வெள்ளி, 28 ஜூலை, 2017

Nibunan - நிபுணன்

நிபுணன் அர்ஜுனின் 150வது படம் , டைரக்டர் அருண் வைத்தியநாதனுக்கு தமிழில் இது மூன்றாவது படம் ,இந்த மூன்று படங்களில் ஒரு ஒற்றுமை அது பிரசன்னா தான் .

இது த்ரில்லர் படம் , thrilling ஆகா இருக்கான்னு  கேட்டா ? கொஞ்சம் இருக்கு , ஆனால் எங்கேயோ ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல ஒரு உணர்வு , படத்தின் கதை ஒரு தொடர்  கொலைகாரனை அர்ஜுன் கண்டுபிடிக்கிறார் , யார் அந்த கொலைகாரன் ? எதுக்கு கொலை பண்ணுறான் என்பது கடைசியியல் சொல்லுறாங்க ,  படத்தின் ஒரு ப்ளஸ்  கொலைகாரனாக நடிக்கும் நடிகன் யார் என்ற ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருக்கு , கடைசியில் அவரை காட்டும் போது , அட நீயாப்பா?  என்ற சொல்ல தோணுது , ஆனால் அவர் இறுதியில் சொல்லும் காரணம் கொஞ்சம் ஏற்க முடியவில்லை .சில விஷயங்கள் பேசுவது புரியல , அதை கொஞ்சம் புரியும் போல சொல்லி இருக்கலாம் , அதனால படத்தோட மனசு ஒட்டவில்லை குறிப்பாக ஒரு ஒருத்தரும் கொலை ஆகும் போது , அவரை பற்றி சொல்லுவது கொஞ்சம் புரியல கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கு  , வித்தியாச வித்தியாசமாக மாஸ்க் போட்டு கொலை செய்வது , அந்த கொலையில் இருக்கும் புதிரை கண்டுபிடிக்க வைப்பது நல்லா இருக்கு , அதுபோல இறுதியில் வரும் ஹாஸ்பிடல் சீன் , மற்றும் அதன் பிறகு வரும் சேசிங் நல்லா இருந்தாலும் , படம் எங்கேயோ சம்பந்தம் இல்லாமல் போகும் படி ஒரு feel , சில இடங்கள் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தா நல்லா reach ஆகி இருக்கும் 

படத்தின் முதல் opening சீன் அர்ஜுனுக்கு செம்ம மாஸ் ஆகா பண்ணி இருக்காங்க , ஆனால் பாவம் மனுஷன் .அது அர்ஜுன் என்பதால் தியேட்டர்ல் எடுபடவில்லை, அவர் போட்டு வரும் டிரஸ் நல்லா இருக்கு , அதுவும் tie கொஞ்சம் நோட் பண்ணவைக்குது , வழக்கம் போல அவருக்கு போலீஸ் செட் ஆயிடுச்சி , 

வரலக்ஷ்மி பிரசன்ன படமா full ஆகா வராங்க , ரொம்ப முக்கியமான கேரக்டர், ஆனா படத்தில் நல்லா use பண்ணி இருக்காங்களான்னு பார்த்தா அது இல்ல , சும்மா படம் full ஆகா வாரங்க , வரலக்ஷ்மி படத்தின் முதல் காட்சியில் வரும் போது , அவங்க சிரிப்பு , body language  எல்லாம் தரைதப்பட்டைல பார்ப்பது போலவே இருந்துச்சு , வரலக்ஷ்மி மேடம் கொஞ்சம் மாறுங்க ,அப்புறம் அவங்க உருவாக்கிய ஒரு குரூப் save சக்தி , அதை ஒரு நியூஸ் சேனல் கீழே போட்டு promote பன்னிட்டாங்க ,  வைபவ் ரொம்ப முக்கியமான கேரக்டர் ல வருவார் வருவார் நினைச்சேன், ஆனால் பல்ப் வாங்கியது பார்க்கும் நாம் தான் .

நவீனோட இசையில் கொலை சம்பவங்கள் காட்டும் போது நல்லா பண்ணி இருக்கார் , மேலும் பாடல்கள் மனசில் நிற்கவில்லை .

மொத்தத்தில் நிபுணன் மிகவும் சிறந்த நிபுணனாக வரவேண்டியது ஆனால் அது  இல்லை .

குறிப்பு : இந்த படத்தின் டைரக்டர் முன்னாடி என்னோட கம்பெனியில் வேலை செய்தார் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments