இன்று காலை வரை டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் காட்சி அதிகமாக செலவு பண்ணாமல் டிக்கெட் கிடைச்சது மிக்க மகிழ்ச்சி , டிக்கெட் கொடுத்த என்னோட ஒரு நண்பன் .. நீ நண்பேன்டா....நன்றி சொல்லிக்கிறேன் .
இந்த படத்தை பற்றி என்ன எழுவதுன்னு தெரியல , நல்லா இருக்குன்னு சொன்னா, என்னை கலாய்ப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு, அதே நேரத்தில் நல்ல இல்லை என்று சொன்னால் நிறைய பேர் என்னை திட்டுவதற்கு நிறைய வாய்ப்புண்டு இருந்தாலும் என் மனதில் பட்டவை இருபார்வைகளில் சொல்லுகிறேன்.
இது ரஜினியின் கபாலி என்று சொல்வதை தாண்டி ரஞ்சித்தின் கபாலி என்று தான் சொல்லணும், ஏன்னா ரஜினியின் படம்ன்னு எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் , ஏன்னா ரஜினியின் வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி இருக்கும் படம், அதிகமான பஞ்ச் வசனங்கள் , அதிரடி சண்டைகள் , டூயட்கள் , வேகமான காட்சி அமைப்புகள் ,ரஜினியின் காமெடிகள் எதுவும் இதில் கிடையாது , இதனால் இந்த படம் பலபேருக்கு பிடிக்கவில்லை, ஆனால் என்னை பொறுத்தவரை தலைவர் இப்போது தான் , தன் வயதுக்கு ஏற்ப்ப சரியான கதை மற்றும் கதாபாத்திரத்தை எடுத்து உள்ளார் அதனால் தலைவர்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். அளவான பஞ்ச் வசனங்கள் , அளவான ஹீரோயிசம்ன்னு பண்ணியிருக்காரு , வயசானாலும் உங்க ஸ்டைல் குறையவே இல்ல சார் .
படத்தின் கதை என்னனா வழக்கமான பழி வாங்கும் கேங்ஸ்டர் படம் தான், ஒரே ஒரு வித்தியாசம் நடக்கும் இடம் மலேசியா அவளோதான், படத்தில் பெரிய திருப்பங்கள் என்று எதுவும் இல்லை அனைத்தும் ஒரு சராசரி ரசிகன் யூகிக்க கூடிய காட்சிகள் தான் அமைச்சிருக்காங்க,அது பல பேருக்கு ஏமாற்றம் தான்
எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் என்னன்னா , ரஞ்சித் ஒரு கேங்ஸ்டர் படத்தோட usual rule உடைச்சிருக்கார் தான் சொல்லனும் ,குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்க ஒரு character ரொம்ப பறந்து பறந்து சண்டை போட்டு காப்பாற்ற முடியாது அதனால realisticah சண்டைகள் வச்சிஇருக்கார் இருந்தாலும் சில இடங்களில் ரஜினியின் ரசிகர்களை திருப்திபடுத்த ஹீரோயிசம் அங்கே அங்கே காட்டி இருக்காரு , மேலும் பொதுவா ரஜினியின் படத்தில் ரஜினியை தவிர எந்த கேரக்ட்டரும் மனசில் நிற்காது ரஜினியே பிரதானமாக தெரிவார் , ஆனால் இந்த படத்தில் தனிஷ்கா , அட்டகத்தி தினேஷ் ஆகியோர் மனசில் நிற்கிறாங்க ,அதுவும் அட்டகத்தி தினேஷ் கபாலியின் ஒரு ஒரு கண் அசைவிற்கும் செய்யும் செயல்கள் செம்மயா இருக்கு ,அவர் தலையை தலையை ஆட்டும் காட்சி சூப்பர், தனிஷ்கா போல்ட் கேரக்ட்டர் ரொம்ப நல்லா இருந்துச்சி ,மேலும் ரித்விகா , ஜானி பாய் எல்லாம் இருக்காங்க
சந்தோஷ் நாராயணன் நிறைய இடத்தில் இரைச்சல் இல்லாமல் அமையதிய bgm போட்டு இருக்காரு , நெருப்புடா பாட்டு ஏற்கனவே ஹிட் , அது சரியான இடத்தில் நான் நினைத்தது மாதிரியே மாஸ் சீன்களில் பயன்படுத்தி இருக்காரு
மொத்தத்தில் கபாலி விளம்பரத்தினால் வசூலில் காலத்தை வென்றாலும் அனைவரின் மனதிலும் வெல்வது கடினம்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடியே விமர்சனத்தோட வந்துட்டேன் சொல்லு , யப்பா யப்பா என்ன பில்டப் என்ன பில்டப் இந்த படத்துக்கு, தலைவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறதுக்கு அப்படியே இருக்க்காரு அதுவும் கோச்சடையான் , லிங்கான்னு கொஞ்சம் சறுக்கலுக்கு பிறகு ஒரு பயங்கர கெத்தோட வந்து இருக்காரு, ஸ்க்ரீன்ல நெருப்பா இருக்காரு , அதுவும் அந்த நெருப்புடா பாட்டுக்கு தியேட்டர்ல செம்ம விசில் கிழிது , பொதுவா தலைவருக்கு மாஸ் சீன்ஸ் அல்வா சாப்பிடறா மாதிரி, அதுவும் அதை டைரக்டர் ரஞ்சித் பக்காவா பொருத்தி இருக்காரு , அதுக்கு பக்க பலமா சந்தோஷ் நாராயணன் bgm படம் fullaha பிண்ணி எடுத்துட்டாரு , தலைவர்க்கு வழக்கமான பிளாஷ் பேக் தான் அதே நேரத்தில் அவர் அந்த பரட்டை ரஜினி போலவே வருவது புல்லரிச்சிடுச்சி
ரஞ்சித்தோட ஆஸ்தான நடிகர்கள் கலையரசன், ரித்விகா நல்லா பண்ணி இருக்காங்க, தைவான் நடிகர் வின்ஸ்டன் சாஹூ வில்லனாக ஒரு நல்ல வரவு , அடுத்த சில தமிழ் படங்களுக்கு அவரை நாம் வில்லனாக பார்க்கலாம் ,அநேகமாக ஷங்கர் படத்தில் அதிக வாய்ப்பு உண்டு நினைக்கிறேன்.
ராதிகாஅப்டே கதைக்கு சரியான அளவுக்கு பயன்படுத்தி இருக்காங்க ,
தன்ஷிகா செம்ம போல்ட் character , அதுவும் ரஜினியும் அவரும் சந்தித்து கொள்ளும் காட்சி ultimate.
ரஞ்சித்துக்கு இந்த படம் குருவி தலையில் மலை போல அதை சரியாக சமாளித்து இருக்காரு டைரக்டர் ரஞ்சித்,
இப்படி விமர்சனம் எழுத ஆசை தான் , இப்போதைக்கு இது ஒரு கற்பனை விமர்சனம் தான் ,இது போல மேலும் உங்களுக்கு என்னிடம் இருந்து முழுமையான விமர்சனம் தேவையா ? அப்படி என்றால் உங்களிடம் first day ஒரு டிக்கெட் இருந்தால் எனக்கு கொடுக்கவும் , ஏன்னா எனக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை , onlineல புக் பண்ணலாம் பார்த்தா தியேட்டர்காரர்களே ப்ளாக் பண்ணி தான் webisteல் ரிலீஸ் பண்ணுறாங்க , இருக்குற டிக்கெட்டும் 300-600&1000 வரைக்கும் விற்கிறாங்க . டிக்கெட் கிடைச்சா பார்த்துட்டு வந்து உண்மையான விமர்சனத்தோட வருவேன்.
அப்போ கபாலி - டி - விமர்சனம்ன்னா என்ன ?
அது கபாலி - (டி)க்கெட் விமர்சனம்
இப்படிக்கு
இப்போதைக்கு டிக்கெட் இல்லாதவன்டா
சினி கிறுக்கன் டா
(20/7/2016)
என்ன மூன்று வாரமா நிறைய படம் வந்தும் ஒரு படத்தை பற்றி கூட போடலையேன்னு என்னை கேட்ட நல்ல உள்ளங்களுக்கும் , அப்பாடா மூணு வாரமா இவன் இம்சை இல்லன்னு சந்தோஷபட்ட ரொம்ப நல்ல உள்ளங்களுக்கும் ,நான் உங்க சினிகிறுக்கன் மூன்று வாரம் கழிச்சி இந்த தில்லுக்கு துட்டு படத்தோட வந்து இருக்கேன் , மூணு வாரமா வார இறுதி நாட்களில் out of station பயணம், அதனால எந்த படமும் பார்க்கவில்லை எழுதவில்லை ,இந்த படமும் நான் எழுதுறது கொஞ்சம் தாமதம் தான் இருந்தாலும் நம்ம கடமையை செவ்ன செய்வோம்.
அட போங்கடா ஒரே பேய் படம் ட்ரெண்ட் ஆகவே இருக்கு , அதுவும் நம்ம தமிழ் சினிமாவுல காமெடி + பேய் படம்ன்னா ரொம்ப ட்ரெண்ட் ஆயிடுச்சி, இந்த படமும் அதுக்கு விதி விலக்கு இல்ல , அதுவும் சந்தானம் வேற இருக்காரு சொல்லணுமா ?
படம் ஆரம்பிப்பது என்னமோ நல்ல ஆரம்பம் தான் அந்த திபெத் சாமியார் வருவது, அந்த பங்களாவுக்கு ஒரு கதை சொல்லுவதுன்னு நல்லா இருக்கு,ஆனா போக போக எப்போதும் போல அரைச்ச மாவை தான் அரைச்சு இருக்காங்க , சாரி இது எல்லோரும் சொல்லுவது தான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லணும்ன்னா எப்போதும் பிசையற பரோட்டா மாவு போலே தான் பிசைஞ்சி இருக்காங்க.
சந்தானம் நல்லா ஆடுறாரு , நல்லா நடிக்கிறாரு , நல்லா சண்டை போடுறாரு, அவரோட intro பார்த்தா கொஞ்சம் திருப்பாச்சி விஜய் , கொஞ்சம் அண்ணாமலை ரஜினி , கொஞ்சம் வேதாளம் அஜித் வீர விநாயக பாட்டு அப்படின்னு எல்லோரையும் inspiration ஆக எடுத்து அந்த பாட்டை கம்போஸ் பண்ணி இருக்காங்க , ஆனா காமெடி மட்டும் பழய மாதிரியே பண்ணுறாரு counter காமெடி , மற்றும் வசனங்கள் எல்லாம் பழய லொள்ளு சபா பார்க்கிறா மாதிரியே தான் இருக்கு , சந்தானம் கொஞ்சம் out datedஆகுறாரோன்னு ஒரு feel வந்தது,
ஹீரோயின் சானியா சேட்டு பொண்ணுக்கு நல்லா செட் ஆகிட்டாங்க ஆனா வசனங்கள் dubbingல நிறைய இடங்களில் lip sync ஆகல, ஹீரோயின் அப்பாவுக்கு மாப்பிள்ளைன்னு ஒருத்தர் வராரு ஆனா ஹீரோயின்க்கு அக்காவா எங்கேயும் காட்டவில்லை, கடைசியா பயந்து ஓடும் போது அந்த மாப்பிள்ளைக்கு மனைவியா ஒருத்தர் வராரு அவ்ளோதான்.
படத்தோட மிக பெரிய ப்ளஸ் நம்ம மொட்டை ராஜேந்திரன் தான் , அது கூட ஆரம்பத்தில் ரொம்ப சுமாராக தான் இருக்கு ஆனா இறுதி 30 நிமிஷம் அவர் பண்ணும் காமெடி செம்ம , கிளைமஸ்ல் உண்மையான பேய்க்கும் , டூப்ளிகேட் பேய்க்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அவர் படும் அவஸ்தை அப்புறம் சந்தானம்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற விதம் எல்லாம் செம்ம,
ஏதோ தமன் இசையால் அங்கு அங்கே நமக்கு இது பேய் படம்ன்னு ஞாபகம் வருது இல்லாட்டி இது வெறும் காமெடி படமாகவே இருந்து இருக்கும்.
படத்தோட கடைசி காட்சி எனக்கு என்னவோ அந்த insidiousல கொஞ்சம் சுட்டா மாதிரி ஒரு எண்ணம்
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு கொஞ்சம் நமக்கு கழுத்துல வெட்டு
இப்படிக்கு
சினி கிறுக்கன்
The Conjuring ஆ ?? டேய் இங்கிலீஷ் படத்தை கூட தமிழில் தானா எழுதுவன்னு ? நீங்க கேட்கிறது தெரியுது,நம்ம இங்கிலீஷ்ல பார்த்தாலும் தமிழ்ல தானே எழுதுவோம் , ஏன்னா நமக்கு தமிழ் ஆடியன்ஸ் தானே அதிகம்.
இந்த படத்தை பற்றி எழுத நமக்கு கொஞ்சம் பயம் தான் , ஏன்னா கோலிவுட் படத்தை பற்றி எழுதுனாலே நம்மை கோழி உறிக்கிறா மாதிரி உறிப்பாங்க இதுல ஹாலிவு ட் படம் வேறையா ? அப்படின்னு நமக்கு நாமே கேட்க தோணுது,இருந்தாலும் நாம் நம்ம கடமையை செய்வோம்.
நான் பொதுவா படத்தோட கதையை சொல்ல மாட்டேன் , ஆனா நான் ரசிச்ச நல்ல காட்சிகள் மேலும் அதோட பிளஸ் பாயிண்ட் தான் சொல்லுவேன் , ஆனா இந்த படத்தில் ரசிச்ச காட்சிகளை நான் சொல்லமாட்டேன் ,சொன்னால் பார்க்கும் விறுவிறுப்பு போய்டும்,படத்தோட ஒரு வரி கதை மட்டும் சொல்லுறேன் , இங்கிலாந்தில் ஒரு குடும்பம் இருக்கும் வீட்டில் பேய் இருக்கிறது , அந்த குடும்பத்தை அந்த பேய் வீட்டை விட்டு துரத்த ட்ரை பண்ணுது ,எப்படி அந்த பேயயை ஒழிச்சாங்கன்னு தான் இந்த படம்.
திக் திக் திக்ன்னு படம் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு வினாடியும் நம்மை அந்த படத்தோட ஒன்ற வச்சி இருக்கு, ஒவ்வொருகாட்சியும் ஒவ்வொரு ஷாட்டும் அடுத்து அடுத்து என்ன ? எங்க இருந்து எப்போ வரும்ன்னு ஒரு உணர்வு நமக்குள்ள கொண்டு வந்து இருக்காங்க ,அதுக்கு காரணம் படத்தோட கேமராமேனும் எடிட்டரும் தான், ஏன்னா படம் பூரா படத்தக்கு உள்ளேயே கொண்டு போக வச்சி இருக்காங்க,கேமரா மெதுவா நகரும் போது நாமே அங்கே இருப்பது போல இருக்கு படத்தோட மாபெரும் பிளஸ் இசை , அடிச்சி பிச்சிட்டாங்க சரியான இடத்தில சவுண்ட் effect அதுவும் டால்பி அட்மாசில் செம்ம,
Janetஆக நடித்த madison wolfe யெப்பா .. அந்த குட்டி பொண்ணு செம்மைய நடிச்சி இருக்குயா அந்த படத்தோட மிக பெரிய பிளஸ் அந்த பொண்ணோட நடிப்பு தான் , அப்புறம் அந்த NUN கேரக்டர் வரைப்படம் செம்ம திகில் லுக்,
படத்தில் நிறைய நல்ல காட்சிகள் சொல்லணும் தோணுது ,ஆனா படத்தை பார்த்து ரசிச்சிகோங்க, பேய் பட ரசிகர்களுக்கு இது நல்ல தீனி போடும், ,நிச்சயமா 2 மணி நேரம் ஒரு நல்ல திகில் அனுபவம் இருக்கும் , The Conjuring முதல் part க்கு எந்தளவுக்கும் சளைத்தது இல்லை இந்த The Conjuring2.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#TheConjuring2
ஜாலிலோ ஜிம்காலா,, கதை எல்லாம் கேட்காதீங்க , லாஜிக் எல்லாம் பார்காதீங்கன்னு , நம்பி வாங்க சிரிச்சிட்டு போங்கன்னு , அவங்களே படத்தோட promotionல சொல்லிட்டங்கா, அதனாலா கதைய பற்றி ஆராயிச்சி பண்ணறது , லாஜிக் பற்றி ஆப்பேரஷன் பண்ணறது எல்லாம் தேவை இல்லாதது ,
சரி படத்தில அவங்க சொன்னா மாதிரி ஜாலியா இருக்கான்னு ? பார்த்தோம்ன்னா என்னை பொருத்தவரைக்கும் அது இல்லை தான் சொல்லுவேன், ஏன்னா குழந்தை மனசு(குழந்தைகள் தான் சொல்லுவன் ) இருக்கறவங்க , சும்மா சிரின்னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பவர்களுக்கு வேண்டும்ன்னா இந்த படம் ஜாலியா இருக்கும், ஆனா சூரி, விஷ்ணு , மொட்டை ராஜேந்திரன் ,ரோபோ ஷங்கர்ன்னு பல பேரு என்ன ? பத்து பேரு சேர்ந்து வந்து இந்த படத்துல வந்து கிச்சு கிச்சு மூட்டினாலும் எனக்கு சிரிப்பு வரல .
படத்தோட பிளஸ் ரோபோ ஷங்கர் தான் , நல்லா நடிச்சு இருக்கார் , அதுவும் அவர் அன்றைக்கு நடந்தது காலையில் இருந்து கதையை திரும்ப திரும்ப சொல்லும் காட்சி தான் சூப்பர் , உண்மையில படத்தில நான் நல்லா சிரிச்ச சீன் அது மட்டும் தான் .
வேற என்ன சொல்லலாம் இந்த படத்தை பற்றி ? ம்ம் பாடல்கள் பற்றி சொல்லனும்னா ஒரு மசாலா படத்துக்கு எப்படி தேவையோ அது மாதிரி மசாலா பாடல்கள் இருக்கு
விஷ்ணு படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும்ன்னு முதல் முறையா இப்படி ஒரு கமெர்சியல் படம் ட்ரை பண்ணி இருக்கார் ,நிக்கி கல்ராணி அழகா இருக்காங்க ஆனா அவங்க அப்பா ஹோட்டல் owner , அந்த ஹோட்டல் பார்த்தா பைபாஸ்ல இருக்குற கையேந்தி போல இருக்கு, ஆனா ஹோட்டல் கல்லாபெட்டில உட்கார்ந்து இருக்காங்க அதுவும் full மேக்கப்ல , செம்ம grandஆ , 5 ஸ்டார் ஹோட்டல் முதலாளி போல இருக்காங்க ,கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்
அப்புறம் ரோபோ ஷங்கர் காணாமல் போன பிறகு , அதை கண்டு பிடிக்க நிக்கி கல்ராணி கூட உட்கார்ந்து ஐடியா கொடுக்கிறேன் பேருல அவர் ஒவ்வொருத்தருக்கும் phone பண்ணும் காட்சி , டைரக்டர் சார் அந்த காட்சி ருத்ரா படத்தில பாக்கியராஜ் சார் ஏற்கனவே பண்ணிட்டார் .சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்.
படத்தோட கடைசில மொட்டை ராஜேந்திரன் வருவாராம் , பேய் வருமாம், குத்து பாட்டுக்கு எல்லாம் டான்ஸ் ஆடுவாங்களாம் , எப்பா முடியல , சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன் .
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,இந்த படத்துக்குன்னு வந்துட்டா கொஞ்சம் கூட யோசிக்க இயலாதவன்,
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#Velainu #Vandhutta #Vellaikaaran
#VVV
நீங்க ஒரு பொழுதுபோக்கு விரும்பியா?,2 மணி நேரம் நல்லா என்ஜாய் பண்ணனும் என்று think பண்ணுவீங்களா? கார்த்திக் சுப்புராஜ் படம் அதனால பிட்சா , ஜிகர்தண்டா மாதிரி இருக்கும் நினைப்பவரா ? அப்போ உங்களுக்குரிய படம் இது இல்ல ,அந்த மாதிரி எண்ணம் இருந்துச்சினா அதை அப்படியே மூட்டை கட்டி தூக்கிபோட்டுட்டு போங்க
இறைவின் பொருள் - பெண் தெய்வம் , பெண்களை பற்றிய படம் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ரொம்ப வித்தியாசமான ஒரு முறையை பின்பற்றி ஒரு trend செட்டிங் படம் போல தந்து இருக்காரு டைரக்டர்.
தன்னால் ஒரே மாதிரி படங்கள் தான் கொடுக்க முடியும் என்று இல்லமால் , மூணு படங்களும் மூன்று வித்தியாசமான கதை களம் எடுத்து இருக்கார் .அதுக்கு ஒரு செம்ம கைதட்டு
பொதுவா தமிழ் சினிமாவில் பெண்களை பற்றிய படம் என்றால்,அடிமை தனம் படுத்தும் ஆண்கள், இல்லாட்டி ரொம்ப கஷ்டப்படும் பெண்கள் வாழ்கையில் பல தடைகளை தாண்டி முன்னேறி சாதிப்பது போல தான் காட்டுவாங்க, ஆனால் இதில் ஒவ்வொரு ஆண்கள் faceபண்ணும் பிரச்சனைகள் அதனால எப்படி அவர்களை சார்ந்த பெண்கள் பாதிக்க படுறாங்கன்னு காட்டி இருக்கார்
எனக்கு உண்மையில் சொல்லனும்னா முதல் பாதியை விட இரண்டாவுது பாதி தான் இறைவி மனசுக்குள்ள இறங்குகிறாள், ஏன்னா முதல் பாதியில் ஒவ்வொருவரின் பிரச்சனைகளை நிலை நிறுத்த காட்சிகள் கொஞ்சம் நிறைய வச்சி இருக்கார் போல தோணுது,சரி அப்போ இரண்டாவுது பாதியில் கம்மியான்னு கேக்குறிங்களா ? இல்ல.. படத்தில் நிறைய இடங்கள் வெட்டி இருக்கலாம்ன்னு தான் எனக்கு தோணுது, இரண்டாவுது பாதியில் பல காட்சி அமைப்பு ரொம்ப அழகா ரசிக்கும்படி வச்சி இருக்கார்
விஜய்சேதுபதி ஜெயில்ல இருந்து வெளிய வரும் போது , குழந்தையோட தொட்டில்லை முகர்ந்தது பார்ப்பது,அஞ்சலியை அவர் ஊருல சமாதானம் படுத்துவது , அப்போ வெளியே பாட்டி அதை ரசிப்பது,அஞ்சலிகிட்ட விஜய்சேதுபதி பாபிசிம்ஹா பற்றி பேசுவது,பாபிசிம்ஹா அவரோட அம்மாகிட்ட மூழு படத்தோட கதைய வசனமா பேசுவது,கடைசியா நிச்சயதார்த்தம்போது காமிலினிமூக்கர்ஜி எஸ்.ஜே.சூர்யா கிட்ட பேசுவது ,எஸ்.ஜே.சூர்யா வைபவ் கிட்ட உங்க exஉட்பி ,என்னோட present wifeன்னு சொல்லுவது,,கிளைமாக்ஸ்ல் எஸ்.ஜே.சூர்யா பேசுவது,அஞ்சலி அசால்டா திரும்பி பார்க்காம trainல் ஏறுவது, இதுவெல்லாம் இரண்டாவுது பாதியில் ரசிக்கும்படி வைத்த காட்சிகள்.
படத்தின் பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா, அட்டகாசமா நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்காருன்னு தான் சொல்லணும்,குறிப்பா தயாரிப்பாளர் கிட்ட அடி வாங்கிற காட்சியில் பேசும் வசனம், பிறகு கிளைமாக்ஸ்ல் phoneல் பேசும் காட்சி ,பிறகு பூஜா தேவரியா கேரக்டர் செம்ம bold,அவங்ககிட்ட விஜய்சேதுபதி சித்தப்பாவோட போயிட்டு பொண்ணு கேட்கும் காட்சி செம்ம.
மொத்தத்தில் இறைவி பல காட்சிகளால் இறைந்து இருக்கிறது, இறைந்ததை இறுக்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதே நேரத்தில் புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் .
இப்படிக்கு
சினிகிறுக்கன்
#cinekirukkan #iraivi
இது வம்பு ஆளு ஐயோ சாரி படத்தோட பேரு இது நம்ம ஆளு, படத்தோட ஹீரோ தான் controversyனா , நமக்கு எழுதும் போதே controversy ஆகுதே. சரி விடுங்க படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க
சிம்புவோட படத்தில என்ன இருக்கும் ? அழகான ஹீரோயின் இருப்பாங்களா ?
ஆமா இதுல இருக்காங்க..... அப்புறம் ?
காதல், காதல் தோல்வி , ஒரு குத்து பாட்டு இருக்குமா ??
ஆமா இதுல இருக்கு .
பொண்ணுகளோட காதல் அவங்கள பற்றி காலாயித்தல் இருக்குமா ?
ஆமா லைட்ஆ இருக்கு
தலயை பற்றி சொல்லி ஒரு வசனம் இருக்குமா ?
ஆமா இதுல இருக்கு.
சந்தானம் இருப்பாரா ?
ஆமா.. ஆனா கொஞ்சமா வந்துட்டு அவரோட substituteah சூரியை போட்டுடாரு .
நல்லவேளை punch dialogue எல்லாம் படத்துல இல்ல
படம் எப்படி இருக்கியா? என்று கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, கொஞ்சம் பொறுங்க ,படத்தில நடிச்ச சிம்புவுக்கு படம் ரிலீஸ் ஆகணும்ன்னு எந்த அளவுக்கு பொறுமை இருந்துச்சி , அதைவிட படம் பார்த்த எனக்கு எவ்வளவு பொறுமை இருக்கு , படிக்கிற உங்களுக்கும் அது கொஞ்சம் இருக்கணும்.
இயக்குனர் பாண்டிராஜ் படத்தில என்ன எல்லாம் இருக்கும் ?
கண்டிப்பா நடிகர் JP இருப்பார், அதாங்க மங்காத்தாவுல த்ரிஷாவுக்கு அப்பாவா வருவரே அவர் தான் ,இதுல இருக்கார் .
நகைச்சுவை மெல்லிசா ஒரு கோடு போல படத்தோட போயிட்டு இருக்கும்,இதுலயும் அது மாதிரி சூரியை வச்சி போகுது, ஆனா படத்தைவிட்டு வெளியே வரும் போது மனசுல இருந்து அழிஞ்சி போகுது.
அவரோட family drama படங்களில் எந்த ஒரு கேரக்டரையும் நெகடிவா காட்டமாட்டாரு, சந்தர்ப்ப சூழ்நிலைகளை தான் வில்லனாக காட்டுவாரு,அதுவும் இதுலை இருக்கு
இது எல்லாம் இருக்கே ஆனா படத்தில கதை இருக்கா ? அதை தான் கடைசி வரைக்கும் தேடிகிட்டு இருந்தேன், வெறும் துண்டு துண்டாக காட்சிகளின் கோர்வை தான் இந்த படம், ஆனா டைரக்டர் காட்சிகளை ரொம்ப கோர்த்துடாருன்னு தான் சொல்லணும் அதனால கொஞ்சம் கண்ணை கட்டுது ,பல படங்கள் கதை பெருசா இல்லாட்டியும் , சுவாரசியமான திரைக்கதையால் படம் போர் அடிக்காம போகும், ஆனா அது இதுல மிஸ்ஸிங்.
படம் ஆரம்பிக்கும் போது IT கம்பெனி பற்றி சொல்லும் போது அட சுவாரசியமா போகுதே நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லுறாரே என்று தோணிச்சி,அதுவும் சில வசனங்கள் நான் ஏற்கனவே ஒரு stage ஷோல சொல்லிருக்கோமே பரவாயில்லையே நம்மை மாதிரியே யோசிச்சி எழுதிருக்காரேன்னு ஒரு அல்ப்ப சந்தோசம்
சிம்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ரொம்ப அழகா இருக்காரு , பொதுவா சிம்பு டான்ஸ்ல எல்லாம் பிண்ணிபெடல் எடுப்பார் ஆனா அந்த குத்து பாட்டுல உடம்பை கஷட்டப்பட்டு ஆடினா மாதிரி இருந்திச்சி.
நயன்தாரவுக்கு இந்த படம் ஒரு challenging ஆனா ஒரு கேரக்டர் இல்ல இது
ஆண்ட்ரியா நிறைய இடங்களில் ஜெனிலியா மாதிரி நடிக்க ட்ரை பண்ணிருக்காங்க,அவங்களுக்கு இந்த மாதிரி கேரக்டர் செட்ஆகல ,
சிம்புவும் நயன்தாராவும் மொபைல மாற்றி மாற்றி பேசும் காட்சி ரொம்ப நேரம் வச்சி போர் அடிச்சிட்டாங்க , அந்த சமயத்துல நம்ம ஆடியன்சே அவங்கள கலாயிக்கலாம் என்று நினைக்கும் போது சூரி வந்து அவங்க ரெண்டு பேரையும் கலாய்ச்சி அவர் கை தட்டு வாங்கிட்டு போயிடுறாரு .
இயக்குனர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் தரனும் ஆசைபடுறேன் , அதாவுது இந்த IT கம்பெனில ஹீரோ வேலை செய்கிறா மாதிரி காட்டும் போது tie கட்டிக்கிட்டு வராமதிரியோ , ஆப்பிள் சிஸ்டம்ல வேலை செய்கிறா மாதிரி காட்டாதீங்க ,ஏன்னா எல்லா கம்பெனிலயும் எல்லோரும் ஆப்பிள் சிஸ்டம்ல வேலை செய்றது இல்லை, எல்லா கம்பெனிலயும் எல்லோரும் tie கட்டிக்கிட்டு போகறதும் இல்லை.
மொத்தத்தில் சிம்புவுக்கு இது நம்ம ஆளு இல்லை ,கெளதம் & ஏ ஆர் ரகுமான் அருளால் அச்சம்எனபது மடமையட வெற்றி பெற வாழ்த்துகள் .
இப்படிக்கு
சினிகிறுக்கன்
#cinikirukkan #ithu#namma#aalu
#INA
சினிகிறுக்கனின் தேர்தல் வணக்கம்..
இப்படி ஒரு படம் அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் வெளியிட்டது செம்ம தைரியம் , ஆளுங்கட்சி எதிர் கட்சி , இந்த தலைவர், அந்த தலைவர், எந்த தலைவர்ன்னு பாரபட்சம் பார்க்காம வசனகளில் ஒரு சாதாரண குடிமகனின் மனநிலையை பிரதிபலிக்கும் படம் இது.
கதை:
ஒருவரை பழிவாங்குவதர்க்காக , முதல்வரை கடத்தி அதன் மூலம் அந்த நபரின் முகத்திரையை கிழிப்பது தான் கதை, இதில் பேச்சுவார்த்தை நடக்கும் காட்சியில் வசனகளில் மூலம் இன்றைய அரசியலின் அவலங்களை தோலுறித்து காட்டுவது தான் படத்தின் உச்சம்.
திரைகதை:
மற்ற படம் மாதிரி தேவை இல்லாத காட்சிகள் வைத்து பிறகு கதைக்குள்ள போகாம , நேரடியா கதைக்குள்ள போகுறா மாதிரி காட்சி அமைப்பு வச்சிட்டாரு, ஆனால் பாலசரவணன் யார் பாபிசிம்மாஹா அவர் என்ன எப்படி சந்திசாங்கன்னு ஒரு பிளாஷ் பேக் போகும் போது, ஒரு டூயட் பாட்டு எல்லாம் வச்சி , ஐயோ தெரியாம இந்த படத்துல வந்து மாட்டிகிட்டோமோ ரொம்ப தோயிதோன்னு ஒரு எண்ணம் வந்திச்சி ஆனால் கடைசியா பாலசரவணன் அந்த காட்சிக்கு ஒரு காரணம் சொல்லும் போது சரி பொழைச்சி போங்கயா, அந்த காட்சிகள் எல்லாம் சரின்னு சொல்ல தோணுது, மேலும் தேவை இல்லாத பாட்டு காதல் சண்டை எல்லாம் வச்சி படத்தின் வேகத்தை நிறுத்தாமல், அந்த கதைக்கு என்ன தேவையோ அதை சரியாய் 2 மணி நேரத்துக்கு கொடுத்து இருக்கிறார் , படத்தில் தேடும் வேட்டை மற்றும் கிளைமாக்ஸ்ல் தப்பிப்பது போன்ற சில லாஜிக் மிஸ்ஸிங் சீன்களும் உண்டு,ஆனால் இது எல்லாம் மறக்கடிப்பது போல மற்ற காட்சிகள் இருக்கு, அதனால இது ஒரு பெரிய விஷயமாக தெரியல .
வசனம் :
படத்தின் முக்கிய ஹீரோ வசனம்தாங்க, வரி பற்றிய வசனமாக இருந்தாலும் சரி, டாஸ்மாக் பற்றி பேசுவது, கள்ள ரூபா நோட் பற்றி பேசுவதும் சரி,அரசாங்க வேலை , விவசாயம் , பள்ளி கல்வி முறை என்று அனைத்து பற்றியும், மேலும் அரசியல்வாதிகள் மேல மட்டும் குற்றம் சொல்லாமல், பிரகாஷ்ராஜ் மக்கள் செய்யும் குற்றங்களையும் குறிப்பிட்டு சொல்லும் வசனமும் நெற்றியில் துப்பாக்கியில் சுட்டது போல் உள்ளது , மேலும் வசனகள் மூலம் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு பாடமே எடுத்து விட்டார் இயக்குனர். தியேட்டர்ல கைதட்டு விசில் கிழிது.
இசை:
லியோன் ஜேம்ஸ் சரியாக படத்திற்கு என்ன தேவையோ அதை ஓவர் டோஸ் பண்ணாம கொடுத்து இருக்கார்
காதாபாத்திரங்கள் :
பாபி இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்பு உண்டு, ஆனால் நிறைய இடங்களில் ரஜினி மாதிரி body language பண்ணி இருக்கார்
பிரகாஷ் ராஜ் இந்த மாதிரி அரசியல்வாதி காதாபாத்திரம் என்றால் அல்லவா சாப்பிடுவது போல் , அதை சரியாய் செஞ்சிட்டாரு
நிக்கி கல்ராணி மற்ற படம் ஹீரோயின் போல சும்மா ஊறுக்காய் மாதிரி பயன்படுத்தாம , கதைக்கு எந்த அளவுக்கு தேவையோ சரியாக பயன்படுதிருக்காங்க
பாலசரவணன் டார்லிங், திருடன் போலீஸ்க்கு பிறகு ஒரு நல்ல scope உள்ள படம் , அவரை விசாரிக்கும் போது அவர் செய்யும் சின்ன சின்ன காமெடி நல்லா இருக்கு.
இளவரசன் ஒரு அமைச்சராக வருகிறார் அவரை உற்று பார்த்தீங்கனா இப்போ இருக்கும் ஒரு முக்கிய அரசியல்வாதி போல தெரிவாரு , அவரோடைய காது ஓரத்தில் இருக்கும் நிரை முடி , நெற்றியில் இருக்கும் சில மத அடையாளங்கள், மேலும் சட்டை பையில் இருக்கும் தலைவர் படம் , ஐயோ வேண்டாம் சாமி, நான் அதை பற்றி சொல்லல ஆளைவிடுங்கடா சாமி , நமக்கு எதுக்கு வம்பு நீங்களே போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க.
ஜான்விஜய் , கருணாகரன் எல்லோரும் அளவா நல்லா பண்ணி இருக்காங்க.
ஹைலைட் காட்சிகள் :
தலைவர்காக , மண் சோறு சாபிடுவது, அங்கபிரதட்சணம் பண்ணுவது,மேலும் உளறும் அரசியல்வாதி , இப்படி நிறைய இன்றைய அரசியல் காட்சிகளை திரையில் காட்டி இருக்காங்க, இதை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் , நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு சபாஷ்
மொத்தத்தில் : இது தேர்தலுக்கு முன்னதாக வந்த படம் அல்ல பாடம் , ஓட்டு போடுவதற்கு முன்னாடி இந்த படத்தை பார்த்துட்டு போயிட்டு ஓட்டு போடுங்க
இப்படிக்கு
சினிகிறுக்கன் / அரசியல்கிறுக்கன்
#cinikirukkan #KO2
அஞ்சான் மாஸ்ன்னு கொஞ்சம் சறுக்களுக்கு பிறகு இந்த படம் வந்து 24 மணி நேரத்துல பாக்ஸ் ஆபீஸ் அடிக்கணும் மற்றும் மக்கள் மனசுல நிலைத்து நிக்கணும் நினைச்சி இந்த படத்தை நடித்து தயாரித்து இருக்கிறார் சூர்யா,ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் அடிக்குமா அடிக்காதா ? வாங்க பார்க்கலாம்
படத்தோட பிளஸ் சில விஷயங்கள் சொல்லுவதற்கு முன்னாடி பல நெகடிவ் விஷயங்கள் சொல்லணும், படத்தோட கதை நடப்பது 2016 ஆனா படத்தோட கதை ஆரம்பிப்பது 26 ஆண்டுக்கு முன்னாடி அதாவது 1990ல் கதை ஆரம்பிக்கிறது,ஆனா அந்த காட்சியில் வரும் ஸ்ட்ரீம் என்ஜின் train , இரண்டு சூர்யாவும் போட்டு இருக்கும் ஆடைகள் பார்த்தா 1990 மாதிரி இல்ல,ஏதோ 1940-50 மாதிரி அல்லது ஒரு period பிலிம் போல காட்சி அமைப்பு இருக்கு, அந்த காட்சிகளில் போட்டு இருக்கும் செட் அப்படி தான் தெரியுது
டைம் மிஷின் படம் சொன்னதால படத்தோட கதை திரைகதை பார்வையாளர்களுக்கு டைம் மிஷின் பயன்படுத்தாமலே அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ரொம்ப சுலபமா தெரிகிறது, அதனால படம் பார்க்கும் போது அடுத்து என்னன்னு ஒரு சுவாரசியம் வரவில்லை.
டைம் மிஷின் படம் என்றால் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்ன்னு தெரியும் ஆனா அந்த சூர்யா & சமந்தா காதல் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது, கிரிக்கெட் ஸ்டேடியம் போயிட்டு வருவது, நான் ஒரு வாட்ச் mechanic, ஒரு ஜெனரல்ன்னு knowledgeன்னு திரும்ப திரும்ப சொல்லுவது ரொம்ப கஷ்டமா இருக்கு., இரண்டு பேருக்குள்ள இருக்கும் காதல் அந்த அளவுக்கு chemsitry தெரில.
இரண்டாவுது பாதியில் வரும் குடும்ப கிளை கதைகள் எல்லாம் பார்க்கும் போது "எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை லா ல லான்னு " விக்ரமன் பாட்டு பாடனும் போல தோணுது,
சூர்யா சமந்தாவுக்கு கண் மையை பொட்டா வைக்கிறாரு ஆனா அடுத்த வரும் சில shotகளில் சமந்தா நெற்றியில் sitcker பொட்டு இருக்கு, இது எல்லாம் கவனித்து இருக்கலாமே.
படத்தோட பிளஸ் முக்கியமா VFX அந்த வாட்ச் கட்டும் போது கிராபிக்ஸ்ல் வேலை செய்கிறா மாதிரி காட்டுவது, முதல் காட்சியில் இருக்கும் பரபரப்பு எல்லாம் நல்லா இருக்கு, அந்த lab செட், அந்த ஆபீஸ்ல் வரும் சண்டை காட்சி நல்லா இருக்கு,ஒரு மழை , மழையெல்லாம் பாதியில் நிற்பது போல ஒருசீன் ,தியேட்டர்ல நிறைய பேரு கை தட்டுறாங்க ,
இசை ஏ ஆர் ஆர் , காலம் என் காதலியே பாட்டு எனக்கு பிடிச்சி இருக்கு ஆனா மற்ற பாட்டு ? அவரோடே பாடல் BGM எல்லாம் வேற லெவல் இருக்கும் ஆனா எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ஆர், அவரோட படங்களில் நிச்சயமா ஒரு இடத்திலாவுது வாவ்ன்னு சொல்லுறா மாதிரி BGM இருக்கும்,
இந்த படத்தில அவர்தானா இல்லாட்டி அவரோட assistant BGM, பாட்டு எல்லாம் போட சொல்லிட்டாரோ தோணுது.
மொத்தத்தில் 24 டைம் மஷின் கடிகாரத்தை டைரக்டர் இன்னும் கொஞ்சம் advanceah, fastah வச்சி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#24 #cinekirukkan
தெறிக்க விடலாமா ?? அட அது தல வசனம் ... ஐயோ நம்ம அந்த சண்டைக்கு எல்லாம் போகல..தளபதி படம் தெறி, தெறிக்குமா தெறிகாதா அட அது மட்டும் பார்ப்போம்.
படம், படத்தோட கதை பார்க்கிறதுக்கு முன்னாடி, நிச்சயமா தளபதியை பாராட்டியே தீரனும், அப்படி ஒரு கெத்து ஸ்க்ரீன்ல தெறிக்க விடுறாரு, 40 வயசுல உடம்பை செம்மைய maintain பண்ணுறாரு, மாஸ் பக்காவா அளவா கொடுத்து இருக்காரு, ரொம்ப build up பண்ணாம , தேவையில்லாம பஞ்ச் வசனம் பேசி போர் அடிக்காம, அவரோட ரசிகர்களை மட்டும் மேலும் குழந்தைகளை மட்டும் திருப்தி படுத்தனும் நினைக்காம, ஒரு general audience கூட பிடிக்கிறா மாதிரி படம் கொடுத்து இருக்காரு, அவர் இது மாதிரி இனி வரும் படங்களையும் செய்தால் நிச்சயமா அவருக்கு தோல்வி படம் அமையாது, நிறைய இடங்களில் ரொம்ப ஆசால்ட்டா, casual expression பண்ணி ஸ்கோர் பண்ணிட்டு போறாரு, அந்த பாலத்து மேல மொட்டை ராஜேந்திரன் கிட்ட பேசும் போதும் சரி, இண்டர்வல் பிளாக்ல் சரி, கிளைமாக்ஸ்ல சிரிக்கும் போதும் சரி, குழந்தை கிட்ட பேபி பேபின்னு பேசும் போதும் சரி செம்ம,அதுவும் ஒத்த சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் போல அதே போல ஒரு expression பண்ணிட்டு ஆட்டம் போடுவது செம்ம, முருகதாஸ் போல நிச்சயமா அட்லி அவரை அழக handle பண்ணி இருக்காரு தான் சொல்லணும், இன்னும் நிறைய மாஸ் சீன்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு அதை படத்தில் பாருங்க.
ஹீரோயின் சமந்தா & எமி , எமி பெருசா ரொம்ப பயன்படுத்தவில்லை, சமந்தா ஒரு மசாலா படத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ சரியான அளவுக்கு கதைக்கு தேவையான அளவுக்கு பயன்படுத்தி இருக்காரு,கொஞ்ச நாள் முன்னாடி வரை சரண்யா தான் அம்மாவா வந்து காமெடி எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ அதே போல ராதிகா பண்ணி இருக்காங்க தளபதியும், ராதிகாவும் combination நல்லா இருக்கு, மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல ஸ்க்ரீன்ல வந்தவுடன் செம்ம கை தட்டு மற்றும் செம்ம வரவேற்ப்பு , அதுவும் அவர் iam waiting சொல்லும் போது தியேட்டர் விசில் கிழிது.
அப்புறம் முக்கியமான கேரக்டர் அந்த குழந்தை நைனிக்கா, அந்த கேரளாவுல நடக்கிற சீன்ஸ் எல்லாம் நல்லா அழகா பண்ணி இருக்கு, தாத்தா சாரி கேளுங்க அப்படின்னு சொல்லும் போது சூப்பர்.
இசை ஜி.வி பாடல்கள் ரொம்ப சுமார்,ஜித்து ஜில்லாடி பாட்டை தவிர அதுவும் மொதலில் கேட்க்கும் போது ரொம்ப சுமார் தான், ஆனால் படத்தில் விஜய்க்காக பார்க்கும் போது நல்லா இருந்துச்சி.அந்த பாட்டில் அட்லி டைரக்டர் ஷங்கர் மாணவன்னு நிருபிச்சிட்டாரு ஏன்னா அந்த பாட்டில சுத்தி இருக்க பில்டிங்க்கு எல்லாம் பெயிண்ட் அடிச்சிட்டாரு , எல்லாருக்கும் கண்ணாடி மாட்டிடாரு , BGM பக்கா தெறி மாஸ் சீன்ஸ்க்கு சரியா பொருந்தி இருக்கு.
கதை வெறும் பழி வாங்கும் கதை தான்,இந்த படம் teaser வரும் போதே நிறைய பேர் இது சத்ரியன் ரீமேக்ன்னு சொன்னாங்க, கிட்ட திட்ட இது அது போல ஒரு கதை தான், ஏன்னா சதிர்யன் ஒரு trend setting போலீஸ் படம், அதனால சொல்லி இருப்பாங்க,
முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாவுது பாதியில் இல்லை, படம் ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்தில பிளாஷ் back போனது ஒரு மிக பெரிய பிளஸ், ஆனால் அது ரெண்டாவுது பாதியிலும் கொஞ்சம் தொடர்ந்து செண்டிமெண்ட் எல்லாம் வச்சது கொஞ்சம் போர் அடிக்குது, இரண்டாவுது பாதியில் தளபதியும், வில்லனாக வரும் இயக்குனர் மகேந்திரன்னும் மோதும் காட்சி இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தால் படம் இன்னும் தீயா பத்திக்கிட்டு fastah போயிருக்கும், இயக்குனர் மகேந்திரனை அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லைன்னு எனக்கு தோணுது.
குறிப்பு : தளபதி ஒரு software கம்பெனில விசாரிக்கிற சீன வரும் அது எங்க officeல ஷூட் பண்ணாங்க, அதனால இந்த படத்தையோ அல்ல எங்க அலுவகதையோ நான் promote பண்ணல. இது ஒரு சும்மா குறிப்பு + விளம்பரம் தான். இன்னொரு குறிப்பு நான் தல அல்லது தளபதி ரசிகன் அல்ல ஒரு சினிமா ரசிகன் **... இல்லாட்டி நம்மல கல்லாய்ச்சிடுவாங்க எல்லாம் ஒரு safetyக்கு தான்
மொத்ததில் ஒரு சாதாரண ரசிகனுக்கு கொடுக்கும் 120க்கு வசூல் தரும் படம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#Theri
#cinekirukkan
சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் ? பக்காவா மசாலா கலந்த காமெடியா இருக்கும், அதே போல அவர் தயாரிப்பில் வந்த இந்த படமும் அப்படி மசாலா + காமெடி + பேய் தான் . இந்த மசாலா எப்படி செய்வது ? காமெடி காட்சிக்கு கொஞ்சம் யாமிருக்க பயமேன் + கொஞ்சம் டார்லிங் , பயப்பட வைக்கும் காட்சிகளுக்கு காஞ்சுரிங்கள கொஞ்சம், கதை கருவுக்கு யாவரும் நலம் கிளைமக்ஸ்ல் இருந்து கொஞ்சம் , அட ஆமாங்க யாவரும் நலம் படத்துல கடைசி காட்சி பேய் மொபைல்ல கூட வரும்ன்னு சொல்லி முடிச்சி இருப்பாங்க , அதை referenceah வச்சி இந்த படத்தை ஆரம்பிச்சி இருப்பாங்க போல, அப்புறம் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் காஞ்சானா எல்லாம் மிஞ்சியாச்சு.
அட படத்தில எந்த லாஜிக் எதுவும் பார்க்க கூடாது ,அதே போல கதையும் என்னன்னு கேட்க கூடாது , அடிச்சு கேப்பாங்க அப்போவும் கேட்க கூடாது , அட பேயே வந்து அடிச்சாலும் கதை என்னன்னு கேட்க கூடாது, ஏன்னா கதை ரொம்ப சப்பை மேட்டர் அதோட பிளாஷ் பேக் சத்தியமா இப்படி யோசிக்க முடியாது , இந்த கதைய அப்படியே ஏ.வி .ம் ஸ்டூடியோ முன்னாடி இருக்கும் ஏ.வி .ம் உருண்டைல செதுக்கி வச்சா பின்னாடி வரும் சந்ததைர்கள் அதை பார்த்து தெரிஞ்சிப்பாங்க. ஏன்னா அந்த கிளைமாக்ஸ் அப்படி இருக்கும்..யெப்பா டேய் எப்படிபா இப்படி கிளைமாக்ஸ் யோசிச்சீங்க ?
சரி கதை விடுங்க , காமெடி எப்படி இருக்கு நிச்சயமா நல்லா சிரிக்கலாம் , அதுவும் வைபவ் ஆரம்பத்தில் பண்ணும் காட்சிகள் சுமார் தான் என்றாலும் , பேய் வந்த பிறகு , வைபவ் , வி டி வி கணேஷ் , சிங்கப்பூர் தீபன் பண்ணும் காமெடி தான் நல்லா இருக்கு அதுவும் அந்த வீடுக்குள போவது, ஒரு கற்பனை பேய் வீட்டுக்கு போவது அங்க பண்ணும் அலப்பரை தான் காமெடி, மற்றப்படி சாவு குத்து போட்டி எல்லாம் வைப்பது இரண்டாவுது பாதியில் நடிகர் சிங்கம்புலி வருவது எல்லாம் மொக்கை தான் ,யோகி பாபு (பண்ணி மூஞ்சி வாயன் ) கொஞ்சம் சீன் வந்தாலும் செம்ம காமெடி , அதுவும் அவர் இந்தி பாட்டு பாடுவது ,கத்தி படம் போல பிளான் பண்ணுவது அல்டிமேட் காமெடி ,கருணாகரன் அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை
ஹீரோயின் ஐஸ்வர்யா கதைக்கு அளவான கேரக்டர் , ஓவியா வீட்டுல மைதா மாவு, கடலை மாவுன்னு முகத்தில facial போட்டுக்கிட்டு இருக்கும் போது டைரக்டர் பார்த்து இருப்பாரு போல அட வாமா என் படத்துக்கு நீ தான் பேய்ன்னு சொல்லிட்டு அப்படியே கூட்டிகிட்டு வந்து இருப்பாரு போல, ஏன்னா ஓவியாவுக்கு போட்டு இருக்கும் பேய் மேக்கப் அப்படி தான் இருக்கு .
மொத்தத்தில் காரணம் இல்லாமல் லாஜிக் பார்க்காமல் கொஞ்சம் சிரிச்சிட்டு வரலாம்
இப்படிக்கு சினி கிறுக்கன்
#cinekirukkan #hello #naan #pei #pesuren
Amazon.in
இரண்டு வாரமா பேய் வராம் , அதுவும் இந்த வாரம் இரண்டு பேய் படம் வந்து இருக்கு, எப்போ தான் இந்த பேய் trend நம்ம தமிழ் சினிமாவுல முடியுமோ ?
ஜி . வி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்துக்கும் இந்த டார்லிங்-2 க்கும் சம்பந்தம் இல்ல, அப்போ என்ன தான் இந்த படத்துல இருக்கு?
அட போங்கப்பா எல்லா பேய் படத்துல இருக்கறது தான் இதுலயும் இருக்கு , நிச்சயமா ஒரு பிளாஷ் back அதுக்கு பழிவாங்குற கதை தான், அது ஒரு ஸ்ட்ராங்கான கதையாவும் , சுவாரசியமான திரைக்கதையும் இருந்தா நிச்சயமா அது நல்லா இருக்கும் , ஆனா அது இரண்டும் இதுல மிஸ்ஸிங் , ரொம்ப எதிர்பார்த்த மாதிரி தான் திரைகதை அமைப்பு இருக்கு எதை நோக்கி எப்படி அடுத்த காட்சி வரும்ன்னு தெரியற மாதிரி தான் இருக்கு, குறிப்பா இண்டர்வல் காட்சி , அந்த அனிஷா கேரக்டர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்தா மாதிரி தான் இருக்கு , மேலும் இப்போ வர பேய் படம் காமெடியும் இருக்கணும் நினைக்கிறாங்க அதுவும் இதுல இருக்கு, ஆனா காமெடி படத்துல அங்க அங்க வந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்குன்னு சொல்லலாம் , குறிப்பா காளிவெங்கட் , சிப்ஸ் கேட்டு சாப்பிடும் ஹரி , முனிஷ்காந்த் நல்லா பண்ணி இருக்காங்க
படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் கேமரா தான் செம்ம fresh feeling அதுவும் அந்த வால்பாறை சீன்ஸ் , இரவு காட்சி எடுக்க பட்ட outdoor scenes அந்த வீட்டுக்குள்ள காட்டும் காட்சி, நாமே அங்க இருக்க மாதிரி ஒரு உணர்வு கொடுத்து இருக்காரு, அப்புறம் நம்ம வடிவேலு சொல்லுறா மாதிரி பேய் வந்தா டமால் டம்மால் பாத்திரம் விழுதாம் ,லைட் ஆப் ஆகுதாம் , இப்படிபட்ட காட்சிகள் கேமராமேன் நல்லா பண்ணி இருக்காரு
ராதன் இசையில பாடல்களில் ரொம்ப சுமார் தான், ஆனால் அந்த டூயட் சாங் மெலடி நல்லா இருக்கு, அது என்னவோ ஹீரோயின் முஸ்லிம் என்பதால் ஹார்மனி மெல்லிசா ஓட வச்சி ஒரு பாட்டு போட்டு இருக்காரு அது என்னவோ எனக்கு பம்பாய் படத்துல வரும் கண்ணாலனே பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு, ஒரு வேலை அந்த மாதிரி பாட்டு வேண்டும்ன்னு டைரக்டர் சொல்லி இருப்பாரு போல
படம் இன்னும் பக்கா சீரியஸ் த்ரில்ராக இருந்து இருக்கலாம் இல்லைன்னா full காமெடி பேய் படமாக இருந்து இருக்கலாம்
மொத்தத்தில் டார்லிங்-2 ஓகே ரகம் டார்லிங் தான்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#cinekirukkan #darling2
மிதக்கும் மரம் , தலைகீழ் நடக்கும் ஹீரோயின் , வெள்ளை கருவிழி கொண்ட பெண்கள் . அட இது எப்போதும் போல வரும் நம்ம பேய் படம் trend தான் நினைச்சேன் , ஆனா இந்த படம் ஒரு புது மாதிரி கதைகளம் கொண்டு எடுத்து இருக்காங்க , ஜீரோவின் அர்த்தம் என்ன ? படம் பார்த்து முடிக்கும் போது அது தெரியும் .
முதல் பாதி வரை, இது எந்த மாதிரி படம்? பேய் படமா ? சைக்கலாஜிக் thriller ah ?இல்ல split personality concept ah ? அப்படின்னு ஒரு யோசனை நம்மக்கு interval வரைக்கும் அது இருக்கு , அந்த interval பிளாக்ல பல அஷ்வின் கேரக்டர் வந்து ஹீரோயின் குழம்பும்போது, நமக்கும் எது நிஜம் எது பொய்ன்னு தெரியாம டைரக்டர் நம்மை குழம்பவச்சி இருக்காரு, இப்படி படத்தோட ஒன்ற வச்ச டைரக்டர்க்கு ஒரு பெரிய வாழ்த்துகள்
இரண்டாவுது பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்துல ஹீரோயின்க்கு என்ன பிரச்சன்னைன்னு சொல்லிட்டு, அதோட காரணத்தை பிற்பாதியில் இது வரை யாரும் முயற்சிக்கதவண்ணம் கொடுத்து இருப்பது அருமை , உண்மையில் இது ஒரு புது விதமான கதை கரு யோசிச்சி இருக்காரு
படத்தோட பிளஸ் நிவாஸின் இசை , ஹீரோயினை சரியான இடத்துல மிரளவைப்பது அதே போல நம்மையும் இசையின் மூலமாகவும் , எடிட்டிங் மூலமாகவும் மிரளவைப்பது சூப்பர் , மேலும் கதையோட knot சரியான இடத்துல திறந்தது தான், மேலும் ஹீரோயின் ஷிவதா நடிப்பு மாபெரும் பிளஸ் , ஹீரோ அஷ்வின் என்றாலும் அவர் ஷிவதாவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு தான் சொல்லணும் , சக்ரவர்த்தி கேரக்டர் அவருக்கு சரியா இருக்கு ஆனா கிளைமாக்ஸ்ல் வரும் காட்சிகள் எப்படி முடிப்பதுன்னு தெரியாம எப்படியோ முடிச்சிட்டாறு ஏன்னா எடுத்த கதைகளம் ரொம்ப பெரிய விஷயம் , மேலும் கடைசியா வரும் சில சீரியஸ் காட்சிகள் நம்ம மக்கள் புரிஞ்சிக்காம சிரிக்கிறாங்க ஆனா அதுவே இங்கிலீஷ் படத்தில வந்தால் ரசிப்பாங்க .
புது டைரக்டர் புது முயற்ச்சி நிச்சயமா போயிட்டு பார்த்துட்டு வரலாம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
சினி கிறுக்கனின் வணக்கம் , இன்னிக்கு வெள்ளி கிழமை ..நம்ம வெள்ளிகிழமைனாலே எதாவது ஒரு படத்துக்கு சவாரி போய்டுவோம் , இது எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை , ஆனா இந்த வாரம் சாவரின்னு ஒரு படம் வந்து இருக்கு அதுக்கு நான் போகாமலா இருப்பேன் ? yes உண்மை தான் இந்த படத்துக்கு போயிட்டு வந்தாச்சு
இந்த படத்தை பார்கிறதுக்கு தூண்டின சில காரணங்கள், முதல் காரணம் இந்த படத்தோட இயக்குனர் குகன் சென்னியப்பன் நாளைய இயக்குனர்ல runner upah வந்தவரு, அதனால பார்கிறா மாதிரி ஒரு படம் தருவாருன்னு நம்பிக்கை இருந்துச்சி , ரெண்டாவுது காரணம் படத்தோட trailer கொஞ்சம் நம்பிக்கை தந்துச்சு , ஆனா நிறைய படங்கள் trailer பார்த்துட்டு போயிட்டு மொக்க வாங்கிட்டு வந்து இருக்கோம், ஆனா இந்த படம் அப்படி மொக்க வாங்கல, வாங்க இந்த சவாரி பற்றி சினி கிருக்கனோட ஒரு சவாரி போவோம்.
படத்தோட கதை என்னபா ?மர்மமான முறையில் கொலை செய்பவனை கண்டுபிடிப்பது தான் கதை , ஆனா அது யாரு? அது ஏன் நடக்குதுன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க .
படம் ஆரம்பிக்கும் போது அட செம்ம openingah இருக்கு, முதல் பாதியில் அந்த கொலைகாரன் யார்ன்னு காட்டுவது வரைக்கும் அந்த interest ரொம்ப நல்லா இருக்கு, ஆனா இரண்டாவுது பாதியில் கொஞ்சம் தட்டு தடுமாறி போயிட்டு ஒரு வழியா டைரக்டர் சாவரியை கரை சேர்த்துட்டாறு
படத்தோட பிளஸ் பாயிண்ட் என்ன ?
படத்துக்கு இவர் தான் ஹீரோன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது, என்னை பொருத்தவரைக்கும் screenplay தான் ஹீரோ, நல்ல சுவாரசியமா கொடுத்து இருக்காங்க
தேவையில்லாம பாட்டு வச்சி போர் அடிக்கல, படம் கதையோட போகுது எங்கேயும் படத்தை விட்டு வெளிய போகல , குத்து பாட்டு , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு அப்படி போடாமல் சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்காங்க, முக்கியமான அந்த டிரைவராக வரும் நடிகர் கார்த்தி பயந்து நடிக்கும் போதும் நல்லா இருந்துச்சி, , போலீஸ்காரராக வரும் நடிகர் பெனிட்டோ டென்ஷன் ஆகும் போதும் அந்த கொலைகாரனை எப்படியாவது பிடிக்கனும்ன்னு நினைக்கிற எண்ணம் நம்மளையும் அப்படி தோன்ற வச்சி இருக்காரு , இவங்க ரெண்டு பேரை விட ஒரு முக்கியமான ஒரு கேரக்டர் ரெண்டாவுது பாதியில் வரும் ஒரு எம்.ல் ஏ கேரக்டர் ல வரும் நடிகர் அருண் என்பவர் , படத்தில செம்ம கேரக்டர், செம்ம மாஸ் சீன அவருக்கு அதுவும் சட்டை button எல்லாம் கழட்டி விட்டு liftல வருவது, அதுக்கு bgm எல்லாம் சரியாய் இருக்கு, கிளைமாக்ஸ்ல அப்பாவி தனமா முகத்தை வச்சிக்கிட்டு வசனம் பேசுவது எல்லாம் செம்ம கலாய் , யாருயா நீ ? இவ்வளவு நாளா எங்கேயா இருந்த ?அப்படின்னு கேட்க தோணுது, நிச்சயமா இனிமே நிறைய படத்துல வருவாருன்னு தோணுது.
அந்த குறிப்பிட்ட கொலைகாரன் கேரக்டர் யார்ன்னு நான் சொல்ல மாட்டேன் , ஆனா அவர்க்கு கொடுக்கிற மாஸ் சீன் அதுவும் எம்.ல் ஏ ஆட்களை கொலை செய்யும் போது பண்ணுற bgm & மாஸ் சீன் பார்க்கும் போது, ஹேய் உனக்கெல்லாம் build up சீன்aah கேட்காம இருக்க முடியல, அதே நேரத்துல அந்த சீன் ரசிக்காம இருக்க முடியல , நல்ல perfectah கொடுத்து இருக்காரு டைரக்டர் .
படத்துக்கு ஒரு மைனஸ் என்னனா - - இந்த படத்துக்கு promotion , தியேட்டர் & ஷோஸ் எல்லாம் கம்மி ,
மொத்தத்தில் சவாரிக்கு நம்பி சவாரி போகலாம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
என்னடா படத்தோட டைட்டில்க்கும் மேலே போட்டு இருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லேயே தோணுதா ? My Dear Desperado அப்படிங்கிற கொரியன் படத்தோட ரீமேக் தான் இந்த காதலும் கடந்து போகும் ,இப்போ தான் ஒரு தமிழ் படம் காபி அடிக்காம ஒழுங்கா ரீமேக்ன்னு சொல்லி எடுத்து இருக்காங்க.
இந்த படத்தை பார்கிறதுக்கு முன்னாடி இந்த கொரியன் படத்தை பார்க்கணும் நினைச்சேன் ஆனா பார்க்க முடியல அதனால கொரியன் படத்தோட trailer பார்த்துட்டு தான் போனனேன் , கிட்டதட்ட பல காட்சிகள் அப்படியே எடுத்து இருக்காரு நலன்குமரசாமி
படத்தோட கதை ?? சென்னையில வேலை தேடும் ஹீரோயின், அடி ஆளு ஹீரோ ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க ரெண்டு பேருக்கும் காதல் கடந்து போச்சா இல்லையா???அதான் படம்
படத்தோட ப்ளஸ் பாயிண்ட் பார்த்தா அது விஜய் சேதுபதி ஒரு ஒரு சீன்ளையும் கலக்கிட்டாரு அதுவும் அந்த பார்ல பந்தாவா போயிட்டு அடி வாங்கிட்டு பந்தாவா கெத்தா வெளியே வருவது , மடோன அப்பாகிட்ட பேசுவது , interview ல போயிட்டு காலாய்ப்பது.. அடி செம்ம மாஸ் , பிறகு காமெடி படத்தோட இருப்பது சூப்பர், ஆனா மேல சொன்ன சில காட்சிகள் போல வேற எந்த சீனும் படம் முடிச்சிட்டு வெளியே வரும் போது மனசுல நிற்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்
மடோன ரொம்ப அழகா இருக்காங்க , தியேட்டர்ல அவங்க வரும் போது செம்ம வரவேற்ப்பு அது பிரமேம் செய்த வேலை , ஆனா விஜய்சேதுபதியோட chemistry work out ஆகி இருக்கான்னு பார்த்தா அது இல்ல தான் சொல்லணும் ஏன்னா ரெண்டு பேரும் மாற்றி மாற்றி சந்திக்கிறாங்க பேசுறாங்க ஆனா ரெண்டு பேருக்குள்ள காதல் வருதா இல்லையா ? இல்ல அது வெறும் நட்பா ?அப்படிங்கிறது தெளிவா தெரியல , ஒரு வேலை originalல இப்படி தானா ? இல்ல இதைவிட நல்ல இருக்கும்மா தெரியல .
சந்தோஷ நாராயணன் வழக்கம் போல நல்ல பண்ணி இருக்காரு க க க க போ பாட்டு நல்லா இருக்கு ஆனா சில படங்களில் வரும் அவரோட பாடல்கள் அவரோட முந்தைய படத்தின் பாடல்கள் ஞாபகம் வருது, ஒரே மாதிரியான இசை கொடுக்கிறாரோ தோணுது, இந்த படத்திலும் இது போல தான் இருக்கு .
மொத்ததில்: காதலும் கடந்து போகும் சாதாரண ரசிகனின் மனதில் averageah கடந்து போகும்
இப்படிக்கு
சினிகிறுக்கன்
சினி கிறுக்கன் : Hey guys lets see about The Revenant ..leonardo Dicapiro acted in this movie.. story about the...
Audience : டேய் டேய் சினி கிறுக்கா நில்லுடா இப்போ எதுக்கு இங்கிலிஷ்ல பீட்டர் விடுற?
சினி கிறுக்கன்: i don't knw why...after watching this movie english automatically coming
Audience: டேய் இப்போ எதுக்கு சந்தானம் வசனம் எல்லாம் பேசுற ?..
சினி கிறுக்கன்: bcz it is hollywood movie..
Audience:டேய் நீ kollywood movie பற்றி எழுதுவதே தப்பு , சரி பரவாயில்லைன்னு விட்டுவெச்சா, நீ இப்போ hollywood படத்தை பற்றி எழுத ட்ரை பண்ணுற , அதுவும் இது ஆஸ்கார் nominationல இருக்கிற ஒரு படத்தை பற்றி ..நீ என்ன அவ்வளவ்வு பெரிய அப்பாட்டக்கரா ?
சினி கிறுக்கன்: அப்படி இல்லைங்க ...இது ஆஸ்கார் nomination படம் அதுவும் நம்ம titanic ஹீரோ நடிச்சது, இப்படி இந்த மாதிரி படம் பார்த்து எழுதுனா தானே ஊருக்குள்ள நம்மக்கு ஒரு கெத்து
Audience : நீ ஒரு வெத்து எதுக்கு உனக்கு கெத்து
சினி கிறுக்கன்: நம்மளால ஒரு நல்ல படத்தை பார்த்தாங்கன்னா நமக்கு சந்தோசம் தான்
Audience: ஓ அவ்வளவு அதுப்பு இருக்கா உனக்கு ? நீ சொல்லலைன்னா யாரும் போயிட்டு பார்க்கமாடாங்களா ? சரி சொல்ல வந்தததை சொல்லு
சினி கிறுக்கன்: இது உண்மை சம்பவத்தை வச்சி எடுத்த படம் , எதிரிகிட்ட இருந்து தன் நாட்டு படையை காப்பாற்றி தன்னோட இடத்துக்கு செல்ல வழி தெரியும் ஒரு guide தான் நம்ம ஹீரோங்க , போகிற வழில ஒரு கரடி கடிச்சி உயிர்க்கு போராடுறாரு , தன்னோட சகநாட்டு வீரர் சூழச்சியால வழில விட்டுட்டு போனதனால , காட்டுல தனி ஒருவனா உயிர்க்கு போராடி இருக்காரு நம்ம ஹீரோ , அவர் காட்டில இருந்து திரும்பி வந்தாரா இல்லையா ? இது தான் கதை
Audience: இந்த மாதிரி கதை நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே
சினி கிறுக்கன்: கதை ஒன்னும் புதுசு இல்லைதான், ஆனா படம் எடுத்த விதம் ,உயிரை கொடுத்து நடிச்ச Dicapiro தான் செம்ம, மனுஷன் தனக்கு எப்படியாவுது இந்த ஆஸ்கார் வாங்கியே தீரணும் நடிச்சி இருப்பாரு போல , அநேகமா நீங்க இதை படிக்க போது விருது வாங்கி இருந்தாலும் இருக்கலாம் ஏன்னா இன்னைக்கு தான் ஆஸ்கார் விருது வழங்கும் நாள் , அப்படி வாங்கிட்டருன்னா அவருக்கு நம் வாழ்த்துகள் , அப்படி வாங்கவில்லைன்னா அவர் நடிப்புக்கு நம் பாராட்டுகள்,
குறிப்பா அந்த கரடி கடிச்ச பிறகு , அந்தகாலத்து மருத்துவர்கள் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் அப்படியே அந்த புண்ணுகளை கையால் தைப்பது , அப்பறம் அவர் தண்ணி குடிக்கும் போது கழுத்தில் இருந்து ரத்தம் வருவது , அதை அவர் தனி ஆளாகவே சரி செய்வது , பச்சை புல்லையும் , பச்சை மாமிசத்தையும் சாப்பிடுவது எல்லாம் நாமே அங்க இருந்து கஷட்டபடுவது போல உணர்வு வருது ..
Audience: யெப்பா நீ சொல்லும் போதே ரொம்ப பயங்கரமா இருக்கே , மனுஷன் செம்மையா நடிச்சி இருப்பாரு போல
சினி கிறுக்கன்: அட ஆமாங்க Dicapiroகாகவே இந்த படத்தை பாருங்க
Audience:சரி அப்போ எவன்கிட்டயாவுது shareit வங்கி officeக்கு பஸ்ல போகும் போது பார்த்திட வேண்டியது தான் .
சினி கிறுக்கன்: அடப்பாவி இந்த மாதிரி நல்ல படத்தை, நல்ல effectoda , நல்ல தியேட்டர்ல போயிட்டு பாருங்கயா
இப்படி தான் danish girlன்னு ஒரு படம் வந்தது நம்ம ஊருக்கு, அது முதல் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய படம், ஆனா அந்த படம் நம்ம ஊரு ஒரு சில தியேட்டர்ல ஒரு ஷோ தான் போட்டாங்க அதுவும் ஒரே வாரத்தில தூக்கிட்டாங்க , அந்த படத்தில நடிச்ச eddie redmayne கூட best actor nominationல இருக்காங்க, நான் எழுதும் போது தெரியல யார் win பண்ணுறாங்கன்னு அனேகமா நீங்க இதை படிக்கும் போது தெரிஞ்சிடும் ..பார்ப்போம் யார்ன்னு .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
கணிதன் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து இருக்குறாரு இயக்குனர்,போலி certificate , போலி லோன் அப்படின்னு கொஞ்சம் different ah try பண்ணி இருக்குகாரு அப்போ மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம்.
படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னு சொல்லுறேன் இருங்க , அதுக்கு முன்னாடி படத்தோட திரைகதை ஓட்டம் எப்படி இருக்குன்னு பார்ப்போம், படத்தோட திரைகதை graph ரொம்ப flatah தான் ஆரம்பிக்குது , வழக்கமான கொஞ்சம் மொக்கை காமெடி,குடும்பம் intro , தேவையில்லாத முதல் 30 நிமிஷத்தில ரெண்டு பாடல் அதுவும் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றாத பாடல் , பிறகு படத்தோட திரைகதை graph மெல்ல மெல்ல மேல ஏறி இண்டர்வல் பிளாக்ல நல்லா போயிட்டு நிக்குது,ஐயோ எங்க இரண்டாவுது பாதியில் அப்படியே நேர் எதிரா மொக்கையா கொடுப்பாங்களோ தொன்னுச்சி ஆனா இரண்டாவது பாதியில் அதே வேகத்தோட நல்லா போகுது ,படம் இன்னும் கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிடும் நினைச்சா , அப்பறம் பழிவாங்கும் கொலை ,தேவையில்லாத பாடல் அப்படின்னு கடைசி 30 நிமிடம் அப்படியே படத்தோட வேகத்தை கீழே தள்ளிட்டாரு
நான் அப்போவே சொன்னேன்ல படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னா ? காட்சி அமைப்புகள்ல கொஞ்சம் ரமணா , கொஞ்சம் துப்பாக்கி , கொஞ்சம் கத்தி தெரியுது ,ஒருவேளை முருகதாஸ்க்கு அந்த படங்கள இவர் தான் சீன ஐடியா கொடுத்து இருப்பாரோ ? ஏன்னா இந்த படம் ஆரம்பிக்கபட்டது 2013, கத்தி 2014ல தான் ரிலீஸ் ஆச்சு,துப்பாக்கி படத்தில எப்படி விஜய் தன்னோட தங்கச்சியை அனுப்பி வில்லனை பிடிக்க ட்ரை பண்ணுவாரோ அதே மாதிரி காட்சி அமைப்பு இந்த படத்தில இருக்கு, குறிப்பா இந்த படத்திலும் ஒரு நாய் காட்சி இருக்கு , அது மாதிரி இன்னும் சில. அது எது எது காட்சிகள்ன்னு சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க,
அதர்வா ஒரு guaranteed ஹீரோவா மாறிட்டு வரார் போல இருக்கு , இவர் படம்ன்னா ஓரளவுக்கு நம்பி போகலாம்ங்கிற அளவுக்கு வளர்ந்து வறாரு,கொஞ்சம் வித்தியாசமான கதை , நல்ல நடிப்புன்னு பக்காவா இருக்காரு, body , look & feel எல்லாம் நல்லா இருக்கு, அங்க அங்க மாஸும் try பண்ணிருக்காரு ,
எல்லா commercial படங்களில் ஹீரோயின்க்கு என்ன வேலை ? சும்மா ஊறுகாய் தான் , அதே தான் இந்த படத்தலையும் .
இசை நம்ம drumsசிவமணி , பாடல் ரொம்ப சும்மார் , எல்லாம் வெறும் டப்பாங் கூத்து பாடலா இருக்கு , bgm நல்லா இருக்கு ஆனா சில இடங்கள் எங்கயோ கேட்டா மாதிரி ஒரு உணர்வு
மொத்தத்தில் : கூட்டி கழிச்சி பார்த்தா கணிதன் கணக்கு ஓரளவுக்கு ஓகே தான்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
சேதுபதி இந்த படத்தை பற்றி எழதுவது கொஞ்சம் லேட் தான் ..இருந்தாலும் பரவாயில்லை ..எழதுவது எழதுவோம்ல ...
அட நம்ம தமிழ் சினிமாவில பல போலீஸ் படங்கள் பார்த்து இருக்கோம் ..இது என்ன புதுசா பண்ணிட போறாங்க அப்படின்னு நினைச்சு தான் போயிட்டு பார்த்தேன்,அதுவும் நம்ம விஜய்சேதுபதிக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை ? அப்படின்னு கூட நினைச்சேன், ஆனா அது எல்லாம் பொய் ஆக்கிடுச்சு இந்த படம்,
விஜய் சேதுபதிக்கு இது முதல் மாஸ் படம், பக்காவா செட் ஆகி இருக்கு,, மாஸ்ன்னு பேருல சும்மான்ன பஞ்ச் வசனம் , ஹேய் ஓய் ன்னு கத்தாம்மா அதே நேரத்துல மாஸ் அளவா கொடுத்து இருக்காரு, குறிப்பா canteen ல inspector விசாரிப்பது, வில்லனை arrest பண்ணறது , தன்னோட பையனை வச்சி அடி ஆட்களை மிரட்டுவது செம்ம , நடிப்பிலும் ultimate & கெத்து காட்டிருக்காரு , படம் fullah விஜய் சேதுபதி தாங்கி புடிச்சி இருக்காரு ,
கதைன்னு பார்த்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு இல்ல , வழக்கமான போலீஸ் கதை, வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டம் தான், ஆனா அதை எந்த அளவுக்கு சுவாரசியமா கொடுக்குறாங்க தான் விஷயம் , அதை இந்த படம் பூர்த்தி பண்ணி இருக்கு , போர் அடிக்காத screenplay, சீரியஸ் ஆனா காட்சியிலும் நல்ல காமெடி கலந்து இருக்காங்க, அது மாதிரி படத்தில் நிறைய காட்சிகள் இருக்கு , குறிப்பா விஜய்சேதுபதி வில்லன் அடி ஆளு பார்த்து டேய் கோவமா பார்க்காதடா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு அவர் சொல்லும் போது அதை பார்க்கும் போது நமக்கும் சிரிப்பு வருது,அதே மாதிரி சேசிங் சீன்ல , மற்ற போலீஸ்காரர்களை அவர் காலாய்க்கும் போதும் சரி படத்துக்கு தேவையான காமெடிகளை படத்தோட ஒன்றி போவது ரசிக்கிறா மாதிரி இருக்கு.
ரம்யா நம்பீசன் அழகா ரெண்டு பசங்களுக்கு அம்மாவா,சேதுபதிக்கு மனைவியா skypeல லவ் பண்ணறதும் அளவா அருமையா இருக்கு,அந்த ரெண்டு பசங்களும் நல்லா cuteah செலக்ட் பண்ணிருக்காரு ..
விசாரணை கமிஷன்ல ஒருத்தர் குள்ளமா வருபவர் யார்ன்னு தெரியல,ஹேய் யாருப்பா அந்த ஆளு ? அப்படின்னு கேட்கிறா மாதிரி இருக்காரு அவர், அவர் பேசுவது body language எல்லாம் வித்தியாசமா இருக்கு.
எல்லா வகை ரசிகர்களுக்கும் ரெண்டு மணி திருப்தி படுத்துறா மாதிரி ஒரு படம் தந்துஇருகாரு விஜய் சேதுபதி
மொத்தத்தில் : மாஸ் + காமெடி + entertainer = சேதுபதி
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இன்னைக்கு எப்பொழுதும் போல படத்தை பற்றி எழுதாம ..ஒரு கற்பனை பேட்டி எடுக்கலாமே தோனுச்சு ... freeயா இருந்தா வாங்களேன் பேய் மாதிரி வந்த மிருதன் கிட்ட எடுத்த இந்த பேட்டியை படிங்களேன் ...
சினி கிறுக்கன் : உங்க பேரு ?
மிருதன் : நான் தான் மிருதன்
சினி கிறுக்கன்: அப்படினா !. !. ??
மிருதன்: மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்
சினி கிறுக்கன்: அட நீ நம்ம ஆளவந்தான்..
மிருதன்: யோவ் அவர் கடவுள் பாதி ..மிருகம் பாதி கலந்து செய்த கலவை ...நான் மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை
சினி கிறுக்கன் : டேய் எந்த ஊருடா நீங்க ?எங்க இருந்து டா வந்திங்க ? தடார் தடார்ன்னு வரிங்க , படார் படார்ன்னு கடிக்கிரிங்க
மிருதன் : எங்க native place ஹாலிவுட் ,, கொஞ்சம் வேற நாட்டுல எல்லாம் இருந்தோம் .. ஆனா இப்போ தான் இந்தியாவுக்கு வந்து இருக்கோம் ..இப்போ election வேற அதான் தமிழ் நாட்டுக்கு வந்துட்டோம்
சினி கிறுக்கன் : ஏன்டா உங்கள control பண்ண ஆளு இல்லையா ?
மிருதன் : ஏன் இல்ல ஹீரோ ஜெயம் ரவி இருக்காரு, .. போன வருஷம் தனி ஒருவன் ஆகா இருந்து பூலோகத்தை காப்பாற்றியதுக்கு அப்புறம், எங்களை எல்லாம் சாவடிச்சி லக்ஷ்மி மேனன் கிட்டேயும் , உங்ககிட்டேயும் நல்ல பேரு வாங்க try பண்ணி இருக்காரு
சினி கிறுக்கன் : எப்பா டேய் ஆமா டா...ஒரே ஆளு gun வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி சுட்டுகிட்டே போறாரு ..ஊட்டில இருந்து கோயம்புத்தூர் வந்த அப்புறம் ஊருக்குள்ள வேற போலீசே இல்லையா ?.. தனி ஒருவன் படம் நடிச்சாலும் நடிச்சாரு அவர் மட்டுமே தனி ஒரு ஆளா சண்டை போடுறாரு
இதுல எனக்கு ஒரு doubt ....
மிருதன் : என்ன ??
சினி கிறுக்கன்: ஹீரோவை கடிச்சீங்க , சுத்தி இருக்கிருவங்க அப்படி, இப்படின்னு எல்லோரையும் கடிக்கிரிங்க , ஆனா கிளைமாக்ஸ்ல ஹீரோ யினை ஹீரோ காப்பாற்ற வரும் போது கூட ஹீரோயினைமட்டும் கடிக்க try பண்ணல ??அப்புறம் அந்த hospitalக்கும் மால்லுக்கும் நடுவே .. நீங்க ஏன் சும்மா கையை மேலே தூக்கிகிட்டு டான்ஸ் ஆடுறா மாதிரியே பண்ணிங்க ?
மிருதன் : யோவ் அதை டைரக்டர் கிட்ட கேளுயா ..நாங்க எல்லாம் stunt artist & junor artist தான்ங்க .. அவர் சொல்லுறது தான் நாங்க கேட்க முடியும்
சினி கிறுக்கன்: இன்னொரு doubt
மிருதன் : என்ன doubt ?
சினி கிறுக்கன்:உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க
மிருதன் : சரி அதுக்கு என்ன ?
சினி கிறுக்கன்: அது இல்ல ...உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க அதனால fire engine வண்டி கொண்டு வந்து ..pipe மூலமா தண்ணி அடிச்சி ஒருத்தர் ஒருத்தரா hospitalகுள்ளசேர்த்து அப்புறம் தண்ணி காலி ஆகி ஹீரோயினை கஷ்ட்டப்பட்டு காப்பாத்தினதுக்கு பதிலா .. அந்த வண்டில ஒரே stretchல எல்லாரையும் உட்க்கார வச்சி அந்த தண்ணிய அடிச்சி காப்பற்றி இருக்கலாமே .. அதுவும் இல்லன ஹீரோ போலீஸ் தானே போலீஸ்ல வஜ்ரான்னு ஒரு வண்டி இருக்கு .. அதை வரவச்சி தண்ணி அடிச்சி இருக்கலாமே .... அதுவும் இல்லன மால் பில்டிங் உள்ள water sprayer இருக்கே அதை உடைச்சி இருக்கலாமே .
மிருதன் : யோவ். அப்படி எல்லாம் பண்ணிட்டா ஹீரோவுக்கு வேளை இல்லாம போய்டும். படம் சீக்கிரம் முடிஞ்சிடும் .. ஏற்கனவே படம் வெறும் 108 நிமஷம் தான் ...போயா நீ ரொம்ப கேள்வி கேட்கிற
சினி கிறுக்கன்: இன்னொரு கேள்வி கேக்கணும்
மிருதன் : என்ன ???? ...150 ரூபா கொடுத்து படம் பார்த்துட்டு 150 கேள்வி கேட்பியா .. நீ ??.. ரொம்ப கேள்வி கேட்ட உன்னையும் கடிச்சிடுவேன்
சினி கிறுக்கன்: sorry பாஸ் ...தல கூட கார்ல தான் 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணுவாரு ஆனா ஜெயம் ரவி tempo traveller ல எப்படியா 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணாரு ?
மிருதன்: படிக்கிற audience எல்லாரும் நல்லா கை தட்டி விசில் அடிங்கபா .. ஏன்னா இப்போ வர படத்தில பல director நம்ம தல அஜித் ஸ்க்ரீன் ல காண்பிச்சா கை தட்டி ரசிப்பாங்கன்னு, அந்த மாதிரி சீன் வைக்கிறாங்க ..அதே மாதிரி இந்த சினி கிறுக்கனும் try பண்ணுறான் அஜித் பெயரை சொல்லி .. ... யோவ் படத்தில இருக்கும் நல்ல points சொல்லுயா
சினி கிறுக்கன்: சரி சொல்லுறேன் ..ஸ்ரீமான் , ஜெயம் ரவி friend வரும் காளி , மற்றும் லக்ஷ்மி மேனன் அப்பா .இவங்க எல்லாம் பண்ணிருக்கும் காமெடி நல்லா இருக்கு.படம் fastah போகுது ..
மிருதன்: யோவ் படம் நல்லா இருக்கா ? நல்லா இல்லையா அதை சொல்லு
சினி கிறுக்கன்: தமிழ் நாட்டுல புதுசா எதாவுது வந்தா நிச்சயமா ஆதரிப்பாங்க ..அதனால உன்னையும் ஆதரிப்பாங்க .. நீ எப்படி இருக்க வந்து பார்ப்பாங்க .
சினி கிறுக்கன் & மிருதன் : நன்றி வணக்கம்
உங்களுக்கு இந்த கற்பனை பேட்டி பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும் ..மேலும் கீழே கமெண்ட் பண்ணவும் பிடிக்காவிட்டாலும் சரி ..கீழே கமெண்ட் பண்ணவும் ..
இது freedom 251 மாதிரி இல்லங்க காசா பணமா ?..free தான் நல்லதோ கேட்டதோ கமெண்ட் பண்ணுங்க ..திருத்திக்கிறேன்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
ஜில் ஜங் ஜக் இது ரொம்ப பிரபலமான வடிவேலு வசனம், அட அப்போ அது பொண்ணுங்க லவ் அப்படி இப்படி இருக்கும் நினைச்சா அது இல்ல, ஏன்னா இந்த படத்தில ஹீரோயின் இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க.
படம் ஆரம்பிச்ச உடனே எப்போ சித்தார்த் , RJ,பாலாஜி காட்டும் போது மக்கள் ஆ ஓ ன்னு பெரிய நடிகர்கள் படம் மாதிரி கத்துனாங்க, பார்க்கவே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி, ஒரு வேளை சென்னை வெள்ளத்திற்கு எல்லாம் உதவினாங்க, அதனால அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தாங்களோ ?சரி அது எப்படியோ சினிகிறுக்கன் சார்பில் அவர்களுக்கு மனதார வாழ்த்துகள்.
சரி படத்தை பற்றி பார்ப்போம்
படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் என்னன்னா ? நிச்சியமா இந்த படம் மற்ற படங்களில்ருந்து வித்தியாசமா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு எடுத்து இருக்காங்க..கதை நடக்கிற களம் , கதாபாத்திரங்கள், அவர்களோட body language ,இசை படம் fullah Bgm ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கு.ஆனா lightah அங்க அங்க cow boy படம் மாதிரி ஒரு feel வருது , இந்த மாதிரி ஒரு புதிய attempt பண்ண டைரக்டர், அதற்க்கு உதவிய தயாரிப்பாளர் இதற்காக இந்த படத்தை ஜில்லுன்னு சொல்லலாம் .
அப்போ ஜங்ன்னு சொல்லுற விஷயம் என்ன?
,, சித்தார்த் காமெடி ,கூடவே நடிச்ச ரெண்டு பேரோட expression , ராதாரவியோட வித்தியாசமான நடிப்பு, இயக்குனர் படத்தை கொஞ்சமாவது ஜில்லுன்னு பண்ணனும்ன்னு முடிவு பண்ணி, படத்தில ரெட்டை அர்த்த வசனங்கள், பல நேரடி வசனங்கள், அதிலும் ஒரு பெட்ரோல் வச்சி இருக்கும் இடத்தை வெடிக்க வச்சி, ஒரு தன் கிட்ட போதை பொருள் எடுக்கற வரைக்கும் பண்ணற காட்சிகள் மட்டும் தான் நல்ல சிரிப்பு வருது அதுவும் அந்த இடத்தில நிறைய adults only நகைச்சுவை, தான் மற்றபடி படத்தில் ரொம்ப ரசிக்கிறா மாதிரி நகைச்சுவை இல்ல, அதனால படம் கொஞ்சம் ஜங்ன்னு தான் இருக்குது
படத்தில் நிறைய இடங்களில சொல்லுற terminology கொஞ்சம் மனசல பதியல,கிளை கதைகள்ன்னு நிறைய வச்சி இருக்காங்க, ஆனா மொத்த படத்தில கதைன்னு பார்த்தா ஒரு strong கதை இல்லை, படம் பார்த்தா நடக்கிற இடம், பேசுற விதம் எல்லாம் பழய காலத்து கதை போல ஒரு உணர்வு ஆனா படம் ஏன் 2020 நடப்பது மாதிரி எடுத்தாங்க தெரியல,இது எல்லாம் இந்த படத்தோட ஜக்ன்னு சொல்லலாம்
மொத்தத்தில் படம் புதுமையா try பண்ணதுக்கு ஜில்லுன்னு சொல்லலாம் , கதை, மற்றும் ரொம்ப வள வள சொன்னதுக்கு ஜக்குன்னு சொல்லலாம்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை பற்றி நான் பேசுற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைங்க ,இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததிற்கு , இயக்குனர் வெற்றிமறானுக்கும் , அதை உருவாக்க தயாரிப்பாளராக துணைபுரிந்த தனுஷ்க்கும், ஒரு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்,ஏன்னா இந்த மாதிரி ஒரு உண்மை கதையை எடுத்து வெளியிட ஒரு தைரியம் வேண்டும்,
ஒரு போலீஸ் விசாரணையில் என்ன எல்லாம் நடக்கும், எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கும், காவல்துறைக்கு உள்ளே எந்த மாதிரி அரசியல், மற்றும் தனி நபர் பதவி முன்னேற்றம், தங்கள் சுயநலத்திற்காக எந்த அளவிற்க்கு எல்லாம் போவாங்க என்று காட்டி இருக்கும் படம் தான் இந்த விசாரணை,ஆனா அது சினிமா தனமா இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் எல்லாம் எப்படி இருக்கும் அங்க எப்படி நடை முறையில் உள்ளதுன்னு உண்மையா கொடுத்து இருக்காரு,என்கௌண்டர்க்கு போகும் போது துப்பாக்கியை கையழுத்து போட்டு வாங்குவது எல்லாம் நல்லா காட்சி படுத்திருக்காங்க ,மற்ற படங்களில் எல்லாம் சும்மா பொம்மை துப்பாக்கி போல தான் ஒரு feel இருக்கும் ஆனா இதுல அப்படி இல்ல,உண்மையா சொல்லணும்ன்னா அந்த துப்பாக்கி வாங்கும் போது அதோட கனத்தை உணர முடிந்தது நமக்கு , அட அந்த அளவுக்கு weight ah இருக்குமான்னு தோனவச்சது அந்த அளவுக்கு காட்சி படுத்தி இருப்பாரு
நிச்சயமா இந்த படம் பார்க்கும் போது நாமே அங்க இருந்து அடி வாங்குற மாதிரி ஒரு உணர்வு, அட்டகத்தி தினேஷ் அந்த அளவுக்கு நடிச்சி பிண்ணி எடுத்துடாரு, அதுவும் அவர் நின்ற இடத்திலிருந்து அடிவாங்கும் காட்சியில் அவர் மூக்கில் இருந்து சளி வர அளவுக்கு காட்டுவது அவரின் நடிப்பின் உச்சம், அவர் அந்த காட்சியில் நடிச்சார இல்ல நிஜமாகவே அடி வாங்கினாரா தெரியல , அவர் குக்கூ படத்திற்கு அவார்ட் நிறைய வாங்குவாருன்னு அவர் எதிர் பார்த்து இருப்பார் ஆனா அவர்க்கு அது கிடைக்கவில்லை,நிச்சயமா அது ஏமாற்றமா இருந்து இருக்கும், ஆனா நிச்சயமா இது அவர்க்கு வங்கி தரனும்
அவர் மட்டுமா ? அவர் கூட நடிச்ச மற்ற மூன்று பேரும் செம்ம, இறுதி காட்சியில் அப்சர் கதாபாத்திரத்தில் வருபவர் கை உதறிகிட்டே பக்கெட் எடுத்து போகுற காட்சி சூப்பர், பார்க்கிற நம்மகே ஐயோ இவங்களுக்கு என்ன ஆக போகுதுன்னு அளவுக்கு பார்பவர்களை படத்தோட ஒன்ற வச்சிட்டாரு இயக்குனர்.
கிஷோர் கொஞ்ச நேரம் வந்தாலும், சமூதிரகனியொட பேசுகிற வசனம், தெனாவட்டு எல்லாம் சூப்பர், சமூதிரகனி நிறைய படத்தில போலீஸ்காரரா வராரு, இதுல பக்காவா செட் ஆகிட்டாரு, அவர் கோவமா இருக்கும் போதும் சரி, கடைசியா தப்பு பண்ணுகிறோமோ உணரும் போதும் சரி கலக்கிட்டாரு
முதல் பாதி சில காட்சிகள் , ஹோட்டல்க்கு அனுப்பி சாப்பிட வைப்பது , மற்றும் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகுதுன்னு நாம்ம யூகிக்கிற அளவுக்கு இருந்தாலும் , கை தட்டி ரசிக்க வைச்சிருக்காரு வெற்றிமாறன், அதுவும் அந்த ஆந்திர போலீஸ் நீதிபதிகிட்ட மொக்க வாங்குற காட்சி, கைதட்டு தியேட்டர் கிழிது,
படம் ஆரம்பிக்கும் போதே அந்த விடியகாலை பொழுது, ஆந்திரா ஸ்டேஷன் உள்ள, கிளைமக்ஸ் இருட்டான பகுதி, அப்படின்னு எல்லாம், ரொம்ப ரியலா feel பண்ண வச்சி இருக்காரு கேமராமேன், கிஷோரை தொங்க விட்டு அடிக்கும் போது ஒரு கொசு வந்து உட்காரும் ஒரு ஷாட் செம்ம , அது நிஜமாகவே ஒரு கொசு வந்ததை எடுத்தாங்களா ? இல்ல எதாவுது சிஜி வேலையான்னு தெரியல, அந்த அளவுக்கு ரொம்ப தத்துருபமா எடுத்து இருக்காங்க
இந்த படம் இன்டர்நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு அதனால நான் ரொம்ப நல்லா இருக்கு சொல்லுறேன் நினைக்காதிங்க, உண்மையில் படம் பார்த்து முடிச்ச பிறகு அதன் தாக்கம் நிறைய இருந்தது அதற்க்கு காரணம் அந்த கதையின் எழுத்தாளர் படம் முடிஞ்ச பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் பேசியதை போட்டு இருக்காங்க , மேலும் அவர் தான்!! ...யார் அவர்?? படம் பார்த்து தெரிஞ்சிகோங்க
மொத்தத்தில் இந்த படம் முடிந்து வந்த பிறகும் நமக்கு நாமே ஒரு விசாரணை செய்யும் அளவிற்கு ஒரு உணர்வு கொண்டு வந்த படம்
படம் trailer பார்த்து ரொம்ப வன்முறையா இருக்குமோன்னு நினைச்சி போய் பார்க்காம இருக்காதிங்க , நிச்சயமா போயிட்டு பார்க்க வேண்டிய படம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்