வெள்ளி, 3 ஜூன், 2016

Iraivi - இறைவி

நீங்க ஒரு பொழுதுபோக்கு விரும்பியா?,2 மணி நேரம் நல்லா என்ஜாய் பண்ணனும் என்று think பண்ணுவீங்களா? கார்த்திக் சுப்புராஜ் படம் அதனால  பிட்சா , ஜிகர்தண்டா மாதிரி இருக்கும் நினைப்பவரா ? அப்போ உங்களுக்குரிய படம் இது இல்ல ,அந்த மாதிரி எண்ணம் இருந்துச்சினா அதை அப்படியே மூட்டை கட்டி தூக்கிபோட்டுட்டு போங்க

இறைவின்  பொருள்   - பெண் தெய்வம் , பெண்களை பற்றிய படம் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ரொம்ப வித்தியாசமான ஒரு முறையை பின்பற்றி ஒரு trend செட்டிங் படம் போல தந்து இருக்காரு டைரக்டர்.
தன்னால் ஒரே மாதிரி படங்கள் தான் கொடுக்க முடியும் என்று இல்லமால் , மூணு படங்களும் மூன்று வித்தியாசமான கதை களம் எடுத்து இருக்கார் .அதுக்கு ஒரு செம்ம கைதட்டு

பொதுவா தமிழ் சினிமாவில் பெண்களை பற்றிய படம் என்றால்,அடிமை தனம் படுத்தும் ஆண்கள், இல்லாட்டி ரொம்ப கஷ்டப்படும் பெண்கள் வாழ்கையில் பல தடைகளை தாண்டி முன்னேறி சாதிப்பது போல தான் காட்டுவாங்க, ஆனால் இதில் ஒவ்வொரு ஆண்கள் faceபண்ணும் பிரச்சனைகள் அதனால எப்படி அவர்களை சார்ந்த பெண்கள் பாதிக்க படுறாங்கன்னு காட்டி இருக்கார்

எனக்கு உண்மையில் சொல்லனும்னா முதல் பாதியை விட இரண்டாவுது பாதி தான் இறைவி மனசுக்குள்ள இறங்குகிறாள், ஏன்னா முதல் பாதியில் ஒவ்வொருவரின் பிரச்சனைகளை நிலை நிறுத்த காட்சிகள் கொஞ்சம் நிறைய வச்சி இருக்கார் போல தோணுது,சரி அப்போ இரண்டாவுது பாதியில் கம்மியான்னு கேக்குறிங்களா ? இல்ல.. படத்தில் நிறைய இடங்கள் வெட்டி இருக்கலாம்ன்னு தான் எனக்கு தோணுது, இரண்டாவுது பாதியில் பல காட்சி அமைப்பு  ரொம்ப அழகா ரசிக்கும்படி வச்சி இருக்கார்
விஜய்சேதுபதி ஜெயில்ல இருந்து வெளிய வரும் போது , குழந்தையோட தொட்டில்லை முகர்ந்தது பார்ப்பது,அஞ்சலியை அவர் ஊருல சமாதானம் படுத்துவது , அப்போ வெளியே பாட்டி அதை ரசிப்பது,அஞ்சலிகிட்ட விஜய்சேதுபதி பாபிசிம்ஹா பற்றி பேசுவது,பாபிசிம்ஹா அவரோட அம்மாகிட்ட மூழு படத்தோட கதைய வசனமா பேசுவது,கடைசியா நிச்சயதார்த்தம்போது காமிலினிமூக்கர்ஜி எஸ்.ஜே.சூர்யா கிட்ட பேசுவது ,எஸ்.ஜே.சூர்யா வைபவ் கிட்ட உங்க exஉட்பி ,என்னோட present wifeன்னு சொல்லுவது,,கிளைமாக்ஸ்ல் எஸ்.ஜே.சூர்யா பேசுவது,அஞ்சலி அசால்டா திரும்பி பார்க்காம trainல் ஏறுவது, இதுவெல்லாம் இரண்டாவுது பாதியில் ரசிக்கும்படி வைத்த  காட்சிகள்.

படத்தின் பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா, அட்டகாசமா நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்காருன்னு தான்  சொல்லணும்,குறிப்பா தயாரிப்பாளர் கிட்ட அடி வாங்கிற காட்சியில் பேசும் வசனம், பிறகு கிளைமாக்ஸ்ல் phoneல்   பேசும் காட்சி ,பிறகு பூஜா தேவரியா கேரக்டர் செம்ம bold,அவங்ககிட்ட விஜய்சேதுபதி சித்தப்பாவோட போயிட்டு பொண்ணு கேட்கும் காட்சி செம்ம.

மொத்தத்தில் இறைவி பல காட்சிகளால் இறைந்து இருக்கிறது, இறைந்ததை இறுக்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதே நேரத்தில் புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் .

இப்படிக்கு
சினிகிறுக்கன் 

#cinekirukkan #iraivi 

1 கருத்து:

  1. i too felt this movie could have been bit more tight to the screen plan. seemed like many gems stuck on an ever silver line.. really a debatable outcome of the story line. of course women are more patient than men but this film portrays as if men have no patience at all.S J Surya had really supported the movie acting wise..but i would not rate this movie great.. just an emotional movie and cant take away the thought of director as it is as its definitely not fully true..

    Sundarrajan

    பதிலளிநீக்கு

Comments