வெள்ளி, 23 செப்டம்பர், 2016

Aandavan Kattalai - ஆண்டவன் கட்டளை

காக்க முட்டை , குற்றமே தண்டனை இப்போ ஆண்டவன் கட்டளை  போல நல்ல படங்கள் தரணும்ன்னு,  நிச்சயமா ஆண்டவன் மணிகண்டனுக்கு இட்ட கட்டளை போல,மனுஷன்  இரண்டு மணி நேரத்துக்கு கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை கொடுத்து இருக்காரு.

படம் ஆரம்பிக்கும் போதே அட ஒரு நல்ல படத்துக்கு வந்து இருக்கிறோம்  போல என்ற எண்ணம் தோணுது , குறிப்பா அந்த டைட்டில் song வரிகள் , இன்றைய சமூகத்தின் நிலையை பாடல் வரிகளில் வருவது நிச்சயமா கை தட்ட வைக்குது.

படத்தோட பிளஸ் நிறைய விஷயங்கள் இருக்கு, படத்தின் ஒரு வரி கதை , படம் எடுத்த விதம் , வழக்கமான சினிமாத்தனம் இல்லாதது , நடிச்ச நடிகர்கள் தேர்வு , சின்ன சின்ன கதாபாத்திரம் கூட மனசுல நிற்கிறா  மாதிரி நடிக்க வைச்சது, அந்த கதாபாத்திரங்களை வடிவமைச்சது , தேவை இல்லாத பாடல்கள் போடாதது , அப்படி இப்படின்னு நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு  படத்தின் ஒரு வரி கதை களம் என்னன்னு படத்தின் ஆரம்பித்தவுடனே சொல்லிட்டாரு டைரக்டர் , அதாவுது ஒரு வேலை செய்யணும்ன்னா அதை நேரடியாகவே நீங்களே பண்ணுங்க , நடுவுல வேற யாரையும் நம்பாதீங்க, இது தான் படத்தின் ஒரு வரி . அதே போல் படத்தில் காமெடி நிச்சயம் guarantee நல்லா சிரிக்கலாம்.

படத்தின் மாபெரும் பிளஸ், காட்சி நடக்கும் இடங்கள் எந்த சினிமாத்தனம் இல்லாமல், உண்மையான practical ஆக காட்டுவது , குறிப்பா விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சிகள் , அந்த வீடுகளை காட்டுவது, ஒரு சாதாரண மனிதன் வீடு தேடும் போது படும்  அவஸ்தைகளை இன்றைய சமூகத்தில் அவல நிலையை காட்டுவது, ஒரு travel ஏஜென்ட் ஆபீஸ் காட்டுவது , ரித்திகாவின் வீட்டின் நிலை அந்த வீட்டின் உள்ள பொருள்களை கொண்டு காட்டுவது என்று ஒரு நடுத்தரவர்கத்தின் கண்ணாடியாய் இந்த படத்தில் காட்டுவது செம்ம.


விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி படம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல , காந்திங்கிற கேரக்டர்ல அசால்ட்டா பண்ணிட்டு போறாரு , அதுவும் அவரு ஊமை போல கோர்ட்டில் நடிப்பது செம்ம, யோகி பாபு எப்பா !! அவர்  தலை முடியை பார்த்தாலே சிரிப்பு தான் , அவர் பாஸ்போர்ட் ஆபீஸ் போவது , விசா இன்டெர்வியூல பேசுவது அல்டிமேட் , ஹே citizen of London நான்ன்னு சொல்லுவது எல்லாம் சூப்பர், இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லைங்க, விஜய் சேதுபதியின் வீட்டு owner , அந்த ரெண்டு வக்கீல்கள் , குறிப்பா அந்த வக்கீலின் லேடி assistant வினோதினி அசால்ட்டா நடிக்கிறாங்க ,  பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து விசாரிக்க வரும் அந்த மலையாள ஆஃபீஸ்ர் , அப்பாவியா வரும் ரித்திகாவின்  அம்மா அவங்க அந்த ஜீன்ஸ்யை வச்சி பேசும் வசனம் அப்பாவித்தனம் காட்டுவது  , இலங்கை தமிழராக வரும் நேசன் கதாபாத்திரம் ,  மேலும் பல கேரக்டர்  எல்லாரும் சூப்பர் , எந்த ஒரு கதாபாத்திரமும் வில்லனாக காட்டாதது அருமை.

ரித்திகா நடிப்புல பிண்ணி எடுக்குறாங்க குறிப்பா அந்த இறுதி காட்சியில் வண்டியில் விஜய்சேதுபதியை உட்க்காரவச்சி  close up shotல் ஒரு expression கொடுத்தாங்க, தியேட்டர்ல செம்ம விசில் மற்றும் கை தட்டு 

படத்தில் பல காட்சிகள் மனசில் நிக்குது , குறிப்பா சில காட்சிகள் சொல்லியே ஆகணும், விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சி , ரெண்டு பேரும் விசா இன்டெர்வியூ போவது, அந்த கோர்ட் காட்சி எல்லாம் செம்ம, குறிப்பா ரித்திகா counsellingஇல் அவங்களை உணர்வது , அவங்களை பொண்ணு பார்க்கும் காட்சி , அந்த பாஸ்போர்ட்  ஆஃபீஸ்ர் ரிதிக்கவை விசாரிக்கும் காட்சி, எங்கே ஏதோ ஏடா கூடமா நடக்குமோ என்று நினைக்கும் போது அந்த ஆஃபீஸ்ர் gentle ஆகா அந்த சீனை handle பண்ணுவது சூப்பர்.குறிப்பா அந்த காட்சியில் ஒருத்தரை ஒருத்தர் காட்டி கொடுக்காமல் , விட்டு கொடுத்து, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் கொண்டு  அந்த காட்சியை  நகர்த்துவது சூப்பர், அப்புறம் கடைசியா யோகி பாபு ஊருக்கு போகும் போது ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் ஒரு அருமையானா காமெடி கடைசியா வைப்பது செம்ம, 

வேலைக்கு விசுவாசமா இருக்கறதா, வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா? சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட், வெள்ளைகாரன் இருந்தப்போ கூட காந்தி பாதுகாப்பாக தான் இருந்தார் ன்னு  அப்படி பல இடங்களில் வசனம் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், நம்ம படங்களில் குடி , மற்றும் புகை பிடிக்கும் காட்சி வந்தா எச்சரிக்கை டைட்டில் கீழே போடுவாங்க , அது போல இந்த படத்தில் வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போடாம போகும் போது ,"Wear Helmet to Avoid Legal Action " போடுறாங்க , இது இப்போ censor board இது போடணும் சொல்லி இருக்கா ? இல்ல டைரக்டர் அவர் சமூக நலன் கருதி போட்டறான்னு தெரியல , அப்படி டைரக்டர் போட்டு இருந்தா அவருக்கு பெரிய கை தட்டு . ஏன் என்றால் மற்ற படங்களில் இது மாதிரி போடுவது இல்லை , நான் ஒரு மலையாள சேனலில் ஓகே கண்மணி பாடல் போடும் போது அந்த தொலைக்காட்சியில் அது மாதிரி போட்டாங்க , ஏன் அது மாதிரி தமிழ்லில் போடுவது இல்லை என்று தோணுச்சி , ஆனால் இந்த படத்தில் போட்டது அருமை .

  என்ன தான் ஏஜென்ட் ஏமாற்றினாலும் விஜய்சேதுபதி  தெரிஞ்சு செய்த தப்பு
 தானே?  அவருக்கு  இந்த பிரச்சனையும் வராதா ? கடைசியா அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ்ர் வெறும் திட்டிட்டு கைஎழுத்து போட்டு தருவது , எந்த அளவுக்கு சட்டத்தில் இடம் இருக்கு ? வேற ஏதாவுது லாஜிக் மிஸ் ஆகுதான்னு எனக்கு தெரில .

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை மணிகண்டன் மக்களுக்கு கொடுத்த அருமையான கட்டளை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments