வெள்ளி, 2 டிசம்பர், 2016

Pazhaya Vannarapettai - பழைய வண்ணாரப்பேட்டை

உன்னதான் நினைக்கையில ராத்திரி தூக்கம் இல்ல அப்படின்னு ஒரு பாட்டு வேல்முருகன் பாட ,  ஜானி டான்ஸ் மாஸ்டர் ஆட , நடுவுல ரோபோ ஷங்கர் அந்த பாட்டில் காமெடி பண்ண பல மாதங்கள் முன்பு  பல மியூசிக்  சேனல் மற்றும் fmல்  போட்ட பாடல் , என்ன படம் இதுன்னு கேட்க தோணுச்சி , அந்த படம் தான் பழைய வண்ணாரப்பேட்டை , ஒரு வருஷத்துக்கு முன்னாடி போன தீபாவளிக்கு வரவேண்டிய படம் ஏன் இந்த அளவுக்கு லேட்டாக வந்துச்சி தெரியல ,

பழைய வண்ணாரப்பேட்டைன்னு படம் பேரு வச்சி இருக்காங்களே ட்ரைலர் பார்க்கும் போது வடசென்னை பேஸ் பண்ணி இருக்கே அதனால இது கொஞ்சம் ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படம் போல இருக்குமோ நினைச்சேன் , ஆனால் அது மாதிரி படம் அல்ல , நிச்சயமாக படத்தில் பல புதிய முயற்சிகள் பண்ணி இருக்காங்க தான் சொல்லணும் ,  நம் தமிழ் சினிமாவுல அண்ணா நகர் , அடையாறு , அருவா , கத்தி எடுத்த படங்கள் என்றால் ராயபுரம் , அதை விட்டா  மதுரைக்கு போய்டுவாங்க , முதலில் கதை நடக்கும் இடம் ,இது வரை யாரும் இந்த வண்ணாரப்பேட்டை மையமாக வைத்து படம் செய்தது இல்லை , மேலும் அந்த சந்து புந்துகளை உயிரோட்டமாக காட்டி இருக்காங்க ,அதுக்கு ஒரு பெரிய பாராட்டு , குறிப்பாக அந்த opening பாடல் , நிஷாந்த் காதலி பஜ்ஜி சூடும் இடம் ,  நிஷாந்த்  மற்றும் ப்ரஜின் நைட் ஒரு தெருவில் சண்டை போடும் காட்சிகள், பர்மா பஜார் , பர்மா உணவு அத்தோ , கையேந்தி பவன் எல்லாம்   பக்கா வடசென்னையை காட்டி இருக்காங்க  , படத்தின் பெரிய பிளஸ் கேமரா, ஒரே மாதிரி  அந்த நைட் effect feel   கொடுத்தது , ப்ரஜின் , கருணாஸை சந்திப்பது , ரிச்சர்ட் ஒரு பிரிட்ஜ் மேலே சண்டை போடுவது இந்த காட்சிகளில் எல்லாம் அந்த நைட் effectக்கு ஒரு உதாரணம்.
படத்தின் கதை ? தவறாக ஒரு பிரச்சனையில் மாட்டி கொண்ட நண்பனுக்காக ஒரு கொலைகாரனை கண்டுபிடிக்கிறாங்க இது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை , ஆனால் அந்த கொலைகாரன் யார் ? எப்படி இருப்பான் , படத்தின் இறுதி காட்சி வரை ஒரு சஸ்பென்சாக வைத்து இருப்பது சூப்பர் , படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே யார் அந்த பட்டறை குமார்ன்னு  கேட்டு படத்தின் பார்க்கும் ஆர்வத்தை கூட்டி இருந்தாங்க , அது யார் என்ன எப்படின்னு சொல்லமாட்டேன் ஏன்னா படத்தோட முக்கியமே அது தான்
 ,
படத்தின் முக்கிய மூன்று பேர் நிஷாந்த் , ப்ரஜின் , ரிச்சர்ட் நல்லா பண்ணி இருக்காங்க , ரிச்சர்ட் சில இடங்களில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கொடுத்த காசுக்கு மேல கொஞ்சம் நடிச்ச பீல் எனக்கு , மேலும் ரோபோ ஷங்கர் குறைந்த காட்சியே வந்தாலும் , நிறைந்த காமெடி பண்ணியிருக்கார் , கருணாஸ் கருணையான முகத்தோட கொஞ்சமா வந்தாலும் முழுமையான கதாபாத்திரமாக வந்து இருக்கிறார் .

படத்தில் சில பல மைனஸ்களும் இருக்கிறது , குறிப்பாக ஸ்டேஷனில் ஒருத்தர் ஒருதராக கதை சொல்லுவது படத்தின் நீளத்தை கூட்டுவதர்காக வைத்த காட்சிகளே தவிர , படத்தின் கதைக்கு உதவவில்லை , மேலும் பிரஜினின் காதல் கதை இலவச இணைப்பாக இணைக்கப்பட்டதாக உணர்கிறேன் , மேலும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதாக இருக்கிறது , உன்னதான் நினைக்கையில பாடல் ஏற்கனவே ஹிட் ஆனதால் அது ஒரு தடையாக இல்லை இசையமைப்பாளர் ஜூபின்க்கு ஒரு சபாஷ்  ,ஹீரோயின்க்கு காட்சிகள் , வசனங்கள் எல்லமே குறைவு , அந்த பட்டறை குமாரை பற்றி அப்படி இப்படின்னு மற்றவர்கள் சொன்னாலும் , அந்த கதாபாத்திரத்தின் power காட்டுவதர்காக சில காட்சிகள் வைத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் , ஒரு வேளை அவரை பற்றி  part2ல் வருமோ ? படம் வண்ணாரப்பேட்டை சுற்றி நடக்குது ஆனால் ஒரு ஷாட்டில் வடபழனி சூர்யா ஹாஸ்பிடல் கிட்ட இருக்கும் சிக்னல் கண்ணில்பட்டது .

வழக்கமான படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சொல்ல முடியாது அதே நேரத்தில் அரைச்ச மாவே அரைத்து இருக்காங்க சொல்ல முடியாது , கதை களமும் , அதை கொடுத்த விதமும் ஒரு புதிய இயக்குனருக்கு ஒரு புதிய முயற்சி,  அதற்க்காவே அவரை பாராட்டலாம் , இப்படி புதிய முயற்சி ஒரு வருடம் காலதாமதமாகவும் குறைந்த தியேட்டர்கள் மட்டும் ரிலீஸ் ஆனது ஏன் தெரியல .

மொத்தத்தில் பழைய வண்ணாரப்பேட்டை பழைய முயற்சி அல்ல , இது ஒரு புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments