வெள்ளி, 28 அக்டோபர், 2016

Kodi - கொடி பறக்குதா



தனுஷின் கொடி வெற்றி கம்பத்தில் ஏறுமா ? இல்ல இறங்குமா ? வாங்க பார்ப்போம் , கொடி நிச்சயமா இது கொஞ்சம் மற்ற அரசியல் படத்தில் இருந்து மாறுபட்டது தான் , ஆனால் வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லை,  கொஞ்சம் குழப்புவது போல இருக்கா ? என்னடா சொல்ல வரேன்னு கேட்கறீங்களா ? இதை தான் நான் படம் பார்க்கும் போது கேட்டேன் ,
 பொதுவா இந்த மாதிரி அரசியல் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் எலியும் பூனையுமாக மோதுவது போல தான் இருக்கும், ஆனால் இதுல இரு வேறு கட்சிகளில்  உள்ளே நடக்கும் உட்கட்சிப்பூசல்களை காட்டி , மேலும் ஹீரோவும் ஹீரோயினும் எதிர் எதிரே மோதுகிறாங்க , அப்போ  இதுல சாதாரண ஹீரோயின் இல்ல, இவங்க ஆன்டி ஹீரோயின் ,  ஹெலோ ஒரு நிமிஷம் இருங்க திரிஷா வயசானதால ஆன்டி ஹீரோயின் சொல்லவில்லைங்க , நிஜமாகவே இந்த படத்தில் ஆன்டி ஹீரோயின் தான் அவங்க  .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் திரிஷா கதாபாத்திரம் தான் , தனுஷைவிட மேலோங்கி படத்தில் நிக்குறாங்க , அதுவும் அவங்க அரசியல் விளையாட்டு விளையாடும் காட்சிகள் எல்லாம் சூப்பர் , குறிப்பா போலீஸ்கார் ஒருத்தரை கூட்டிகிட்டு போகும் காட்சி அங்க விளையாடும் விளையாட்டு நிச்சயமா டைரக்டர்க்கு ஒரு சபாஷ் போடலாம் .தனுஷுக்கு இரு கேரக்டர் என்றாலும் , ஒரே கேரக்டர்ல் திரிஷா நல்ல பண்ணி இருக்காங்க 

இன்னொரு ஹீரோயின் அனுப்பம்மா அதாங்க ப்ரேமம் படத்தில் ஸ்கூல் பொண்ணா வரும் ஹீரோயின் , அவங்களே டப்பிங் கொடுத்து இருக்காங்க போல அப்படியே மலையாள வாசம் அடிக்குது , ஆனாலும் ரசிக்க வைக்குது , அதே நேரத்தில் காமெடி படத்தில் ரசித்து சிரிக்க முடியல 

வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லைன்னு மேல சொன்னேன்ல அது என்னனா , ஹீரோக்கு opening பாட்டு , இரண்டு ஹீரோயின் இருந்ததால் ஆளாளுக்கு ஒரு பாட்டு சரி சம்மாக பிரிச்சி கொடுத்துட்டாங்க ,அப்புறம் படம் முதல் பாதி வரை கதைக்குள்ளவே போகவே மாட்டேன் அடம்பிடிக்குது , இப்படி பல லாஜிக் தப்புகளோட படம் இருக்கு.

பாட்டு எப்படி இருக்கு ? இரு உயிராய் ஒரு உயிர் அவதரிக்க பாட்டு அப்படியே காபலி படத்தில வீர துரந்தரா பாட்டு போலவே இருக்கு,அப்புறம் ஹேய் சுழலி முட்டைன்னு ஒரு பாட்டு, இறைவி  படத்தில கண்ணை காட்டி முறைச்சான்னு எஸ்.ஜே .சூர்யா பாடுவரே அந்த பாட்டு மாதிரியே இருக்கு .சந்தோஷ் நாராயணன் சார் வித்தியாச வித்யாசமா பாட்டு தருபவர் நீங்களே உங்க பாட்டை நெல்லை பழரசம்  மாதிரி கலந்ததையே கலந்து கொடுத்தா நல்லாவா இருக்கு ?

மொத்தத்தில் கொடி கம்பத்தின் உச்சிக்கு ஏறவும் இல்லை, கீழ இறங்கவும் இல்லை , அரை கம்பத்தில் பறக்கவும் இல்லை, அரை கம்பத்தில் தொங்குது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

1 கருத்து:

Comments