ஞாயிறு, 13 டிசம்பர், 2015

EETI - ஈட்டி

ஈட்டி இந்த படம் டைட்டில் மற்றும் அந்த logo பார்க்கும் போது, ஹீரோ ஈட்டி எறிதல் வீரர்ன்னு நினைச்சேன், ஆனா அவர் hurdle runner ah வரார்.

படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோக்கு எந்த மாதிரி உடம்பில் பிரச்சன்னை இருக்குன்னு தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாங்க, அதாவுது சின்னதா ரத்த காயம் ஏற்பட்டால் ரத்தம் நிக்காது, மேலும் அதிகமா ஏற்பட்டால் உயிர் போகும் வாய்ப்பு இருக்கும் ஒரு அரியவகை வியாதி உள்ளவரா காட்டுறாங்க , அதுக்கு ஏற்ற மாதிரி படமும் சண்டை கட்சிகளும் வச்சி இருக்காங்க, நிஜமாகவே இந்த மாதிரி பிரச்சன்னை இருக்க ஒருத்தர் ஒரு ரியாலிட்டி ஷோல வந்து இருக்கார் ஒருவேல டைரக்டர் அவரை inspirationah  வச்சி இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிருப்பார்  போல,

படம் முதல் பாதியில் தஞ்சாவூரிலும், இரண்டாவுது  பாதி சென்னையிலும் நடக்குது, கதை தஞ்சாவூர்ல நடக்குதுன்னு காட்றதுக்கு தஞ்சை பெரிய கோயில் சுற்றி நிறைய shots வச்சி இருக்காரு டைரக்டர்,   எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் நம்ம தமிழ் படங்கள பெரிய கோயில் காட்டியது இல்ல.

அதே போல சென்னை சொல்லும் போது பல படங்கள அடையார், திருவல்லிக்கேணி அல்லது north சென்னை தான் காட்டுவாங்க, ஆனா இதுல அரும்பாக்கம், அமஞ்சிகரை, சூளைமேடுன்னு கதை நடக்குற மாதிரி காட்டிருக்காங்க, உண்மையான இடங்கள் சொல்லிருக்காங்க, அரும்பாக்கதுல  SBI காலனி ஒன்னு நிஜமாகவே இருக்கு,ஏன் இதை சொல்லுறேன அரும்பாக்கம் எங்க ஏரிய..... கதைப்படி heroine அப்பா SBIல வேலை செய்றாரு அதனால இந்த காலனி காட்டி இருக்காரு,

அதர்வ நிச்சயமா ரொம்ப மெனக்கெட்டு, உடலை வருத்தி உழைச்சு இருக்காரு, ஒரு தடகள வீரரா பக்காவா பொருந்தி இருக்காரு, நல்லா நடிச்சி இருக்காரு, ஆனா அதை கதைக்கு எந்த அளவுக்கு பயன்படுதிருக்காங்க பார்தீங்கனா , கொஞ்சம் கம்மி தான், ஒரு சில காட்சிகள அவர் practice பண்றது, சண்டைல சிக்ஸ் பேக் காட்டுவதோட  சரி, 

ஸ்ரீதிவ்யா ஏதோ சும்மா guest ரோல் heroine போல இல்லாம நிறைய காட்சிகள் வந்து, படத்தோட கதைக்கு கொஞ்சம் supportah  இருந்துட்டு போறாங்க,அதர்வாக்கு மொபைல் reecharge பண்ணற சீன்ல எல்லாம் நல்லா அழகா நடிச்சிருக்காங்க.

ஜி.வி.பிரகாஷ் இசையில் முயல் குட்டி பாட்டு மட்டும் கேட்கிறா மாதிரி இருக்கு 

படம் தடகள வீரர் பற்றி போகும் பார்த்தா, அப்படியும் போகல, அட அந்த ஒரு வியாதி இருக்கு அதை வச்சி கதை போகும் பார்த்த அப்படியும் போகல, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கதைக்கு பயன்படுதிருக்காங்க அவ்ளோதான், முதல் பாதியில் காதல் பண்ணுகிற சீன் நல்லா  இருக்கு, ஆனா கதைக்குள்ள போகாம இரண்டாவுது பாதியிலும் காதல்ல  கதை போறது கொஞ்சம் போர் தான் அடிக்குது, இடைவேளைல வரும் சண்டையும், கிளைமாக்ஸ்ல வரும் சண்டையும் நல்லா இருக்கு, பார்க்கும் போது அதர்வாக்கு ரத்தம் வராம சண்டை இருக்கணுமே ஒரு feel நம்மக்கும்  வர வச்சி இருக்காரு.கதைல  திருப்பம்ன்னு நினைச்சு வச்ச சீன எல்லாம் திருப்பம்மா  தெரியல, அதே போல கடைசியா நிச்சியமா ஹீரோ தான் ஜெயிப்பாரு தெரியும் அதனால கடைசி காட்சி எல்லாம் பெருசா impact  ஆகல 

நிச்சயமா அதர்வ மனசுல நிற்கிறா மாதிரி ஒரு படம்  பண்ணி இருக்காரு, ஆனா இன்னும் strong ஆனா கதை உள்ள படம் பண்ணா நல்லா இருக்கும் .

மொத்தத்தில் ஈட்டி இன்னும் கொஞ்சம் கூர்மையா இருந்தா நல்ல இருந்திருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments