வெள்ளி, 20 ஏப்ரல், 2018

Mercury - மெர்குரி


சினிகிறுக்கனின் மனமார்ந்த வணக்கங்கள் , ரொம்ப நாள் கழிச்சி இல்ல , சுமார் ஒரு ஒன்றரை மாசம் கழிச்சி விமர்சனத்தோட வருகிறேன் , சினிமா ஸ்ட்ரைக்,காவேரி பிரச்சன்னை , ஐ.பி.ல் எதிர்ப்பு ,  இப்படி ஏகப்பட்ட தமிழ்நாட்டு  பிரச்சனைகள், இந்த ஸ்ட்ரைக் காரணத்தினால் படம் எதுவும்  வரவில்லை, அதனால சுமார் ஒரு மாசமா விமர்சனம் பண்ணுவதுக்கு லீவு விட்டாச்சு .
சரி போயிட்டு போகுதுன்னு சில இங்கிலிஷ் படம் பார்த்தாலும் , லேட்டா தான் பார்த்தேன் அதனால எந்த விமர்சனமும் பண்ணவில்லை.

போன வாரம் தான் A Quiet Place பார்த்தேன் , இந்த வாரம் பார்த்தா கிட்ட தட்ட அதுபோல வந்து இருக்கு நம்ம தமிழ் படம் மெர்குரி, இது silent படம் என்பதால கொஞ்சம் எதிர்பார்போடுதான் இந்த படத்துக்கு போனேன் , ஆனால் ஆரம்பமே அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் தவிடுபொடி ஆக்கிடுச்சி , ஏதோ வசனம் இல்லாம இந்த படத்தை எடுக்கணும்ன்னு நினைச்சி திணிச்சா மாதிரி ஒரு feel, கொஞ்சம் செயற்கையாக வடிவமைச்சா மாதிரி இருந்துச்சி,

படத்தின் ப்ளஸ் என்றால் படத்தோட visuals தான் சொல்லணும் , ரொம்ப அருமையாக காட்டியிருக்காங்க , ரொம்ப அழகா இருக்கு , ஈரம் , மழை, பனி இருட்டு பாதை , அந்த கார் பயணம் , மலையின் மாலை பொழுது , ஒரு உச்சி ஷாட் , சில இடங்கள் இயற்கையாக காட்டுவது , சில இடங்கள் CGல் காட்டுவது கொஞ்சம் கூட வித்தியாசமா தெரியாம காட்டியிருக்காங்க ,அந்த கம்பெனிகுள்ள காட்டும் விதம் , அங்க அங்கே கொஞ்சம் மிரட்டும் இசை , இது எல்லாம் படத்தோட மிக பெரிய ப்ளஸ் , ஆனால் படத்தின் கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்கு ?

படம் ஆரமபம் கொஞ்சம் செயற்கையாக ஆரம்பிக்குது ,போக போக கொஞ்சம் விறுவிறுப்பு வருவது போல இருக்கு , ஆனால் ஒரு கட்டத்துல இது எல்லாம் ஏன் நடக்குது , எப்படி நடக்குது , ஏன் பண்ணுறாங்கன்னு ஒரு curiosity இருந்தாலும்,அதுவே மனசில் அதிகமா தோணுவதால் படம் பார்க்கும் ஆர்வம் படத்திலிருந்து கொஞ்சம் விலகிவிடுகிறது, , மேலும் போக போக ஒரே மாதிரி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு  ஓரு எண்ணம்  ஒரு சாதாரண ரசிகனுக்கு எளிமையா கணிக்க முடிவதால், ஒரு சுவாரசியம் குறைஞ்சிடுச்சி .

எனக்கு என்னவோ கார்த்திக் சுப்புராஜ் mind ல ஒரு வித்தியாசமான வசனம் இல்லாம ஒரு படம் எடுக்கணும் முடிவு பண்ணிட்டு , காட்சி எல்லாம் இப்படி வரணும் முடிவு பண்ணிட்டு அப்பறம் இதுக்கு ஒரு கதை வைக்கணுமே யோசிச்சி பிறகு படத்தோட கதையை எழுதிருப்பாரோ ஒரு எண்ணம், ஏன்னா படத்தோட கதை கொஞ்சம் கூட strong ah இல்லையோ ஒரு feel , மேலும் மெர்குரி கம்பெனியால் பாதிக்கப்பட்டு , மெர்குரி கம்பெனியில் கதை நடப்பதால், மெர்குரின்னு படம் பெயர் வச்சியிருக்காங்கன்னு சொல்லணும் ,
இந்த படத்தில எந்த ஒரு சமுதாய எண்ணம் கொண்ட காட்சியோ அல்லது corporate கம்பெனி எதிர்த்து நடக்கும் கதையோ , அல்லது வேறு எந்த  சம்பந்தமான கதையோ இல்ல , இது திரில்லர் படம் போல, பேய் படம் போல படம் எடுத்துட்டு ,ஆனால் படம் முடியும் போது  corporate கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் எதுக்கு போட்டாங்கன்னு  தெரியல ,  சம்மந்தமே இல்லாம , படம் முடியும் போது இது போல வேற வேற நாட்டுல பாதிக்கப்பட்டவங்க வரலாறு ஏன் போட்டாங்க தெரியல ? ஒருவேளை இப்போ ஸ்டர்லைட் கம்பெனி ட்ரெண்ட் என்பதால் கடைசியா சேர்த்துட்டாங்களா ?

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றல் ஒரு ட்விஸ்ட் இருக்கும் , அது இந்த படத்துலயும் இருக்கு ஆனால் , அது wow என்று சொல்லும் அளவுக்கு இல்ல , இந்த படம் முதலில் இருந்து  கடைசி வரைக்கும் , பார்க்கும் பொழுது இது பேய் படமா ?திரில்லர் படமா ? எந்த மாதிரி படம்னு  ஒரு குழப்பம் நம் மனசில் யோசிக்க வச்சி கடைசியா oh இது அது தான அப்படின்னு முடியும் பொழுது தான் தெரியுது , ஆனால் அதற்க்கு சொல்லும் காரணமும் , பின் கதையும் அட சூப்பர்ப்பா சொல்லும் அளவுக்கு இல்ல , அட ஒரு சாதாரண கதை தான் அட போங்கடான்னு மக்கள் தியேட்டர்ல் சொல்லுவது கேட்க செய்யுது .அப்பறம் படத்தில் பல கேள்விகள் கேட்க தோணுது , அந்த பொண்ணு எப்படி காரில் இருந்து வெளியே வந்தா ? அஙக என்ன நடந்தது ? அவள் அங்கே எப்படி போனா ? அந்த நாலு பேரு வருவதற்கு முன்னால ?அவளை பிரபு தேவா ஒன்னும் பண்ணவில்லையா, இப்படி சில பல கேள்விகள் கேட்க தோணுது 

முக்கியமான விஷயம் பிரபுதேவா நல்ல நடிச்சிருக்கார் , அவர் மேக்கப் , அவர் நடை , பார்வை , பிரபுதேவா ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு படம் பார்த்தது ரொம்ப அரியது .அந்த காட்சிகளில் பிரபுதேவாவாக தெரியல ஒரு வெறிகொண்ட ஒரு வித்தியாசமான ஒரு உயிரினம் போல தான் தெரியுது .அதுபோல சந்தோஷ் நாராயணன் இசை  ஒரு ப்ளஸ்.

கார்த்திக்சுப்புராஜ் தன்னோட வழக்கமான நடிகர்களான கருணாகரன் , ஆடுகளம் நரேன் , விஜய்சேதுபதி இப்படி அவர்களை தவிர்த்து  முதல் முறையாக  எடுத்து இருக்கும் ஒரு வித்தியசமான ஒரு படம், அவர்களை மட்டும் அவர் தவிர்க்கவில்லை , கதையும் தான் இந்த படத்தில் தவிர்த்துவிட்டார் .

மெர்குரி  ஒரு  புதுமையான படைப்பு , ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி , வித்தியாசமா ஒரு அனுபவம் ட்ரை பண்ணலாம் நினைச்சா இந்த படம் பார்க்கலாம் , ஆனால் படம் முழுமையாக த்திருப்தி அளிக்குமா என்று கேட்டல் அது கொஞ்சம் டவுட் தான் .

மொத்தத்தில் மெர்குரி பார்ப்பவர்களுக்கு  கேள்விக்குறி 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 


சனி, 24 பிப்ரவரி, 2018

Yenda Thalaiyila Yenna Vekkala - ஏண்டா தலையில எண்ண வெக்கல


இப்படி ஒரு படம் வந்துச்சான்னு  நீங்க கேட்பீங்க ,  அப்படி தான்  நானும் நேற்று கேட்டேன் , இந்த மாசம் பிறந்து சில பல வேலைகளால் படம் எதுக்கும் போக முடியல , சரி கலகலப்பு போலாமேன்னு  நினைச்சேன், அப்போ நம்மளுக்கு தெரிஞ்ச தம்பி ஒருத்தன் அண்ணே, இப்படி ஒரு படம் வந்து இருக்கு நான் பார்க்கல ஆனா எனக்கு தெரிஞ்ச friend சொன்னான் நல்லா இருக்கு, சின்ன படம் எதிர்பாரம நல்ல காமெடி படமா இருக்கு , அதுக்கு போலாமேன்னு சொல்லி உசுப்பேத்திவிட்டான்  , அதை நமபி போனேன் , இப்போ அந்த தம்பி மற்றும் அவனோட friend ரெண்டு பேரையும் தேடிகிட்டு இருக்கேன்.

படத்தோட கதை என்னவோ கொஞ்சம் வித்தியாசமான ஒன்னு தான் , ஆனா படத்தில திரைக்கதை கொஞ்சம் கூட வித்தியாசம் இல்ல , கதைக்குள்ள போகும் போது படம் இன்டெர்வல்க்கு வந்துடுச்சி , அப்படி இழுத்து இழுத்து ட்விஸ்ட் போல கொண்டு வந்து நிறுத்திட்டாங்க , சரி ரெண்டாவது பாதியில ஏதோ கொஞ்சம் நல்லா போகும் நினைச்சா , பாட்டி கிட்ட அடிவாங்கு , ஒரு பொண்ணு இறந்து போகாம காப்பாற்று சொல்லுறாங்க , சரி காமெடி வரும் வரும்ன்னு கடைசி வரைக்கு காத்துகிட்டு இருந்தது தான் மிச்சம், அப்படி ஒரு மொக்கை படம் கொஞ்சம் கூட சிரிப்பு வரல .யோகி பாபு வரும் போது ரொம்ப கம்மியா சிரிக்க தோணுது அவ்ளோதான் .


அசார் , அர்ச்சனா , சிங்கப்பூர் தீபன் , ராமர்ன்னு விஜய் டிவி , ஜீ டிவி பார்த்தா மாதிரி இருந்துச்சி , அட டைரக்டர் கூட விக்னேஷ் கார்த்திக் இவர் விஜய் டிவில கலக்க போவது யாரு , ஜோடி நம்பர் -1 ல  வந்தவர் தான், ஹீரோயின் தவிர எல்லோரும் டிவி ஆளுங்க , அநேகமா இந்த படத்துக்கு அப்புறம் ஹீரோயின் சஞ்சித ஷெட்டி டிவிக்கு வந்துடுவாங்க போல ,  இப்படி ஒரு டிவி பட்டாளம் சேர்ந்து இந்த படத்தை தந்து இருக்காங்க , பேசாம ஒரு web series , மாதிரி பண்ணி இருந்தா கூட views நல்லா வந்து இருக்கும் , இந்த படம் ஓடும் தியேட்டர்களும் கம்மி , அந்த தியேட்டர்ல வரும் மக்களும் கம்மி தான் .முக்கியமான ஒன்னு படத்தின் டைட்டில் இவர்களுடன் மன்சூரலிகான்ன்னு போட்டாங்க , படத்தில எங்க வந்தார்ன்னு தெரியல , ஒருவேளை நான் கவனிக்காம விட்டுட்டேனோ இல்ல தூங்கிட்டேனோ ? மன்சூரலிகான் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்போ ஏதோ சர்ச்சையா பேசிட்டார் சொல்லுறாங்க அதனால அவரை படத்தைவிட்டு இப்படி வெட்டிட்டாங்களோ ?

ஆனா ஒன்னு படத்தில சில இடங்களில்  டேய் இப்போ டூயட் போடாதடான்னு அவங்களே அவங்க கலாச்சிக்கிட்டாங்க, நல்லவேளை படத்தில் ஒரே ஒரு டூயட் மட்டும் தான்

இந்த துக்கத்திலும் ஒரு நல்லவிஷயம், நான் இந்த படத்திற்கு 200 ரூபா செலவு பண்ணவில்லை , சென்னையில இருக்க  பிரபலமான பழமையான ஏவிம்ல தியேட்டர் ல எந்த ஒரு இன்டர்நெட் சார்ஜ் எல்லாம் இல்லமா வெறும் 70ரூபாய்க்கு பார்த்த ஒரு மனம் ஆறுதல் அவ்ளோதான் . என்ன ஒன்னு தியேட்டர்ல ஒரு பக்கம் எலி ஓடுது , கொசு கடிக்குது , படத்தோட கடிக்கு அந்த கொசுவோட கடி பரவாயில்லை தோணுச்சு .


மொத்தத்தில் ஏண்டா இந்த படத்திற்கு போனோம் தோணுச்சு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

cinekirukkan

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

ONPS - ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன்

ஒரு நல்லநாள் பாத்து சொல்லுறேன் இந்த படத்தை பற்றி என்ன சொல்லணும் ?

......

...

..................

...........

..........



................


............


..........

என்னடா ஒன்னும் சொல்லாம காலியா இருக்கே பாக்கறீங்களா ? படமும் அப்படி தான் இருக்கு , ஒன்னும் சொல்ல முடியலை, சொல்லறத்துக்கும் ஒன்னும் இல்ல, விஜய்சேதுபதி இப்படி ஒரு படம் பண்ணுவார்ன்னு சத்தியமா நினைக்கல, இந்த வருஷத்திலே அவருக்கு வந்து இருக்கும் முதல் படம் , அது இப்படி மொக்கையா இருக்கும்ன்னு கொஞ்சம் கூட நினைக்கல .

கதை திரைக்கதை எல்லாம் மீறி காமெடின்னு சொல்லி படத்தில வச்சி செஞ்சிட்டாங்க , ஒரு ஒரு காட்சியும் காமெடியா இருக்கணும் , எல்லோரும் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்க சிரிக்கணும் நினைச்சி செஞ்சி இருக்காங்க,ஆனால் முடியல பார்த்து பார்த்து கடுப்பு ஆகுது , இந்த black  காமெடி அது போல ஏதோ try பண்ணி இருப்பாங்க போல, ஆனால் அது  நம்மளை வச்சி  dry பண்ணிட்டாங்க, ஏதோ பழய காமெடி சீரியல் பார்க்கிறா மாதிரி ஒரு feel , இன்னும் சொல்லணும்ன்னா கலக்க போவது யாருல stand  up காமெடி சொல்லிட்டு அவங்களே சிரிச்சிக்கிறா மாதிரி இருக்கு .,

படத்தின் ப்ளஸ்ன்னு சொல்லணும்ன்னா கதை நடக்கும் களம், மற்றும் அந்த கிராமம் பெயர் , அந்த செட்டிங் , அந்த costume , மற்றும் விஜய்சேதுபதி சில இடங்களில் காட்டும் மாஸ், சின்ன சின்ன body language செம்மையை மனுஷன் காட்டுறாரு .

கௌதம் கார்த்திக் நடிப்பு இந்த காமெடிகளில் slapstick அது போல try பண்ணி இருக்கார், ஆனால் சிரிப்பு வரல , படத்தில் வெகு சில இடங்களில் கொஞ்சம் timing ஆகா காமெடி பன்னிருப்பது டேனியல் தான் அவர் சில இடங்களில் light aah ரசிக்கிறா மாதிரி செய்து இருக்கார் அவளோதான் .ஹீரோயின் நிகாரிக்கா அழகா இருக்காங்க குறிப்பு  நடிகர் சிரஞ்சீவி இவங்களுக்கு பெரியப்பா .

எனக்கு ஒரு சந்தேகம் விஜய்சேதுபதி எப்படி இந்த படத்தை எடுத்தார் ? ஒருவேளை டைரக்டர் இது சூதுகவும் படம் போல ஒரு புது trend செட் ஆகும் சொல்லிருப்பாரோ ? இதுக்கு முன்னாடி அவரோட றெக்கை , கருப்பன் படம் பார்த்தப்போ கூட இப்படி வெறுத்து போயிட்டு வெளியே வரலை, ஆனால் இந்த படம் பார்த்துட்டு வெளியே வரும் போது அப்படி ஒரு வெறுப்பு, இதுக்கு மேல என்னால இந்த படத்தை பற்றி எதுவும் எழுத முடியல.படம் பார்த்து வெளியே வரும் போது இதுக்கு விஜயகாந்த் பையன் நடிச்ச மதுரவீரன் பார்த்து இருக்கலாம் தோணுச்சு .

அட அந்த லம்பா லம்பா பாட்டு நல்லா இருந்துச்சே அதையாவுது போடுவாங்களேன்னு wait பண்ணா , படம் முடிச்சி end title ல போடுறாங்க , எப்பா டேய் இந்த ஒரு பாட்டுக்கு ஒரு முழு படத்தை பார்க்கவச்சிட்டாங்களேன்னு தோணுது , இந்த வருஷத்திலே பார்த்த முதல் மரண மொக்கை படம், இதுல second part வேற வர போகுதாம், நல்லவேளை தொடரலாம் தான் போட்டாங்க தொடரும் போடல, அதனால வராதுன்னு நினைக்கறேன் .

நீங்க  இளகின மனசு எந்த காமெடி சொன்னாலும் சிரிப்பேன் சொல்லுகிற ஆளு என்றால் போயிட்டு சிரிங்க 

மொத்தத்தில் ஒரு நல்லநாள் பாத்து (சொல்லுறேன் ) எதுவும் சொல்லமுடியாது 

குறிப்பு : பொதுவா என்னோட விமர்சனம் போட்ட பிறகு தான் மற்ற youtube  review எல்லாம் நான் பார்ப்பேன் , அப்படி பார்க்கும் போது ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், பல youtube reviewers இந்த படத்தை positive ஆகா review பண்ணிருக்காங்க, ஒருவேளை எனக்கு தான் பிடிக்கலையோ(குறிப்பாங்க Jackie cinemas review) ?   இந்த வரிகள் என்னோட review publish பண்ண பிறகு இதை update பண்ணிருக்கேன் .


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Padmavat - பத்மாவதி

பத்மாவதி இந்த படம் ரிலீஸ் ஆனதே லேட் , நான் படம் பார்த்தது கொஞ்சம் லேட் , இதுக்கு ரொம்ப லேட்டாக  review போடலாமா வேண்டமா எனக்கு ஒரு கேள்வி ? ஏன்டா இந்த படத்துக்கு எல்லாம் review போடுவியான்னு கேட்டகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது , இருந்தாலும் போடுவோம் படிக்கறவங்க படிங்க.பொதுவா சர்ச்சைகள் உள்ள படம் ,  இல்லனா நல்ல மற்ற மொழி படங்கள் மிஸ்பண்ணாம பார்த்துடுவோம் , அப்படி பார்த்தது தான் இந்த படம் , தமிழில் பார்க்கல ஹிந்தில தான் பார்த்தேன் , நமக்கு தெரிஞ்சது கொஞ்ச ஹிந்தி தான் நல்லவேளை subtitle இருந்துச்சி 

கதை :
பொதுவா கதை என்னோட reviewல் இருக்காது, ஆனால் இந்த படம் சொல்லியே ஆகணும் , வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணும் வெறித்தனமான Aladdin(ரன்வீர்), சித்தூர் ராணி அழகை கேள்விப்பட்டு அவளை அடைய ஆசைபடுறான், அவனுக்கு சற்றும் சளைக்காத  நேர்மையாக போர் புரியும் ராஜபுத்திரர்கள் ராஜா ரத்தன் சிங் (ஷாஹித் கப்பூர் )கடைசியில் இறந்து போக,  ராணி பத்மாவதி(தீபிகா) உட்பட பல பெண்கள் தங்களை தாங்கள் நெருப்புக்கு தியாகம் செய்யறாங்க , கடைசி வரைக்கும் சுல்தான்(ரன்வீர்) ராணி பத்மாவதியை(தீபிகா) பார்க்க முடியவில்லை, இது பலருக்கும் தெரிஞ்ச கதை இதில் கற்பனை கலந்து வந்து இருக்கு இந்த படம் 

திரைக்கதை:
மூன்று மணி நேரம் படம் நிச்சயமா கொஞ்சம் பொறுமையாக தான் இந்த படத்தை  பார்க்கனும், படம் ரொம்ப வேக வேகமா போகவில்லை, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நிமிர வைக்கிறது, படத்தின் கதை என்னவென்று தெரிஞ்சு பார்ப்பதால், பார்க்கும் பொழுது நமக்கு  பெருசாக சுவாரசியம் இல்லாத மாதிரி தான் ஒரு உணர்வு, மேலும் ஷாஹித் கப்பூர் & தீபிகா காதல் காட்சிகள் காதல் ரொம்ப சொட்ட சொட்ட கொடுத்து இருக்காங்க ஆனால் அந்த காதல் கூட ரொம்ப நிதானமா slow ஆகா சொட்டுகிறது, பேசுறது கூட இவ்வளவு  பொறுமையாகவா  பேசுவீங்கன்னு கேட்க தோணுது , ரெண்டாவது பாதியில் வரும் காதல் காட்சிகள் பார்க்கும் போது எப்பா டேய் காதல் பண்ணது போதும்டா வெளியே போயிட்டு சண்டை போடுங்கடா ன்னு கேட்க தோணுது, காதல் காட்சிகளை குறைத்து போர் காட்சிகளை கொஞ்சம் அதிகம் படுத்தியிருக்கலாம் 

ரன்வீர் சிங் :
படத்தின் ஹீரோன்னு சொல்லணும்ன்னா இவரைத்தான் சொல்லணும் , மனுஷனா இல்ல மிருகமா இவன்?  என்று சொல்லவைக்குது அந்த கேரக்டர்க்கு அப்படி ஒரு justification கொடுத்து இருக்கார்,எங்கேயும் ரன்வீர் ஆகா தெரியல , அந்த கண்பார்வை கூட அப்படி ஒரு வில்லத்தனம் படம் full ஆகா வருது, அந்த நடை body language எல்லாம் தாறுமாறு, அவங்க டென்டில் தீ விழும் பொழுது பார்த்துட்டு அசால்ட்டாக அப்படியே இருந்து ஒரு expression தருவார் செம்ம, கலி பலின்னு ஒரு பாட்டு வரும் அந்த வெறித்தனம் அந்த பாட்டுல அவர் ஆடும் பொழுதும் கூட தெரியும், , இந்த படம் தூக்கி நிறுத்துவது ரன்வீர் தான் , ஒரு சில படங்ளில் தான் வில்லன் கேரக்டர் strong ஆகா இருக்கும் , அதை ரொம்ப சூப்பராக செய்து இருக்கார் , மேலும் நமக்கு ச்சே என்ன வில்லன்யா இவன் , ஒரு வில்லன் ஜெயிக்கணும்  ஒரு சில  படங்களில் தான் தோணும் , அப்படி இந்த படத்தில் தோணுவச்சிருக்காங்க, நிச்சயமா சிறந்த வில்லனக்குரிய விருதுகள் வாங்குவார் 

தீபிகா :
அழகான ராணி , அவளால் , அந்த அழகால் தான் கதை என்பதால் தீபிகாவை எந்தளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு அழகா காட்டிருக்காங்க, முகத்தில் நிறைய பட்டி டிங்கரிங் பார்த்து இருக்காங்க , எந்த அளவுக்கு பார்த்து இருக்காங்க என்றால் , டிஜிட்டல் கலரிங் வேற நிறைய செய்து இருக்காங்க போல  தெரியுது , பல இடங்களில் கிராபிக்ஸ் கார்ட்டூன் படத்தில பார்த்தது போல இருக்கு அவங்க முகம் , மாசு மருவற்ற முகம் என்பது இது தானோ கேட்கத்தோணுது 

ஷாஹித் கப்பூர் :
படத்திற்கு இவர் முக்கியமான கேரக்டர் ஆகா இருந்தாலும் படத்தின் முக்கியம் தீபிகாவும் ரன்வீரும் தான் , அதனால் இவர் கேரக்டர் பெருசா எடுபடவில்லை, மேலும் எனக்கு படத்தில் பார்க்கும் பொழுது ராஜாக்குரிய ஒரு கம்பீரம் வரவில்லை , ரன்வீரை பெருசா காட்ட வேண்டும் என்பதால் இவரை டம்மி ஆக்கிட்டாங்க போல, ரன்வீருக்கு முன்னாடி வீர வசனம் பேசினாலும் ஒரு ராஜபுத்திரர்கள் என்று கம்பீரமாக சொல்லும் அளவுக்கு இல்ல , ரன்வீர் முன்னாடி இவர் சின்ன பையன் போல தான் இருக்கார் .


சஞ்சய் லீலா பன்சாலின்ன இன்னொரு பெயர் பிரம்மாண்டம், அந்த 
பிரம்மாண்டம் படம் முழுக்க இருக்கு , எனக்கு மீண்டும் பாஜிரோ  மஸ்தானி பார்த்த உணர்வு , அந்த செட்டிங் பிரம்மாண்டம் அரண்மனை எல்லாம் செம்ம , எது செட்டிங் எது ஒரிஜினல் எது கிராபிக் என்று கொஞ்சம் கூட பிரிச்சி பார்க்க முடியல அப்படி ஒரு அருமையான மேக்கிங் .படத்திற்கு இசையும் இவரே, ஆனால் சஞ்சித் தான் படத்தின் Bgm,  படத்தின் ப்ளஸ் இவரோட Bgm தான்,  .ஆனால் படத்தின் நீளம் மைனஸ் , மேலும் போர் காட்சிகள் இல்லாதது படத்தின் ராஜபுத்திரர்கள் வீரம் இல்லாதது போல ஒரு உணர்வு.

இந்த படம் எதுக்கு இந்தளவுக்கு சர்ச்சை பண்ணாங்க தெரியல 

மொத்தத்தில் பத்மாவதி பல சர்ச்சைகளை பதம்பார்த்து மிதித்தவள்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 27 ஜனவரி, 2018

Nimir - நிமிர்

உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்தா ரெண்டு நாளைக்கு நிமிர முடியாது , ஏன்னா அவரோட முந்தைய படங்கள் அப்படி , இருந்தாலும் ப்ரியதர்ஷன் படம் என்பதால் ஒரு அளவுக்கு நிமிர்ந்து பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் போனேன் , அதுவும்   Maheshinte Prathikaaram  என்ற மலையாளப்படத்தின் ரீமேக் என்பதால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி , அந்த ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை

படம் ஆரம்பமே இந்த படம் visual ஆகா நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் வந்தது, அதே போல படம் full ஆகா ரொம்ப அழகா காட்டிருக்காங்க, மலை , மழை , இயற்க்கை , உதயநிதி ஸ்டாலின் வீடு , அதுவும் இரவில்  காட்டும் lighting மனசில் பதியவச்சது,

படம் போக போக என்னமோ ஏதோ சம்மந்தம் இல்லமே , எங்க எங்கயோ போகுது , ஒரு ஒரு கேரக்டர் புரியவச்சி படம் கதைக்குள்ள போகுது , ஆனால் அது  எல்லாம் தேவையா என்று  தோணுது, படம் முக்கியமா கதைக்குள்ள போக  ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மான் அண்ணாச்சியில் ஆரம்பித்து கஞ்சா கருப்பு வழியாக எம்.ஸ் .பாஸ்கர் வழியாக உதயநிதி ஸ்டாலின் கிட்ட போயிட்டு சேரும் chain link ஒரு நல்ல ஐடியா , ஆனால் அப்படி பட்ட லிங்க் தேவையா என்ற எண்ணம் தோணுது , அதுவும் அதை செயல் படுத்திய விதம் ரொம்ப சாதாரணமா  இருக்கு  , காமெடி என்ற இடத்தில வைத்த காட்சிகள் எதுவும் காமெடியாக  இல்லை.

அழகான எதார்த்தமான படமாக வரவேண்டியது, சொல்லப்போனா ரொம்ப commercial பொருட்களும் படத்தில் பெருசா இல்ல , இருந்தாலும் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை , பல இடங்களில் கொட்டாவி தான் வருது , இது ஒரு நல்ல emotion feeling படமாக வரவேண்டியது அந்த எமோஷனும் வரவில்லை , அநேகமா உதயநிதி ஸ்டாலின் தவிர வேற யாராவது செய்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் போல , சொல்லப்போனா உதயநிதிக்கு இது ஒரு நல்ல படம் தான், இருந்தாலும் அதை முழுமையாக  வெற்றி படம் , அருமையான படம் என்று சொல்லவைக்கவில்லை  அவர் .

ஹீரோயின் நமீதா ப்ரமோத் ரெண்டாவது பாதியில் தான் வராங்க , பார்க்க நல்லா இருக்காங்க , நல்லா நடிச்சி இருக்காங்க , ஆனால் அவங்களை எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு இருக்கு .

குறிப்பா ஒருத்தரை பற்றி சொல்லனும்னா அப்பாவாக நடித்த இயக்குனர் மகேந்திரன் , அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி, ரெண்டு இடத்தில் அந்த கேரக்டர் எப்படி பட்டது என்றது தெளிவா தெரிஞ்சது , உதயநிதி அடிவாங்கிய பிறகு பதறாம , கத்தாமல்  சாதாரணமா செருப்பு எடுத்து தருவது , பார்வதி நாயர் அப்பா அவங்க வீட்டுக்கு வந்து உதயநிதியை சந்திக்கும்  பொழுது அழகா அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ரொம்ப  இயற்கையா இருந்தது .இன்னும் கூட அவருக்கு படத்தில் காட்சிகளோ அல்லது அவர் கேரக்டர் இன்னும் பெருசாக காட்டி இருக்கலாமே என்ற எண்ணம் தோணுச்சு .

இன்னும் இந்த படத்தை பற்றி என்ன பெருசா சொல்லுவது என்று தெரியல, ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதை இன்னும் ரசிக்கும்படி இருந்திருந்தால்  நல்லா இருந்து இருக்கும்.


மொத்தத்தில் நிமிர் பெருசா நிமிரவில்லை .



இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

வெள்ளி, 26 ஜனவரி, 2018

Bhaagamathie - பாகமதி

பாகுபலி , பாகமதின்னு படம் பெயர் கேக்கறதுக்கு ஒரே மாதிரி இருக்கு, ரெண்டு படத்திலும் அனுஷ்கா தான், அதுவும் தெலுங்குகாரங்க எடுத்த படம் , தமிழ் தெலுங்குன்னு ரெண்டு மொழிலையும் வந்து இருக்கு, வழக்கமான பேய் படம் ட்ரெண்ட் தான் இதுவும் ,

பேய் படம்ன்னா என்னவெல்லாம் இருக்கும் ? ஒரு பழைய பங்களா அதுல ஒரு பேய் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் , அப்பறம் இங்க எவனையாவது பழி வாங்க வந்து இருக்கும் , இப்படி தான் எல்லாம் பேய் படஙளும் இருக்கும் , இந்த படத்தில் நான் சொன்னது போல சில விஷயங்கள் இருந்தாலும்  , ஆனால் பழி வாங்க வருவது , பூசாரி சாமியார் ன்னு யாரும் இல்ல , குறிப்பா பேய் படத்தில் வரும் பேய் காமெடி இப்படி என்று வழக்கமான காட்சிகள் இதில் இல்ல

முதல் பாதி படத்தின் கதையே இல்லாமல் சும்மா பங்களாவை சுத்தி சுத்தி காண்பிச்சி எப்பொழுதும் போல பேய் படம் formula வை  வைச்சி, அங்க அங்க தீடிர் தீடிர்ன்னு பயமுறுத்தும் ஷாட்கள் வைச்சி   ,இப்படி  படத்தை ஓட்டி முதல் பாதியை முடியுது, தலைவாசல் விஜய் வரும் போதே எனக்கு இந்த படம் எப்படிபட்ட கதையுள்ள படம் , அனுஷ்காவுக்கு என்ன மாதிரி ரோல் இருக்கும்ன்னு எனக்கு யூகிக்க முடிச்சது, ஆனால் எதுக்காக, ஏன் ,  எப்படி என்பது கடைசியில் காட்டுறாங்க 

இந்த படத்தில் இன்னும் பெருசா குறிப்பிட்டு சொல்லிக்கும்படியா எந்த ஒரு புதுமையான விஷயமும் இல்ல , ஆனால் ஒரு ரெண்டு மணி நேரம் படம் எங்கேயும் bore அடிக்காமல் நம் கவனம் படத்தை விட்டு வெளியே போகாமல் படம் போகுது, படம் பார்க்கும் போதே easy ஆகா கணித்து விடலாம் என்ற அளவுக்கு தான் திரைக்கதை இருக்கு, எனக்கு இந்த படத்தின்  திரைக்கதை கதை பார்த்த கொஞ்ச நேரத்தில், 2012ல் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டிங் பேய் மற்றும் த்ரில்லிங்  படம் தான் ஞாபகம் வருது , அது எந்த படம்ன்னு சொல்லிட்டா இந்த படம் பார்க்கும் சுவாரசியம்  போயிடும் , ஒரு clue சொல்லணும்ன்னா அப்போ அந்த ஹீரோ அந்த படத்தின் மூலமாக தான் வெளியுலகத்துக்கு தெரிஞ்சார் , அந்த டைரக்டர்க்கு முதல் படமே பெரிய பெயர் வாங்கி தந்தது , ஒருவேளை இந்த படத்தின் டைரக்டர் அந்த படத்தை ஒரு reference ஆகா வச்சி தான் இதை எடுத்து இருப்பர் போல(அது எந்த படம்ன்னு உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எனக்கு தனியா msg பண்ணுங்க, நான் சொல்லுறேன் ) , climax ஒரு காட்சி ஷங்கர் படத்தின் ஒரு காட்சி ஞாபகம் வந்தது 

படத்தின் ப்ளஸ் அனுஷ்கா , மிரட்டும் தமனின் bgm, அளவான vfx ,படத்தின் வேகத்தை குறைக்கும்படியான பாடல்கள் இல்லாதது . அந்த அரண்மனை செட் 

படத்தின் மைனஸ் predictable திரைக்கதை , கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங் , படத்தின் கடைசி காட்சியில் எப்பொழுதும் போல வரும் பேய் பட டச்  

மொத்தத்தில் பாகமதி ஒருஅளவுக்கு பாகவே உந்தி.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

Gulaebaghavali - குலேபகாவலி





புகழ் பெற்ற பழய படத்தோட பெயர்ல வந்து இருக்கு இந்த படம், ஆனா படம் ஆரம்பிக்கும் போது எம்.ஜி.ஆர் photo போட்டு இருக்காங்க , அதுக்கே பல கைத்தட்டு வருது ,இதை பார்க்கும் போது  இன்னும் எம்.ஜி.ஆர்க்கு ரசிகர்கள் இருக்காங்க .

 சரி இந்த படம் எப்படி பட்ட படம் ? படம் முதல் காட்சியே எப்படிபட்ட படம் இது , இதை நோக்கி போகும்ன்னு clear ஆக தெரியுது , ஒரு புதையலை தேடி இந்த படம் போகுது , ஆமாங்க இந்த மரகதநாணயம் போல கதை தான் , ஆனால் பேய் எல்லாம் இல்ல , வெறும் காமெடிதாங்க , அப்போ காமெடி செம்மயா இருக்கும் படம் full ஆகா விழுந்து விழுந்து சிரிப்பு இருக்குமான்னு பார்த்தா , அப்படி fullah பயங்கர சிரிப்பு இல்லாட்டியும் , ஒருஅளவுக்கு சில இடங்களில் நம்மை நல்லாவே சிரிக்க வச்சிருக்காங்கன்னு சொல்லலாம் .

படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் ஒரு ஒரு கேரக்டர் எப்படிபட்டவங்கன்னு பதியவச்சி கதைக்குள்ள போக கொஞ்சம் time எடுக்குது , அப்போ அங்க அங்கே கொஞ்சம் தான் காமெடி பெருசா ஒண்ணுமில்ல , அப்போ எல்லாம் யோகிபாபு நல்ல timingல கலாய்த்து கொஞ்சம் காப்பாற்றுகிறார், ஒரு கட்டத்துல ரேவதி , முனீஸ்காந்த் , பிரபுதேவா , ஹன்சிகா நால்வரும் சேர்ந்த பிறகு நல்ல வேகம் எடுக்குது கதையிலும் , காமெடியிலும் , அதுல இருந்து ஒரு 20 நிமிஷத்துக்கு சத்தியமா நல்லா வயிறு குலுங்க சிரிக்கலாம் , அப்படி சிரிச்சி முடிக்கும் போது இன்டெர்வல் வருது , அதுவும் அந்த இன்டெர்வல் காட்சி ultimate, யோகிபாபு என்னமோ செய்ய போகிறார் என்று நினைக்கும் போது, அங்கே இன்டெர்வல் வரும் போது, சாத்தியமா   வேற லெவல் இன்டெர்வல் அது .சரி அதே வேகத்தில காமெடி இருக்கும் நினைச்சா படம் எங்க எங்கயோ போகுது திரும்பவும் கடைசி 15 நிமிஷம் காமெடி நல்லா கொடுத்து படம் முடிச்சி வெளியே வரும் போது பரவாயில்லை நல்ல entertained படத்துக்கு தான் வந்தோம் என்ற ஒரு திருப்தியோட வெளியே வரலாம், ஆனால் இந்த மாதிரி படத்தில எல்லாம் நாம் லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. 


பிரபுதேவா 44 வயசு சத்தியமா நம்ப முடியல , என்ன fit உடம்பு , என்ன டான்ஸ் , அவர்  பழய படங்களில் பார்த்தா மாதிரியே இருக்காரு, அந்த காமெடி body language எல்லாம் பார்க்கும் போது மின்சாரக்கனவு படம் ஞாபகம் படுத்தியது ,அந்த முதல் குலேபகாவலி பாடல் அடேங்கப்பா என்ன டான்ஸ் , வச்ச கண்ணை வாங்க முடியாமல் பார்க்கவச்சிட்டாரு, அந்த பாட்டும் அருமை திரும்ப திரும்ப கேட்கவைக்குது , நம்மையும் ஆடவைக்குது , அந்த பாட்டின் விஷுவல் சூப்பர் , 

ரொம்ப முக்கியமான கேரக்டர்ல ரேவதி நடிச்சிருக்காங்க , பவர் பாண்டில எப்படி அவங்களுக்கு நல்ல பெயர் வந்துச்சோ , அதுபோல இதுலையும் அவங்களுக்கு நல்ல பெயர் வரும் , வித்யாசமான கேரக்டர் , செம்ம மாஸ் பண்ணிருக்காங்க முதல் காட்சியிலே , ஒரு ஹீரோவிற்கு சமமான மாஸ் கொடுத்து இருக்காங்க, அதுக்கு அந்த இடத்தில மாஸ் bgm நல்லா எடுத்து கொடுத்து இருக்கு 

படத்தின் ப்ளஸ் யோகிபாபு , மன்சூரலிகான் காம்பினேஷன் , யோகிபாபு மன்சூரலிகானை ultimate கலாய் கலாய்ச்சி தள்ளுறார் , கடைசியில இவங்க ரெண்டு பேரு போதா குறைக்கு , மொட்டை ராஜேந்திரன் வந்து அவர் பங்குக்கு காமெடி பண்ணிட்டு போகிறார் , அவர் வருகிற கடைசி நிமிடங்கள் எப்பா நல்ல வயிறு குலுங்க சிரிக்கவச்சிட்டு போகிறார் மனுஷன்,முனிஸ்காந்த்தும் அவர் பங்குக்கு ஸ்கோர் பண்ணுகிறார் , நடு நடுவே light ah சத்யனும் ஏதோ ஒருஅளவுக்கு சமாளிக்கிறார் சொல்லணும் 

ஹன்சிகா படம் fullah வராங்க , ஆனால் ஆரம்பத்தில் அவங்க கேரக்டர்க்கு பெருசா clue இல்லாமல் இருக்கு ,யார் எதுக்கு என்ன மாதிரி கேரக்டர்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இல்ல, அவங்களை வச்சி கதை நகர்கிறது சொல்லலாம் ஆனால் அது ஒன்னும் பெருசா தேவைப்பட்டா மாதிரி தெரியல , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா பாதிப்பு ஒன்னும் இருந்து இருக்காது , ஹீரோன்னு இருந்தா ஹீரோயின் இருக்கணும்ல , அதனால அவங்களை படத்தில வச்சிக்கலாம் .

இசை விவேக் - மெர்வின் நல்லா பண்ணிருக்காங்க , அந்த முதல் குலேபகாவலி பாடல் ஆட்டம் போடவைக்குது , heartகுள்ள பச்சை குத்தியே பாடல் கொஞ்சம் ஹிந்தி பாட்டு dhating naach பாடல் போல இருக்கு, மேலும் ரேவதி மாஸ் bgm , காமெடி தேவையான காமெடி  bgm நல்லா கொடுத்து இருக்கார் ,நிச்சயமா bore அடிக்காம ஒரு தடவை போயிட்டு பார்க்கலாம்

மொத்தத்தில் குலேபகாவலி குழப்பவாதியாக இருந்தாலும் சிரிப்பொலியாக இருக்கிறது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 13 ஜனவரி, 2018

Sketch - ஸ்கெட்ச்


இந்த படத்தை நான் பெருசா எதுவும்  எதிர்பார்த்து போகலை , ஏன்னா வாலு படத்தோட டைரக்டர் தான் இந்த படத்தோட டைரக்டர் , அதனால இந்த படம் ரொம்ப சுமாராக தான் இருக்கும் நினைத்து போனேன், ஆனால் வாலு மாதிரி மொக்கையா இல்லாமல் அதை விட ஒரு படி மேலே சுமாராக தான் இருந்துச்சி இந்த படம் , அதற்க்கு ஒரு காரணம் விக்ரம் என்றாலும் , திரைக்கதை கொஞ்சம் சில இடங்களில் கை தட்ட வைத்தது .

வடசென்னை கதை என்றாலே gang war  , போட்டா போட்டி , ரவுடி , அடிதடி ,வெட்டு குத்து , ராயபுரம் என்ற வழக்கமான கதைக்களத்தில் தான் படம் போகுது , இதுல நடுவில் காதல் வேற , சத்தியமா சுத்தமா கொஞ்சம் கூட படத்தில ஒட்டவே இல்லை, அப்பறம் எப்பொழுதும் எதிர்பார்த்த மாதிரி ஹீரோவின் நண்பர்கள் செத்து போய்டுவாங்க அதுவும் இந்த படத்தில இருக்கு 

படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரத்தில அடேய் எத்தனை தடவை டா இந்த மாதிரி படம் பாக்கிறதுன்னு கேள்வி மனசில வருது , அதுவும் தமன்னா படத்தின் கதைக்குள்ள வந்த உடனே , எப்பா டேய் முடியலடான்னு மேலும் சொல்லவைக்குது , இதுக்கு நடுவே சம்மந்தமே இல்லாமே சூரி வேற ஒரே ஒரு காட்சி , முதல் பாதியில் ஒரு காட்சி,இரண்டாவது பாதியில் ஒரு காட்சி அவ்ளோதான், 

இதுமட்டுமா opening மாஸ் பாடல் , சுத்தமா விக்ரமுக்கு செட் ஆகல , டூயட் பாட்டு , தேவையில்லாமல் ரெண்டாவுது பாதியில் பாடல்கள் , அய்யோ ஆளைவிடுங்கடா சாமி திணற திணற இருக்குது , அதுவும் பாட்டு சுத்தமா நல்லாவே இல்ல , தம்மன் எப்பொழுதும் போல டனுக்கு டனுக்குன்னு காது கிழிய இரைச்சலாக பாட்டு போட்டு கொடுத்து இருக்கார் 

முக்கியமா படத்தில ஒன்னு சொல்லணும் அதாவது காதல் காட்சியில் நம்ம டைரக்டர் எப்படி காதல் கலைநயமாக சொல்லிருக்காருன்னா , ஒரு பாடல் காட்சியில் தமன்னா அவங்க கையில ஸ்கெட்ச்ன்னு எழுதுவாங்க , அதுவும் எப்படி எழுதுவங்கன்னு தெரியுமா ? வேற வேற கலர்ல ஸ்கெட்ச் use பண்ணி கையில எழுதுவாங்க , அதாவது symbolic ஆகா ஸ்கெட்ச் என்ற விக்ரமை அவங்க காதலிக்கறாங்களாம் , அந்த ஒரு சீன்  போதும் டைரக்டர் டச் அங்க நிக்குது ஷப்பா முடியல டா சாமி .

படத்தில இன்னும் குறைகள் சொல்லிகிட்டே போகலாம், ஒரு சண்டை காட்சியில்  backgroundக்கும் விக்ரம் சண்டை போடும் இடத்திற்கும் அப்பட்டமாக செம்ம light difference , அது blue matல எடுத்தாங்களா ? இல்ல lighting அவ்வளவு மோசமா பண்ணிட்டாங்களா ? ஒரு இடத்தில் விக்ரம் கண்ணாடியில் தர்மாகோல் தெரியுது , ஒரு நைட் சீனில் பின்னாடி லைட் வைச்சது frameல் வருது , ஏன் இவ்வளவு மோசமான மேக்கிங் ? ஏன் எடிட்டர் இதை பார்க்கவில்லையா ? 

என்னடா விமர்சனம் முதலிருந்து ஒரே negative ஆகவே சொல்லுறியே , positive ஒன்னும் இல்லையே என்ற கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது , ஆமாங்க படத்தில ப்ளஸ்ன்னா அது விக்ரம் மட்டும் தான், அவர் ஒருத்தருக்காக தான் இந்த படம் பார்க்கணும் தோணுச்சு , அவர் மட்டும் இல்ல இந்த படம் இன்னும் ஒரு மோசமான படமாக அமைந்து இருக்கும், அவரோட ஹீரோயிசம் , மாஸ் சீன் சூப்பர் .

அப்பறம் படத்தில வேற என்ன ப்ளஸ் ? ஆமாங்க படம் ஆரம்பித்து bore ஆக போனாலும் , ஒரு இடத்தில கொஞ்சம் விறுவிறுப்பு படத்தில் எடுத்தது , அட படம் இனிமேல செம்மயா போக போகுது நினைக்கும் போது இன்டெர்வல் , அட ரெண்டாவது பாதி படம் சூப்பர் ஆக இருக்கும் நினைக்கும் போது நம்ம நினைப்புல மண்ணை அள்ளி போட்டுருவாங்க, திரும்பவும் படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் போது படம் முடிஞ்சுடும் . intervalக்கு முன்னாடி ஒரு 15 நிமிஷம் , படத்தின் கடைசி 15 நிமிஷம் தான் நல்லா இருக்கு, அதாவது படத்தில ஸ்கெட்ச்ன்னு பேரு வைச்சதால என்னவோ , அவங்க ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காட்சி ரொம்ப நல்லாவே இருக்கு, குறிப்பா கடைசியில் அந்த வில்லனை போட்டு தள்ளும் காட்சி wow சொல்லி கைதட்ட வைக்குது .அப்புறம் climax நான் எதிர்பார்த்தா மாதிரி தான் இருந்துச்சி அது ஒன்னும் பெருசா ட்விஸ்ட் போல தெரியல , ஆனால் அவங்க அதை எப்படி பண்ணாங்க என்பதை காட்டுவது ஓகே சொல்லலாம்.

மொத்தத்தில் ஸ்கெட்ச்  நமக்கு ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிட்டாங்க 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Thaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்


சினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் 

 இது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்தி படத்தோட ரீமேக், நான் அந்த ஒரிஜினல் படம் ஸ்பெஷல் 26 படத்தை  பார்க்கவில்லை , அதனால ஒரிஜினல் எப்படி இருக்கும் என்பது எனக்கு  ஐடியா இல்ல .

கதை :
முதல இந்த படத்தோட கதையை பற்றி பார்த்தால் ஸ்பெஷல் 26 படமே தமிழ் படத்தோட படங்களில் தழுவல்ன்னு நான் சொல்லுவேன், படத்தோட கதை கொஞ்சம் உற்று  பார்த்தா கொஞ்சம் சிவாஜி , கொஞ்சம் ரமணா கலந்தது தான் இந்த படத்தோட கதைன்னு சொல்லணும், ஆனால் அதை சுவாரசியமாக எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி கொடுத்து இருக்காங்க 

திரைக்கதை :
படத்தோட ப்ளஸ் கதை + காமெடி கலந்த திரைக்கதை , படம் சீரியஸ் ஆகா செல்லும் போது எல்லாம் யாரும் எதிர்பார்க்காத சின்ன சின்ன விஷயங்களை காமெடியாக கொடுத்து இருக்காங்க, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஹைதராபாத்தில் ரெய்டு நடக்கும் போது , சத்யன் முன்னாடி வந்து நிக்கும் போது, அட என்னமோ சொல்லவறாருன்னு நினைக்கும் போது , அட சும்மா தாய வந்தேன் சொல்லுவது செம்ம ,அது போல சின்ன சின்ன விஷயங்கள் படத்தில் அங்க அங்கே இருக்கு, அப்பறம் சில விஷயங்கள் நம்பும்படியாக இல்ல , எதிர்பார்த்த திருப்பங்கள் தான் , அட செம்ம ட்விஸ்ட்பா அப்படி சொல்லும்படி படத்தில சூப்பர் ட்விஸ்ட்கள் என்று எதுவும் இல்ல, அதே நேரத்தில் படம் சில பல இடங்களில் கொஞ்சம் இழுவையாக இருக்கும் feel , இன்டெர்வல் பிளாக் நல்லா இருந்துச்சி , அப்பறம் இரண்டாவது பாதி கொஞ்சம் தத்தலடிச்சி படம் கரை ஏறுகிறது , போதா குறைக்கு பாடல்கள் வேற தேவையில்லாத இடத்தில வச்சியிருக்காங்க 

சூர்யா :
எனக்கு தெரிஞ்சு சூர்யாவிற்கு ரொம்ப நாள் கழிச்சி இது  சொல்லிக்கும்படி  ஒரு கதை உள்ள படம் , அவர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும் படி படம் வந்து இருக்கு .சூர்யா நல்லா பண்ணியிருக்கார் , சிங்கம் படம் போல சத்தம் போட்டு கத்தி ஆர்ப்பாட்டம் போடாம அடக்கமா நடிச்சி இருக்கார்  தேவையில்லாத பன்ச் , பறந்து பறந்து சண்டை எதுவும் போடல , என்னதான் ரீமேக் படம் என்றாலும் நம்ம தமிழ் ஹீரோவிற்கு ஏற்றா மாதிரி நிறைய மாற்றங்கள் எல்லாம் பண்ணுவாங்க , அப்படி மாற்றாமல் அடக்கமா நடிச்சி இருக்கார் 

ரம்யாகிருஷ்ணன் :
சூர்யாவிற்கு அடுத்து படத்தில் வில்லன்களையும் மீறி ரம்யாகிருஷ்ணன் மனசில் நிக்குது , அவங்க ராஜமாதவாக  வந்தாலும் சரி இப்படி  கொஞ்சம் innocent ஆகா வந்தாலும் சரி அதை சரியாக செய்து இருக்காங்க 

சுரேஷ் மேனன் 
ரொம்ப நாள் கழிச்சி படத்தில வரார் அவருக்கு கௌதம் மேனன் டப்பிங் வேற கொடுத்து இருக்கார் 

கார்திக் :
அவர் கேரக்டர் நல்ல design பண்ணி இருக்காங்க , ஆனால் ரொம்ப வயசானவர் போல தெரிகிறார் , மேலும் ஓவர் மேக்கப் but  பல இடங்களில் அவர் படத்தில் ஒற்றவில்லை 

படத்தில் இன்னும் பல கேரக்டர் இருக்காங்க , தம்பி ராமையா ,செந்தில் ,கலையரசன், r j பாலாஜி  இப்படி படத்தில ஏகப்பட்டபேர் இருக்காங்க .

ஐயோ கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்ல மறந்துட்டேன் , அது ஏன்னா படம் பார்க்கும் போதே அவரை மறந்துடுவோம் , படத்தில் கொஞ்சம் தான் வருவாங்க , ஏன் எதற்கு இந்த படத்தில் நடிச்சாங்கன்னு தெரியல 

படத்தின் பெரிய மைனஸ் :
எதற்கு இந்த படத்தை 1980களில் நடப்பது போல வச்சி இருக்காங்க ? ஸ்பெஷல் 26 கதை அப்படி போல அதனால தமிழிலும் அப்படியே வச்சிட்டாங்க போல , 1980களின் கதை என்பதால் goldspot , லாட்டரி சீட் கடையில் இருப்பது , பழைய phone இப்படி இருந்தாலும் , சூர்யாவிற்கு ஆடைகள் என்னமோ 1980 போல இல்ல , பாட்டில் பின்னாடி dance ஆடுபவர்கள் ரெட்ரோ டிரஸ் போட்டாலும் , சூர்யா latest டிரஸ் போட்டு இருக்கார் ,கொஞ்சம் கூட செட் ஆகவில்லை , கீர்த்தி சுரேஷ் hair ஸ்டைல் பழய hair ஸ்டைல் போல இருந்தாலும் அவங்க டிரஸ் செட் ஆகவில்லை , யார்டா அந்த costume designer கேட்கணும் போல தோணுச்சு , படத்தில் பலர்க்கு கார்த்திக் , செந்தில் ஏன் சூர்யாவிற்கு கூட ஓவர் make up ,அப்பறம் பல இடங்களில் பின்னாடி lighting வச்சி இருப்பது தெரியுது , பல லாஜிக் மிஸிங் வேற  , கடைசியில்   r j பாலாஜிக்கு என்ன ஆச்சி ? கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? சூர்யாவிற்கு எப்படி கடைசியில் தெரிகிறது என்ற பல கேள்விகள் வேற வருது ,

மொத்தத்தில் : தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கல் லீவுக்கு மட்டும் கொஞ்சம் சேரும் கூட்டம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 22 டிசம்பர், 2017

Velaikkaran - வேலைக்காரன்

இங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ  , இந்த போஸ்டர்   falling down என்ற  இங்கிலிஷ் படத்தோட காபின்னு  சொன்னாங்க ,  நான் அந்த இங்கிலிஷ் படத்தை பார்க்கல, அதோட கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா என்று  கூட தெரியாது  , ஆனால் இந்த போஸ்டர் இந்த படத்துக்கு ரொம்ப சரியாக பொருந்தி இருக்கு , ஒரு கையில் பை , மறுகையில் அருவா , ஆமாங்க நாம் செய்யும் தொழிலும் , ஒரு ரவுடி செய்யும் தொழிலும் பெரிய மாற்றம் இல்ல என்பதை  நமக்கு புரியவைக்கும் , ஆனால் அது தான் படத்தோட முழு கதை என்று நினைச்சுடாதீங்க .

படம் ஆரம்பித்து கருத்தவன் எல்லாம் கலீஜா பாட்டு முடிச்சு , அப்படி இப்படி படம் போகும் போது , ஹீரோ இந்த குப்பத்தில் இருப்பவர்களை  மாற்றி, நல்ல பேரு வாங்கும் பழய formula படம் போல நினைக்கும் போது,  இந்த கத்தி படம் போல கார்ப்ரேட் பற்றி சொல்லும் படம் என்று நினைக்கும் போது , அப்படியே படம் கொஞ்சம் change ஆகி intervelலில் அட ச்ச்சே,  இதை தான் நாமும் பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்று நம்மை நாமே கேள்வி கேட்கவைத்து நம்மை   நிமிர வைக்குது .அதில் fahadh ஒரு பக்கம் , சிவா மறுபக்கம் பேசும் காட்சி, சிவாவின் வீட்டில் வரும் ஒரு salesman கிட்ட பேசும் காட்சியும் , பிரகாஷ் ராஜ் இண்டெர்வெல்க்கு முன்னாடி சொல்லும் காட்சி,  நிச்சயமா நம்மை கை தட்ட வைக்குது 

முதல் பாதி விறுவிறுப்பாக முடிய , அதே வேகத்தில் இரண்டாவது பாதி ஆரம்பிக்க , படம் போக போக வளவளன்னு இழுத்துக்கிட்டு போகுது , அதுவும் கடைசி 30 நிமிடங்கள் எப்போ முடிப்பீங்கன்னு கேட்க தோணுது , கடைசியில் ரொம்ப நேரம் சிவா பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார் .சொல்ல வந்த விஷயம் நல்லது என்றாலும், ரொம்ப நேரம் திகட்ட திகட்ட சொல்லிகிட்டே போறாங்க .ஐயா நீங்க சொல்லவந்தது புரிஞ்சிது ஐயா ,போதும்யா முடிச்சிகோங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகுதுன்னு ஒரு feel வருது .

படத்தின் ப்ளஸ் வசனம் எல்லாமே நம்மை யோசிக்கவைக்குது , அட நாம்  எப்படி எல்லாம் இந்த சமூகத்தில் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் தோன்றும் , மேலும் வர்த்தகம் எப்படி எல்லாம் நடக்குது , இந்த சூப்பர் மார்க்கெட்டில் எப்படி எல்லாம் யுக்தி பயன்படுத்துறாங்க, இந்த முதலாளி உலகம் எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பதை காட்டுது .முக்கியமாக அந்த குப்பத்து செட் ரொம்ப தத்துரூபமாக இருக்கு , அதுக்கு நிறைய செலவு பண்ணிருக்காங்க .

படத்தின் மைனஸ் இரண்டாவது பாதியின் length, அதை குறைத்து இருக்கலாம், சிவாவும் , fahadhம் மோதிக்கொள்ளும் காட்சி இன்னும் strong ஆகா பதிவு பண்ணிருக்கலாம்,சிவா & நயன்தாரா மாற்றி மாற்றி help செய்து காதலில் உடனே விழுந்து டூயட் போடுவது bore தான் .இந்த குப்பத்து செட்க்கு நிறைய செலவு  பண்ணதால என்னவோ , சில இடங்களில் படம் ரொம்ப சுமாரா தெரிகிறது , அந்த மீட்டிங் போடும் இடம் , இறுதி தீப்பற்றி கொள்ளும் காட்சிகள் எல்லாம் பார்க்க சும்மா எடுக்கணும்ன்னு  எடுத்தா மாதிரி இருக்கு .

என்னை  பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிச்சதில் உருப்படியான கதையுள்ள படம் இது தான் , அதுவும் நடிப்பிலும் நல்லாவே பண்ணி இருக்கார் , இது வரை நடிச்சதில் சும்மா குழந்தைகளை கவர் பண்ணுவது போல, சில நேரங்களில் ரொம்ப சின்ன புள்ளதனமா  பண்ணுவார் , இதில் சரியாக matured ஆகா செய்து இருக்கார்,சில இடங்க்ளில் கொஞ்சம் குண்டாக சில இடங்களில் ஒல்லியாக தெரிகிறார் , அவோரட கலர் tone கூட  சாதாரண  ஆளு என்பதால் அதை கொஞ்சம் மாற்றி இருக்காங்க , ஆனால் சில இடங்களில் அது மிஸ்ஸிங் ,இவர் director's actor நிரூபித்து இருக்கார் , அதனால வரும் படங்களில் டைரக்டர் சரியாக யூஸ் பண்ணிக்கணும் , சும்மா சிவாவின் fans திருப்தி படத்தணும்ன்னு அவரை அப்படியே நடிக்க விடாதீங்க , அதே போல சிவாவும் இது போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை நடிக்கலாம் . அப்பறம்  சிவாவிற்கு ஒரு சின்ன suggestion ஏதோ weekend என்றால் அது businessகாக special ஷோ போடுவது  ஓகே தான், ஆனால்   முதல் நாள்  முதல் காட்சி ரஜினி  விஜய் , அஜித் போல காலை 5 மணி , 8 மணி ஷோ போடுவது, வெளியே பெரிய பெரிய கட் அவுட் வைச்சி பெரிய ஸ்டார் போல build up பண்ணுவது கொஞ்சம்  ஓவர், இன்னும் நீங்க வளரனும் , உங்களை விட விஜய் சேதுபதி எங்கோ  இருக்கார் , அதனாலே கொஞ்சம் அடங்கி இருப்பது நலம் .(இப்படி சொல்லுவதால் நான் குறிப்பிட்ட எந்த நடிகனின் ரசிகனோ அல்லது சிவாவின் எதிர்ப்பாளனோ அல்ல )

தீபாவெங்கட் ரொம்ப நல்லா படத்தில் பேசியிருக்காங்க , i am sorry நயன்தாரா நடிச்சிருக்காங்க , என்னமா ஆச்சி உங்களுக்கு? நல்ல ஸ்கோப் இருக்குற படம்தானே பண்ணுவீங்க ? டைரக்டர் ராஜா sentiment ஆகா உங்களை கூப்பிட்டாரா ? படத்தில் காட்சிகளே ரொம்ப கம்மி , அவரோட கேரக்டர் சிவாவுக்கு help பண்ணுவது போல இருந்தாலும் , படத்திற்கு பெரிசா அவங்க கேரக்டர் உதவவில்லை .சில இடங்களில் over make up , சில இடங்களில் சிவாவிற்கு அக்காவாக தெரிகிறார், நயன்தாரா சிவாவிற்கு சரியான ஜோடி அல்ல .

பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் , சினேகா , ரோகினி , சார்லி மன்சூர் அலிகான் , ராமதாஸ் , வினோதினி, தம்பிராமையா இப்படி k.s.ரவிக்குமார் படம் போல நட்சத்திர பட்டாளம் பெருசு , எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தான் வராங்க , இதுக்கு மேல அவங்க எல்லோருக்கும் படத்தில் ஸ்கோப் தர முடியாது , , இவர்கள் எல்லாம் சேர்ந்து மீட்டிங் போடும் காட்சி எனக்கு சிவாஜி படத்தை ஞாபகம் படுத்தியது , எனக்கு பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் கேரக்டர் புடிச்சி இருந்துச்சி , இது போக  சதிஷ் , r.j,பாலாஜி, ரோபோ ஷங்கர்ன்னு ஒரு காமெடி பட்டாளம் வேற இருக்கு , ஆனால் பெரியளவில் அவங்களுக்கு படத்தில் இடம் இல்லை , அதிலும் r.j,பாலாஜிக்கு சுத்தமாக ஒன்னும் இல்லை .

fahadh முதல் தடவை தமிழில் , பல இடங்களில் சின்ன சின்ன வில்லத்தன reaction கொடுத்து ஸ்கோர் பண்ணுகிறார் , அதிலும் ஒரு கார் காட்சி வரும் அதில் அவர் பண்ணும் reactions மற்றும் இறுதியில் சிவாவிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் 

படத்தின் பெயர் வேலைக்காரன்னு பெயர் வைச்சாங்களும் வைச்சாங்க  , படத்தில் நிறைய தடவை வேலைக்காரன் வேலைக்காரன் வார்த்தை வருது , பேசாமல் இந்த படத்தில் வேலைக்காரன் எதன்னை தடவை சொல்லிருக்காங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம் .

டைரக்டர் மோகன் ராஜாவை பாராட்டி ஆகா வேண்டும் , பல வருஷங்களாக தெலுங்கு டப்பிங் படங்களை இயக்கியவர் , தனி ஒருவனில் இருந்து வேலைக்காரன் வரை , தனி ஒருவனாக கதை , திரைக்கதை, வசனம் என்று தனித்து நிற்கிறார், தனி ஒருவன் அளவிற்கு தனித்து நிற்கவில்லை என்றாலும் , படம் சொல்லிக்கும்படி நன்றாகவே இருக்கு .

மொத்தத்தில் வேலைக்காரன் முதல் பாதி smart  work , இரண்டாவது பாதி ரசிகர்களுக்கு hard work .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

சனி, 16 டிசம்பர், 2017

Mayavan - மாயவன்

c.v.குமார் தயாரிப்பு என்றால் நிச்சயமா நம்பி அந்த படத்துக்கு போகலாம் , பிசா , சூது கவ்வும் , தெகிடி இப்படி நல்ல படங்கள் லிஸ்ட் இருக்கு , இப்படிப்பட்ட c.v.குமார் முதல் முறையாக directionல இறங்கிட்டாரு , இது அவரோட கதை மற்றும் direction மட்டும் தான் , திரைக்கதை & வசனம் நலன் குமாரசாமி செய்து இருக்கிறார் .
அநேகமா இந்த படத்துக்கு இப்படி ஒரு ஐடியா c.v.குமார் இன்று , நேற்று நாளை படம் தயாரிக்கும் பொழுது வந்து இருக்கும் போல , ஏன்னா அப்படி கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் இது , ஒன்னு சொல்லணும் என்றால் இன்று , நேற்று நாளை படத்துல  வர ஒரு செட் , இதில் ஆராய்ச்சி செய்யும் இடம் செட் அது போலவே இருக்கு .

படத்தை பற்றி சுருக்கமா சொல்லிடுறேன் 

படம் முதல் பாதி நல்ல interesting ஆகா போகுது , யார் என்ன பண்ணறாங்க , எதுக்காக பண்ணுறாங்க என்று ஒரு கேள்வி இன்டெர்வல் வரைக்கும் வச்சி இருக்காங்க 
யார் எப்படி பண்ணறாங்க என்று தெரிஞ்ச பிறகு கொஞ்சம் தோய்வு இருக்கு , அதே போல ஜாக்கி ஷெராப் வந்த பிறகு படம் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தாலும் , ரொம்ப  நீளமாக போய்கிட்டு இருக்க பீல் வருது . அட இப்போ முடிச்சிடும் போல அப்படி நினைக்கும் போது, படம் தொடர்ந்துக்கிட்டே இருக்கு .

படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் , மாநகரம் , நெஞ்சில் துணிவுஇருந்தால் என்று இரெண்டு ஹீரோ படங்கள் செய்தார் , இப்போ இந்த படத்தில தனி ஆளாக நல்லாவே நடித்து இருக்கிறார் , அவர் படம் ஆரம்பத்தில் மனநோய் பாதிக்கபட்டு நடிக்கும் பொழுது நன்றாகவே பண்ணி இருக்கிறார் , அவருக்கு பெரிய மைனஸ் அந்த ஒட்டு மீசை தான் ரொம்ப செயற்கையாக , கொஞ்சம் கூட செட் ஆகல .

படத்தின் ஹீரோயின் லாவண்யா கொஞ்சம் ப்ளஸ் , கொஞ்சம் மைனஸ் 

டேனியல் பாலாஜி, மைம் கோபி  படத்தின் ப்ளஸ் 

படத்தின் கதையின் உள்நோக்கத்தை சொல்லும் பொழுது கொஞ்சம் புரியல , நல்ல detail ஆகா சொல்லி இருக்காங்க ஆனால் அது தான் அந்த வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் குழம்பி விட்டது ,ஐயோ என்னடா ஏதோ சொன்னாங்களே நாம் தான் கவனிக்காமல் மிஸ் பண்ணிட்டோம என்று ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .அது மட்டும் இல்லமால் ஜெயப்ரகாஷ் அந்த science விளக்கம்  தரும் பொழுது டப்பிங் லிப் sync சுத்தமா ஆகவில்லை  

இசை ஜிப்ரான் படத்தின் இன்னொரு ப்ளஸ் , bgm முதல் பாதியில் நமக்கு நல்ல feel  வரவச்சியிருக்கார் 

டேய் இது எல்லாம் நம்புறா மாதிரியா இருக்குன்னு கேள்வி கேட்காதீங்க , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா , ரசித்து அட சூப்பர் டா சொல்லுவோம் , மேலும் இது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு, அப்படி என்பதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் சொன்னதை படம் முடியும் பொழுது போடுறாங்க அதை மறக்காம பார்த்துட்டு எழுந்து வாங்க.

மொத்தத்தில் மாயவன் முதல் முயற்சி , புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 15 டிசம்பர், 2017

Aruvi - அருவி

அருவி செம்ம செம்ம செம்ம செம்ம  ,  நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும் என்னவெல்லாம் ஒரு படத்தை பாராட்டவேண்டுமோ அப்படி தமிழில் இருக்கின்ற எல்லா வார்த்தையும் போடணும் இந்த படத்துக்கு, அப்படி ஒரு படம் தான் இந்த அருவி 

படத்துக்கு பெயர் அருவின்னு வைச்சாங்களும் வைச்சாங்க, படம் அருவி போல ஓடுது ,அருவி எப்படி ஓடும் ? சில இடங்களில் சல சலப்பாக சத்தமாக ஓடுது , சில இடங்களில் அமைதியாக ஓடுது , சில நேரங்களில் காட்டாறாக எல்லாத்தையும் அடிச்சிட்டு ஓடும் , அப்படி தான் இந்த படத்தின் திரைக்கதை கூட , 

இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில் மாநகரம் , 8தோட்டாக்கள் , குரங்கு பொம்மை , லென்ஸ் , ஒரு கிடாயின் கருணை மனு வரிசையில் ஒரு அருமையான படம் , மேலே சொன்ன எல்லா படத்தையும் தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு வருஷ கடைசியில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் தரமான படம், படம் அபப்டி பட்டைய கிளப்பது .அதுவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து  ஒரு மாஸ் படம் தந்து இருக்காங்க.

படம் ஆரம்பிக்கும் போது என்னமோ கொஞ்சம் டாக்குமெண்ட்ரி , இல்லனா  அப்பா மகள் உறவு சொல்லிய தங்கமீன்கள் போல வருமோ ? ஒரு சந்தேகம் வருது , ஆனால் போக போக அது அப்படியே மாறிவிடுகிறது , அருவியோட வளர்ச்சி காட்டும் இடங்கள் அருமை , கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் காட்டுவது சூப்பர் , குறிப்பா 90's  குழந்தை வளர்ச்சியாக காட்டுவது first class , cassette சுத்துவது , டிவி antenna திருப்புவது, அப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் அந்த காட்சியில் வருவது அருமை, அப்படியே பள்ளிவருவதில் அருவி வளரும் காட்சி காட்டுவது ultimate, அதில்  நிறைய சின்ன சின்ன விஷயங்கள், பருவ வயதில் பெண்ணுக்கு வரும் உடல் மாற்றங்கள் , மனமாற்றங்கள் , adolescent வயதில் வரும் உணர்வுகள் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டி இருக்காங்க, சின்ன வயதில் காட்டும் இரண்டு குழந்தைகளின் கண்கள் அப்படியே பெரிய அருவி பெண்ணை போலவே காட்டி ஒரே மாதிரி கேரக்டர் appearance maintain பண்ணிருக்காங்க .

ஒரு மாதிரி புரியாத tragedy வச்சி , படம் அடுத்தகட்டமாக ஒரு சேனல்குள்ள போகுது, படம் முக்கால்வாசி நடக்கும் இடம் அந்த சேனல் தான் , அந்த சேனல் உள்ளே போன பிறகு படம் செம்ம fast எடுத்துக்கிட்டு பிச்சிகிட்டு போகுது , அங்க நடக்கிற ஒரு ஒரு சின்ன விஷயங்களும் detail ஆகா காட்டிருக்காங்க , இன்டெர்வல் வரும் போது ஒரு ட்விஸ்ட் வச்சி  , அப்பறம் ஒரு பெரிய வசனங்கள் அதுவும் இந்த உலகத்தோட சரியான உண்மையை முகத்தை கிழித்தெறியும் வசனங்கள் வந்து , படமே முடிகிறளவுக்கு ஒரு உணர்வு  கொடுத்து, ஒரு பெரிய ஹீரோக்களுக்கு கொடுக்கும் மாஸ் போல ஒரு ஷாட் வச்சி ,  நம்மை ஒரு பெருமூச்சி விட வச்சிட்டாரு டைரக்டர் .

இன்டெர்வல்க்கு பிறகு படம் வேற levelஇல் travel பண்ணுகிறது , அங்க இருந்து ஒரு 30 நிமிஷம் செம்மையா  சிரிக்கலாம் , எஎப்படி  அப்படி ஒரு சீரியஸ் படத்தில ஒரு பகுதி அப்படி  ஒரு நகைச்சுவையாக எல்லோரையும் ரசிக்கும்படி காமெடி வச்சி மாஸ் பண்ணியிருக்கார்  டைரக்டர்? , அது முடிச்ச பிறகு திரும்பவும் படம் வேற ஒரு மூடில் படம் பயணித்து , அப்பாடா ஒரு நல்ல படம் பார்தோம்ன்னு ஒரு பெரிய திருப்தியுடன் வெளியே வர முடியும் .

படத்தில் எல்லோர் கேரக்டர்களும் சூப்பர் , எல்லோரும் மனசில் நிப்பாங்க , டிவி anchor, டைரக்டர் , செக்யூரிட்டி இப்படி ஒரு பெரிய லிஸ்ட் போகும் , ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் ஒருத்தன் மட்டும் மனசில் அப்படியே நிப்பான் அவன் யாருன்னா ? rooolling sir சொல்லும் ஒருவர் , நிச்சயமா அது ஒரு trend செட்டிங் வார்த்தையாக, மீம் போடுபவர்களுக்கு ஒரு நல்ல தீனியாக அமையும் அந்த வார்த்தை . சத்தியமா எனக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த வாரத்தை என்னோட காதுகளில் ஒலிச்சிக்கிட்டே இருக்குது (" Rooolling Sir "), படம் முடிச்ச பிறகு எல்லோருடைய பெயர் போட்டாங்க இருந்தாலும் அந்த Rooolling Sir சொன்ன நடிகர் பெயர் பார்க்க முடியல .யாருயா நீ பின்னிப்பெடல் எடுத்துடீங்க , 

அருவியக நடித்த அதிதி பாலன் நடிக்கல வாழ்ந்துட்டாங்கன்னு சொல்லணும்  , படத்தின் முதல் பாதியோ அல்லது இரண்டாவது பாதியில் சேனலுக்குள்ள ஒரு நடக்கும் விஷயங்கள் நடித்தது கூட பெரியது இல்ல , கடைசி 20 நிமிஷம் நடிப்பு தான் அவங்க எங்கேயோ போய்ட்டாங்க , மக்கள் மனசில் அழமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு,  .அவங்க கூட வரும் அந்த திருநங்கையும் நல்ல பண்ணிருக்காங்க.

இந்த படத்தை பாராட்டணும்ன்னா பாராட்டிக்கிட்டே போகலாம்.கைதட்டி கைகள் வலிக்குது , சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ,இறுதியில் எமோஷன் ஆகி கண்கள் வேர்க்கிறது 

இயக்குனர் : அருண் பிரபு 
இசை : பிந்து மாலினி & வேதந்த் பரத்வாஜ் 
கேமரா : ஷெல்லி காலிஸ்ட் .
மொத்தத்தில் அருவிக்கு தியேட்டர்களில் மக்களின் கைதட்டுகள் அருவியாக கொட்டுகிறது , அடுத்த வருடம் விருதுகள் அருவியாக கொட்டும் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 9 டிசம்பர், 2017

Riche - ரிச்சி


சம்பந்தமே  இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச்சி , இந்தவாரம் இரண்டு படம் வந்துஇருக்கு இரண்டுமே ரீமேக் தான் , சத்யா படம்  ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , ரிச்சி படம் உள்ளீடவாறு கண்டந்தி என்கிற கன்னட படத்தோட ரீமேக் , இது ஒரு cult movie ஆகணும் நினைச்சி எடுத்து இருப்பாங்க போல, நமக்கு கமல் படமே இரண்டாவது முறை பார்த்தா தான் புரியும் , இது அதுக்கும் மேல.

படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் நிவின் பாலி படத்துல வரல , அதுவரைக்கும் அவரைப்பற்றி சுற்றி இருக்கும் கேரக்டர்கள் அவருக்கு  full build up தராங்க , ஒருவழியா 25 நிமிஷம் கழிச்சி வரார்,  நிவின் பாலிக்கு இந்தளவுக்கு build up வேண்டுமா ? அப்படின்னு கேட்க தோணுது , நிறைய இடங்களில் slow motion வச்சி build up வேற , அந்தளவுக்கு கதைக்கு அவர் கேரக்டர் strong ஆகா இல்ல , அதே நேரத்தில முதல் பாதியில் ரொம்ப குறைவான காட்சிகளே அவருக்கு இருக்கு , அதுவும் வெறும் build up  மட்டும் தான் , இரண்டாவது பாதியில் தான் அவரோட கேரக்டர் கொஞ்சம் தெரிய வருது , ஆனால் நாமே பல விஷயங்களை புரிஞ்சிக்க வேண்டும்ன்னு நினைத்து இருக்காங்க , அந்தளவுக்கு நாம புத்திசாலி இல்லையிங்கோ ..

எனக்கு நிவின் பாலி கேரக்டர் விட நட்டி நட்ராஜ் கேரக்டர் நல்ல வடிவமைச்சிருக்காங்கன்னு தோணுது, ஒரு சாதாரணமா இயற்கைய நடிச்சிருக்கார், அப்பறம் ரகு கேரக்டர் முக்கியமான கேரக்டர் ஆனால் படத்தில பார்க்கும் போது எங்கயோ ஏதோ ஒன்னு புரியாத மாதிரியே இருக்கு,

முக்கியமான கேரக்டர் ஹீரோயின் ஷ்ரதா ஆனால் screenல ரொம்ப ரொம்ப ஸ்கோப் கம்மி தான் , ஹீரோ, ஹீரோயினை விட "லட்சுமி" குறும்படம் புகழ் நடிகை லட்சுமிக்கு  தியேட்டர்ல நல்ல வரவேற்பு , அவங்க பெயர் போடும் போதும் சரி , அவங்க படத்துல முதல் காட்சியில் வரும் போதும் சரி செம்ம கைத்தட்டு மக்கள் தட்டுறாங்க .ரிச்சி படம் ரீச் ஆகுதோ இல்லையையோ நீங்க நல்லா ரீச் ஆகிருக்கீங்க .

ரிச்சி மற்றும் ரவி கேரக்டர் காட்டும் பொழுதெல்லாம் ஒரே red  கலர் tone படத்துல இருக்கு , நட்டி கேரக்டர் காட்டும்பொழுது blue  மற்றும் green கலர் வருது , அதற்க்கு என்ன அர்த்தம் தெரியல , இந்த படத்தை பற்றி வேற என்ன சொல்வது என்று தெரியல , என்னமோ ஏதோ ஒரு புதிர் , ஏதோ ஒரு aptitude test எழுதுவதற்கு போனா மாதிரியே ஒரு feel , முதல் பாதி எதற்கும் சம்பந்தம் இல்லாம , என்னடா சொல்லவாறீங்க மண்டைய சொறிஞ்சிக்கிட்டு இருக்க ஒரு feel ,படம் முடியும்போது இந்த படத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு தான் அறிவு இல்லையோ ? இல்ல படம் மொக்க தானோ ? இப்படி பல கேள்விகளோட தன வெளியே வர முடியுது .


மொத்தத்தில் ரிச்சி ரொம்ப பிச்சி பிச்சி நம்மளை செஞ்சாங்க நல்லா வச்சி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 8 டிசம்பர், 2017

Sathya - சத்யா

இந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவரே rights வாங்கி நடிச்சு இருக்கும்   படம், அப்போ இந்த படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்குமான்னு கேட்டா ? பெரிய பிரேக் கொடுக்காது ஆனால் அவர் நடித்ததில் சொல்லிக்கும்படியான ஒரு நல்ல படம் .

ஒரு குழந்தையை காணவில்லை அந்த குழந்தை இருக்கா இல்லையா ? அப்படி  ஒரு குழந்தையே உண்மையிலே இருக்கா இல்லையா? அந்த குழந்தையை கண்டுபிடிச்சாங்களா இல்லையா ? யார்கிட்ட இருக்கு ? இப்படி ஒரு மர்ம கதையை , ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக ஆரம்பிச்சாலும் , போக போக  சுவாரசியமாக கடைசி ஒரு 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக கொடுத்து முடிச்சிட்டாங்க 

முதல் பாதி இப்படி தான் ரம்யா கேரக்டர் இருக்கும்ன்னு கொஞ்சம் சுலபமாக கணிக்கமுடிச்சது அதனால அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளும் , அதன் தொடர்புடைய characterகளும் இப்படி இருக்கும் என்று  easyஆகா guess பண்ணமுடிச்சது, ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் பிடிப்பாங்க , அதிலிருந்து படத்தோட நல்லாவே நம்மை ஒன்றவைச்சது .

சிபிராஜ்  - ஒரு neat performance,  

ரம்யா  - நல்லா பண்ணிருக்காங்க , சில இடங்களில் நல்ல அழகாக தெரிகிறார் , சில இடங்களில் வயசான ஆளாக தெரிகிறாங்க 

ஆனந்த்ராஜ் சமீபகாலமாக ஒரு நக்கல் கேரக்டர் செய்து பட்டைய கிளப்புறாரு , அப்படியே இதுலயும் செய்துட்டு போகிறாரு 

சதிஷ் சில இடங்களில் காமெடி try பண்ணிருக்கிறாரு அவளோதான், ஆனால் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் இவர் இந்த படத்தில் காமெடியன் இல்ல .

யோகிபாபு - ரொம்ப சின்ன ரோல் , கதைக்கு காமெடி பெருசா தேவைப்படல அதனால அவர் ஸ்கோப் கம்மி தான் , அதே நேரத்தில அவர் வரும் இடங்களும் பெருசா காமெடி எடுபடவில்லை 

இன்னும் சில கேரக்டர் பற்றி சொல்லவிரும்பவில்லை ஏன்னா , அவர்கள்  கேரக்டர் பற்றி சொன்னால் படத்தில் இருக்கும் சில மர்ம முடிச்சுகள் தெரிஞ்சிடும்.

கேமராமேன்  அருண்மணி , படம் சில வெளியிடங்களில் candid ஆகா எடுத்து இருப்பாங்க போல,  அதனால சில இடங்கள் ரொம்ப சுமாராகவும் , சில இடங்களில் மோசமாக தெரிகிறது 

இசை : சைமன் , நிச்சயமாக அந்த யவன பாடல் நல்லா இருக்கு , bgm சரியாக பொருந்தி இருக்கு , ஆனால் சில இடங்களில் வசனங்களை தாண்டி கேட்கிறது .

எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் அனைத்து தரப்பையும் ஒரு அளவுக்கு திருப்திப்படுத்தும் படம் .

மொத்தத்தில் சத்யா சத்தியமாக கொடுத்த 165க்கு சாத்தியமானது 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

வெள்ளி, 1 டிசம்பர், 2017

Thiruttu Payale 2 - திருட்டுப்பயலே-2

இந்த வருஷம் social மீடியாவால் நடக்கும் பிரச்சன்னை பற்றி லென்ஸ் படம் வந்தது , ஆனால் பலர்க்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியல , அப்பறம் ஸ்பை , phone track பண்ணுவது , ஒட்டுக்கேட்பது வச்சி ஸ்பைடர் படம் வந்துச்சி , இந்த இரண்டு படத்தையும் கொஞ்சம் கலந்து வச்சா இந்த திருட்டுப்பயலே-2, ஆனால் லென்ஸ் படம் ஒரு மாஸ்டர்  படம் சொல்லணும் , அதுக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது.

முதலில் இந்த படத்தின் தலைப்பை விளக்கிடலாம் , இந்த படத்தை திருட்டுப்பயலே-2(part 2) சொல்லுவதற்கு பதிலா , திருட்டு பசங்க 2(ரெண்டு) சொல்லணும் , ஏன்னா இந்த படத்தில பாபி சிம்ஹா , பிரசன்ன இரெண்டு பேர் characterம் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காத திருட்டு கதாபாத்திரங்கள் . ஒரு social மீடியாவால் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருக்காங்க.


படத்தில் நல்ல விஷயங்கள் என்னவென்றால் , மூணுபேரை சுற்றியே படம் நடக்குது , பாபி சிம்ஹா , அமலாபால் , பிரசன்னா , எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க , அந்த வீட்டுல மூன்று பேரும் சந்திக்கும் காட்சி நல்லா இருக்கு, டைரக்டர் சுசிகனேசன் படத்தில எப்பொழுதும் ஹீரோ வில்லன் மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனமான காட்சியமைய்ப்பு இருக்கும் , ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கும் , அது எல்லாம் இந்த படத்தில் இருக்கு . ஆனாலும் படம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல ஒரு feel இருக்கு ,படத்தில் ப்ளஸ், வசனங்கள் கொஞ்சம் குறும்புதனமாக , ரசிக்கும்படி , சில  உண்மை நிலவரங்களை சொல்லி இருக்காங்க.


மேலும் இந்த படம் எப்படி இருக்குன்னு சொல்லணும்ன்னா அந்த படத்துல வருகிற வசனம் போல தான் சொல்லணும் 


நல்ல கொடூரமான வில்லன் கேரக்டர் ஆனால் அதை பார்க்கும் போது நமக்கு அதன் மேல கொடூரமும், கோவமும் , ஆத்திரமும் வரல 


நல்ல ஹீரோ ஹீரோயின்  கேரக்டர் வடிவமைப்பு ஆனால் அந்த உறவை பார்க்கும் போது சந்தோஷமோ , ஐயோ பாவமோ எண்ணம் வரல 


மூணு பேரும் தனித்தனியா நல்லா பண்ணிருக்காங்க ஆனால் மொத்தமாக பார்க்கும் போது அந்த relationship bonding படத்தில தெரியல 


காதல் காட்சிகள் இருக்கு  ஆனால் பார்க்கும் போது  காதல் வரல 


சுவாரசியமான வேகமான திரைக்கதை, ஆனால் பார்க்கும் போது அந்த வேகமோ சுவாரசியம் வரல ( ஒருவேளை வித்யாசாகர் bgm ஒழுங்கா செட் ஆகல போல )


 எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இருக்கு ஆனால் பெரிய பாதிப்புகள் ஏற்படல 


நிறைய டெக்னாலஜிகளும் , brillianceகளும் பயன்படுத்தி இருக்காங்க , ஆனால் எதுவும் மனசுல நிக்கல .


பாராட்டவேண்டிய ஒரு விஷயம் இந்த படத்தில என்னென்ன  அது,  எப்படி இந்த இணையதள உலகத்தில பாதுகாப்பாக இருக்க வேண்டும்ன்னு ஒரு உதாரணம் இந்த படம் .

என்னடா இவன் இன்னைக்கு ஆனால் ஆனால் பயன்படுத்தி விமர்சனம் எழுதிருக்கானே தோணுதா? ஆமாங்க இந்த படத்தில ஒரு சேட்ஜி வருகிறார்  " இந்த ______  உங்களது, ஆனா _________ " இப்படி தான் அவர் படம் முழுக்க சொல்லுவார் ,இதை படம் பார்த்தா புரியும் ,எனக்கு படத்தில் மனசில் நின்ன கேரக்டர் அந்த சேட்ஜி தான் .


மொத்தத்தில் திருட்டுப்பயலே-2, கொஞ்சம் இருட்டுப்பயலே தான் .


சிலர் இந்த படம் நல்லா இருக்கு சொல்லுறாங்க , அதனால என்னோட விமர்சனத்தை திட்ட அதிக வாய்ப்பு இருக்கு , ஆனால் என்னை பொறுத்தவரை  இந்த படம் கொஞ்சம் சுமார் தான் .நெகடிவ் கமெண்ட் கொடுத்துக்காக திட்டுபவர்கள் திட்டலாம் .


இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

சனி, 18 நவம்பர், 2017

Theeran - தீரன் அதிகாரம் ஒன்று


மீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா  விமர்சனம் எழுதுறேன்,
அறம் தொடர்ந்து இந்த வாரம் தீரன்னு தமிழில் தொடர்ச்சியா நல்ல படங்கள் வருஷ கடைசியில வருது, அதுவும் சதுரங்க  வேட்டை இயக்கியவரின் , இரண்டாவது பதிவு இந்த படம் 

ஒரு படம் அதுவும் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணும் , அதுவும் உண்மை கதை எடுத்து எந்தளவுக்கு விறுவிறுப்பாக தரணுமோ அதையெல்லாம் சரியாக கொடுத்து சீட்டு நுனிக்கு வரவச்சி நம்மை பெருமூச்சு  விடவைச்சுட்டார் டைரக்டர் வினோத் .

படம் என்னமோ சாதாரணமா ஒரு commercial படம் போல தான் ஆரம்பிச்சது , அட இது வழக்கமான ஒரு போலீஸ் கதை , சும்மா காதல் , ஒரு டூயட் , அப்பறம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் தராத கதை போல தான் இருக்கும்ன்னு முதல் 20 நிமிஷம் தோணுச்சு , அந்த காதல் காட்சிக்கு நடு நடுவே கார்த்தி போலீஸ் training காட்டுவது எல்லாம் நல்லா இருந்தாலும், காதல் டியூஷன் எடுப்பது எல்லாம்  கொஞ்சம் bore ஆகா தான் feel ஆச்சு  , ஆனால் கதைக்குள்ள  ஒருபடி எடுத்து வச்ச உடனே சும்மா பிச்சிகிட்டு போகுது படம் , அபப்டி ஒரு வேகம், அதுவும் அந்த வில்லன்கள் முகங்கள் தெரிஞ்சதுக்கு பிறகு அவங்க வேட்டை ஆரம்பிக்கும் போது , அடேய் யாருடா நீங்க? அந்த வில்லன்களை  நாமே அடிச்சி நொறுக்கணும் என்ற ஒரு எண்ணம் நமக்கு தோன்றாமல் இருக்காது , அப்படி ஒரு கொடூரத்தை காட்டுவாங்க 

ஒரு படம் பார்த்தா அதோட நாம் ஒன்றிவிடவேண்டும் , ஒரு காட்சி ஆரம்பித்து  முடியும் போது ஒரு surprise இருக்கணும் , அது இந்த படத்தில இருக்கு, உதாரணத்துக்கு சில காட்சிகள் சொல்லணும்ன்னா , போலீஸ் நுழைய முடியாத கிராமத்தில் கார்த்தி போவது அங்கே நடக்கும் சண்டைகள் , ஒரு சந்தையில் ஒருவனை கைது பண்ணுவது , முக்கியமா பஸ் சண்டை நிச்சயமா அந்த பஸ்ல இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும் , அதை விறுவிறுப்பாக படம்பிடித்த கேமராமேன் சத்யன்  , ஸ்டண்ட்மென் திலிப் சுப்ராயன் , எடிட்டர் சிவன் நந்தீஸவரன்  இவங்க எல்லோருக்கும் பெரிய  சலுயூட்டே போடணும் , கிளைமாக்ஸ்ல் நடக்கும் இரவு சண்டை அதில் இருக்கும் brilliance காட்டி இருப்பது சூப்பர் .

படத்தோட கதையில டைரக்டர் நல்ல ஆராய்ச்சி பண்ணிதான் எழுதி முடிச்சி இருப்பர் , ஏன்னா ஒரு போலீஸ் எப்படி விசாரிப்பாங்க , எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க , ஒரு கை ரேகை நிபுணர் எப்படி பார்ப்பாங்க , முக்கியமா இந்த கொள்ளை கும்பல் எப்படிபட்டவங்க , அவங்க பின்னணி என்ன , அதுவும் வரலாற்றில் குற்ற பரம்பரை பற்றி எல்லாம்  எடுத்து கூறுவது  நல்ல detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு காட்டுது, ஆனால் நிறைய விஷயங்கள் டக்கு டக்குன்னு கூறும் போது ஒரு சாதாரண ரசிகனுக்கு என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்க தோணும், ஏன்னா அந்த பரம்பரை பெயர்கள் , வில்லன்களின் பெயர்கள் , எந்த ஊருல இருந்து போறாங்க அது எல்லாம் நமக்கு மனசில் பதிய கொஞ்சம் time ஆகும் , அதனால் அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும் போது நாம் உற்று கவனிக்கணும் .detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு சொல்லியத்துக்கு உதாரணம் படத்தின் கதை 90களில் இருந்து 2000 வரை நடப்பதால் , அந்த மொபைல் எல்லாம் அந்த periodல் வந்த நோக்கியா basic phone காட்டுறாங்க , அது காட்டுவது பெரிய விஷயம் இல்ல , ஆனால் ஒரு காட்சியில் ஒருவர் அதை கழுத்தில் தொங்கவிட்டு இருப்பர் , அது போல தான் வயதில் பெரியவங்க அந்த மொபைல் அந்த periodல் யூஸ் பண்ணியிருப்பாங்க .

டைரக்டர் வினோத் படத்தின் கதையை layer layer ஆகா பிரிச்சி ,ஒரு ஒரு காட்சியின் முடிவிலும் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போவது தான் ப்ளஸ் , இதே தான் அவர் சதுரங்க வேட்டையிலும்,இதிலும்  செய்து இருக்கிறார், ஹீரோ கார்த்தி நிச்சயமாக இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கிங் பாயிண்ட் படம் தான் இது , அவரை கார்த்தியாக பார்க்க முடியவில்லை , அந்த தீரனாக தான் தெரிகிறார் , ராஜஸ்தானில் நடக்கும் சம்பவம் எல்லாம் அவர் வாழ்ந்தாகவே தெரிகிறது , போஸ் வெங்கட் நல்ல supporting கேரக்டர் நல்லா செய்து இருக்கிறார் , படத்தின் இன்னொரு மிக பெரிய ப்ளஸ் ஜிப்ரான் இசை , மனுஷன் பிச்சி உதறிட்டார் , இந்த வருஷ கடைசியில் அவருக்கு தொடர்ந்து வெற்றியாக வரும் போல , போனவாரம் அறம் , இந்த வாரம் தீரன் , அடுத்த வாரம் சென்னை டு சிங்கப்பூர் (எப்படி இருக்குன்னு பார்ப்போம்).

படம் முடியும் போது அந்த case உண்மை நிலவரம் என்ன? அதில் வேலை பார்த்தவங்க நிலைமை என்ன என்று எல்லாம் சொல்லி முடிக்கும் போது , அட பாவம்யா அந்த போலீஸ்காரங்க , எல்லா போலீஸ்காரர்களை தப்பு சொல்ல கூடாது என்று தோன்றாமல் வெளியே வர முடியாது .

மொத்தத்தில்  தீரன் ரொம்ப தீர்க்கமானவன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 11 நவம்பர், 2017

Aram - அறம்

இது என்னோட 150வது விமர்சனம் ,  ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில்  எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .

முதல் வரியிலே நான் இந்த படத்தை பற்றி சொல்லிடுறேன் , நானே இந்த படம் ஒரு நாள் தள்ளி பார்த்து விமர்சனம் போடுறேனே ஒரு வருத்தம் , எத்தனையோ மொக்கை படத்தை முதல் நாள் பார்த்து இருக்கேன் , இந்த படத்தை முதல் நாள் பார்க்க முடியல , அதனால சொல்லுறேன்  நீங்க இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாம பாருங்க , ஒரு நெத்தி அடி படம் , எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாம , மனதார  உருகி பாராட்டப்படவேண்டிய படம் ,இந்த வருஷத்தில் வந்த அருமையான படங்கள் வரிசையில் இந்த படம் ஒரு முக்கியமான படம் , எனக்கு இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில்  குரங்கு பொம்மை , ஒரு கிடாயின் கருணை மனு , லென்ஸ் , மாநகரம் இந்த வரிசையில் இதுவும் ஒன்று ஆனால் மற்ற படங்கள் எல்லாம் பெரிய நட்சித்திரம் இல்லாத படம் , ஆனால் இது நயந்தாரா என்ற ஒரு பெரிய ஹீரோ வச்சி எடுத்துஇருக்காங்க , இந்த வருஷம் வந்த பெரிய ஹீரோ படங்களில் இது தான் பெஸ்ட் , என்னடா நயன்தாராவை ஹீரோன்னு சொல்லுறிய பார்க்கறீங்களா ? ஆமாங்க நிச்சயமா அவங்களை ஹீரோ என்று சொல்லலாம் .

நம்ம மனசில் இருப்பதை கிழி கிழி கிழிச்சிருக்காங்க , படத்தின் கதை நடக்கும் இடமே அருமையான தேர்வு , ஒரு பக்கம் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இடம் , அதன் அருகே குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு இடத்தில் இந்த கதை நடக்குது, நிறைய சின்ன சின்ன விஷயங்கள் படத்தில சொல்லி இருக்காங்க , விளம்பரத்துக்காக போட்டோ எடுத்து போடப்படும் போலியோ சொட்டு மருந்து, தங்கள் வாழ்க்கை தரம் உயராத மக்கள், நம் நாடு ராக்கெட் விட்டா நமக்கு பெருமைன்னு அது நல்லா நடக்கணும் சாமிகிட்ட வேண்டுவது , எது எதுக்கோ 1000 கோடி செலவு பண்ணாலும், குழில வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறு தான் நமக்கு மிச்சம் என்ற  நிலைமை காட்டுவது , ஆரஅமர விபத்து நடந்த இடத்துக்கு செல்லும் அதிகாரிகள் , ரிப்பேர் ஆகும் தீயணைப்பு வாகனம் இப்படி சின்ன சின்ன விஷயங்கள் காட்டி இருக்காங்க.

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நாமே அந்த இடத்தில இருப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நம் பிள்ளையே அதில் மாட்டிகொள்ளுவது போல ஒரு உணர்வு இருக்கு , அந்த உணர்வு நமக்கு ஜிப்ரான் bgmல்  நமக்குள்ள இறக்கிட்டார். தோரணம் ஆயிரம் பாடல் விஜயலக்ஷ்மி குரலில் ultimate ஆகா இருக்கு ,இன்னும் இந்த படத்தை பற்றி சொல்லலாம் ஆனால் அதை எல்லாம்  போயிட்டு படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க .

அந்த குழந்தையின் அம்மா அப்பாவாக நடிச்சவங்களுக்கு  ஒரு  பெரிய கைத்தட்டு , அப்புறம் நயன்தாரா அருமையாக நடிச்சி இருக்காங்க , அந்த கடைசி சில உணர்வுபூர்வமான காட்சிகளில் சூப்பர், நயன்தாரா கேரக்டர் வடிவமைச்ச டைரக்டர் கோபி நயினார்  பாராட்டி ஆகணும் , ஏன்னா நயன்தாரா என்பதால் மாஸ் காட்டுவது , build up பண்ணுவது எதுவும் இல்லாமல் , கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து இருக்காங்க .

இந்த படத்தில மைனஸ்ன்னு எனக்கு சொல்ல தோன்றவில்லை , நடுவுல நடுவுல வரும் அந்த டிவி விவாத மேடை ஷோ கொஞ்சம் வந்து இருந்த நல்லா இருந்து இருக்கும் , ஆனால் அடிக்கடி வருவது கொஞ்சம் bore அடிச்சது போல  தோணுச்சு .

ஒரு படம் பார்த்தா  அதன் பாதிப்பு படம் பார்த்து வெளியே வந்து ரொம்ப நேரம் இருக்கும் , அப்படி ஒரு பாதிப்பு இந்த படம் நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும் , ஆளும்கட்சி , எதிர்க்கட்சி , மத்திய கட்சிகள் , மாநில கட்சிகள், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் , கட்சி ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும்   இந்த படத்தை பார்த்துட்டு கண்ணாடி முன்னாடி நின்று நீங்களே காரித்துப்பிக்கோங்க , மசாலா கலந்து கொஞ்சம் கருத்து கொடுத்த மெர்சல் படத்துக்கு இந்திய அளவில் நியூஸ் சேனல் எல்லாம் ட்ரெண்ட் பண்ணிவிட்டாங்க , ஆனால் இந்த படத்தை நிச்சயமா அபப்டி ட்ரெண்ட் பண்ணிவிடனும் .

இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட வேண்டும் , எந்த மொழியிலும்  டப்பிங் செய்து வெளியிட்டால் செம்ம ஹிட் அடிக்கும் , நிச்சயமா இந்த படத்திற்கு விருதுகள் குவிய வேண்டும் , நிச்சயமா இந்த வருஷம் தேசிய விருது ஹிந்தி ல வந்த toilet படத்துக்கு கொடுப்பாங்க , அதே போல இந்த படத்துக்கும் விருது தந்தே ஆகவேண்டும் , அப்படி எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு சதியாக தான் இருக்க வேண்டும் .

குறிப்பு : கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கூறியவர் தான் இந்த படத்தின் டைரக்டர்  கோபி நயினார். கத்தி வந்துவிட்டதால் அதை மாற்றி அமைத்து வந்தது தான் இந்த அறம் .


மொத்தத்தில் அறம் ஒரு தரமான படம்.

இப்படிக்கு

சினி கிறுக்கன்