaalan - துப்பறிவாளன்

மிஷ்கின் படம் என்னங்க சொல்லறது? அவர் படம்னா வித்தியாசமான ஹீரோ கேரக்டர் , அவங்க வித்தியாசமா body language இருக்கும் , கொஞ்சம் இருட்டா இருக்கும் , நிச்சயமா கேமரா ஷாட் low angle நிறைய இருக்கும் , ஒரு subway காட்சி இருக்கும் ,இப்படி தான் எதிர்பார்த்து போனேன் , ஆனால் இந்த படத்தில்  low angle ஷாட் ரொம்ப கம்மி , இருட்டும் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு , அதனால படம் நல்லா இல்லையா கேட்காதீங்க , படம் அருமையா இருக்கு . அந்த subway காட்சிகள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கு .

நீங்க ரொம்ப fast , மசாலா , படம் பார்பவர்களா ? அப்போ  இந்த படம் பொருந்தாது ஒரு நல்ல crime கதை உள்ள படம் பார்க்கணுமா ? அப்போ இந்த படம் நிச்சயம் உங்களுக்கு தான் . படம் கடைசி வரை என்ன என்னன்னு நமக்கு கேட்டுகிட்டே இருக்கவைக்குது .

ஒரு சாதாரணமான கதையை , அசாதாரணமான திரைக்கதையால் ,வித்தியாசமான கேரக்டர்களால் படத்தை தலை நிமிர்த்தி , நம்மை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஆற்றல் மிஷ்கின்னுக்கு இருக்கு , அதை இந்த படத்திலும் சரியாக பண்ணியிருக்கிறார் , ஒரு ஒரு காட்சியும் நம்மை அட போடவைக்கும் 

ஒரு சின்ன பையனுக்காக வெறும் 800ரூபாய்க்கு , அதுவும் ஒரு நாய்க்காக துப்பறிய போகிறார் விஷால் , அதன் பின்னாடி என்ன நடந்து இருக்கு , எப்படி போகுது , யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு  ரெண்டு மணி நேரம் நம்மை கட்டி போட்டு வச்சி இருக்கார் மிஷ்கின் .

எனக்கு படத்தில பிடிச்ச காட்சிகள் நிறைய , சின்ன பையன் விஷாலோட பேசும் காட்சி சூப்பர் ,தலைவாசல் விஜய் பேசுவதை வச்சி விஷால் கண்டுபிடிப்பது , அதுல விஷாலோட ரோல் என்னவென்று  காட்டுவது , பால்கனி எங்க இருக்குன்னு கேட்டு ஹீரோயினோட மாமாவை தூக்கி போடுவது ,  ஒரு ஒரு தடவையும் வினய் காபி கேட்பதும் , அதுக்கு பின்னாடி நடக்கும் காட்சிகள் நல்லா இருக்கு , ஒரு பைக் சேசிங் சீன் விறுவிறுப்பாக இருந்துச்சி ஆனால் அது எனக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் ஒரு பைக் சேசிங் சீன்னை ஞாபகம் படுத்துச்சி , இப்படி ஒரு ஒரு clue கண்டுபிடிச்சி கதையை ஒரு ஒரு கட்டத்துக்கு நகர்வது போல திரைக்கதை வச்சிஇருப்பது மிக பெரிய ப்ளஸ் .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் கேரக்டர்ஸ் , அதுக்கு நடிகர்கள் தேர்ந்து எடுத்தது , விஷால் , பிரசன்னா , பாக்கியராஜ் , வினய் , ஆண்ட்ரியா , அப்பறம் ஒரு மொட்டை அடிச்ச அடியாள் , ஆமாங்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில ஒருத்தன் பைக்கில் போய்ட்டு கத்தி குத்து வாங்கி சாவனே அவரே தான் இந்த படத்திலும் வாரார் .பாக்கியராஜ் முதலில் பார்க்கும் போது அடையாளமே தெரியல , வினய் பார்க்கும் போது அட இவர்க்கு இப்படி ஒரு கேரக்டர் aaha ? கேட்க தோணுது , நிச்சயமா அடுத்த சில படங்களுக்கு இது போல பல ரோல் வரும் .

விஷால் பற்றி சொல்லியே ஆகணும் , எல்லா reviewல் சொல்லுவது தான் , அவர் நடிச்சதிலே நல்ல படம் இது தான் , அதுவும் கத்தி கத்தி பன்ச் வசனம் எல்லாம் பேசாமல் , மொக்க பழி வாங்கும் கதை எல்லாம் இல்லமால் படம் நல்லா இருக்கு , நல்ல பேசப்படும் படம் அவருக்கு மிஷ்கின் கொடுத்து இருக்கார் .படத்தின் இறுதி காட்சி எல்லாம் உண்மையாக ரொம்ப உழைத்து இருக்கிறார் .

படத்தின் முக்கிய பங்கு , படத்தின் உயிர் நாடி மியூசிக் அரோல் , பக்கா bgm சின்ன சின்ன காட்சிகள் பிரம்மாண்டமா மனசுல பதியவைப்பது அவரோட இசை தான் , படத்தில் இன்னொரு ப்ளஸ் சண்டை காட்சிகள் , ஒரு சைனீஸ் ஹோட்டலில் ஒரு சண்டை வரும் அது நல்லா இருந்துச்சி , அந்த காட்சியில் bgm செம்ம 

படத்தின் மைனஸ் பார்த்தா , முதல் பாதியில் சில இடங்கள் கொஞ்சம் slow பண்ணி ஸ்பீட் எடுக்க போகும் போது , ஏதோ கொஞ்சம் மிஸிங் போல ஒரு உணர்வு , படத்தில் காதல் அளவாக சொன்னாலும் , ஒரு காட்சியில் ஹீரோயின் அனு துடைப்பக்கட்டையை வாங்கி கீழே விழும் காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனம் , நல்லவேளை அவங்க விழும் போது ஒரு கனவு டூயட் வைக்கல , ஒரு சேசிங் சீனில் ஆண்ட்ரியா தப்பிப்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை , எனக்கு முக்கியமான மைனஸ் தோணுச்சுனா அது , படத்தில suspense reveal ஆகும் , அப்போ ஒரு கேரக்டர் அதை பற்றி சொல்லும் போது , அவர் விக்கி விக்கி சொல்லுவதாலும் , அங்கே கொஞ்சம் bgm வருவதாலும் , அந்த இடத்தில என்ன சொன்னாருன்னு புரியல , அதனால அவங்க யார் என்ன லிங்க் என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல . அதனால அந்த இடத்தில கொஞ்சம் உற்று கவனிக்கணும் , 

படத்தில பிச்சாவரத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் அருமை , கடைசியாக விஷால் , பிரசன்ன நடுவே இருக்கும் ஒரு புரிதல் செம்ம செம்ம (அடிக்கடி நான் செம்ம யூஸ் பண்ணறேன் ஒருத்தர் சொன்னாரு அதனால கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுறேன் )

பிசாசு படம் ரெண்டாவது தடவை பார்க்கும் போது ஒரு ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி  கதையோட எப்படி ஒன்றி இருக்குன்னு தெரிஞ்சது , அதுபோல இரண்டாவது தடவை பார்த்தா என்னவெல்லாம் கிடைக்குமோ ?

மிஷ்கின் இதுவரை காணாத யாரும் கோணத்தில் விஷால் , ஆண்ட்ரியா , வினய் , பாக்யராஜ் இவர்களை நல்ல துப்பறிந்து தமிழ் சினிமாவுக்கு துப்பறிவாளன்  மூலம் கொடுத்து இருக்கிறார் 

மிஷ்கின் mysteryல்  மேஸ்திரி  அதை மீண்டும் நிரூபிச்சிவிட்டார் 

மொத்தத்தில் துப்பறிவாளன் மிஷ்கினின் அறிவில் உதித்த அருமையான அறிவாளன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்