வெள்ளி, 22 ஜூன், 2018

Tik Tik Tik - டிக் டிக் டிக்

நண்பர்கள் எல்லோருக்கும் சினிகருகனின் மனமார்ந்த வணக்கமும் நன்றியும் , ஏன் நன்றி சொல்லுறேன் கடைசியா சொல்லுறேன்.

டிக் டிக் டிக் இந்த படம் ட்ரைலர் பார்க்கும் பொழுதே இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாமல் பார்த்தே ஆகணும் பல பேருக்கு தோன்றியது, இந்த மாதிரி படங்கள்  படங்கள் ட்ரைலர் மட்டும் காட்சிகள் நல்லா இருக்கும் , படத்தில் பெருசா இருக்காது , ஆனால் இந்த படம் ட்ரைலர் மட்டும் இல்ல படமும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு , 

படத்தின் கதை என்னவென்று ட்ரைலர் பார்த்தவர்களுக்கு தெரியும், மேலும் இந்த கதை போல ஒரு இங்கிலிஷ் படம் ஒன்று பெயர் மறந்துட்டேன் ,  ஆனால் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு மைல் கல் படம்,படத்தில் லாஜிக் தவிர வேற எதற்கும் குறை சொல்ல முடியாது 

படத்தின் ப்ளஸ்களை முதலில் சொல்லிடறேன் 

படத்தின் பெரிய ப்ளஸ் visual & sound effects  கிராபிக்ஸ் , நம்ம தமிழ் சினிமா பட்ஜெட்க்கு ரொம்ப தரமா செய்து இருக்காங்க, கொஞ்சம் கூட குறை சொல்ல முடியாது,  பல  பெரிய பட்ஜெட் படங்களில் கூட சில பல இடங்களில் அந்த காட்சி  கிராபிக்ஸ் பயன்படுத்தி இருக்காங்கன்னு தெரிஞ்சிடும் , இந்த  படம் முக்கால்வாசி க்ராபிக்ஸ் தான், ஆனால் கொஞ்சம் கூட அது கிராபிக்ஸ் என்று எங்கேயும்  சொல்ல முடியாது , நாமே அந்த விண்வெளியில் பயணிப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , அதுவும் இல்லாத ஒன்று இருப்பது போல உணர்ந்து நடிப்பது கொஞ்சம் கஷ்டம் அதை ஜெயம்ரவி நல்லா செஞ்சி இருக்கார் , குறிப்பாக அந்த விண்வெளியில் உயிருக்கு பயந்து வெளியே பறப்பது, மேலும் படத்தின் ப்ளஸ் என்னவென்று பார்த்தா படம் bore அடிக்காமல் போகுது , தேவையில்லாமல் காதல் பாட்டு அது இதுன்னு எதுவும் தேவையில்லாமல் வைக்காமல், படம் தெளிவா ஆரம்பிக்கும் பொழுதே கதைக்குள்ள சென்று வேற எங்கேயும் வெளியே போகாமல் படம் போகுது .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் இம்மான் bgm  மற்றும் பாடல்கள் , ரெண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட் தான் , அதில் சித்ஸ்ரீராம் குரலில் குறும்பா பாடல் செம்ம , ஜெயம்ரவியின் உண்மையான பையன் இந்த படத்தில் நடிப்பதால் அந்த பாடலில் வரும் குழந்தைப்பருவ காட்சிகள் எல்லாம் உண்மையான படங்களை வைத்து இருக்காங்க 

ஜெயம்ரவிக்கு மீண்டும் ஒரு வித்தியாசமான படம் இது , நிச்சயமா இந்த படம் மொக்க பிளாப் ஆகாது , நல்ல பெயர் தரும், 
நிவேதா பெத்துராஜ் முதல் காட்சி காட்டும் பொழுதே தியேட்டரில் கை தட்டு பறக்குது , அது ஏன்னா trailerல்  ஒரு காட்சி அப்படி இருக்கும் ஆனால் அந்த காட்சி படத்தில் இல்ல .மேலும் அவங்க ரொம்ப விறைப்பாங்க பேசுவது ரொம்ப செயற்கையாக இருக்கு .

சரி இப்போ இந்த படத்தின் மைனஸ் பற்றி பார்க்கலாம் 
இந்த மாதிரி படத்தில் லாஜிக் என்பது கொஞ்சம் எதிர்பார்க்க கூடாது , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா வாவ் படம் சூப்பர் சொல்லுவோம், ஆனால் நம்ம ஊரில் வந்தா கலாய்ப்பாங்க , அப்படி தான் மிருதன் படத்தை சொன்னாங்க , ஆனால் இந்த படத்தில் லாஜிக் அநியாயத்துக்கு அடிவாங்கி இருக்கு,என்ன எல்லாம்  லிஸ்ட் போட்டு சொல்லுறேன் 
1, ஒரு சாதாரணமான ஆட்கள் விண்வெளிக்கு போறதுக்கு வெறும் ஆறு நாட்களில் training கொடுத்து விண்வெளிக்கு அனுப்புவது நம்ப முடியல , ஏதோ 6 மாசம் , atleast 60 நாட்களாவது காட்டி இருக்க வேண்டாமா ? ஒரு மனசாட்சி வேண்டமா டா ?
2.ஜெயம்ரவி கூட ரமேஷ் திலக் , அர்ஜுனனின் ரெண்டு போறாங்க , ரமேஷ் திலக் கூட accept பண்ணிக்கலாம்  ஆனால் அர்ஜுனன் விண்வெளிக்கு போவது அவர்க்கு  training எடுப்பது எல்லாம் கொஞ்சம் over, 
3.மேல சொன்ன ரெண்டு லாஜிக் காமெடி எல்லாம் விட ஒரு ஸ்பெஷல் item டைரக்டர் படத்துல வச்சி இருக்கார் , ராக்கெட் கிளம்பி 3 மணி நேரத்தில நிலாவில் அது லேண்ட் ஆகுது அடேய்ஜெயம்ரவி தூக்கிகிட்டு  ஏதோ flight ல டெல்லி , மும்பை போனா மாதிரி சொல்லுறீங்களேடா 
4. என்ன தான் விண்வெளியில் எடை குறைவாக இருந்தாலும் ,200 டன் nuclear  weapon அசால்ட்டாக  தூக்கிகிட்டு போகிறார்
5. ராக்கெட் கிளம்பும் போதே யாரு முக்கிய வில்லன் என்று தெரிந்து விடுகிறது 6. அப்புறம் பல ட்விஸ்ட் என்று நினைத்து வைத்த காட்சிகள் எல்லாம் பெருசா தெரில , கண்ணாடி வச்சி மறைப்பது , boxக்குள் திலக் போவது என்பது எல்லாம் இது எல்லாம் இபப்டி தான் நடக்கும் என்று clear ஆகா தெரிகிறது .இப்படி சில பல லாஜிக் மிஸ்ஸிங் நிறைய இருக்கு 

இப்படி லாஜிக் மிஸ்ஸிங் பல இருந்தாலும் , ஒரு வித்தியாசமான முயற்சிக்காக இந்த படத்தை நிச்சயமா தியேட்டர் சென்று பார்க்கலாம்.

மொத்தத்தில் டிக் டிக் டிக் லாஜிக் தவிர எல்லாத்துக்கும் டிக் அடிக்கலாம் .

இப்படிக்கு 
கிறுக்கன் 


சிறிது நாட்களாக சில பல வேலை காரணமாக பல படங்கள் முதல் அல்லது ரெண்டாவது நாட்களில்   பார்க்க முடியவில்லை , மேலும் பார்த்த படங்கள் விமர்சனம் எழுத நேரம் அமையவில்லை, மேலும் எழுத content கிடைக்கமாட்டேங்குது , காலா படம்  ரெண்டு முறை விமர்சனம்  எழுதியும் பெருசா views போகவும் இல்லை , ஆகவே  இனிவரும் காலங்களில் கிறுக்கனின் கிறுக்கல்  குறையலாம் அல்லது முடியலாம்.
இதுவரை ஆதரவு அளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் , இப்போ புரியுதா மேலே முதல் வரியில் ஏன்  நன்றி சொன்னேன் என்று.

கிறுக்கனின் கிறுக்கல்கள் முற்றும் .


சனி, 9 ஜூன், 2018

Kaala-2 - காலா 2 - விமர்சனம்


மீண்டும் ஒரு முறை சினிகிறுக்கனின் வணக்கம் , என்னடா இது காலா-2 விமர்சனமா? என்று கேட்பது தெரியும் , இது காலா-2 வின் விமர்சனம் இல்ல , இது காலா படத்திற்கு நான் தரும் ரெண்டாவது விமர்சனம் .வாரத்துக்கு ரெண்டு மூணு படம் விமர்சனம் பண்ணி இவன் சாவடிப்பான் , இப்போ என்னடா ஒரே படத்தை ரெண்டு தடவை விமர்சனம் பண்ணுறானே கேட்பதும் தெரியது .சரி ஏன் இந்த படத்தை ரெண்டு தடவை விமர்சனம் செய்ய வேண்டும் ? இருங்க சொல்லுறேன்

எனக்கு ஒரு கெட்ட பழக்கம் ரஜினி , கமல் ,விஜய், அஜித் மற்றும் பல பெரிய அளவு படங்கள்  எல்லாம் எனக்கு சத்யம் main screenல் பார்த்தல்  தான் எனக்கு ஒரு திருப்தி , முதல் நாள் எனக்கு palazzoவில் தான் கிடைச்சது , அதனால இரண்டவாது தடவை பார்த்தேன் , அந்த சவுண்ட் effect , screen picture clarity வேற  எங்கேயும் கிடைக்காது ,சரி முதல் தடவை நான் பார்க்கும் பொழுது ஒரு சாதாரணமான ரசிகனாக பார்த்தது , இந்த முறை பார்க்கும் பொழுது பல விஷயங்களை என்னால் சற்று உற்று பார்க்கக் வைத்தது .அப்படி நான் பார்த்த விஷயங்களை உங்களிடம் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாம் தான் இந்த post  போடுகிறேன் . இங்கே பதிவு செய்யும் எல்லாம் என்னோட தனிப்பட்ட கருத்துகளும் , மற்றும் என்னோட யூகங்கள்.

முதல் கேள்வி ஏன் ரஜினியை ராவணனாக இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டது ?
நம்மை பொறுத்தவரை இராவணன் ஒரு வில்லன் , ராமன் தான் ஹீரோ, இங்க ஏன் ரஞ்சித் ரஜினியை ராவணனாக காட்டினார் ? என்ற கேள்வி இருக்கு .

முதலில் ராவணன் ஒரு தமிழன் , ராமன்  ஒரு ஆரியன் , ஒருவேளை அதனால் தான் ரஜினியை ராவணனாக காட்டினாரா  ரஞ்சித் ? ஏன்னா இங்கு இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் , போலி போராட்டக்காரர்களுக்கும்  ஆரியர்களை தான் பிடிக்காதே , ஏற்கனவே ரஜினியை தமிழர் இல்லை சொல்லுபவர்களுக்கு இப்படி ஒரு கேரக்டர் ரெடி செய்தார்களோ ?மேலும் ராமாயணத்துக்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்  என்று தோணுது , ராமாயணத்தில் ராவணனின் முக்கியமான மகன் இந்திரஜித் என்கிற மேகநாதன் என்பவன் ராமனுக்கு  எதிராக போர் புரிந்து இறந்து போவான் , அதுபோல இங்கே ரஜினியின் மகனாக வரும் திலீபன்(செல்வா)  இறந்து விடுகிறான்.

ராவணனுக்கு இரண்டு மனைவி , அதுபோல இங்கு ரஜினிக்கு இரண்டு மனைவியாக காட்டாமல் இரண்டு காதல் உறவாக காட்டி இருக்கார் , மேலும் ராவணன் சீதையை  தொட்டதில்லை , பிறர் மனைவி தீண்டாதவன் என்று கேள்விப்பட்டு இருக்கோம் , அந்த நல்ல குணத்தையும் காலா மற்றும் சரினா உறவின்  மூலமாக இங்கு காட்டியிருக்கிறார் .

மேலும் ராமாயணம் சூர்ப்பனகை அடிபட்டதால் தான் ஆரம்பிக்கும்,   அது போல முதல் காட்சியே, ஒரு பெண் அடிபடுவாங்க அந்த பெண்ணோட பையன் வந்து காலவை வந்து கூப்பிடுவான், இரண்டத்திலும் பெண்ணால் தான் கதை ஆரம்பிக்குது .

வாலி என்கிற ஒரு கேரக்டர் இராமாயணத்தில் வருவார் , அவர் சுக்ரீவனின் தம்பி , ஆனால் ராவணனின் பழய நண்பன்(இதற்க்கு முன்னாடி நான் வாலி ராமனின் நண்பன் போட்டு இருந்தேன் என்னோட நண்பர் ஒருவர் இந்த கருத்தை சொல்லியதால் இப்பொழுது மாற்றுவிட்டேன் நன்றி நண்பரே ) அது போல இங்கே சமுத்திரக்கனி கேரக்டர் வாலியப்பன் என்ற பெயரில் வருகிறார் ,  வாலியப்பன் இங்கு இராவணன் என்கிற  காலா பக்கம் இருக்கிறார் .அங்கு அனுமனால் இலங்கை தீயிட்டு கொளுத்தப்பட்டு எரிகிறது , அதுபோல தாராவி  தீயிட்டு கொளுத்தப்படுகிற காட்சி இங்கு இருக்கு .

இந்த படம் இதிகாசமான ராமாயணத்தை மற்றும் இலங்கையையும் மட்டும் தொடர்புபடுத்தியது போல இல்லாமல் இலங்கை இந்தியா அரசியலையும் தொடர்பு  இருக்குமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு .ஆமாங்க ரஜினியை இறுதி காட்சியில் விடுதலை புலிகள் பிரபாகரனோடு தொடர்பு படுத்தியது போல ஒரு உணர்வு , படத்தின் இறுதி காட்சியில் காலா  இறந்தது போல காட்டினாலும் மக்கள் காலா இன்னும் இறக்கவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கார் சொல்லுவது போல ஒரு காட்சி இருக்கும் , அது போல தான் இலங்கை தமிழர்கள் இன்னும் பிரபரகன் இறக்கவில்லை மீண்டும் வாருவார் என்ற நம்பிக்கையில் இருப்பது போல இந்த காட்சி அமைந்து உள்ளது என்பது போல இருக்கு , மேலும் ரஜினி சொல்லுவார் இந்த காலா இறந்தாலும் இங்கே இருக்குறவங்க எல்லாம் காலா தான் சொல்லுவார் , என்னக்கு என்னவோ இறுதி காட்சிகள் எல்லாம் பிரபாகரனையும் , ஒரு காங்கிரஸ் தலைவரையும்  குறிப்பது போல இருந்திச்சி .

மேலும் சில youtube விமர்சனத்தில் இந்த படத்தில் அம்பேத்கார் பற்றியும் அவரோட reference இருக்கு சொன்னாங்க ஆனால் அவங்க எது எல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியல , ஆனால் நான் கவனித்த விஷயம் ஒன்று படத்தின் இறுதி கட்டத்தில் , ரஜினி போராட்டம் என்று அறிவிக்கும்  இடம், அங்கே தான் புரட்சி ஆரம்பிக்கும் ,  பின்னாடி பார்த்தால் ஒரு எரிஞ்சு போன ஒரு கட்டடம் இருக்கும் அந்த கட்டடத்தில் பார்த்தால் ஹிந்தியில்  கௌதம புதர் விஹார் ன்னு(எனக்கு  ஹிந்தி படிக்க தெரியும் ) போட்டு இருக்கும்,அம்பேத்கார் 1956ல் மாபெரும் ஒரு மதம் மாற்றம் புரட்சி  நடந்த ஆண்டு அதுவும் ஹிந்துவில் இருந்து புத்த மதத்திற்கு , அதை குறிக்க தான் அங்க வச்சி இருக்காங்க, ரஜினி பயன்படுத்தும் ஜீப்பின் நம்பர் கூட MH  01 BR(அம்பேத்கர் initial )  1956,  காலா போஸ்டர் வந்த பொழுதே அந்த நம்பர் ப்ளட் பற்றி போட்டாங்க, அதனால் அந்த building பெயர்க்கும் இதற்கும்  சம்மந்தம் இருக்கும் என்று எனக்கு  தோன்றியது 

மேலே குறிப்பிட்ட கருத்துகள் எல்லாமே என்னோட யூகங்கள்  மட்டுமே , உண்மையா என்று இந்த பதிவை டைரக்டர் ரஞ்சித் படித்து சொன்னால் தான் உண்டு . ஏதோ நம்மால் முடிச்சது சும்மா கொளுத்தி போடுவோம் .

ஏண்டா டேய் இது எல்லாம் முதல் தடவை பார்க்கும் பொழுது தெரியலன்னு நீங்க கேட்பீங்கன்னு தெரியும் , அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே , முதல் தடவை பார்க்கும் பொழுது ஒரு ரஜினி படமாக தான் பார்க்க தோணிச்சி , ஆனால் இரண்டாவது  தடவை நான் பார்க்கும் பொழுது ரஜினியின் tabelல் ராவண காவியம் புத்தகம் இருந்தது என் கண்ணில்பட்டது , அப்போ தான் எனக்கு இந்த படத்தை ராமாயணத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் தோணுச்சு



குறிப்பு : ராவணன் தமிழனா என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கு , அதை பற்றி தேடி தேடி போகும் பொழுது பல புதிய பரிமாண செய்திகள் எனக்கு கிடைச்சுது , அது எல்லாம் உண்மையா பொய்யா தெரியாது , இருந்தாலும் உங்க referenceக்கு இங்கே பதிவு செய்கிறேன் .மேலும் நான் எந்த வீடியோ பார்த்து இந்த பதிவு போடவில்லை நான் பார்த்து எனக்கு தோன்றிய கருத்துகள் அவ்ளோதான் .

இராவணன் தமிழனா இல்லையா ?கீழே உள்ள லிங்க் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=XhW5UX2IEmU


இராவணன் குடும்பம் பற்றி
Visit https://www.quora.com/How-many-sons-did-Ravan-have

ராமாயணத்திற்கு இன்னொரு முகம் காட்டும் கதை
Visit https://www.youtube.com/watch?v=vXhxULdUd0I

மேலும் நான் சொன்ன கருத்துகளிலோ , அரசியல் பற்றியோ  அல்லது இதிகாசத்தை பற்றியோ ஏதேனும் தவறு  இருந்தால் சொல்லுங்கள் அதை மாற்றிவிடலாம் .

இரண்டாவது பதிவு போட்டதால் இந்த படம் சூப்பர் என்று எல்லாம் நான் சொல்லமாட்டேன் , இந்த பதிவு வெறும் நான் கவனித்த விஷயங்கள் மட்டுமே. .

மொத்தத்தில்  நான் ஏற்கனவே சொன்னது போல கதையிலும் , திரைக்கதையிலும் காலா காலமானது தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 







வியாழன், 7 ஜூன், 2018

Kaala - காலா

ரஜினி ரசிகர்களுக்கும் , சினிமா ரசிகர்களுக்கும் சினிகிறுக்கனின் வணக்கம் ,கபாலி பார்த்து கலகலத்து போனவர்களுக்கு , நிம்ர்ந்து உக்கார்ந்து வைக்கும்  படமாக  காலா அமையுமா ?

இந்த படத்தின் கதை , திரைக்கதை பற்றி பார்ப்பதற்கு முன்னாடி , இந்த படத்தை ஒரு ஒரு காட்சியாக எப்படி பண்ணிருக்காங்க , அதோட ப்ளஸ் மைனஸ் எப்படி இருக்கன்னு பார்க்கணும் 

சூப்பர் ஸ்டார்  படம் என்றால் நிச்சயமா மாஸ் இருக்கணும் , அந்த மாஸ் கபாலியில் சற்று கம்மி , அதனால் அந்த மாஸ் இதில் ரஞ்சித் சரி செய்து இருக்கார் , ஆனால் பக்கா மாஸ் இருக்கான்னு  பார்த்த அது மிஸ்ஸிங் தான் , சூப்பர் ஸ்டார்  படத்தில் சொல்லுவது போல முழு ரவுடி தனத்தை பார்த்தது இலையே சொல்லுவார் அது போல  இந்த படத்தில் அதை முழுசா பார்க்க முடியல.

ஏற்கனவே சொன்ன மாதிரி இந்த படத்தை சில பல காட்சிகளை விமர்சனம் பண்ணனும் , முதல் மாஸ் காட்சி  , அப்பறம் ஒரு ஒருத்தர் establish பண்ணற காட்சி , அவரோட குடும்பம் அதன் பின்னணி அது எல்லாம் ஓகே ,

சூப்பர் ஸ்டாரின் முன்னாள் காதலியாய் வரும் ஹுமா குர்ரேஷி காட்சி நல்லா இருக்கு , அதுவும் அவர் வீட்டில் முதல் முதலாக ரொம்ப வருஷம் கழிச்சி பார்க்கும் காட்சி சூப்பர், அதில் ரஜினியின் நடிப்பு செம்ம , அவர் காதில் கம்மல் ஆடுவது , கை விரல்கள் மடக்குவதை பார்த்து ரசிப்பது , அவர்க்கு பிடிச்சது , அவர் மனைவியிடம் காப்பி சொல்லுவது , ரொம்ப ரசிக்க வைச்சது, மேலும் ஹோட்டல் போயிட்டு பார்ப்பது , அதுக்கு அப்பறம் மனைவி ஈஸ்வரி ராவ் கிட்ட பேசுவது , ஈஸ்வரி ராவ் அவங்க பங்குக்கு அவங்க காதலை பற்றி சொல்லி வெறுப்பு ஏற்றுவதுன்னு அந்த காட்சிகள் எல்லாம் அழகா வடிவமைச்சிருக்காங்க .matured love நல்லா இருக்கு .

சரி மாஸ் சீன்ஸ் எப்படி வந்து இருக்கு ?முதல் காட்சியில் சும்மா ஒரு கண்பார்வை பார்த்ததும்  அவரோட பையன் வந்து  அடிப்பது ,டெண்டர் காட்சியில் சும்மா பேசாமல் இருந்துட்டு இருக்கும் பொழுது அந்த கண்பார்வையில் ஒரு நெருப்பு தெரிவது , அந்த மாஸ் நிச்சயமாக அது ரஜினியால் மட்டும் தான் பண்ண முடியும் ,குறிப்பாக இன்டெர்வல் சீன் அல்டிமேட் அந்த இடத்தில நிக்கல் பாட்டு வைச்சது கொஞ்ச கூட எதிர்பார்க்கல , அப்பறம் நானெப்பட்டேக்கர் வீட்டில் சந்திக்கும் காட்சி ,முக்கியமா ரொம்ப எதிர்பார்த்த கியா ரே செட்டிங் ah கேட்க்கும் வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கற  , முதல் சண்டை காட்சி அனல் பறக்கும்ன்னு பார்த்தா வேங்கையன் மவன் அப்படியே சும்மா ஒத்தையில  நின்னிட்டு போய்ட்டார், அப்பறம் சம்பத்தை கொலை செய்யும் காட்சி மாஸ் தெறிக்க விட்டு இருக்காங்க .ஸ்டேஷனில் பேசும் காட்சி செம்ம கலாய் .முக்கியமான ஒன்று இந்த மாஸ் சீன்க்கு எல்லாம் தூக்கி நிறுத்தியது சந்தோஷ் நாராயணன் இசை சொல்லணும் 

சரி மாஸ் சீன் பார்த்தாச்சு , காதல் சீன பார்த்தாச்சு , செண்டிமெண்ட் சீன் பற்றி பார்த்தாச்சு , கதை திரைக்கதை எப்படி இருக்கு ? இந்த படத்தை ரொம்ப எல்லாம் எதிர்பார்த்து போல, டீஸர் பார்க்கும் போதே தெரிஞ்சி போச்சி மும்பை base பண்ணி தாராவி , நில தகராறு கதை தான் என்று, கதை இது தான் என்று எதிர்பார்த்தது போல தான் படம் இருக்கு , அறுந்து பாழாய் போன பழைய மும்பை கதை தான் இது , பாட்ஷா, நாயகன் , வியட்நாம்  காலனி இப்படி பல தடவை பார்த்த கதை தான் , இதுல புதுசா ஒன்னும் பண்ணவில்லை.
 மேலும் காட்சியமைப்பு பார்த்தா ஜல்லிக்கட்டு போராட்டத்தை கொஞ்சம் மாற்றி நிலம் அது இதுன்னு மாற்றிட்டாங்க அவ்ளோதான் , மக்கள் போராட்டம் , அங்கேயே சமைத்து சாப்பிடவது , ஒரு போலீஸ் அவர்களுக்கு support பண்ணி பேசுவதுன்னு மெரினாவில் நடந்ததை மாற்றிட்டாங்க, அதில் போலீசாக வரும் அரவிந்த் மீசை செம்ம காமெடி ,எதுக்கு அப்படி செயற்கையாய் ஒரு மீசை ? ,பிறகு இந்த படத்தை பார்த்த அப்பறம் தான் புரியுது தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் தான் காரணம்ன்னு எப்படி ரஜினி அந்தளவுக்கு சரியாக சொன்னார்னு ,

சமுத்திரக்கனி ஓவர் acting , சில இடங்களில் நன்றாக இருந்தாலும் , பல இடங்களில் ரொம்ப ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு ,நானெப்பட்டேக்கர் அவ்வளவு பவர் full ஆகா தெரியல, அது என்னவோ மும்பை அரசியல் என்றாலே பால்தாக்கரே தான் நம்ம தமிழ் சினிமாவுக்கு reference போல , நானெப்பட்டேக்கர் உருவம் உடை எல்லாம் அது போல தான் சித்தரிச்சி இருக்காங்க , மராட்டி அரசியல்வாதி என்பதால் தமிழ் உடைந்து உடைந்து பேசுவது accept பண்ணிக்கலாம் , ஆனால் டப்பிங் லிப் sync பல இடங்களில் அது செட் ஆகவில்லை 

முதல் பாதி ஒரு அளவுக்கு bore அடிக்காம ஒப்பேற்றி போனாலும் , ரெண்டாவது பாதி எதுக்கு , எங்க எப்படி போக போது தெரியாம போகுது , ரெண்டாவது பாதி சுத்தமா சுவரசியமோ , ஒரு பரபரப்போ , ஒரு ட்விஸ்ட்டோ எதுவும் இல்ல , ஒரு வாவ் சொல்லும் படியோ எந்த காட்சியும் இல்ல, ரஞ்சித் இந்த மெட்ராஸ் படத்தில் இருந்து வெளியே வர வேண்டும் , ஒரே மாதிரி கதை கரு , ஒரே மாதிரி காட்சியமைப்பு , எடுத்துக்காட்டு மெட்ராஸில் எல்லோரும் கருப்பு பெயிண்ட் ஊற்றுவாங்க , அது போல இந்த படத்திலும் இறுதி காட்சி இருக்கு , அந்த சிவப்பு கலர் அடிச்சி ரஜினி வரும் பொழுது , நிச்சயமா மெர்சல் பாடல் ஞாபகம் படுத்தியது .

இந்த டிக்கெட்டை பற்றி சொல்லியே ஆகணும் , சிலர் சொல்லுறாங்க ரஜினிக்கு opening இல்ல , டிக்கெட் எல்லாம் விற்று போகல ,ஒரு உண்மையை சொல்லணும்ன்னா  இதுக்கு முன்னாடி fake demand create செய்து , டிக்கெட் அவங்களே block பண்ணி , டிக்கெட் ரேட் 1500 ருபாய் வரை விற்றாங்க, online open பண்ணும் போதே டிக்கெட் இருக்காது ,  அதுக்கு கரணம் கலைப்புலி தாணு , இவர் மட்டும் இல்ல பல producer , மற்றும் தியேட்டர்காரங்க செய்யும் வேலை , ஆனால் இந்த படம் தயாரிப்பாளர் தனுஷ் அப்படி பன்னவில்லை நினைக்கறேன், அதனால தான் எனக்கு எல்லாம் online ல் ஈசியாக  முதல் நாள் டிக்கெட் கிடைச்சது , ஆனாலும் சில இடங்களில் டிக்கெட் விலை அதிகம் என்றாலும் முன்னாடி போல ரொம்ப அதிகம் இல்ல , இது போல அஜித் , விஜய் படங்களும் இப்படி fake demand create பண்ணாமல் இருந்தா எல்லோருக்கும் டிக்கெட் கிடைக்கும், எல்லோரும் படம் பார்ப்பாங்க அப்பறம் எவனும் 500 கோடி collection , 1000 கோடி collection என்று மார்பு தட்டிக்க மாட்டாங்க .இந்த 4-5 வருஷங்களாக தான் இவர்கள் படங்களுக்கு இப்படி hype , demand create பண்ணி லாபம் சம்பாதிக்கிறாங்க.

அஜித்துக்கு எப்படி ஒரு சிறுத்தை சிவாவோ அதுபோல ரஜினிக்கு ஒரு ரஞ்சித் , சாத்தியமா தல எழுத்தை மாற்ற முடியாது.

மொத்தத்தில் கதை திரைக்கதையில் காலமான  காலா 


இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

சனி, 12 மே, 2018

Irumburumbuththirai - இரும்புத்திரை

இந்த படத்தின் விமர்சினத்தை அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் அதன் காரணம் அப்பறம் சொல்லுறேன் 

முதலில் படத்தின் ப்ளஸ் பார்ப்போம் 

விஷால் படம்ன்னு  கொஞ்சம் பயந்து தான் போனேன் , ஆனால் முன்னாடி மாதிரி கத்தி தேவையில்லாமல் பஞ்ச் வசனம் பேசாம ஒரு நல்ல படம் பண்ணிருக்கார் 

படம் முதல் காட்சி இது எதை பற்றி சொல்ல போறாங்கன்னு தெரிந்துவிட்டது 

இது நிச்சயமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் படம் , இப்போ நாம் use பண்ணற டிஜிட்டல் உலகத்தை பற்றியது 

படம் பார்த்து வரும் பொழுது நம் மொபைல் பயன்படுத்த கொஞ்சம் யோசிக்க வைக்குது .

யுவன்  bgm  நல்லா இருக்கு .

படம் அர்ஜுன் வந்த பிறகு சூடு பிடிக்குது , அதுவும் அர்ஜுன் vs விஷால் வரும் ஒரு lift சீன சூப்பர் 

நிறைய விஷயங்கள் பார்க்கும் பொழுது ஆச்சரியப்படவைக்குது , அதாவுது நம் மொபைல் நம்பர் பயன்படுத்துறாங்க , அதுக்கு எந்தளவுக்கு காசு கிடைக்கும் , அட flight boarding passல் இருந்து எப்படி information எடுக்கப்படும்ன்னு சொல்லும் பொழுது ரொம்ப ஆச்சர்யப்படவைக்குது 

ரோபோ ஷங்கர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் 

பாய்ஸ் படத்தில் நம்ம செந்தில் சொல்லுவாரே information is wealth அது தான் இந்த படத்தின் முக்கியமான அம்சம் .

படத்தின் மைனஸ் பார்ப்போம் 

படம் கதைக்குள்ள போக ரொம்ப நேரம் எடுக்குது 

அது போலவே விஷால் வில்லனை தேடி போவது , ரிச்சி தெருவில தேடுவது எல்லாம் ரொம்ப length ஆகா தெரிஞ்சது 

விஷால் , சமந்தா காதல் bore அடிக்குது 

விஷால் establish ஆகி , பிரச்சனைகளை எல்லாம் சேர்த்துக்கிட்டு படம் கதைக்குள்ள போக இன்டெர்வல் வருது அதுவே 1.30 மணி நேரம் ஆகிடுச்சு 

விஷால்  மிலிட்டரி uniformல் வரும் முதல் காட்சி  செட் ஆகவில்லை , அது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவருக்கு uniform உடம்பில ஒட்டவில்லை 

அர்ஜுன் படம் ஆரம்பிச்சி 2 மணி நேரம் கழிச்சி தான் படத்தில் வருகிறார் , 

அர்ஜுன் பார்க்கும் பொழுது நிச்சயமா தனிஒருவன் அரவிந்த் சாமி தான் ஞாபத்துக்கு வருது 

ஒரு நாலு மிலிட்டரி ஆளுங்க காட்டும் பொழுதும் அதே தனி ஒருவனில் வரும் நாலு பேரு தான் ஞாபத்துக்கு வருது , ஆனால் படத்தில் ரொம்ப use பண்ணலையோ தோணுது , அவர்களுக்கும் விஷாலுக்கும் உருவாகும் உறவு strong ஆகா இல்லை 

அர்ஜுன் விஷால் மோதும் காட்சி ரொம்ப கம்மி , 

நல்ல கதை உள்ள படம் ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை இல்ல 

படத்தோட பெரிய மைனஸ் படத்தின் நீளம் அதனால தான்  விமர்சனம் அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் மேலே சொன்னேன், படம் தான் பெருசா இருந்திச்சி at least விமர்சனம் ஆவது சின்ன தாக இருக்கட்டும் தான் .

நிச்சயமா இந்த படம் எல்லோருக்கும் ஒரு கண் திறப்பு அதனால இந்த மைனஸ் எல்லாம் தாண்டி இந்த படத்தை பார்க்கலாம் 

படம் பார்த்தபின்பு நிச்சயமா நம் மொபைலுக்கு தேவை ஒரு இரும்புத்திரைன்னு தோணும் 

மொத்தத்தில் இரும்புத்திரை  ரொம்ப lengthy திரை 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 மே, 2018

Iravukku Aayiram Kangal - இரவுக்கு ஆயிரம் கண்கள்

உதயநிதி படத்தை பார்ப்பதை விட அருள்நிதி படத்தை நிச்சயமா நம்பி போலாம் என்ற ஒரு எண்ணம் எப்பவும் உண்டு , அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல்   இந்த படத்தையும் கொடுத்து இருக்கார் அவர்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கண் அசராமல் நம்மை பார்க்க வச்சி இருக்காங்க , முதல் காட்சியே ரொம்ப அழகா,  அதை ஒரு கோர்வையாக கொடுத்து, அப்படியே பிளாஷ் பேக் போவது சூப்பர், அட முதல் ஸ்டேஷன் காட்சியிலே ஒரு நம்பிக்கை கொடுத்துட்டார் டைரக்டர் , அப்பறம் வழக்கம் போல ஹீரோ , ஹீரோயின் establishment காட்சி வச்சி வழக்கமான படம் போல கொஞ்சம் போனாலும் , ஒரு ஒரு  காட்சியும் , ஒரு ஒரு ஷாட்களும் படத்தோட கதையை தொடர்ப்பு படுத்தியே படம் நகர்கிறது , எந்த காட்சியும் தேவை இல்லாத காட்சி என்று கொஞ்சம் கூட தள்ளி வைக்க முடியாது, அந்த அளவுக்கு எல்லாமே கதையை ஒட்டியே படம் போகுது .

படத்தின் பெரிய ப்ளஸ் காட்சியமைப்பு தான், படத்தின் ஓட்டத்தை ஒரு ஒரு கேரக்டர்களுடன் லிங்க் பண்ணி லிங்க் பண்ணி படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லுகிறார் டைரக்டர், ஒரு படம் வெற்றி பெறுவது படம் ஆரம்பித்தவுடன் படத்தின் கதைக்குள் போவது மேலும் கதை ஒரே இடத்தில் நிற்காமல் அடுத்து அடுத்து வரும் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்துக்கு சென்று போவது, இதை இந்த படத்தில் சரியாக செஞ்சியிருக்காங்க , மேலும் ஒரே காட்சியை வேறு வேறு கேரக்டர்களின் பார்வைலயிருந்து அதை அழகாக கொண்டு போறாங்க , சில சமயம் ஒரு காட்சி வேற வேற point of viewல் இருந்து கொண்டு போகும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்படுத்தும் , அது போல சலிப்பு ஏற்படுத்தாமல் ரொம்ப  கவனமா கையாண்டு இருக்காங்க, படத்தில் ஏகபட்ட முடுச்சிகள்  இருக்கு அதை டைரக்டரும்   குழம்பாமல் , பார்ப்பவர்களையும் குழப்பாமல் ரொம்ப தெளிவா அந்த முடிச்சிகளை அவிழ்த்து படத்தை முடிச்சிவைக்கிறர் டைரக்டர்.

படத்தின் இன்னொரு ப்ளஸ், படம் பார்ப்பவர்களை கொஞ்சம் அங்கே இங்கே கூட சிந்திக்கவிடாமல், படத்திலே நம் முழு கவனத்தையும் முழுக வச்சிட்டார்,  ஏன்னா முதலில் யார் அங்க கொலையானாகன்னு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தவச்சிட்டார் , பிறகு யார் அந்த கொலையை  பண்ணாக என்று கடைசி வரை யோசிக்க வைச்சிட்டார், எல்லாம் முடிச்சிடுச்சி முடிச்சிடுச்சின்னு நினைக்கும் போது இன்னொரு ட்விஸ்ட் வச்சி , அது முடிச்சது என்று நினைக்கும் பொழுது கடைசியில கூட இன்னொரு ட்விஸ்ட் வச்சி படத்தை முடிக்கிறார் டைரக்டர் , நம்மையும் wow சொல்லவச்சிட்டார் , படம் முழுவதும் நம்மை guess பண்ண வச்சிக்கிட்டே இருக்காங்க , நான் ஒரு ஒரு தடவையும் ஓ படம் இபப்டி போகுமோ , அட அபப்டி போகுமோ நினைக்கும் போது எல்லாம் வேற வேற மாதிரி படம் போய்கிட்டு இருக்கு .

படத்தின் ப்ளஸ் கேமராமேன் அரவிந்த் மற்றும் எடிட்டர் சான் லோகேஷ் , ஏன்னா மேல சொன்னேன் படம் பார்ப்பவர்களை குழப்பமால்  போகுதுன்னு அதுக்கு முக்கிய காரணம் எடிட்டர் தான் சொல்லணும் , ஏன்னா படத்தின் காட்சி முன்னாடி பின்னாடி மாறி மாறி போய்கிட்டே இருக்கு அதை ரசிகர்களுக்கு தெளிவா புரியவைத்தது எடிட்டர் தான் . மேலும் சாம்.சி இசைய கூடுதல் பலம் சொல்லணும் .

அருள்நிதி படத்தில் இருளாதநிதியாய் இருக்கார் , அவர் படத்திற்கு நம்பி போனவர்களுக்கு கைவிடமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிட்டார் , அஜ்மல் கோ படத்தில் எப்படி இருந்தாரோ அபப்டியே இருக்கிறார் , ஹீரோயின் மஹிமா நம்பியார் தேவையான அளவுக்கு படத்தில் use பண்ணியிருக்காங்க , மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் , ஆடுகளம் நரேன் , ஜான் விஜய் , சாய சிங், இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் சரியாக கதைக்கு பயன்படுத்தி இருக்காங்க , இதில் ஆனந்தராஜ் சீரியஸ் ஆனா நேரத்திலும் கொஞ்சம்  காமெடி பண்ணுகிறார் 


இந்த படத்தில் வரும் மழை , கொலை , இரவு , அந்த வீடு இப்படி பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் துருவங்கள்16 படத்தை ஞாபகம் படுத்தியது .நிச்சயமா டைரக்டர் மு.மாறன் ஒரு நல்ல தரமான படத்தை தந்து இருக்கிறார் .முக்கியமான விஷயம் படம் ஆரம்பம் முதல் பாருங்க , இன்டெர்வல் அப்பறம் லேட்டாக வாராதீங்க , ஒரு ஒரு காட்சியும் மிஸ் பண்ணாம பாருங்க அப்போ தான் படம் புரியும் , ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி படத்தில் எல்லா காட்சியும் லிங்க் ஆகி இருக்கு .

மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள், வைத்த கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கிறது.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 





வெள்ளி, 4 மே, 2018

Iruttu Araiyil Murattu Kuththu - இருட்டு அறையில் முரட்டு குத்து


இந்த படம் மற்ற பெரிய படங்களை விட ரொம்ப எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் , ஏன்னா, இந்த படத்தோட போஸ்டர் , டீஸர் , ட்ரைலர் எல்லாம்  அப்படி ஏற்படுத்தியது,  மேலும்  டைரக்டர் அப்படி பட்டவர் , ஹர ஹர மஹாதேவி என்ற ஒரு காவிய படத்தை தந்தவர் இவரே .


சரி இந்த படம் எப்படி இருக்கு ? இந்த படத்தை கொஞ்சம்  கூட பார்க்கறதுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாத படம் இது , என்ன தான் இரட்டை அர்த்தம் வசனங்கள் , ச்சே ச்செ டபிள் மீனிங் இல்ல , எல்லாம் ஸ்ட்ராயிட் மீனிங் உள்ள படம்னாலும் , படத்தில் கதை அதை ஒட்டிய காமெடிகளும்  கொஞ்சம் கூட இந்த படத்தில் கிடையாது , என்னதான் "ஹர ஹர மஹாதேவி " படத்தில் adults only காமெடி இருந்தாலும், அந்த காமெடி படத்தின் கதையை ஒட்டியே இருந்துச்சி  மேலும் அந்த கதைக்கு பொருத்தமாக timing , situation காமெடி கடைசி வரை இருந்தது , ஆனால் இந்த படம் கொஞ்சம் கூட கதை என்பது கிடையவே கிடையாது .

ஒரு மட்டமான கேவலமான செம்ம boring ஆகா தான் இருக்கு இந்த படம் , ஆரம்பம் ஏதோ தானோ சம்மந்தமே இல்லாமே படம் போகுது , சரி போக போக நல்ல காமெடியாக போகும் நினைச்சேன், ஆனால் அதுவும் இல்ல அங்க அங்க பச்சையாக வசனங்களும் காட்சிகளும் இருந்தாலும், படத்தில் அனைத்தும் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது , 

எல்லா கேரக்டர்களும் ரொம்ப செயற்கையாக காட்டப்படுகிறது , ஒரு கேரக்டர் கூட மனசில் நிற்கவில்லை , அது போல ஒரு காமெடி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இல்ல அந்தளவுக்கு ரொம்ப மோசமாக தான் இருக்கு , இப்போ கூட ஹர ஹர மஹாதேவி படத்தில் வரும்  காமெடிகள் ஞாபகத்தில் இருக்கு ,  ஆனால் இது இந்த படம் ? ஒரு காட்சி , ஒரு காமெடி கூட இந்த படம் பார்த்து வந்து  கொஞ்ச நேரத்தில கொஞ்சம் கூட ஞாபகத்திற்கு வரவே இல்ல.

 ஒரு தடவை ஹர ஹர மஹாதேவி  மாதிரி படம் வரலாம் , ஆனால் அது மாதிரியே படம் வருமா என்றால் அது சந்தேகம் தான் , இது கொஞ்சம் hype create ஆனதால் இந்த படம் முதல் மூன்று நாள் போகும் , ஆனால் அநேகமா டைரக்டர் சந்தோஷ் இது மாதிரியே அடுத்த படமும் எடுத்தா நிச்சயமா அட்டு பிளாப் ஆகும் 

ஹீரோயின் யாஷிகா கேரக்டர் , மேலும் அந்த பேயாக வரும் கேரக்டர் ரொம்ப மட்டமா சித்தரிக்கபட்டது , இந்த படம் adult comedy movie not porn movie சொன்னாங்க , ஆனால் நிறைய காட்சிகள் B grade porn movie போல தான் இருக்கு , ஆடைகள் , மற்றும் பல பல பல காட்சிகள் ரொம்ப மட்டமாக இருக்கு, இது போக மதுமிதா , மொட்டை ராஜேந்திரன் , பாலசரவணன் எல்லோருடைய கேரக்டர் கொஞ்சம் கூட ரசிக்கும்படி இல்ல .கருணாகரன் கடைசியில் வந்தாலும் இவர்களை compare பண்ணும் போது இவர் ஒரு அளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார் சொல்லலாம் அவ்ளோதான் , மற்றபடி சொல்லிக்கும்படி இல்ல 

பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சுட்ட பாடல்கள் , porn anthem party song கேட்டால் நடு நடுவே kalachasma பாடல் வருது , அப்பறம் அழுக்கு ஜட்டி அமுதவல்லி பாட்டு கேட்டால் , ஹிந்தி கஜினி படத்தில் வரும் Aye Bachchu பாடல்  கொஞ்சம் கேட்க்குது 

இந்த படம் 18+, இப்படி தான் இருக்கும் மேலும் சமூகத்தின் மேல அக்கறை உள்ளவங்க இந்த படத்தை பார்க்காதீங்க இபப்டி எல்லாம் ஏற்கனவே சொல்லி தான் இருக்காங்க , அதனால் ரொம்ப உத்தமன் வேஷம் போட்டு இந்த படத்தை பார்க்க போகல , ஆனால் ஹர ஹர மஹாதேவி போல  எந்த லாஜிக் பார்க்காமல் நல்லா சிரிச்சிட்டு வரலாம் என்று நினைத்து  போனால்  அது கொஞ்சம் ஏமாற்றம் தான் .

மொத்தத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, இருட்டு கதையில் சுருண்டு போனது 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 28 ஏப்ரல், 2018

Diya - தியா


ஏ.ல் விஜய் படம்ன்னா ஏதோ ஒரு படத்தின் தழுவலாக தான் இருக்கும் , இது எந்த படத்தோட தழுவலாக இருக்கும்ன்னு ஒரு சந்தேகத்தோடு தான் போனேன் , சில விமர்சனர்கள் சொல்லும் போது தெரியுது இது ஏதோ ஒரு தாய்லாந்து படம் மற்றும் வேற ஒரு இங்கிலிஷ் படம்ன்னு சொல்லுறாங்க , அப்போ கடைசி வரை விஜய் ஒரு ஒரிஜினல் கதை வச்சி படம் எடுக்க மாட்டார் போல , 

நம்ம தமிழ் சினிமாவில பேய் படம் ட்ரெண்ட்ல இதுவும் ஒன்னு , 
ஆனா இது நம்ம வழக்கமான தமிழ் பேய் படம் போல இல்ல , இந்த பேய் + காமெடி+பழிவாங்கல் + பங்களா + டூயட் பாட்டு + சாமி + மந்திரவாதி இப்படிப்பட்ட வழக்கமான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கு இந்த படம் , அது ப்ளஸ் பாயிண்ட் தான் , அதாவது கருவில் கலைந்த ஒரு குழந்தை பழி வாங்க வருது இது தான் படத்தின் ஒரு வரி கதை .என்னடா படத்தின் கதை பொதுவா இவன் சொல்லமாட்டானே , ஏன் இப்படி சொன்னான்னு யோசிக்கிறீங்களா ? நான் சொல்லாட்டியும் படம் ஆரம்பித்து கொஞ்சம் போக இந்த படம் இப்படி தான் போகும்ன்னு சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் , அதனால படத்தின் கதை சுவாரசியம் சீக்கிரமா குறைஞ்சிடுச்சி இது ஒரு பெரிய மைனஸ் , மேலும் அடுத்து அடுத்து யார் யார் இரக்க போறாங்கன்னு சுலபமாக கணிக்க முடியுது . ஆர்.ஜெ.பாலாஜி ரொம்பா மொக்க காமெடி படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றவே இல்ல , மேலும் அவர் கூட வரும் ரெண்டு கான்ஸ்டேபிள் மேக்கப் ரொம்ப செயற்கையா இருக்கு, அவங்க தான் முக்கியமா கதைக்கு  ஏதாவது பண்ணுவாங்க பார்த்தா அது இல்ல,
படத்தின் ஹீரோ கொஞ்சம் அந்நியமாக தெரிகிறார் , அவருக்கு  சில இடங்களில் டப்பிங் செட் ஆகல 

படத்தில எனக்கு பிடிச்ச விஷயங்கள் என்னன்னு பார்த்தா, படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப தேவையில்லாம மிரட்டமா , ஒரு அமைதியான பேய் படம் தந்து இருக்கார் விஜய் , ஆனால் பலருக்கு அது பிடிக்காது , அது போல சாய்பல்லவி மற்றும் அந்த குழந்தை நல்லா நடிச்சி இருக்காங்க  , அந்த குட்டி பொண்ணு வசனம் இல்லாம அமைதியா வெறும் கண்பார்வை மட்டுமே வச்சி படம் முழுக்க நடிக்கவச்சி இருக்கார் , அதே போல சாய்பல்லவி அவங்க நடிப்பால் சில இடங்களில் அவங்களோட உணர்வை நம்மக்கு உணரவச்சி இருக்காங்க,மேலும் சாம்.சி   இசை நல்லா செய்து இருக்கார் , அதே போல படம் முடியும் போது சாய்பல்லவி , அந்த குழந்தையை சந்திக்கவைக்க அது ஒரு சோகமுடிவு போல கொண்டுபோய்ட்டு ஒரு நல்ல சந்தோஷ முடிவு கொடுத்த டைரக்டர் விஜயை பாராட்டலாம் .

இது பேய் + எமோஷனல் படம் போல   கொஞ்சம் பிசாசு படம் மாதிரி ட்ரை பண்ணிஇருக்காங்க ஆனா அந்த எமோஷனல் படத்தில முழுமையாக வரல ,அது படத்தின் ஒரு மைனஸ்  

மொத்தத்தில் தியா படம் தீயா இல்ல 

இப்படிக்கு 
சினிகிறுக்கன்